search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "18 பேர் பலி"

    குஜராத்தின் சூரத் நகரில் வணிக வளாகத்தில் உள்ள கோச்சிங் சென்டரில் ஏற்பட்ட தீ விபத்தில் 18 குழந்தைகள் பலியானதற்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் இரங்கல் தெரிவித்தனர்.
    புதுடெல்லி:

    குஜராத் மாநிலத்தின் சூரத் நகரில் சர்தானா என்ற இடத்தில் பிரமாண்ட வணிக வளாகம் அமைந்துள்ளது. இன்று மாலை அந்த வணிக வளாகத்தின் இரண்டாவது தளத்தில் உள்ள கோச்சிங் சென்டரில் தீவிபத்து ஏற்பட்டது. இதில் 18 குழந்தைகள் சிக்கி பலியாகினர்.



    இந்நிலையில், சூரத் நகரில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 18 குழந்தைகள் பலியானதற்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    தீவிபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா 4 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும் என முதல் மந்திரி விஜய் ரூபானி உத்தரவிட்டுள்ளார்.
    தினகரனுக்கு ஆதரவு தெரிவித்த 3 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டால் 116 எம்.எல்.ஏ.க்கள் இருந்தால் தற்போதைய ஆட்சி தப்பிக்கும் என்று தெரியவந்துள்ளது. #dinakaran #edappadipalanisamy #3mlas

    சென்னை:

    2016-ம் ஆண்டு ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஓ.பன்னீர் செல்வம் ஆட்சியை விட்டு இறங்கியதும் எடப்பாடி பழனிசாமி 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16-ந் தேதி முதல்-அமைச்சராக பதவி ஏற்றார். 18-ந் தேதி அவர் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபித்தார்.

    எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த நம்பிக்கை தீர்மானத்துக்கு ஆதரவாக அப்போது 122 எம்.எல்.ஏ.க்கள் ஓட்டளித்தனர். ஓ.பன்னீர் செல்வம் அணியை சேர்ந்த 11 பேர் எதிர்த்து ஓட்டு போட்டனர்.

    அதன்பிறகு பிளவு பட்டிருந்த அ.தி.மு.க.வில் ஓ.பன்னீர் செல்வம் அணியும்- எடப்பாடி பழனிசாமி அணியும் ஒன்றானது. அ.தி.மு.க.வுக்கு இரட்டை இலை சின்னம் கிடைத்தது.

    எடப்பாடி பழனிசாமியை முதல்-அமைச்சர் பதவியில் இருந்து மாற்ற கோரி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் போர்க்கொடி தூக்கினார்கள். இதனால் 18 எம்.எல்.ஏ.க்களும், சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.


    இதன்பிறகு தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவு, திருப்பரங்குன்றம் ஏ.கே.போஸ், சூலூர் கனகராஜ் மறைவு, அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி பதவி இழந்த காரணங்களால் 4 தொகுதிகள் காலியானது.

    இப்போதை நிலவரப்படி தமிழக சட்டசபையில் மொத்தம் உள்ள 234 இடங்களில் அ.தி.மு.க.வுக்கு 113 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர் (சபாநாயகர் நீங்கலாக).

    தி.மு.க.வுக்கு 88 எம்.எல். ஏ.க்களும், காங்கிரசுக்கு 8 எம்.எல்.ஏ.க்களும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 1 எம்.எல்.ஏ.வும் உள்ளனர். டிடிவி தினகரன் சுயேட்சை எம்.எல்.ஏ.வாக உள்ளார். 22 இடங்கள் காலியான தொகுதியாக உள்ளது. இதில் 18 தொகுதிகளுக்கு கடந்த 18-ந் தேதி இடைத்தேர்தல் நடந்து முடிந்துள்ளது. மேலும் 4 தொகுதிகளுக்கு வருகிற 19-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

    இந்த நிலையில் அ.தி.மு.க.வில் உள்ள 114 எம்.எல்.ஏ.க்களில் விருத்தாசலம் கலைச் செல்வன், அறந்தாங்கி ரத்தினசபாபதி, கள்ளக்குறிச்சி பிரபு ஆகிய 3 பேர் கடந்த ஒரு ஆண்டாக டிடிவி தினகரனுக்கு பகிரங்கமாக ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.


    தற்போது நடந்து முடிந்த தேர்தலில் டிடிவி தினகரனுடன் இவர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டனர். இந்த 3 எம்.எல்.ஏ.க்களையும் நம்ப முடியாத நிலை உள்ளதால் சட்டசபையில் நம்பிக்கையில்லா தீர்மானம் வரும் போது அ.தி.மு.க.வுக்கு எதிராக செயல்பட கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

    இதனால் அ.தி.மு.க. அரசு தற்போதே காய் நகர்த்த தொடங்கி விட்டது. டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்படும் எம்.எல்.ஏ.க்கள் 3 பேருக்கு விளக்கம் கேட்டு சபாநாயகர் நோட்டீசு அனுப்பி உள்ளார்.

    இதற்கு எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் கொடுக்கும் விளக்கம் திருப்தி இல்லை என்றால் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள் என பரபரப்பாக பேசப்படுகிறது.

    22 தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு 8 தொகுதிகளில் கண்டிப்பாக வெற்றி கிடைக்க வேண்டும். அப்போதுதான் ஆட்சி நீடிக்கும்.

    இந்த சூழலில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் தகுதி நீக்கம் செய்யப்படும் போது சட்டசபையின் மொத்த எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை 231 ஆகும். அப்போது பெரும்பான்மைக்கு 116 எம்.எல்.ஏ.க்கள் இருந்தாலே போதும். இதை வைத்து பார்க்கும் போது குறைந்தபட்சம் 6 தொகுதிகளில் அ.தி.மு.க. ஜெயித்தால் ஆட்சிக்கு பாதிப்பு ஏற்படாது. #dinakaran #edappadipalanisamy #3mlas

    கிழக்காப்பிரிக்க நாடுகளில் ஒன்றான உகான்டாவின் இரு மாநிலங்களில் கொட்டித்தீர்த்த பெருமழையினால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் 18 பேர் உயிரிழந்தனர். #Eighteenkilled #heavyrains #Ugandarains
    கம்பாலா:

    உகான்டா நாட்டின் கிழக்கில் உள்ள புயென்டே மற்றும் கமுலி மாநிலங்களில் நேற்றிரவு கனமழை கொட்டித் தீர்த்தது. இடைவிடாது பெய்த பெருமழையினால் கியோலா ஏரியை ஒட்டி தாழ்வான இடங்களில் உள்ள குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது.

    வெள்ளப் பெருக்கினால் பல வீடுகளின் சுவர்கள் இடிந்து விழுந்தன. சிலர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்.

    இந்நிலையில், மழை மற்றும் வெள்ளம்சார்ந்த விபத்துகளில் புயென்டே மாநிலத்தில் 13 பேரும் கமுலி மாநிலத்தில் 5 பேரும் உயிரிழந்ததாக உகாண்டா ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், காயமடைந்த சுமார் 100 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. #Eighteenkilled #heavyrains #Ugandarains 
    தமிழகத்தில் காலியாக உள்ள மேலும் 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுக-அதிமுக இடையே நேரடி போட்டி நிலவுகிறது. இரண்டு கட்சிகளும் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியை தொடங்கியுள்ளனர். #Bypolls #TNByelections

    சென்னை:

    தி.மு.க. தலைவர் கருணாநிதி மரணம் காரணமாக திருவாரூர் சட்டசபை தொகுதியும், அ.தி.மு.க. எம்.எல்.ஏ. போஸ் மரணம் காரணமாக திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதியும் காலி இடங்கள் ஆனது.

    இதற்கிடையே டி.டி.வி. தினகரனை ஆதரித்ததால் பெரம்பூர், சோளிங்கர், ஒட்டப்பிடாரம், சாத்தூர், விளாத்திக்குளம், பரமக்குடி, திருப்போரூர், பூந்தமல்லி, நிலக்கோட்டை, ஆம்பூர், குடியாத்தம், அரவக்குறிச்சி, பாப்பிரெட்டிபட்டி, ஆண்டிப்பட்டி, பெரியகுளம், தஞ்சை, அரூர், மானாமதுரை ஆகிய 18 சட்டசபை தொகுதி இடங்கள் காலி இடங்களாக அறிவிக்கப்பட்டன.

    இந்த நிலையில் அமைச்சராக இருந்த பாலகிருஷ்ண ரெட்டி, பழைய வழக்கு ஒன்றில் 3 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றதால் அவர் எம்.எல்.ஏ. பதவி பறிபோனது. இதனால் அவர் வெற்றி பெற்றிருந்த ஓசூர் தொகுதியும் காலி இடமாக அறிவிக்கப்பட்டது. மொத்தம் 21 இடங்கள் காலி இடங்களாக இருந்தன.

    கடந்த மாதம் பாராளுமன்ற தேர்தல் அட்டவணை வெளியிடப்பட்டபோது தமிழகத்தில் ஏப்ரல் 18-ந்தேதி தேர்தல் நடத்தப்படும் போது 18 சட்டசபை தொகுதிகளுக்கும் ஓட்டுப்பதிவு நடத்தப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது. திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் ஆகிய 3 தொகுதிகள் தொடர்பான வழக்குகள் கோர்ட்டில் நிலுவையில் இருப்பதால் இடைத்தேர்தல் நடத்த இயலாது என்று தேர்தல் ஆணையம் கூறியது.

    தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவை தி.மு.க., காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன. ஆளும் அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் செயல்படுவதாக தி.மு.க. தரப்பில் புகார் கூறப்பட்டது. இதை மறுத்த தேர்தல் ஆணையம், “அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் தொகுதிகளில் வழக்குகள் வாபஸ் பெறப்பட்டால் தேர்தல் நடத்த தயார்” என்று அறிவித்தது.

    இதைத் தொடர்ந்து அந்த 3 தொகுதிகளிலும் தேர்தல் தொடர்பான வழக்குகள் வாபஸ் பெறப்பட்டன. இதனால் அந்த 3 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்துவது பற்றி தேர்தல் ஆணையம் ஆலோசித்து வந்தது. இதற்கிடையே சூலூர் சட்ட சபை தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கனகராஜ் மாரடைப்பால் மரணம் அடைந்ததால் காலியாக இருக்கும் தொகுதிகள் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது.

    இந்த 4 தொகுதிகளுக்கும் அடுத்த மாதம் (மே) 19-ந்தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. பாராளுமன்ற தேர்தலின் கடைசி கட்ட 7-வது ஓட்டுப்பதிவு தினமான 19-ந்தேதியை 4 தொகுதி இடைத்தேர்தல் தேதியாக தேர்தல் ஆணையம் தேர்வு செய்துள்ளது.

    4 தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வருகிற 22-ந்தேதி தொடங்குகிறது. ஏப்ரல் 29-ந்தேதி மனுத்தாக்கலுக்கு கடைசி நாளாகும். ஏப்ரல் 30-ந்தேதி மனுக்கள் மீது பரிசீலனை நடைபெறும். மனுக்களை வாபஸ் பெற மே மாதம் 2-ந்தேதி கடைசி நாளாகும்.

    திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, சூலூர் ஆகிய 4 தொகுதிகளிலும் 2016-ம் ஆண்டு தேர்தலின்போது அ.தி.மு.க. வெற்றி பெற்றது. தி.மு.க. அந்த தேர்தலில் திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி இரு தொகுதிகளில் மட்டுமே போட்டியிட்டது. சூலூர் தொகுதியை காங்கிரசுக்கும், ஒட்டப்பிடாரம் தொகுதியை புதிய தமிழகம் கட்சிக்கும் விட்டுக் கொடுத்திருந்தது.

     


    ஆனால் இந்த தடவை இடைத்தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறி இருப்பதால் 4 தொகுதிகளிலும் தனது வேட்பாளர்களையே களம் இறக்க தி.மு.க. முடிவு செய்துள்ளது. இதனால் 4 தொகுதி இடைத்தேர்தலிலும் அ.தி.மு.க. - தி.மு.க. இடையே நேரடி போட்டி உருவாகி இருக்கிறது.

    4 தொகுதி இடைத்தேர்தலிலும் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற தீவிர முனைப்புடன் அ.தி.மு.க.வும் தி.மு.க.வும் உள்ளன. எனவே அதற்கு ஏற்ப தகுதியான வேட்பாளர்களை களம் இறக்க இரு கட்சிகளிலும் இப்போதே விவாதமும், ஆலோசனைகளும் தொடங்கி விட்டது.

    மனுத்தாக்கல் தொடங்கும் 22-ந்தேதிக்கு முன்னதாக வேட்பாளர்களை அறிவிக்க அ.தி.மு.க., தி.மு.க. தலைவர்கள் தயாராகி வருகிறார்கள். தி.மு.க.வில் திருப்பரங்குன்றம் தொகுதியில் டாக்டர் சரவணன், அரவக்குறிச்சி தொகுதியில் செந்தில் பாலாஜி மீண்டும் போட்டியிடுவது உறுதியாகி விட்டது.

    ஒட்டப்பிடாரம் தொகுதியில் ஒன்றிய தி.மு.க. செயலாளர் சண்முகையா, சூலூர் தொகுதியில் தி.மு.க. பிரமுகர்கள் ராஜேந்திரன், மன்னவன், தளபதி முருகேசன் ஆகிய மூவரில் ஒருவர் வேட்பாளராக வாய்ப்புள்ளது. அ.தி.மு.க. மற்றும் அ.ம.மு.க.வும் வேட்பாளர் தேர்வு ஆலோசனையை தொடங்கி விட்டன.

    வருகிற 18-ந்தேதி நடக்கும் 18 தொகுதிகள் இடைத்தேர்தல் வாக்குகளும், மே 19-ந்தேதி நடக்கும் 4 தொகுதி இடைத்தேர்தல் வாக்குகளும் மே 23-ந்தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். அந்த தேர்தல் முடிவுகள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சியின் தலைவிதியை நிர்ணயம் செய்வதாக இருக்கும். இதனால் ஆளும் அ.தி.மு.க. அரசுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.

    தமிழக சட்டசபையில் மொத்தம் 234 எம்.எல்.ஏ.க்கள் இருக்கும் பட்சத்தில் தனிப் பெரும்பான்மை பெற 117 பேர் ஆதரவு தேவை. தற்போது சட்டசபையில் அ.தி.மு.க.வுக்கு 114 எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்கள். எனவே 22 தொகுதிகளில் 4 தொகுதிகளில் வெற்றி பெற்றாலே போதும் என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால் உண்மையில் அ.தி.மு.க. 4 இடங்களில் மட்டும் வெற்றி பெற்றால் போதாது.

    அ.தி.மு.க.வின் தற்போதைய 114 எம்.எல்.ஏ.க்களில் அறந்தாங்கி எம்.எல்.ஏ. ரத்தின சபாபதி, விருத்தாச்சலம் எம்.எல்.ஏ. கலைச்செல்வன், கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. பிரபு ஆகிய மூன்று பேரும் டி.டி.வி. தினகரன் ஆதரவாளர்களாக உள்ளனர். அது போல இரட்டைஇலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கொங்கு இளைஞர் பேரவையின் தனியரசு, மனிதநேய ஜன நாயக கட்சியின் தமிமுன் அன்சாரி, முக்குலத்தோர் புலிப்படையின் கருணாஸ் ஆகிய மூன்று எம்.எல்.ஏ.க்களும் அ.தி.மு.க.வுக்கு எதிரான மன நிலையில் உள்ளனர்.

    இந்த 6 எம்.எல்.ஏ.க்களையும் அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் நம்ப தயாராக இல்லை. அந்த 6 எம்.எல்.ஏ.க்களையும் கழித்துப் பார்த்தால் அ.தி.மு.க.வின் பலம் 108 ஆக குறைந்து விடும். இத்தகைய நிலையில் இடைத்தேர்தல் நடக்கும் 22 இடங்களில் குறைந்தபட்சம் 10 இடங்களில் வெற்றி பெற்றால்தான் அ.தி.மு.க.வின் நம்பகத்தன்மை பலம் 118 ஆக உயரும். எனவே 10 முதல் 15 தொகுதிகளில் வெற்றியை குறி வைத்து அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் காய்களை நகர்த்த தொடங்கி உள்ளனர்.

    சட்டசபையில் தற்போது தி.மு.க.வுக்கு 88 எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்கள். காங்கிரசுக்கு 8, முஸ்லிம் லீக் கட்சிக்கு 1 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இவர்களையும் சேர்த்தால் தி.மு.க. கூட்டணி எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை 97 ஆக உள்ளது.

    தனி பெரும்பான்மைக்கு 117 இடங்கள் தேவை என்பதால் இடைத்தேர்தல் நடக்கும் 22 தொகுதிகளில் 21 இடங்களில் வெற்றி பெற வேண்டிய நிலை தி.மு.க.வுக்கு உள்ளது. இந்த எண்ணிக்கையில் தி.மு.க.வால் வெற்றி பெற முடியுமா? என்பது மே 23-ந் தேதி தெரிந்து விடும். #Bypolls #TNByelections

    தமிழக சட்டசபையில் காலியாக உள்ள திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், சூலூர், அரவக்குறிச்சி ஆகிய 4 தொகுதிகளுக்கு மே 19-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. #EC #Bypolls #TNByelections #Sulur #Aravakurichi #Thiruparankundram #Ottapidaram
    சென்னை:

    தமிழ்நாட்டில், பாராளுமன்ற தேர்தலுடன் சேர்ந்து தமிழக சட்டசபையில் காலியாக உள்ள 18 தொகுதிகளுக்கு வரும் 18-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

    இதே தேதியில் காலியாக உள்ள திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், சூலூர், அரவக்குறிச்சி ஆகிய 4 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தினர். ஆனால் இந்த கோரிக்கையை தேர்தல் கமிஷன் நிராகரித்து விட்டது. இதுதொடர்பாக தொடரப்பட்ட வழக்கும் தள்ளுபடி ஆனது.

    இந்நிலையில்,  திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், சூலூர், அரவக்குறிச்சி ஆகிய 4 தொகுதிகளுக்கு மே 19-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் கமிஷன் இன்று அறிவித்துள்ளது.

    ஏப்ரல் 22-ம் தேதி - வேட்பு மனுதாக்கல் தொடக்கம், 29-ம் தேதி - வேட்பு மனு தாக்கல் செய்ய இறுதி நாள்,  30-ம் தேதி வேட்புமனு பரிசீலனை நிறைவடைகிறது. மே 2ம் தேதி வேட்புமனுக்களை திரும்ப பெற கடைசி நாளாகும்.

    மேற்கண்ட நான்கு தொகுதிகளில் பதிவாகும் வாக்குகளின் எண்ணிக்கை பாராளுமன்ற தேர்தல் மற்றும் தமிழகத்தின் 18 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளுடன் சேர்த்து மே 23-ம் தேதி நடத்தப்படும்  என தேர்தல் கமிஷன் இன்று வெளியிட்டுள்ள் அறிவிப்பில் தெரிவித்துள்ளது.  #EC #Bypolls #TNByelections #Sulur #Aravakurichi #Thiruparankundram #Ottapidaram
    உத்தரபிரதேசத்தில் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு, ராகுல் காந்தியும், உ.பி. கிழக்கு பகுதி பொது செயலாளராக நியமிக்கப்பட்ட பிரியங்காவும் இணைந்து 18 பேரணிகளில் பங்கேற்கின்றனர் என அக்கட்சி அறிவித்துள்ளது. #LSpolls #Congress #RahulGandhi #PriyankaVadra
    லக்னோ:

    பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் நாடு முழுவதும் நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெற பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

    இதற்கிடையே, கட்சியின் அகில இந்திய தலைவர்கள், முக்கிய தலைவர்கள் ஒவ்வொரு மாநிலத்திலும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், உத்தரபிரதேசத்தில் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு, ராகுல் காந்தியும், பிரியங்காவும் இணைந்து 18 பேரணிகளில் பங்கேற்க உள்ளனர் என அக்கட்சி இன்று அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:



    பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்துக்காக 45 நாட்கள் திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த தேர்தல் பிரசாரங்களில் கட்சியின் தலைவர் ராகுலும், பிரியங்காவும் 18 பேரணிகளில் ஒன்றாக பங்கேற்க உள்ளனர்.

    சஹரான்பூர், காஜியாபாத், மீரட், பெரெய்லி, பதேபூர் சிக்ரி, அலிகார், லக்னோ, பாரபங்கி, அலகாபாத், கோரக்பூர், கான்பூர், வாரணாசி உள்ளிட்ட 18 பகுதிகளில் பேரணிகள் நடத்த திட்டமிட்டுள்ளோம்.

    காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங்கும் பிலிபிட், கான்பூரில் நடக்கவுள்ள பேரணிகளில் கலந்து கொள்கிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. #LSpolls #Congress #RahulGandhi #PriyankaVadra
    மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் 100 சதவீதம் உழைத்திட வேண்டும் என திமுக தொண்டர்களுக்கு முக ஸ்டாலின் கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார். #LSPolls #DMKManifesto #DMK #MKStalin
    சென்னை:

    தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், தமிழகத்தில் காலியாக இருக்கும் 18 சட்டசபை தொகுதிகளுக்கும் வரும் ஏப்ரல் 18-ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. இந்த தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கையை கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார்.

    வேளாண்துறைக்கு தனியாக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும். பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரப்படும்.
    மாணவர்களுக்கு நடத்தப்படும் நீட் தேர்வு ரத்து செய்யப்படும். மாணவர்களின் கல்விக்கடன் அனைத்தையும் முழுவதுமாக தள்ளுபடி செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இலவச ரெயில் பயண சலுகை வழங்கப்படும் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



    இந்நிலையில், மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் 100 சதவீதம் உழைத்திட வேண்டும் என தி.மு.க. தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் உழைத்திடுவீர்.

    நாற்பதுக்கு 40, பதினெட்டுக்கு 18 என 100 சதவீதம் வெற்றிக்காக வேறு சிந்தனையின்றி உழைத்திடுவீர்.

    உங்களின் ஆதரவுடன் திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெறும். மக்கள் நலன் சார்ந்த கோரிக்கைகளுக்காக மக்களவையில் என்றும் குரல் கொடுப்போம். திமுக மீது நம்பிக்கை வைத்து ஆதரவு தரும் அரசியல் இயக்கங்கள், அமைப்பினருக்கு நன்றி என தெரிவித்துள்ளார். #LSPolls #DMKManifesto #DMK #MKStalin
    18 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெறுவதையொட்டி அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் வருகிற 13-ந்தேதி விருப்ப மனுக்களை அளிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. #ADMK
    சென்னை:

    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    18 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெறுவதையொட்டி அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் வருகிற 13-ந்தேதி காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை விருப்ப மனுக்களை பெறலாம். விண்ணப்ப கட்டணமாக ரூ.25 ஆயிரத்தை தலைமைக் கழகத்தில் செலுத்தி விண்ணப்ப படிவங்களை பெற்று பூர்த்தி செய்து அன்று மாலைக்குள் வழங்க வேண்டும். திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்கு ஏற்கனவே விருப்ப மனு பெறப்பட்டு விட்டது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #ADMK
    தமிழக சட்டசபையில் காலியாக உள்ள 21 உறுப்பினர்கள் பதவிக்கு பாராளுமன்ற தேர்தலுடன் சேர்த்து ஏப்ரல் 18-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. #Bypolls #TNassemblyBypolls
    புதுடெல்லி:

    முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுக ஓ.பிஎஸ், தினகரன் அணியாக பிரிந்து பின்னர் ஓபிஎஸ் ஈபிஎஸ் அணி, தினகரன் எதிர் அணி என்று மாறியது. கட்சியும் சின்னமும் ஈபிஎஸ், ஓபிஎஸ் வசமாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை நிறுவினார் தினகரன். அவரது அணியை ஆதரித்த 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்ப்படுவதாக தமிழக சட்டசபை சபாநாயகர் தனபால் அறிவித்தார்.

    இதனால், சென்னை பெரம்பூர், சோளிங்கர், ஒட்டப்பிடாரம், சாத்தூர்,விளாத்திக்குளம், பரமக்குடி, திருப்போரூர், பூந்தமல்லி, நிலக்கோட்டை, ஆம்பூர், குடியாத்தம், அரவக்குறிச்சி, பாப்பிரெட்டிப்பட்டி, ஆண்டிப்பட்டி, பெரியகுளம், தஞ்சாவூர், அரூர், மானாமதுரை உள்ளிட்ட 18 தொகுதிகள் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

    திருவாரூர் தொகுதியின் சட்டசபை உறுப்பினராக இருந்த கருணாநிதி, திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக எம்எல்ஏ ஏ.கே.போஸ் உள்ளிட்டோர் உயிரிழந்ததால் இந்த தொகுதிகளும் காலியாக உள்ளன.

    மேலும், ஓசூர் தொகுதி எம்.எல்.ஏ. பாலகிருஷ்ண ரெட்டிக்கு ஒரு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டதால் அவர் எம்எல்ஏ பதவியை இழக்க நேரிட்டது. இதனால், தமிழக சட்டசபையில் காலியாக உள்ள இடங்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்தது.

    இந்நிலையில், பாராளுமன்ற தேர்தல் தேதி தொடர்பான அறிவிப்பை இன்று மாலை வெளியிட்ட இந்திய தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 18-ம் தேதி அன்றைய தினத்தில் காலியாக இருக்கும் 21 சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறும் என உத்தரவிட்டுள்ளார்.

    மேற்கண்ட தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் வரும் 19-ம் தேதி தொடங்குகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசிநாள் 26-ம் தேதி. வேட்புமனு பரிசீலனை 27-ம் தேதி நடைபெறும். #Bypolls #TNassemblyBypolls 
    அ.தி.மு.க.வினர் எந்த கூட்டணி அமைத்தாலும் ஒரு தொகுதியில் கூட அவர்களுக்கு டெபாசிட் கிடைக்காது என்று தினகரன் தெரிவித்துள்ளார். #dinakaran #admk #parliamentelection

    ரிஷிவந்தியம்:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் விழுப்புரம் மாவட்டத்தில் 4 நாட்கள் மக்கள் சந்திப்பு புரட்சி பயணம் மேற்கொண்டு வந்தார்.

    கடந்த 6-ந்தேதி தொடங்கிய இவரது புரட்சி பயணம் நேற்றுடன் முடிவடைந்தது. நேற்று மாலை தியாகதுருகம், சின்னசேலம், கள்ளக்குறிச்சி, மேல்நாரியப்பனூர், வடக்குநந்தல், ஆலத்தூர், சங்கராபுரம், பாவலம் ஆகிய இடங்களில் பேசினார். பகண்டை கூட்ரோடு பகுதியில் நள்ளிரவு 1 மணிக்கு திறந்தவேனில் நின்றபடி பொதுமக்கள் மத்தியில் பேசினார்.


    இன்றைய முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் ஆட்சி செய்வதற்கு காரணமாக இருந்த நமது கழக பொதுச்செயலாளர் சசிகலாவுக்கும், எனக்கும் துரோகம் செய்த காரணத்தால் பிரபு எம்.எல்.ஏ. போன்று தமிழ்நாட்டிலுள்ள தொண்டர்கள் அனைவரும் அ.ம.மு.க.வுக்கு ஆதரவாக செயல்பட்டு கொண்டிருக்கின்றனர். ஜெயலலிதாவின் பெயரை சொல்லி ஆட்சி செய்பவர்கள் தொகுதி மக்களின் தேவைகளை சரிவர செய்யவில்லை.

    பட்ஜெட்டில் பல திட்டங்களுக்கு நிதி ஒதுக்கி உள்ளார்கள். ஆனால், ரிஷிவந்தியம் தொகுதியை ஆட்சியாளர்கள் திட்டமிட்டு புறக்கணித்துள்ளனர். மழை இல்லாத காரணத்தால் விவசாயிகள் அண்டை மாநிலங்களுக்கு பிழைப்பு தேடிச்செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

    தமிழகத்தில் ஒரு கோடிக்கு மேல் படித்த மாணவ-மாணவிகள் வேலை இல்லாமல் திண்டாடுகிறார்கள். அரசு சார்ந்த கரும்பு ஆலைகளும், தனியார் கரும்பு ஆலைகளும், விவசாயிகளின் கரும்பு நிலுவைத் தொகையை வழங்காததால் விவசாயிகள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர்.

    மேட்டூர் அணை நிரம்பி கடலுக்கு செல்லும் நீரை முறையாக சேமித்து விவசாயத்துக்கு பயன்படுத்த இந்த ஆட்சியாளர்கள் எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை.

    அவர்கள் எல்லோரும் பணத்தை கொள்ளையடிப்பதிலேயே குறிக்கோளாக உள்ளனர். பொதுமக்கள் பயன்பெறும் வகையில் எந்த திட்டமும் கொண்டு வரவில்லை. காதில் பூ சுற்றுவதுபோல் பட்ஜெட்டில் பல திட்டங்களை அறிவித்துள்ளார்கள்.

    ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் போராட்டம் செய்தால் அவர்களை அடக்குகிறார்கள். ஆனால் இவர்கள் ஆட்சியில் இருக்க வேண்டும் என்பதற்காக சட்டமன்ற உறுப்பினர்கள் கேட்காமலேயே அவர்களது சம்பளத்தை ரூ.50 ஆயிரத்தில் இருந்து ஒரு லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கி உள்ளனர்.

    தற்போது தமிழகத்தின் கடன் ரூ.4 லட்சம் கோடி உள்ளது. இதையெல்லாம் சரி செய்யாமல் டாஸ்மாக்கில் இருந்து வருகிற வருமானத்தால் ஆட்சியை ஓட்டிவிடலாம் என்று பகல் கனவு காணுகின்றனர்.

    ஜெயலலிதா 2016-ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் மதுக்கடைகளை படிப்படியாக குறைப்பேன் என்று வாக்குறுதி அளித்தார். ஆனால் தற்போதுள்ள ஆட்சியாளர்கள் மதுக்கடையை குறைக்காமல் வருமானத்தை அதிகரித்துக் கொண்டிருக்கின்றனர்.

    18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கில் தீர்ப்பு நமக்கு சாதகமாக வரும் என்று மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அந்த தீர்ப்பு நமக்கு சாதகமாக வரவில்லை. எனவே வருகிற பாராளுமன்ற தேர்தல், சட்டமன்ற இடைத்தேர்தல்களில் மக்கள் தீர்ப்பு அளிக்க உள்ளனர்.

    சட்டமன்ற இடைத்தேர்தலில் எட்டு தொகுதிகளில் வெற்றி பெறவில்லை என்றால் ஆளுங்கட்சியின் ஆட்சி முடிவுக்கு வந்து விடும்.

    அ.தி.மு.க.வினர் எந்த கூட்டணி அமைத்தாலும் ஒரு தொகுதியில் கூட அவர்களுக்கு டெபாசிட் கிடைக்காது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ரிஷிவந்தியம் தொகுதியில் ஐ.டி.ஐ. தொழிற்சாலை கொண்டு வருவோம். 24 மணி நேரமும் செயல்படும் கூடுதல் ஆஸ்பத்திரி அமைக்கப்படும். பள்ளி மாணவர்களுக்கு பஸ் போக்குவரத்து செய்து கொடுப்போம். பகண்டை கூட்ரோட்டில் புதிய பஸ் நிலையம் அமைக்கப்படும். அனைத்து ஏரிகளையும் தூர்வாரி, நீர்நிலைகளில் நீரை சேமிக்க வழிவகை செய்வோம்.

    இவ்வாறு அவர் பேசினார். #dinakaran #admk #parliamentelection

    ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி தனது மகனின் திருமணத்தை 18 ஆயிரம் ரூபாய் செலவில் நடத்த முடிவு செய்துள்ளார். #IAS #BasanthKumar
    ஐதராபாத்:

    ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி பசந்த்குமார்.

    இவர் கடந்த 2012-ம் ஆண்டு கவர்னர் நரசிம்மனுக்கு இணைச் செயலாளராக பணியாற்றினார். பின்னர் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பதவி உயர்வு பெற்றார்.

    தற்போது பசந்த்குமார் விசாகப்பட்டினம் மண்டல மேம்பாட்டு ஆணையத்தில் ஆணையராக இருக்கிறார். இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

    கடந்த 2017-ம் ஆண்டு இவரது மகளுக்கு திருமணம் நடந்தது. திருமணத்திற்காக ஆடம்பர செலவு செய்வதை தவிர்க்க முடிவு செய்த பசந்த்குமார் மிக மிக எளிமையாக மகள் திருமணத்தை நடத்தினார்.

    அந்த திருமணத்திற்கு அவர் செலவிட்ட மொத்த தொகையே ரூ.16 ஆயிரம் தான்.



    இந்த நிலையில் தற்போது அவர் தனது மகனுக்கு திருமணம் செய்ய முடிவு செய்துள்ளார். வருகிற 10-ந்தேதி விசாகப்பட்டினத்தில் இந்த திருமணம் நடைபெற உள்ளது. இந்த திருமணத்தையும் மிக மிக எளிதாக நடத்த அவர் திட்டமிட்டுள்ளார்.

    திருமண அழைப்பிதழ், உடை மற்றும் விருந்தாளிக்கு உணவு ஆகியவற்றுக்கு மொத்தம் ரூ.18 ஆயிரம் மட்டுமே செலவிட அவர் ஏற்பாடு செய்துள்ளார். அதுபோல மணமகள் குடும்பத்தினரிடமும் ரூ.18 ஆயிரத்திற்குள் அனைத்து செலவுகளையும் முடிக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளார்.

    இதன் மூலம் அவரது மகன் திருமணம் ரூ.18 ஆயிரத்திற்குள் நடத்தி முடிக்கப்பட உள்ளது. இதுபற்றி அறிந்ததும் கவர்னர் நரசிம்மன் தொலைபேசி மூலம் ஐ.ஏ.எஸ். அதிகாரி பசந்த்குமாரை தொடர்பு கொண்டு பாராட்டு தெரிவித்தார். #IAS #BasanthKumar
    தமிழகத்தில் 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவது குறித்து ஏப்ரல் 24-க்குள் முடிவு செய்யப்படும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. #ECI #Bypoll #MaduraiHighCourt
    மதுரை:

    எம்.எல்.ஏ.க்கள் தகுதியிழப்பு செய்யப்பட்டதால் காலியாக உள்ள 18 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

    இந்த வழக்கு விசாரணையில் நீதிபதிகள், 18 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? இடைத்தேர்தல் எப்போது நடத்தப்படும்? என்பதை இந்த கோர்ட்டு அறிய விரும்புகிறது. இந்த வழக்கு குறித்து இந்திய தலைமை தேர்தல் கமிஷன், தமிழக தலைமை தேர்தல் ஆணையர் ஆகியோர் பதில் அளிக்கும்படி நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் விசாரணையை வரும் 22-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

    இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ள பதிலில், தமிழகத்தில் 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவது குறித்து ஏப்ரல் 24-ம் தேதிக்குள் முடிவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. #ECI #Bypoll #MaduraiHighCourt
    ×