search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "chemistry"

    • கடந்த ஆண்டை ஒப்பிடும் போது குறைவாகும்.
    • பி.காம் படிக்க 99 சதவீதம் கட்ஆப் மதிப்பெண் தேவை.

    சென்னை:

    பள்ளி கல்வியில் இறுதி வகுப்பான பிளஸ்-2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதில் கடந்த ஆண்டை விட தேர்ச்சி விகிதம் அதிகம் என்றாலும் நூற்றுக்கு நூறு மதிப்பெண் வாங்கியவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை ஒப்பிடும் போது குறைவாகும்.

    என்ஜினீயரிங் படிப்பில் சேருவதற்கு கணித பாடத்துடன் இயற்பியல், வேதியியல் பாடங்களின் மதிப்பெண் முக்கியமாகும். இந்த 3 பாடங்களின் கூட்டு மதிப்பெண் அடிப்படையிலேயே மாணவர்களுக்கு இடம் ஒதுக்கப்படுகிறது. 3 பாடங்களில் எடுத்த மதிப்பெண் கணக்கீடு செய்து கட்-ஆப் பட்டியல் தயாரிக்கப்படுகிறது.

    இயற்பியல், வேதியியல், பாடங்களில் மிக குறைந்த மாணவர்களே நூற்றுக்கு நூறு எடுத்துள்ளனர். இதனால் பொறியில் கட்-ஆப் மதிப்பெண் குறைகிறது.

    கடந்த ஆண்டு வேதியியல் பாடத்தில் 3909 பேர் முழு மதிப்பெண் பெற்றனர். அதே போல் இயற்பியல் பாடத்தில் 812 பேர் நூற்றுக்கு நூறு பெற்று இருந்தனர். அதனுடன் ஒப்பிடும் போது இந்த ஆண்டு இந்த பாடங்களில் 100க்கு 100 பெற்றவர்கள் குறைவாகும்.

    இயற்பியல் பாடத்தில் 633 பேரும், வேதியியல் பாடத்தில் 471 பேரும் முழு மதிப் பெண் பெற்றுள்ளனர். ஆனால் பொறியியல் கல்லூரிகளில் கம்ப்யூட்டர் தொடர்பான பாடப்பிரிவுகளில் 8 ஆயிரம் இடங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டு உள்ளன. இதன் காரணமாக கட்-ஆப் மார்க் குறைய வாய்ப்பு உள்ளது.

    அதே நேரத்தில் வணிகவியல், பொருளியல் பாடங்களில் அதிகமான மாணவர்கள் நூற்றுக்கு நூறு பெற்றுள்ளனர்.

    வணிகவியலில் 6142 பேரும், பொருளியலில்3299 பேரும் சதம் அடித்ததால் டாப் கலை அறிவியல் கல்லூரிகளில் கட்-ஆப் மார்க் 99-100 வரை உயர வாய்ப்பு உள்ளது.

    இது குறித்து கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி கூறியதாவது:-

    இந்த வருடம் இயற்பியல், வேதியியல் பாடங்களில் முழு மதிப்பெண் பெற்றவர்கள் எண்ணிக்கை குறைவாகும். கணிதப் பாடத்தில் 2587 பேர் நூற்றுக்கு நூறு எடுத்து உள்ளனர்.

    கட்-ஆப் மதிப்பெண் குறைவதற்கு முக்கிய காரணம் முழு மதிப்பெண் பெற்றவர்களின் எண்ணிக்கை குறைந்ததோடு மட்டுமின்றி நிறைய பொறியியல் கல்லூரிகளில் புதிய பாடப்பிரிவுகள் தொடங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளன. 30 ஆயிரம் இடங்கள் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதால் கட்டாயமாக கட்-ஆப் மார்க் குறையும்.

    மேலும் வேளாண்மை, மீன்வளம், கால்நடை மருத்துவம், மருத்துவம் சார்ந்த படிப்புகளில் சேருவதற்கு கட்-ஆப் மார்க் குறையும்.

    தாவரவியல், வேதியியல், இயற்பியல் பாடங்களில் சென்டம் குறைந்துள்ளதால் மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கும் கட்-ஆப் மதிப்பெண் குறைய வாய்ப்பு உள்ளது.

    ஆனால் வணிகவியல், கணக்குப் பதிவியல் பாடங்களில் இந்த அணடு அதிக அளவிலான சென்டம் வாங்கி உள்ளனர். இதனால் டாப்-கலை கல்லூரிகளில் மிகக் கடுமையான போட்டி ஏற்படக்கூடும்.

    பி.காம் பாடப் பிரிவுகளுக்கு கடந்த ஆண்டு கடுமையான போட்டி இருந்தது. இந்த வருடம் அதை விட கூடுதலாக போட்டி ஏற்படும். 99 முதல் 100 வரை கட்-ஆப் மார்க் இடம் பெறக் கூடும்.

    பாராட்டக்கூடிய விஷயம் என்னவென்றால் அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 91 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதுவரை 84 சதவீதமாக இருந்து வந்தது. அரசு பள்ளி மாணவ-மாணவிகளின் செயல்பாடு சிறப்பாக இருப்பதால் தேர்ச்சி அதிகரித்து உள்ளது.

    இதற்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு முக்கிய காரணமாகும். நன்றாக படித்தால் உயர் பதவிக்கு செல்ல முடியும் என்ற நம்பிக்கை அரசு பள்ளி மாணவர்களுக்கு ஏற்பட்டதால் புதிய உற்சாகத்தை கொடுத்து உள்ளது. அதன் காரணமாக தேர்ச்சி விகிதம் அதிகரித்து உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பொறியியல் மற்றும் கலை அறிவியல் படிப்புகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கி உள்ள நிலையில் மாணவ-மாணவிகள் கம்ப்யூட்டர் மையங்கள் மற்றும் வீடுகளில் இருந்து விண்ணப்பித்து வருகின்றனர். கடந்த ஆண்டை விட இந்த வருடம் மாணவர் சேர்க்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

    • தனது புதுமையான எழுத்துக்கள் மூலம் நார்வே இலக்கியத்தில் சாதனை புரிந்தார்
    • சந்தோஷத்துடன் சற்று அச்சமாகவும் உள்ளது என்றார் ஜான் ஃபாஸ்

    சுவீடன் நாட்டை சேர்ந்த ஆல்பிரட் நோபல் (Alfred Nobel) எனும் வேதியியல் பொறியாளரின் பெயரில் 1901லிருந்து மருத்துவம், பவுதிகம், வேதியியல், இலக்கியம் மற்றும் உலக அமைதி ஆகிய 5 துறைகளில் மனித குலத்திற்கு பயனுள்ள சாதனைகளை புரிந்தவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் நோபல் பரிசு எனும் உலக புகழ் பெற்ற விருது வழங்கப்படுகிறது.

    இந்த ஆண்டிற்கான மருத்துவம், பவுதிகம், மற்றும் வேதியியல் துறைக்கு தகுதியானவர்களின் பெயர்கள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து இலக்கியத்திற்கான நோபல் பரிசுக்கு தகுதி பெற்றவரின் பெயர் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

    நார்வே நாட்டை சேர்ந்த எழுத்தாளரான ஜான் ஃபாஸ் (Jon Fosse) என்பவருக்கு இந்த விருது வழங்கப்படுவதாக நோபல் பரிசுக்கான ஸ்வீடன் நாட்டு அகாடமி அறிவித்திருக்கிறது.

    "தனது புதுமையான நாடகங்கள், நாவல்கள், கதைகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் குழந்தைகளுக்கான புத்தகங்கள் மூலம் ஒடுக்கப்பட்டவர்களின் குரலாக நார்வே நாட்டின் நைனார்ஸ்க் இலக்கியத்தில் சாதனை புரிந்தவர் ஜான் ஃபாஸ். அவரது படைப்புகளுக்காக அவரை கவுரவிக்கும்விதமாக இந்த பரிசினை வழங்குகிறோம்" என அந்த அகாடமி தெரிவித்திருக்கிறது.

    "மிகவும் அதிக சந்தோஷத்தில் இருக்கிறேன். அதே சமயம் சற்று அச்சமாகவும் உள்ளது. இதை இலக்கியத்திற்கான பரிசாக நான் பார்க்கிறேன்" என தனக்கு கிடைத்திருக்கும் விருதினை குறித்து ஜான் ஃபாஸ் தெரிவித்தார்.

    1901லிருந்து தற்போது 2023 வரை இலக்கியத்திற்கான நோபல் பரிசு 116 முறை வழங்கப்பட்டிருக்கிறது.

    • 5 துறைகளிலும் சாதனை புரிந்தவர்களுக்கு வருடா வருடம் வழங்கப்படுகிறது
    • மூவரும் குவான்டம் டாட்ஸ் துறையில் வெற்றிகரமாக ஆராய்ச்சிகளை மேற்கொண்டனர்

    சுவீடன் நாட்டை சேர்ந்த ஆல்பிரட் நோபல் எனும் வேதியியல் பொறியாளரின் பெயரில் 1901லிருந்து மருத்துவம், பவுதிகம், வேதியியல், இலக்கியம் மற்றும் உலக அமைதி ஆகிய 5 துறைகளில் மனித குலத்திற்கு பயனுள்ள சாதனைகளை புரிந்தவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் நோபல் பரிசு எனும் உலக புகழ் பெற்ற விருது வழங்கப்படுகிறது.

    இந்த ஆண்டிற்கான மருத்துவ மற்றும் பவுதிக துறைக்கு தகுதியானவர்களின் பெயர்கள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து வேதியியல் துறைக்கான நோபல் பரிசுக்கு தகுதி பெற்றவர்களின் பெயர்கள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

    அறிவியலுக்கான ராயல் சுவீடிஷ் அகாடமி இது குறித்து அறிவித்திருப்பதாவது:

    நேனோ தொழில்நுட்பத்தில் உயர் தொழில்நுட்ப பிரிவான "குவான்டம் டாட்ஸ்" துறையில் ஆராய்ச்சிகள் மேற்கொண்டு புதிய கண்டுபிடிப்புகளை வெளியிட்டு நுகர்வோர் மின்னணு துறையிலும் மருத்துவ துறையிலும் பல்வேறு புரட்சிகள் ஏற்பட வழி வகுத்த அமெரிக்காவின் புகழ் பெற்ற எம்.ஐ.டி. பல்கலைகழகத்தை சேர்ந்த அமெரிக்கரான மவுங்கி பவெண்டி (Moungi Bawendi), அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைகழகத்தை சேர்ந்த லூயி ப்ரு (Louis Brus) மற்றும் ரஷியாவை சேர்ந்த அலெக்ஸி எகிமோவ் (Alexey Ekimov) ஆகிய மூவருக்கும் இது பகிர்ந்தளிக்கப்படுகிறது.

    இவ்வாறு அந்த அகாடமி அறிவித்திருக்கிறது.

    இந்த மூவரின் பெயர்களை வேதியியல் துறையில் நோபல் பரிசை பெற தகுதியானவர்களை தேர்ந்தெடுக்கும் குழுவின் தலைவர் ஜோஹன் அக்விஸ்ட் (Johan Aqvist) உறுதிப்படுத்தினார்.

    வழக்கமாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் வரை பரிசுக்கு தகுதியானவர்களின் பெயர்கள் ரகசியமாக வைக்கப்படும். ஆனால், இம்முறை இன்று காலை சுவீடன் நாட்டை சேர்ந்த ஒரு நாளிதழுக்கு மின்னஞ்சல் மூலமாக இந்த மூவரின் பெயர்கள் முன்னரே கசிந்தது சர்ச்சையை உருவாக்கியது.

    • வேதியியல் துறை சிறப்பு சொற்பொழிவு நடந்தது.
    • தடயவியல் துறை இளநிலை அறிவியல் அதிகாரி காளிசுவரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரி வேதியியல் துறையின் சார்பில் "வேதியியல் துறையில் வேலைவாய்ப்பு பற்றிய விழிப்புணர்வு" என்ற தலைப்பில் சிறப்பு சொற்பொழிவு நடந்தது. முதல்வர் பாலமுருகன், வேதியியல் துறை மூத்த பேராசிரியர் எஸ்.அழகப்பன் ஆகியோர் பங்கேற்றனர். தமிழக அரசின் தடயவியல் துறை இளநிலை அறிவியல் அதிகாரி காளிசுவரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

    அவர் பேசுகையில், மத்திய, மாநில அரசு நடத்தும் போட்டித் தேர்வுகள் பற்றியும், அதற்கு மாணவர்கள் தங்களை எவ்வாறு தயார்படுத்தி கொள்ள வேண்டும்? என்பது பற்றியும் எடுத்துரைத்தார். போட்டித் தேர்வு பற்றிய செய்திகளை தொலைத் தொடர்பு ஊடகம், செய்திதாள் மற்றும் இணையதளம் மூலம் எவ்வாறு தெரிந்து கொள்வது? என்றும் எடுத்து கூறினார். இளங்கலை மற்றும் முதுகலை இறுதியாண்டு மாணவர்களுக்கு வேதியியல் துறை வேலைவாய்ப்பு பற்றியும் விளக்கினார்.

    முதுநிலை முதலாமாண்டு மாணவி ஷர்மிளா நன்றி கூறினார்.

    • மருத்துவம், இயற்பியல் துறைகளை தொடர்ந்து வேதியியல் துறைக்கு நோபல் பரிசு.
    • மூலக்கூறுகளை ஒன்றிணைத்து பொருட்களை உருவாக்கும் ஆராய்ச்சிக்கு நோபல் பரிசு.

    மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான துறைகளில் சர்வதேச சமூகத்திற்கு சிறப்பான பங்களிப்பு செய்த சாதனையாளர்களுக்கான நோபல் பரிசுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன.

    அதன்படி 2022ம் ஆண்டிற்கு மருத்துவம், இயற்பியலுக்கான நோபல் பரிசுகள் கடந்த 2 நாட்களாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று வேதியியல் துறைக்கான நோபல் பரிசு மூன்று விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

    மூலக்கூறுகளை ஒன்றிணைத்து பொருட்களை உருவாக்குதல்  மற்றும் உயிரியல்பு வேதியியல் வளர்ச்சி குறித்து ஆராய்ச்சிக்காக அமெரிக்காவை சேர்ந்த கரோலின் பெர்டோஸி, டென்மார்க்கை சேர்ந்த மோர்டன் மெல்டல் மற்றும் அமெரிக்காவை சேர்ந்த பேரி ஷார்ப்லெஸ் ஆகிய மூன்று விஞ்ஞானிகளுக்கும் நோபல் பரிசு கூட்டாக வழங்கப்பட்டுள்ளது.

    ×