search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ATK"

    ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்றிரவு நடைபெற்ற ஆட்டத்தில் கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி போராடி தோல்வி அடைந்தது. #ISL2018 #ChennaiyinFC #ATK
    சென்னை:

    10 அணிகள் இடையிலான 5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்றிரவு நடந்த 46-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னையின் எப்.சி. அணி, முன்னாள் சாம்பியன் அட்லெடிகோ டி கொல்கத்தாவுடன் மல்லுகட்டியது.

    விறுவிறுப்பான இந்த மோதலில் 14-வது நிமிடத்தில் கொல்கத்தா வீரர் ஜெயேஷ் ரனே நீண்ட தூரத்தில் இருந்து சூப்பராக கோல் அடித்தார். 24-வது நிமிடத்தில் சென்னை வீரர் தோய்சிங் கோல் திருப்பி ஆட்டத்தை சமனுக்கு கொண்டு வந்தார். 44-வது நிமிடத்தில் கொல்கத்தா வீரர் ஹிதேஷ் ஷர்மா அருகில் வந்து இலக்கை நோக்கி அடித்த ஷாட்டை, சென்னை வீரர் சபியா பந்தை கையால் தடுத்து விட்டார். இதனால் வழங்கப்பட்ட பெனால்டியை கொல்கத்தா அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் மானுல் லான்ஜரோட் கோலாக்கினார்.



    பிற்பாதியில் சென்னை வீரர்கள் வேகத்தை தீவிரப்படுத்தினர். சென்னை வீரர்கள் பக்கமே பந்து கொஞ்சம் அதிகமாக (53 சதவீதம்) சுற்றிக் கொண்டிருந்தாலும் அவர்களுக்கு அதிர்ஷ்டம் இல்லை. இந்த சூழலில் 80-வது நிமிடத்தில் கோல்பகுதியில் வைத்து பந்தை தடுக்க சென்னை வீரர்களில் சிலர் ஒருசேர முயற்சித்த போது, அந்த குழப்பத்திற்கு இடையே பந்து கார்லஸ் சலோமின் கையில் பட்டு விட்டது. இதனால் மறுபடியும் கொல்கத்தா அணிக்கு பெனால்டி வாய்ப்பு கொடுக்கப்பட்டது. இந்த பெனால்டியையும் லான்ஜரோட் கோலாக மாற்றினார். இதன் பின்னர் 88-வது நிமிடத்தில் சென்னை வீரர் இசாக் வன்மல்சவ்மா அடித்த கோல் தோல்வியின் வித்தியாசத்தை குறைக்க மட்டுமே உதவியது.

    முடிவில் சென்னை அணி 2-3 என்ற கோல் கணக்கில் போராடி தோல்வி அடைந்தது. தொடர்ந்து சறுக்கலை சந்தித்து வரும் சென்னை அணி 10 ஆட்டங்களில் விளையாடி ஒரு வெற்றி, 2 டிரா, 7 தோல்வி என்று 5 புள்ளிகளுடன் 8-வது இடத்தில் உள்ளது. உள்ளூரில் இந்த சீசனில் இதுவரை சென்னை அணி வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கொல்கத்தா அணிக்கு இது 4-வது வெற்றியாகும். இன்றைய ஆட்டத்தில் டெல்லி டைனமோஸ்-மும்பை சிட்டி (இரவு 7.30 மணி) அணிகள் மோதுகின்றன.  #ISL2018 #ChennaiyinFC #ATK 
    ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி தொடரில் இன்று இரவு சென்னையில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி.-அட்லெடிகோ டி கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. #ChennaiyinFC #ATK #ISL2018
    சென்னை:

    10 அணிகள் இடையிலான 5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

    இந்த போட்டி தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெறும் 46-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சென்னையின் எப்.சி. அணி, முன்னாள் சாம்பியன் அட்லெடிகோ டி கொல்கத்தாவை எதிர்கொள்கிறது.

    இந்த சீசனில் சென்னை அணி எதிர்பார்ப்புக்கு தகுந்த படி சிறப்பாக விளையாடவில்லை. தடுப்பு ஆட்டத்தில் பலவீனமாக காணப்படும் சென்னை அணி கோல் அடிப்பதிலும் ஏமாற்றம் அளித்து வருகிறது. சென்னை அணி இதுவரை 9 ஆட்டத்தில் விளையாடி ஒரு வெற்றி, 2 டிரா, 6 தோல்வி கண்டுள்ளது. அத்துடன் சென்னை அணி 16 கோல்கள் விட்டுக்கொடுத்து இருக்கிறது. உள்ளூரில் 4 ஆட்டங்களில் விளையாடி இருக்கும் சென்னை அணி ஒன்றில் கூட வெற்றியை ருசிக்கவில்லை.

    கொல்கத்தா அணி 9 ஆட்டத்தில் ஆடி 3 வெற்றி, 3 டிரா, 3 தோல்வி கண்டுள்ளது. அந்த அணியின் தடுப்பு ஆட்டம் அருமையாக இருக்கிறது. சொந்த ஊரில் நடந்த முந்தைய லீக் ஆட்டத்தில் கொல்கத்தா அணி 2-1 என்ற கோல் கணக்கில் சென்னை அணியை வீழ்த்தியது. அந்த நம்பிக்கையுடன் கொல்கத்தா அணி களம் இறங்கும். அதேநேரத்தில் சென்னை அணி முந்தைய ஆட்டத்தில் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுக்க தீவிரம் காட்டும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

    இந்த நிலையில் பெங்களூரு எப்.சி. அணியின் ரசிகர்கள் போட்டி நடுவர்களை திட்டியதற்காக பெங்களூரு எப்.சி. அணிக்கு ரூ.15 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை பெங்களூருவில் நடந்த எப்.சி.புனே சிட்டி அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தின் போது பெங்களூரு அணியின் ரசிகர்கள் தொடர்ந்து நடுவர்களுக்கு எதிராக குரல் எழுப்பினார்கள். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திய இந்திய கால்பந்து சம்மேளன ஒழுங்கு நடவடிக்கை குழு இந்த அபராதத்தை விதித்துள்ளது. ரசிகர்களின் மோசமான நடத்தைக்காக ஐ.எஸ்.எல். போட்டியில் ஒரு அணிக்கு அபராதம் விதிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.

    இதற்கிடையில் ஜாம்ஷெட்பூரில் நேற்று இரவு நடந்த 45-வது லீக் ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் எப்.சி.-நார்த் ஈஸ்ட் யுனைடெட் (கவுகாத்தி) எப்.சி. அணிகள் சந்தித்தன. இந்த ஆட்டம் கோல் எதுவுமின்றி டிராவில் முடிந்தது.
    கொல்கத்தாவில் நடைபெற்ற ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் கொல்கத்தா அணியை 2-1 என்ற கோல் கணக்கில் பெங்களூரு அணி வீழ்த்தி வெற்றி பெற்றது. #ISL2018 #BengaluruFC #ATK
    கொல்கத்தா:

    5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. இதில் கொல்கத்தாவில் நடைபெற்ற போட்டியில் பெங்களூரு எப்.சி, கொல்கத்தா அணிகள் மோதின.

    ஆட்டத்தின் 15-வது நிமிடத்தில் கொல்கத்தா அணியின் கோமல் தடால் முதல் கோல் அடித்து தனது அணிக்கு முன்னிலை பெற்றுக் கொடுத்தார்.

    முதல் பாதியின் முடிவில் பெங்களூரு அணியின் மிக்கு ஒரு கோல் அடித்தார். இதையடுத்து, முதல் பாதி முடிவில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்து சமனிலை வகித்தன.

    ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் எரிக் பர்தாலு 47-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். இதன்மூலம் 2-1 என்ற பெங்களூரு அணி முன்னிலை பெற்றது. அதன்பின்னர் ஆட்டம் முடியும்வரை எந்த அணியும் கோல் அடிக்கவில்லை.

    இறுதியில், பெங்களூரு அணி 2-1 என்ற கோல் கணக்கில் கொல்கத்தா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இது பெங்களூரு அணி பெற்ற மூன்றாவது வெற்றி ஆகும். புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. #ISL2018 #BengaluruFC #ATK
    ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் நேற்று இரவு நடந்த 19-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா அணி 2-1 என்ற கோல் கணக்கில் சென்னை அணியை வீழ்த்தி 2-வது வெற்றியை பெற்றது. #ISL2018 #ChennaiyinFC
    கவுகாத்தி:

    5-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து (ஐ.எஸ்.எல்.) தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் கொல்கத்தாவில் நேற்று இரவு நடந்த 19-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னையின் எப்.சி. அணி, முன்னாள் சாம்பியன் அட்லெடிகோ டி கொல்கத்தாவை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கத்திலேயே கொல்கத்தா அணி அடுத்தடுத்து 2 கோல்கள் அடித்து அமர்க்களப்படுத்தியது.

    3-வது நிமிடத்தில் கொல்கத்தா வீரர் காலு உச்சே கோல் அடித்தார். 13-வது நிமிடத்தில் ‘பிரிகிக்’ வாய்ப்பில் கொல்கத்தா அணியின் ஜான்சன் தலையால் முட்டி கோலாக்கினார். இந்த சீசனில் அடிக்கப்பட்ட 50-வது கோல் இதுவாகும். 17-வது நிமிடத்தில் சென்னை அணி வீரர் கார்லோஸ் சலோம் கோல் திருப்பினார். முதல் பாதியில் கொல்கத்தா முன்னிலை வகித்தது.

    பிற்பாதியில் பந்து அதிக நேரம் சென்னை அணியினரின் வசம் சுற்றினாலும் அதிர்ஷ்டம் இல்லை. முடிவில் கொல்கத்தா அணி 2-1 என்ற கோல் கணக்கில் சென்னை அணியை வீழ்த்தி 2-வது வெற்றியை பெற்றது. எதிரணி கோல் எல்லையை நோக்கி சென்னை அணி வீரர்கள் அடித்த 5 ஷாட்களில் ஒன்றை தவிர மற்றவை வீணானது. 5-வது ஆட்டத்தில் விளையாடிய சென்னை சந்தித்த 4-வது தோல்வி இது. ஒரு ஆட்டத்தில் டிரா கண்டுள்ளது. மும்பையில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 20-வது லீக் ஆட்டத்தில் மும்பை சிட்டி எப்.சி.-டெல்லி டைனமோஸ் எப்.சி அணிகள் மோதுகின்றன.  #ISL2018 #ChennaiyinFC
    ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியின் 14-வது லீக் ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர், கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் ‘டிரா’ ஆனது. #ISL2018 #Jamshedpur #ATK
    ஜாம்ஷெட்பூர்:

    5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் ஜாம்ஷெட்பூரில் நேற்றிரவு அரங்கேறிய 14-வது லீக் ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் எப்.சி.- அட்லெடிகோ டி கொல்கத்தா அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் ‘டிரா’ ஆனது.

    ஜாம்ஷெட்பூர் அணியில் செர்ஜியோ சிடோன்சாவும் (35-வது நிமிடம்), கொல்கத்தா அணியில் மானுல் லான்ஜரோட்டும் (45-வது நிமிடம்) கோல் அடித்தனர். இந்த சீசனில் ‘டிரா’வில் முடிந்த 6-வது ஆட்டம் இதுவாகும். இன்று இரவு 7.30 மணிக்கு புனேயில் நடக்கும் லீக் ஆட்டத்தில் புனே சிட்டி அணி, பெங்களூரு எப்.சி.யை சந்திக்கிறது. 
    ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் கொல்கத்தா அணியை 1 - 0 என்ற கணக்கில் வீழ்த்தி நார்த் ஈஸ்ட் எப்.சி அணி வெற்றி பெற்றது. #ISL2018 #NorthEastFC #ATK
    கொல்கத்தா:

    5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி சமீபத்தில் தொடங்கியது. கொல்கத்தாவில் நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா மற்றும் நார்த் ஈஸ்ட் எப்.சி அணிகள் நேற்று மோதின. 

    ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே இரு அணிகளும் பொறுப்பாக ஆடின. இதனால் ஆட்டத்தின் முதல் பாதியில் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை.



    ஆட்டத்தின் 88-வது நிமிடத்தில் நார்த் ஈஸ்ட் அணியை சேர்ந்த ரவ்லின் போர்க்ஸ் ஒரு கோல் அடித்து தனது அணிக்கு வெற்றி தேடித் தந்தார். 

    இறுதியில், கொல்கத்தா அணியை 1-0 என்ற கணக்கில் வீழ்த்தி நார்த் ஈஸ்ட் எப் சி அணி வெற்றி பெற்றது. #ISL2018 #NorthEastFC #ATK
    ×