search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Anbazagan"

    • அன்பழகன் குற்றச்சாட்டு
    • புதுவையில் கவர்னர், முதல்-அமைச்சர், தலைமை செயலர் என 3 அதிகார மையங்கள் தனித்தனியே செயல்படுகிறது.

    புதுச்சேரி:

    புதுவை மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுவை பா.ஜனதா கூட்டணி ஆட்சி உச்சகட்ட அதிகார மோதலில் சிக்கி தவிக்கிறது. அரசு மற்றும் அரசு சார்பு நிறுவனங்களில் நடைபெறும் விழாக்கள் குறித்து கவர்னருக்கு தெரி விக்க வேண்டும். அவரை அழைக்காமல் விழா நடத்தக்கூடாது என தலைமை செயலர் அனைத்து துறைக்கும் சுற்ற றிக்கை அனுப்பி யுள்ளார்.

    மக்களால் தேந்தெடுக்கப் பட்ட அரசின் செயல்பாடை முடக்கும் விதத்தில் கவர்னருக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இந்த அரசாணை வெளியிடப் பட்டுள்ளது.

    இது முதல்- அமைச்ச ருக்கு அவ மரியாதையை ஏற்படுத்துகிறது. தனக்கு தெரியாமல் தலைமை செயலர் சுற்றறிக்கை அனுப்பியதாக கவர்னர் கூறியுள்ளார்.

    எனவே தலைமை செயலர் மீது ஒழுங்கு நடவ டிக்கை எடுத்து இடமாற்றம் செய்ய வேண்டும். புதுவையில் கவர்னர், முதல்-அமைச்சர், தலைமை செயலர் என 3 அதிகார மையங்கள் தனித்தனியே செயல்படுகிறது.

    இதனால் அரசு துறை அதிகாரிகள் செயல்பட முடியாமல் அல்லல்படு கின்றனர். கவர்னரும், முதல்- அமைச்சரும் பேச்சு வார்த்தை மூலம் அரசை வழிநடத்த வேண்டும் என சுப்ரீம்கோர்ட்டு அறிவுறுத்தி யுள்ளது.

    இதை புதுவையில் உள்ளவர்கள் கருத்தில் கொள்ள வேண்டும்

    பா.ஜனதா தேர்தல் அறிக்கையில் இலவச அரிசி வழங்கப்படும் என தெரி வித்தது. தற்போது கவர்னர் அரிசிக்கு பதில் பணம் வேண்டும் என மக்கள் விரும்புவதாக கூறுகிறார்.

    புதுவை மக்களிடம் கவர்னர் மாளிகை எப்போது கருத்து கேட்பு நடத்தியது? கவர்னர் தெரிவிக்கும் அறிவுரைகள், கருத்துக்களை முதலில் அவர் பின்பற்றி நடக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • அ.தி.மு.க. ஆர்ப்பாட்டத்தில் அன்பழகன் பேச்சு
    • ஆசிரியர் பணியிடங்களை நிரப்பாமல் ஓய்வுபெற்ற ஆசிரியர்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவது என்பது நெருப்பு கொண்ட ஈட்டியால் இளைஞர்களின் இதயத்தை துளைப்பதாகும்.

    புதுச்சேரி:

    புதுவை கல்வித் துறையில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை ஓய்வுபெற்ற ஆசிரியர்களை கொண்டு நிரப்பும் அரசின் முடிவினை கண்டித்து

    அ.தி.மு.க. சார்பில் கல்வித்துறை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு புதுவை மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கி பேசியதாவது:-

    புதுவை மாநிலத்தில் 2012-ம் ஆண்டுக்கு பிறகு சுமார் 11 ஆண்டுகளாக நடுநிலை ஆசிரியர் பணிக்கு ஆசிரியர்கள் நியமனம் செய்யவில்லை. நடுநிலை ஆசிரியர்களில் இருந்து உயர்நிலை பள்ளிக்கு 40 சதவீத பதவி உயர்வு அடிப்படையிலும் 60 சதவீதம் நேரடியாகவும் நியமிக்க வேண்டும் என நியமன விதி இருந்தும் அரசு இந்த விஷயத்தில் மிக மிக அலட்சியமாக இருந்து வந்துள்ளது.

    தற்போது ஏதோ அவசர தேவைக்கு ஓய்வுபெற்ற ஆசிரியர்களை கொண்டு தற்காலிகமாக நியமனம் செய்ய இருப்பதாக அமைச்சர் அறிவித்துள்ளார். ஏன் காலியாக உள்ள பணியிடங்களை ஆட்சி அமைந்ததில் இருந்து அரசு நிரப்ப முன்வரவில்லை?

    ஆசிரியர் பணி முடித்த இளைஞர்கள் அரசு பணி கிடைக்காமல் தனியார் பள்ளிகளில் ரூ.10 ஆயிரம் மற்றும் ரூ.15 ஆயிரம் சம்பளத்தில் பணி செய்கின்றனர்.

    இந்த இளைஞர்களை கொண்டு காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்பாமல் ஓய்வுபெற்ற ஆசிரியர்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவது என்பது நெருப்பு கொண்ட ஈட்டியால் இளைஞர்களின் இதயத்தை துளைப்பதாகும்.

    அரசு பணிகளில் 33 வயது மற்றும் 35 வயதுக்கு மேல் யாரையும் பணியில் அமர்த்த முடியாத சூழ்நிலையில் 60 வயது முடிந்தவர்களை ஒப்பந்த அடிப்படையில் அரசு பணிகளில் அமர்த்துவது எந்த பணி நியமன சட்டத்தில் உள்ளது.

    ஓய்வுபெற்ற ஆசிரியர்களை கொண்டு ஒப்பந்த அடிப்படையில் நிரப்பும் முடிவினை அரசு கைவிட வேண்டும். தமிழகத்தை போல ஆசிரியர் பணிக்கான வயது வரம்பை நீக்க வேண்டும். அப்போது தான் நீண்ட காலமாக பணிக்காக காத்திருக்கும் இளைஞர்களுக்கு ஆசிரியர் பணி கிடைக்கும்.

    இவ்வாறு அன்பழகன் பேசினார்.

    ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க. மாநில துணை தலைவர் ராஜாராமன், மாநில இணை செயலாளர் கணேசன், பொருளாளர் ரவிபாண்டுரங்கன், துணைச்செயலாளர்கள் எம்.ஏ.கே. கருணாநிதி நாகமணி ஜெயசேரன், காந்தி, நகர செயலாளர் அன்பழகன் உடையார், மாநில ஜெயலலிதா பேரவை செயலாளர் சுத்துக்கேணி பாஸ்கர், உழவர்கரை நகர செயலாளர் சித்தானந்தம், மாநில எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர்கள் பாண்டுரங்கன், சிவாலயா இளங்கோ, அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் பாப்புசாமி, மீனவரணி செயலாளர் ஞானவேல் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    • கவர்னரிடம் அ.தி.மு.க. மனு
    • விபத்து குறித்து உண்மை நிலையை கொண்டு வர சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் கவர்னர் தமிழிசையை நிர்வாகி களுடன் நேரில் சந்தித்து வழங்கிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    காலாப்பட்டில் மருந்து தயாரிக்கும் ரசாயன தொழிற்சாலையால் அரசுக்கு எவ்வித ஆதாயமும் இல்லை. கடந்த 4-ந் தேதி அந்த தொழிற்சாலையில் நடந்த விபத்தில் 15-க்கும் மேற்பட்டோர் தீக்காயம் அடைந்தனர்.

    விபத்து நடந்து 10 நாட்களாகியும் காலாப்பட்டு போலீஸ் நிலையத்தில் நிர்வாகத்தில் உள்ள யார் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்படவில்லை. அங்கு பணியில் உள்ள அனைவரையும் பணியிட மாற்றம் செய்ய வேண்டும். விபத்து குறித்து உண்மை நிலையை கொண்டு வர சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

    தொழிற்சாலை தொடர்ந்து செயல்பட வேறு மாநிலத்தை சேர்ந்த பணியில் உள்ள நீதிபதி தலைமையில் சுற்றுப்புற சூழல், நிலத்தடி நீர் பாதுகாப்பு, தொழிலாளர் நலன் ஆகியவற்றில் புலமை பெற்ற அதிகாரிகளை உறுப்பினர்களாக சேர்த்து ஒரு நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

    விசாரணைக்கு பிறகு ரசாயன தொழிற்சாலையால் தொழிலாளர்களுக்கும், பொது மக்களுக்கும் பாதிப்பில்லை என தெரிந்தால் மீண்டும் இயங்க அனுமதி அளிக்கலாம். அதுவரை அந்த தொழிற்சாலையை உற்பத்தி பிரிவினை முழுமையாக தடை செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அன்பழகன் வலியுறுத்தல்
    • மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படக்கூடிய பணிகளை தொழிலாளர்கள் உயிரிழந்தால் ரூ 1 கோடி நிவார ணம் வழங்க வேண்டும் என தீர்ப்பு வழங்கப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவை மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    காலாப்பட்டில் ரசாயன தொழிற்சாலையில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஏற்படுத்திய விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.

    இப்போது ஏற்பட்ட பாய்லர் வெடி விபத்தில் 15-க்கும் மேற்பட்டவர்கள் தீக்காயம் அடைந்தனர். அதில் சுமார் 5 பேர் 50 சதவீதத்திற்கு மேல் பாதிக்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட தொழி லாளர்களையும் மூடி மறைத்து வருகின்றனர்.

    இதில் நெடுஞ்செழியன் என்ற தொழிலாளி 2 தினங்களுக்கு முன்பு நள்ளி ரவில் மரணம் அடைந்தார். இந்த மரணம் இன்று தான் வெளிப்படையாக அறிவிக்கப்பட்டது. இந்த மரணத்தை கூட யார் அறி வித்தார் என்று தெரிய வில்லை.

    கடந்த 3 மாதத்திற்கு முன்பு கூட சுப்ரீம் கோர்ட்டில் ஒரு தீர்ப்பு வழங்கப்பட்டது. பாதாள சாக்கடை அள்ளும் தொழில் செய்பவர்கள், மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படக்கூடிய பணிகளை தொழிலாளர்கள் உயிரிழந்தால் ரூ 1 கோடி நிவார ணம் வழங்க வேண்டும் என தீர்ப்பு வழங்கப்பட்டது.

    எனவே அதன் அடிப்படையில் அந்த இழப்பீட்டுத் தொகையாக புதுவையை சேர்ந்த அந்த நிறுவனம் உயிரிழந்த ஊழியரின் குடும்பத்திற்கு வழங்க வேண்டும்.

    காயமடைந்தவர்களுக்கு 50 லட்சம் நிவாரணமாக கொடுக்கலாம். அரசு மூடி மறைக்காமல் சட்டத்திற்கு உட்பட்டு நிறுவனத்துடன் பேசி உரிய நிவாரணத் தொகையை வாங்கி கொடுக்க வேண்டும்.

    மாவட்ட கலெக்டர் இதில் வெறும் பார்வையாளராக மட்டுமல்லாமல் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிகப்படியான இழப்பீட்டு தொகையை பெற்று தர வேண்டும்.

    காலாப்பட்டு காவல் நிலைய சரகத்திற்கு உட்பட காவல் ஆய்வாளரிடம் தொழிற்சாலை தீ விபத்து குறித்து புகார் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த நிமிடம் வரை சம்மந்தப்பட்ட விபத்துக்கு காரணமான தொழிற்சாலை நிர்வாகத்தில் ஒருவர் மீது கூட எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படவில்லை. அந்த நிறுவனம் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்ய வேண்டும்.

    இவ்வாறு அன்பழகன் கூறினார்.

    • அ.தி.மு.க. வலியுறுத்தல்
    • அடிக்கடி இது போன்று விபத்துகள் ஏற்படும் போதும் சிலர் மரணம் அடைந்து வருவதும் வாடிக்கையாக உள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    காலாப்பட்டு தொழிற்சாலையில் நேற்றைய தினம் ஏற்பட்ட பயங்கர விபத்தினால் 3 பிளான்டுகள் முழுமையாக எரிந்தது. அதில் 12-க்கும் மேற்பட்டவர்கள் தீ விபத்தால் பாதிக்கப்பட்டனர்.நேற்று இரவு சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டவுடன் 5 பேர் மரணமடைந்ததாக தகவல் பரவியது. அடிக்கடி இது போன்று விபத்துகள் ஏற்படும் போதும் சிலர் மரணம் அடைந்து வருவதும் வாடிக்கையாக உள்ளது.

    அந்த கம்பெனியில் விபத்து ஏற்பட்டால் அப்பகுதியில் வசிக்கும் பலர் பாதிக்கப்படுகின்றனர். அங்கு நிலத்தடி நீர்மட்டமும் பாதிக்கப்பட்டுள்ளது. அந்த நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்படும் ரசாயன கழிவு நீர் முறையாக சுத்திகரிக்காமல் கடலில் கலக்கப்படு வதால் மீன்கள் செத்து மிதக்கின்றன.

    நடைபெற்ற விபத்து குறித்தும், விபத்துக்கு பிறகு நடைபெற்ற சம்பவம் குறித்து ஐகோர்ட்டு நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்.

    ரசாயனம் சம்பந்தப்பட்ட நிறுவனம் செயல்படலாமா என தேசிய அளவிலான வல்லுனர்கள் அடங்கிய குழு அமைத்து ஆய்வு செய்ய வேண்டும். அதுவரை தற்காலிகமாக அந்த நிறுவ னத்தை மாவட்ட கலெக்டர் மூட உத்தர விட வேண்டும்.

    முதல்-அமைச்சர் ரங்கசாமி கெமிக்கல் சம்பந்த ப்பட்ட ஒரு வல்லுனர் குழுவை அமைத்து ஆய்வு செய்து உண்மை நிலையை தெரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அன்பழகன் கூறினார்.

    • அன்பழகன் குற்றச்சாட்டு
    • நம்மால் ஆட்சிக்கு வந்தவர்கள் தேர்தல் முடிந்தவுடன் நம்மை பற்றி சிந்திப்பதையே நிறுத்திவிட்டனர்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில அ.தி.மு.க. சார்பில் மண்ணாடிப்பட்டு தொகுதி செயல்வீரர்கள் ஆலோசனைக்கூட்டம் திருக்கனூர் தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.

    முன்னாள் கவுன்சிலர் மகாதேவி தலைமை வகித்தார். மாநில ஜெ. பேரவை செயலாளர் சுத்துக்கேணி பாஸ்கரன், மாநில சிறுபான்மை பிரிவு செயலாளர் நாசர், பொதுக்குழு உறுப்பினர் மகாதேவன், பாய் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் மாநில செயலாளர் அன்பழகன் பேசியதாவது:-

    பா.ஜனதா கூட்டணி அரசில் அ.தி.மு.க.வுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை. ஆட்சி அமைந்தவுடன் தேசிய ஜனநயாக கூட்டணி இருந்ததற்கான அடிச்சுவடு இல்லாமல் செய்துவிட்டனர்.

    கூட்டணி கட்சிக்கு உழைத்த நாம் ஓய்ந்துவிட்டோம். நம்மால் ஆட்சிக்கு வந்தவர்கள் தேர்தல் முடிந்தவுடன் நம்மை பற்றி சிந்திப்பதையே நிறுத்திவிட்டனர்.

    புதுவை அரசின் அமைச்சரவையில் 2-ம் இடத்தில் உள்ள அமைச்சர் இந்த தொகுதியின் வளர்ச்சிக்கு எதுவும் செய்யவில்லை. கரும்பு சர்க்கரை ஆலை உட்பட மூடப்பட்ட எந்த ஒரு தொழிற்சாலையும் இதுவரை திறக்கவில்லை. இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்க வில்லை. ஆட்சி சுகமே என்னவென்று தெரியாமல் 40 ஆண்டுக்கும் மேலாக காங்கிரஸ், என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா என கூட்டணி கட்சிகளுக்காக அதிமுகவினர் உழைத்து, அவர்களை ஆட்சி கட்டிலில் அமர வைத்தோம்.

    இதற்கு மேலும் நாம் ஏமாற வேண்டிய அவசியம் இல்லை. அ.தி.மு.க. தனியாக போட்டியிட வலியுறுத்துவோம். புதுவையில் அ.தி.மு.க. ஆட்சி மலர நாம் பாடுபடுவோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் மாநில அவை தலைவர் அன்பானந்தம், மாநில இணைச் செயலாளர்கள் முன்னாள் கவுன்சிலர் கணேசன், திருநாவுக்கரசு, மாநில பொருளாளர் ரவி பாண்டுரங்கன், மாநில துணைச் செயலாளர்கள் எம்.ஏ.கே. கருணாநிதி குணசேகரன், நாகமணி, காந்தி, நகர செயலாளர் அன்பழகன் உடையார், மாநில எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் பாண்டுரங்கன், மாநில அண்ணா தொழிற்சங்கப் பேரவை செயலாளர் பாப்புசாமி உட்பட பலர் கலந்துகொண்டனர். மாநில எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் இளங்கோவன் நன்றி கூறினார். 

    • அன்பழகன் பேச்சு
    • புதுவையிலும் திராவிட மாடல் ஆட்சி அமைப்போம் என எதிர்கட்சி தலைவர் சிவா கூறுகிறார்.

    புதுச்சேரி:

    புதுவை ஏம்பலம் தொகுதியில் அ.தி.மு.க செயல்வீரர்கள் கூட்டம் கரிக்கலாம்பாக்கம் ராஜீவ்காந்தி சமுதாய நலக்கூடத்தில் நடந்தது.

    தொகுதி செயலாளர் சம்பத் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ ராஜாராமன், பெரியசாமி, ராமசாமி, சேகர், ரேணுகாதேவி, சண்முகம், அழகப்பன், தெய்வநாயகம், ராஜேந்திரன், செல்வராணி, நல்லதம்பி, கருணாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் அ.தி.மு.க மாநில செயலாளர் அன்பழகன் பேசியதாவது:-

    புதுவையில் ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள் ஏம்பலம் தொகுதியை குறிவைத்து பசுமை வாய்ந்த விவசாய நிலைங்களை பிளாட் போட்டு விற்று வருகின்றனர்.

    முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி வாய்க்கு வந்தபடி பேசிவருகிறார். 2 ஆண்டு புதுவையின் பட்ஜெட்டே ரூ.25 ஆயிரம் கோடிதான். ஆனால் ரூ.30 ஆயிரம் கோடிக்கு ஊழல் நடந்துள்ளதாக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்.

    முன்னாள் முதல்- அமைச்சர் ஊழல் குற்றச்சாட்டு களை கூறும் போது ஆதாரத்துடன் தெரிவிக்க வேண்டும். நாராயணசாமிக்கு ஏன் பதிலளிக்க வேண்டும் என முதல்-அமைச்சர் பதிலளிப்பதில்லை. பதில் அளிக்காததால் குற்றச்சாட்டு உண்மை என அவர் பேசி வருகிறார்.

    தமிழகம் போல புதுவையிலும் திராவிட மாடல் ஆட்சி அமைப்போம் என எதிர்கட்சி தலைவர் சிவா கூறுகிறார். தமிழகம் இன்று அழிவுப்பாதையில் செல்கிறது.

    எனவே எடப்பாடியார் கரத்தை தமிழகம் மற்றும் புதுவை மக்கள் வலுப்படுத்த தயாராகிவிட்டனர். நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம், புதுவை உள்ளிட்ட 40 தொகுதிகளிலும்

    அ.தி.மு.க. நிச்சயமாக வெற்றி பெறும். புதுவை தொகுதி வெற்றிக்கு ஏம்பலம் தொகுதி செயல்வீரர்கள் வீராங்கணைகள் பணியாற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • இளைஞர்-இளம்பெண்கள் பாசறை செயலாளர் அறிக்கை
    • அ.தி.மு.க. வெளியேறி விட்டதால் சிறுபான்மையின இனத்தவர்களும், ஆதிதிராவிட இனத்தை சேர்ந்த மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    புதுச்சேரி:

    அ.தி.மு.க. இளைஞர்-இளம்பெண்கள் பாசறை மாநில செயலாளர் தமிழ் என்ற தமிழ்வேந்தன் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியி ருப்பதாவது:-

    புதுச்சேரியில் கிழக்கு - மேற்கு என இரு பிரிவாக செயல்பட்டு வந்த அ.தி.மு.க. ஒருங்கி ணைக்கப்பட்டு புதுச்சேரி மாநில செயலாளராக அன்பழகன் நியமிக்கப்பட் டுள்ளார். இதனால் இரு பிரிவாக செயல்பட்டு வந்த அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் ஒரே தலைமையின் கீழ் பணியாற்ற தொடங்கி உள்ளனர்.

    மேலும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. வெளியேறி விட்டதால் சிறுபான்மையின இனத்தவர்களும், ஆதிதிராவிட இனத்தை சேர்ந்த மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதன் தலைவர்கள் தற்போது அ.தி.மு.க. பக்கம் வர தொடங்கி விட்டனர். இதனால் அ.தி.மு.க. பலம் வாய்ந்த சக்தியாக மாறியுள்ளது.

    மேலும் அ.தி.மு.க. மாநில செயலாளர் அன்பழகன் பிறந்தநாள் நாளை(10-ந்தேதி)கொண்டாடப்பட உள்ளது. எந்த ஆண்டும் இல்லாத வகையில் தொண்டர்கள் இந்தாண்டு அவரது பிறந்தநாளை மிக சிறப்பாக கொண்டாட தொடங்கி விட்டனர்.

    மாநில செயலாளரின் வேண்டுகோளை ஏற்று பொதுமக்களுக்கு எந்தவித இடையூறும் இல்லாமல் பேனர்கள், பதாகைகள் வைக்கப்பட்டுள்ளது. இதுவும் தொண்டர்களி டையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • மாநில அவை தலைவர் அன்பானந்தம் முன்னிலை வகித்தார்.
    • துணை செயலாளர் ராசு, சிறுபான்மை பிரிவு இணைச் செயலாளர்கள் ஜானிபாய், ரபீக் உட்பட பலர் திரளாக கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் உப்பளம் தலைமை அலுவலகத்தில் நடந்தது.

    அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கினார். மாநில அவை தலைவர் அன்பானந்தம் முன்னிலை வகித்தார். பேரறிஞர் அண்ணாவின் 115-ம் ஆண்டு பிறந்தநாள் விழாவை கொண்டாடுவது சம்பந்தமாகவும் ஆலோசிக்கப் பட்டது.

    கூட்டத்தில் மாநில துணை தலைவர ராஜா ராமன், இணை செயலா ளர்கள் வீரம்மாள், ஆர்.வி.திருநாவுக்கரசு, பொரு ளாளர் ரவிபாண்டுரங்கன், நகரர செயலாளர் அன்பழ கன் உடையார், துணைச் செயலாளர்கள் உமா, எம்.ஏ.கே.கருணாநிதி, நாகமணி, மூர்த்தி, காந்தி, மணவாளன், மேற்கு மாநில அம்மா பேரவை செயலாளர் சுத்துக்கேணி பாஸ்கரன்,

    மாநில இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர் தமிழ்வேந்தன். மாநில இலக்கிய அணி செயலாளர் ராமசாமி, மாநில அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணிச் செயலா ளர் செல்வம், மாநில தொழில்நுட்ப பிரிவு  செயலாளர் தினேஷ்குமார், நகர தலைவர்கள் கணேஷ், சிவா.

    தொகுதி செயலாளர்கள் ஆறுமுகம், கமல்தாஸ், சிவகுமார், பாஸ்கர், துரை, கருணாநிதி, சம்பத், ராஜா, கோபால், வேலவன், தர்மலிங்கம், குணசேகர், சண்முகதாஸ், பொதுக்குழு உறுப்பினர்கள் லோகநாதன், நாகமுத்து, மாநில மாநில எம்.ஜி.ஆர் மன்ற தலைவர் மோகன்தாஸ், இணை செயலாளர் கணேசன்,

    ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர் சுரேஷ், மாநில எம்.ஜி.ஆர் இளைஞர் அணி துணை தலைவர் குணாளன், மாநில அண்ணா தொழிற்சங்க பேரவை, இணை செயலா ளர் கேசவன், துணை செயலாளர் ராசு, சிறுபான்மை பிரிவு இணைச் செயலாளர்கள் ஜானிபாய், ரபீக் உட்பட பலர் திரளாக கலந்து கொண்டனர்.

    • அ.தி.மு.க, கட்சி கொடி என எதையும் இனிமேல் கட்சிக்கு சம்பந்தம் இல்லாதவர்கள் பயன்படுத்த கூடாது.
    • அ.தி.மு.க.வையும், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பற்றியும் தவறாக விமர்சனம் செய்த யாருக்கும் கட்சியில் இடமில்லை.

    புதுச்சேரி:

    புதுவை மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    அ.தி.மு.க பொதுக்குழு தொடர் பான வழக்கில் இதுவரை 9 முறை எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்றுள்ளார். தி.மு.க தலைவர் ஸ்டாலினை மகிழ்விக்க எத்தனை முறை நீதிமன்றத்திற்கு சென்றாலும் நீதி தேவதை துணையோடும் ஜெயலலிதா ஆசியோடும் அதனை எங்களது பொதுச் செயலாளர் முறியடிப்பார்.

    சுப்ரீம்கோர்ட்டு, ஐகோர்ட்டு, பெஞ்சு, தேர்தல் ஆணையம் ஆகியவற்றின் மூலம் 11.7.2022-ல் நடைபெற்ற பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட அனைத்து தீர்மானங்களும் உறுதி செய்யப்பட்ட பிறகும் அ.தி.மு.க, கட்சி கொடி என எதையும் இனிமேல் கட்சிக்கு சம்பந்தம் இல்லாதவர்கள் பயன்படுத்த கூடாது.

    இது சம்பந்தமாக ஏற்கனவே புதுவை மாநில அ.தி.மு.க. சார்பில் டி.ஜி.பி, மற்றும் தேர்தல் துறையிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க.விற்கு சம்பந்தம் இல்லாதவர்கள் மீண்டும் மீண்டும் எங்கள் கட்சியின் பெயரையோ, கொடியை யோ, சின்னத்தின் குறியீட்டையோ, விளம்பர பதாகை கள், துண்டு பிரசுரங்கள், போஸ்டர்கள், சுவர் விளம்பரங்கள் ஆகியவற்றை பயன்படுத்துவது சட்டவிரோத செயலாகும்.

    இவர்கள் மீது காவல்துறையும், தேர்தல் துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அ.தி.மு.க.வையும், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பற்றியும் தவறாக விமர்சனம் செய்த யாருக்கும் கட்சியில் இடமில்லை. அப்படி விமர்சனம் செய்யாத அடிமட்ட தொண்டன், பிறருடைய தவறான துர்போதனைக்கு ஆளாகி துரோகிகள் கூட்டத்திற்கு சென்றிருந்தால் அவர்கள் தங்களது செயலுக்கு வருத்தம் தெரிவித்து கடிதம் கொடுத்தால் பொதுச் செயலாளர் அவர்களை மீண்டும் கட்சியில் சேர்த்து கொள்ள முடிவெடுப்பார்.

    இவ்வாறு அன்பழகன் கூறினார்.

    • கோடைகால வெயிலை கருத்தில் கொண்டு பொது மக்களுக்கு இலவச நீர் மோர் வழங்கும் நிகழ்ச்சி மணவெளி தொகுதி அ.தி.மு.க. சார்பில் தவளகுப்பம் 4 முனை சந்திப்பில் தொடங்கப்பட்டது.
    • சிறப்பு விருந்தினராக மாநில செயலாளர் அன்பழகன் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இலவச நீர் மோர் வழங்கி தொடங்கி வைத்தார்.

    புதுச்சேரி:

    கோடைகால வெயிலை கருத்தில் கொண்டு பொது மக்களுக்கு இலவச நீர் மோர் வழங்கும் நிகழ்ச்சி மணவெளி தொகுதி அ.தி.மு.க. சார்பில் தவளகுப்பம் 4 முனை சந்திப்பில் தொடங்கப்பட்டது.

    நிகழ்ச்சிக்கு மாநில கழக துணை செயலாளர் குமுதன் புருஷோத்தமன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக மாநில செயலாளர் அன்பழகன் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இலவச நீர் மோர் வழங்கி தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் மாநில அவைத்தலைவர் அன்பானந்தன், பொருளாளர் ரவி பாண்டுரங்கன், தொழிற்சங்க செயலாளர் பாப்புசாமி, தொகுதி அவைத்தலைவர் மூர்த்தி, பொருப்பாளர்கள் ஜானகிராமன், சிவராம ராஜா, தீனதயாளன், தர்மன், முனுசாமி, காந்தாரி, குணாலன், சேது, காத்தவ ராயன், சசிகுமார், தாஸ், செல்வமணி, சத்தியசீலன்,

    சங்கர், விஜயன், பன்னீர் செல்வம், மேகநாதன், பிரஷ்நேவ், ராமு, மதன், சோமு, வேல்முருகன், பெருமாள் மற்றும் மாநில, தொகுதி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • பட்ஜெட் அறிவிப்புகளை ஏமாற்று அறிவிப்புக்கள் என நாராயணசாமி வழக்கம் போல் விரக்தியில் கூறி உள்ளார்.
    • ரூ.300 பொதுப்பணி ஊழியர்களுக்கு ரூ.5 ஆயிரம் ஊதிய உயர்வை முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

    பட்ஜெட் அறிவிப்புகளை ஏமாற்று அறிவிப்புக்கள் என நாராயணசாமி வழக்கம் போல் விரக்தியில் கூறி உள்ளார். கடந்த சட்டமன்றத்தில் அறிவித்த எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை என்றும் அவர் குற்றஞ்சாட்டி யுள்ளார்.

    பொதுப்பணித்துறை ஊழியர்களுக்கு சம்பள உயர்வு, மழைக்கால நிவாரணம், அங்கன்வாடி ஊழியர்கள்பணி நிரந்தரம், 2 ஆயிரம் அரசு துறை காலி பணியிடங்களை நிரப்புதல், விண்ணப்பித்த அனைத்து பயனாளிகளுக்கும் முதியோர் உதவி தொகை, அரசு சார்பு நிறுவன ஊழியர்களுக்கு நிலுவை சம்பளம், கலப்புத் திருமணம், ஈமச்சடங்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு நல திட்ட அறிவிப்புக்கள் செயல் வடிவம் பெற்றுள்ளன.

    கடந்த பட்ஜெட்டில் அறிவித்த அனைத்து திட்ட ங்களையும் படிப்படியாக முதல்-அமைச்சர் நிறைவேற்றியுள்ளார். 10 ஆண்டுக்கு மேலாக பணிபுரிந்த தினக்கூலி ஊழியர்கள் பணி நிரந்தரம், ரொட்டிப்பால் ஊழியர்கள் பணி நிரந்தரம், ஆஷா, ரொட்டிப்பால் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு, பெண் குழந்தைகள் பிறந்தாள் ரூ.50 ஆயிரம டெபாசிட், அனைத்து குடும்பத்தினருக்கும் சிலிண்டர் மானியமாக ரூ.300 பொதுப்பணி ஊழியர்களுக்கு ரூ.5 ஆயிரம் ஊதிய உயர்வை முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார்.

    தனது ஆட்சிக் காலத்தில் எதையுமே செய்யாமல் இருந்து விட்டு தற்போது முதல்-அமைச்சர் ரங்கசாமி அனைத்து திட்டங்களையும் செயல்படுத்துவதை பாராட்ட முடியாமல் மனம் வெதும்பி சாபம் விடுகிறார்.

    கடந்த பட்ஜெட்டில் அறிவிக்காமலேயே குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ. 1000 வழங்கப்படும் என்ற திட்டத்தை செயல்படுத்தும் முதல் மாநிலமாக புதுவை உள்ளது இவையெல்லாம் பொறுத்துக் கொள்ள முடியாமல் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி தொடர்ந்து பதட்டம் அடைந்து வருகிறார். அவர் மனம் அமைதி கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×