search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bus stairs"

    • திருமங்கலம் அருகே பஸ் படிக்கட்டில் பயணம் செய்த மின்வாரிய ஊழியர் தவறி விழுந்து பலியானார்.
    • இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம்

    திருமங்கலம் வேங்கட சமுத்திரத்தை சேர்ந்தவர் ராஜா. மின்வாரிய ஊழியர். இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். தற்போது டி. கல்லுப்பட்டி மின்வாரிய அலுவலகத்தில் மின்பாதை ஆய்வாளராக பணியாற்றினார்.

    இரவு பணி என்பதால் டி.கல்லுப்பட்டி செல்வதற்காக திருமங்கலத்தில் இருந்து செங்கோட்டை செல்லும் அரசு பஸ்சில் ஏறி கல்லுப்பட்டிக்கு சென்றுள்ளார். பஸ்சில் இடமில்லாததால் படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்தார்.

    அந்த பஸ் திருமங்கலம்- ராஜபாளையம் சாலையில் உள்ள டி.புதுப்பட்டியை அடுத்த தனியார் மருத்து வமனை அருகில் உள்ள வளைவில் திரும்பும் போது படிக்கட்டில் அமர்ந்திருந்த ராஜா எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்தார்.

    உடனடியாக பஸ்சை டிரைவர் நிறுத்தி பார்த்த போது ராஜா தலையில் அடிபட்டு சம்பவ இடத்தி லேயே உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்து கல்லுப்பட்டி போலீசுக்கு தகவல் அளிக்கப்பட்டது. போலீசார் ராஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அவனியாபுரத்தில் பஸ் படிக்கட்டில் பயணம் செய்த மாணவர்கள் உறுதிமொழி எடுத்து கொண்டனர்.
    • போக்குவரத்து காவல்துறை சார்பில் பஸ் படிக்கட்டில் பயணம் செய்யும் மாணவர்களிடம் ஆபத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    அவனியாபுரம்

    மதுரை விளாங்குடி பகுதியைச் சேர்ந்த மாணவன் பிரபாகரன் பஸ் படிக்கட்டில் பயணம் செய்தபோது தவறி விழுந்து பலியானார். இதையடுத்து போக்குவரத்து காவல்துறைதுணை ஆணையர் ஆறுமுகசாமி, கூடுதல் துணை ஆணையர் திருமலை குமார், உதவி போக்குவரத்து காவல் ஆணையர் செல்வின் ஆகியோரது அறிவுரையின்படி மதுரை மாவட்டம் முழுவதும் போக்குவரத்து காவல்துறை சார்பில் பஸ் படிக்கட்டில் பயணம் செய்யும் மாணவர்களிடம் ஆபத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    அவனியாபுரம் பெரியார் சிலை முன்பு போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் தங்கபாண்டியன், பஸ் படிக்கட்டில் பயணம் செய்த மாணவர்களுக்கு அறிவுரை வழங்கி விழிப்புணர்வு உறுதிமொழியை ஏற்க வைத்தார். இதில் ஆர்.டி.ஓ. சித்ரா, திருப்பரங்குன்றம் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் பூர்ணா கிருஷ்ணன், போக்குவரத்து கழக கிளை மேலாளர் முத்துமணி, உதவி பொறியாளர் கண்ணன், இன்ஸ்பெக்டர் இளங்கோவன், போக்குவரத்து சிறப்பு சார்பு ஆய்வாளர் செல்வம், காவலர்கள் அழகு முருகன், சதீஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மரக்காணம் அருகே பஸ் படிக்கட்டில் நின்று கொண்டு பயணம் செய்த ஓய்வு பெற்ற ஆசிரியர் தவறி விழுந்து பலியானார்.

    மரக்காணம்:

    சென்னை பெசன்ட் நகரை சேர்ந்தவர் கணபதி (வயது 67). ஓய்வு பெற்ற ஆசிரியர். இவரது உறவினர் வீட்டின் திருமணம் விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் நேற்று நடைபெற்றது.

    இந்த விழாவில் கலந்து கொள்ள கணபதி நேற்று காலை மரக்காணம் வந்தார். நிகழ்ச்சி முடிந்ததும் நேற்று இரவு 11.30 மணிக்கு அவர் சென்னை செல்வதற்காக மரக்காணம் பஸ் நிலையம் வந்தார். அங்கிருந்து சென்னை பஸ்சில் ஏறினார். அந்த பஸ்சில் பயணிகளின் கூட்டம் அலைமோதியது. இதனால் கணபதிக்கு இருக்கையில் இடம் கிடைக்கவில்லை. இதனை தொடர்ந்து அவர் பஸ்சின் படிக்கட்டில் நின்று கொண்டே பயணம் செய்தார்.

    அந்த பஸ் நாரவாக்கம் என்ற இடத்தில் சென்ற போது படிக்கட்டில் பயணம் செய்த கணபதி தவறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.

    அந்த வழியாக வந்தவர்கள் அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் புதுவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு கணபதியின் உடலை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

    இந்த சம்பவம் குறித்து கணபதியின் அண்ணன் பாண்டுரங்கன் மரக்காணம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் மைக்கேல்இருதயராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    விபத்தில் இறந்த கணபதிக்கு வளர்மதி என்ற மனைவியும், ஒரு மகன், 3 மகள்கள் உள்ளனர்.

    காரிமங்கலம் அருகே பஸ் படிக்கட்டில் பயணம் செய்த போது தவறி விழுந்து ஓட்டல் மேலாளர் பரிதாபமாக இறந்தார்.
    காரிமங்கலம்:

    தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே உள்ள டிரைவர்ஸ் காலனியை சேர்ந்தவர் கனகராஜ் (வயது 47). இவர் கிருஷ்ணகிரியில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் மேலாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகி ஷீலா என்ற மனைவியும், லிங்கேஸ்வரன், சர்வேஸ்வரன் என்ற 2 மகன்களும் உள்ளனர். சம்பவத்தன்று கனகராஜ் தர்மபுரியில் இருந்து செல்லும் அரசு பஸ்சில் கிருஷ்ணகிரிக்கு சென்றார். பஸ்சில் கூட்ட நெரிசல் அதிகமாக இறந்ததாக கூறப்படுகிறது. இதனால் கனகராஜ் பஸ்சின் படிக்கட்டில் நின்றவாறு பயணம் செய்ததாக தெரிகிறது. காரிமங்கலம் அருகே உள்ள பெரியாம்பட்டி பஸ் நிறுத்தத்தில் டிரைவர் பஸ்சை நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்கி கொண்டு இருந்தார். பின்னர் பஸ் புறப்பட்ட போது கனகராஜ் படிக்கட்டில் இருந்து தவறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக அவர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் கனகராஜ் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து காரிமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் ஆஸ்பத்திரிக்கு சென்று விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர் சதீஸ்குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
    ×