என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "BJP Candidate List"
- 500 நாட்களில் 10 லட்சம் வேலைவாய்ப்புகளை மத்திய அரசு உருவாக்கி உள்ளது.
- காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் எவ்வளவு பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது? ராகுல் காந்தி சொல்வாரா?
கோவை:
தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
* எங்களுடைய முதல் பட்டியலை வெளியிட்டு உள்ளோம். விரைவில் இரண்டாவது பட்டியல் வெளிவரும்.
* எரிவாயு சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம் என்று தி.மு.க. தேர்தல் வாக்குறுதி கொடுத்தது.
* 500 நாட்களில் 10 லட்சம் வேலைவாய்ப்புகளை மத்திய அரசு உருவாக்கி உள்ளது.
* காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் எவ்வளவு பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது? ராகுல் காந்தி சொல்வாரா?
இவ்வாறு அவர் கூறினார்.
- ஆலோசனையின் போது ஒவ்வொரு தொகுதியின் நிலவரங்கள், வேட்பாளர்களின் தகுதி, செயல்பாடுகள் பற்றி விரிவாக ஆலோசித்தனர்.
- அண்ணாமலை, கேசவ வினாயகன் ஆகியோர் நேற்று இரவே சென்னை திரும்பிவிட்டார்கள்.
சென்னை:
தமிழக பா.ஜனதா உத்தேச வேட்பாளர் பட்டியலுடன் அண்ணாமலை தலைமையிலான குழுவினர் டெல்லி சென்றனர்.
கட்சி தலைவர் நட்டா, மத்திய மந்திரி அமித்ஷா ஆகியோர் தமிழக குழுவினருடன் நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினார்கள்.
இந்த ஆலோசனையின் போது ஒவ்வொரு தொகுதியின் நிலவரங்கள், வேட்பாளர்களின் தகுதி, செயல்பாடுகள் பற்றி விரிவாக ஆலோசித்தனர்.
இதற்கிடையில் அண்ணாமலை, கேசவ வினாயகன் ஆகியோர் நேற்று இரவே சென்னை திரும்பிவிட்டார்கள். மீண்டும் வருகிற 11-ந்தேதி அண்ணாமலை டெல்லி செல்கிறார். மறுநாள் 12-ந்தேதிக்குள் தமிழக பா.ஜனதா வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படலாம் என்று கூறப்படுகிறது.
இதுவரை ஆலோசனை நடத்தி முடிக்கப்பட்ட தொகுதிகளும் அதில் பரீசிலிக்கப்பட்ட வேட்பாளர்கள் பெயர் விபரமும் கசிந்து உள்ளது.
கன்னியாகுமரியில் முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், முன்னாள் எம்.எல்.ஏ. விஜயதாரணி.
கோவையில் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., பா.ஜனதா தலைவர் அண்ணாமலை.
நீலகிரியில் முன்னாள் துணை சபாநாயகர் வி.பி.துரைசாமி, கடலூரில் சாய் சுரேஷ், அஸ்வத்தாமன், விழுப்புரத்தில் முன்னாள் மேயர் கார்த்தியாயினி, திருவள்ளூர் பொன் பால கணபதி, மதுரையில் மகாலெட்சுமி, நெல்லையில் நயினார் நாகேந்திரன், தூத்துக்குடியில் கரு.நாகராஜன், கிருஷ்ணகிரியில் கே.எஸ். நரேந்திரன், முன்னாள் எம்.பி.நரசிம்மன், நாமக்கல்-கே.பி.ராமலிங்கம், பொள்ளாச்சி-ஏ.பி.முருகானந்தம், திருப்பூர்-கனகசபாபதி, ராம்நாடு-தேவநாதன், கருப்பு முருகானந்தம், ஸ்ரீபெரும்புதூர்-காயத்ரி தேவி, சுமதி வெங்கடேஷ், காஞ்சிபுரம்-மா.வெங்கடேசன், சிதம்பரம்-தடா பெரியசாமி, அரக்கோணம்-எம்.கே.ரவிச்சந்திரன்.
வடசென்னை-பால் கனகராஜ், ஏ.என்.எஸ். பிரசாத், மத்திய சென்னை-குஷ்பு, வினோஜ் செல்வம், தென்சென்னை-எச்.ராஜா, எஸ்.ஜி.சூர்யா ஆகியோரது பெயர்கள் பரிசீலிக்கப்பட்டுள்ளன.
- தெலுங்கானாவில் பா.ஜ.க. தனித்து போட்டியிடுகிறது.
- பா.ஜ.க. தெலுங்கானா பாராளுமன்ற வேட்பாளர்கள் 6 பேரின் முதல் பட்டியல் தயாராகி உள்ளது.
தெலுங்கானா மாநிலத்தில் 17 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன. இங்கு பா.ஜ.க. தனித்து போட்டியிடுகிறது. இதுவரை கூட்டணி எதுவும் ஏற்படவில்லை. மாநிலத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை கட்சி மேலிடம் தேர்வு செய்து வருகிறது.
பா.ஜ.க. மத்திய தேர்தல் குழு கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது.
தெலுங்கானா உள்ளிட்ட பிற மாநிலங்களின் தலைமை தயாரித்த வேட்பாளர் பட்டியல்கள் அந்தந்த மாநிலங்களின் கோர் கமிட்டி உறுப்பினர்கள் தனித்தனியாக சந்தித்து விரிவாக விவாதித்தன. பா.ஜ.க. தெலுங்கானா பாராளுமன்ற வேட்பாளர்கள் 6 பேரின் முதல் பட்டியல் தயாராகி உள்ளது.
நாளை முதல் பட்டியலை பா.ஜ.க. அதிகாரப்பூர்வமாக வெளியிடும் என நிர்வாகிகள் தெரிவித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்