என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சித்தோடு அருகே விபத்து- மோட்டார் சைக்கிளில் சென்ற பிளஸ்-2 மாணவன் பலி
Byமாலை மலர்31 May 2018 11:27 AM GMT (Updated: 31 May 2018 11:27 AM GMT)
ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே மோட்டார் சைக்கிளில் கார் மோதிய விபத்தில் பிளஸ்-2 மாணவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
ஈரோடு:
திருப்பூர் மாவட்டம் காங்கயம் முத்தூர் ரோட்டை சேர்ந்தவர் சிவக்குமார் இவரது மகன் கார்த்திகேயன் (வயது 18). இவரது நண்பர் முகிலன் (18). கொடுமுடியை சேர்ந்த முத்தரசன் என்பவரின் மகன்.
இவருவரும் பிளஸ்-2 முடித்து தேர்ச்சி பெற்றிருந்தனர்.
நண்பர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் பவானி வந்தனர். பிறகு அவர்கள் சித்தோடு அருகே டெக்ஸ்வேலி பக்கம் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.
மோட்டார் சைக்கிளை கார்த்திகேயன் ஓட்டி சென்றார். அப்போது ஒரு டீ கடையில் டீ குடிப்பதற்காக கார்த்திகேயன் திடீர் பிரேக் போட்டதாக கூறப்படுகிறது.
அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்று எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் 2 பேரும் கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர்.
உடனடியாக அவர்கள் 108 ஆம்புலன்சு மூலம் மீட்கப்பட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதில் சிகிச்சை பலன் பெறாமல் கார்த்திகேயன் இன்று காலை பரிதாபமாக இறந்தார். முகிலனுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து குறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #Tamilnews
திருப்பூர் மாவட்டம் காங்கயம் முத்தூர் ரோட்டை சேர்ந்தவர் சிவக்குமார் இவரது மகன் கார்த்திகேயன் (வயது 18). இவரது நண்பர் முகிலன் (18). கொடுமுடியை சேர்ந்த முத்தரசன் என்பவரின் மகன்.
இவருவரும் பிளஸ்-2 முடித்து தேர்ச்சி பெற்றிருந்தனர்.
நண்பர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் பவானி வந்தனர். பிறகு அவர்கள் சித்தோடு அருகே டெக்ஸ்வேலி பக்கம் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.
மோட்டார் சைக்கிளை கார்த்திகேயன் ஓட்டி சென்றார். அப்போது ஒரு டீ கடையில் டீ குடிப்பதற்காக கார்த்திகேயன் திடீர் பிரேக் போட்டதாக கூறப்படுகிறது.
அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்று எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் 2 பேரும் கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர்.
உடனடியாக அவர்கள் 108 ஆம்புலன்சு மூலம் மீட்கப்பட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதில் சிகிச்சை பலன் பெறாமல் கார்த்திகேயன் இன்று காலை பரிதாபமாக இறந்தார். முகிலனுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து குறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #Tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X