search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chithode"

    ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே மோட்டார் சைக்கிளில் கார் மோதிய விபத்தில் பிளஸ்-2 மாணவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
    ஈரோடு:

    திருப்பூர் மாவட்டம் காங்கயம் முத்தூர் ரோட்டை சேர்ந்தவர் சிவக்குமார் இவரது மகன் கார்த்திகேயன் (வயது 18). இவரது நண்பர் முகிலன் (18). கொடுமுடியை சேர்ந்த முத்தரசன் என்பவரின் மகன்.

    இவருவரும் பிளஸ்-2 முடித்து தேர்ச்சி பெற்றிருந்தனர்.

    நண்பர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் பவானி வந்தனர். பிறகு அவர்கள் சித்தோடு அருகே டெக்ஸ்வேலி பக்கம் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.

    மோட்டார் சைக்கிளை கார்த்திகேயன் ஓட்டி சென்றார். அப்போது ஒரு டீ கடையில் டீ குடிப்பதற்காக கார்த்திகேயன் திடீர் பிரேக் போட்டதாக கூறப்படுகிறது.

    அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்று எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் 2 பேரும் கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர்.

    உடனடியாக அவர்கள் 108 ஆம்புலன்சு மூலம் மீட்கப்பட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இதில் சிகிச்சை பலன் பெறாமல் கார்த்திகேயன் இன்று காலை பரிதாபமாக இறந்தார். முகிலனுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த விபத்து குறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #Tamilnews
    சித்தோடு அருகே குடிப்பழக்கத்தை கைவிடுமாறு குடும்பத்தினர் வலியுறுத்தியதால் குளிர்பானத்தில் வி‌ஷம் கலந்து குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
    ஈரோடு:

    பவானியை அடுத்த காளிங்கராயன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் லாரன்ஸ். இவரது மனைவி லதா. இவரது மகன்கள் ஜெயராஜ்(வயது27). தொழிலாளி. பிரபாகரன்(23). லாரன்சும், லதாவும் இறந்து விட்டனர்.

    ஜெயராஜிக்கு இன்னும் திருமணமாகவில்லை. மேலும் குடிப்பழக்கம் இருந்ததாகவும் கூறப்படுகிறது. குடிப்பழக்கத்தை கைவிடுமாறு அவரது குடும்பத்தினர் ஜெயராஜிடம் கூறினார்களாம்.

    இதனால் ஜெயராஜ் மனவேதனையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 6-ந்தேதி இரவில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் குளிர்பானத்தில் வி‌ஷம் கலந்து குடித்தார்.

    சிகிச்சைக்காக ஜெயராஜை பவானி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு ஜெயராஜை கொண்டு சென்றனர்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி ஜெயராஜ் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #Tamilnews
    ×