search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழகத்தில் காலியாக உள்ள 4 தொகுதிகளுக்கு மே 19-ம் தேதி இடைத்தேர்தல்
    X

    தமிழகத்தில் காலியாக உள்ள 4 தொகுதிகளுக்கு மே 19-ம் தேதி இடைத்தேர்தல்

    தமிழக சட்டசபையில் காலியாக உள்ள திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், சூலூர், அரவக்குறிச்சி ஆகிய 4 தொகுதிகளுக்கு மே 19-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. #EC #Bypolls #TNByelections #Sulur #Aravakurichi #Thiruparankundram #Ottapidaram
    சென்னை:

    தமிழ்நாட்டில், பாராளுமன்ற தேர்தலுடன் சேர்ந்து தமிழக சட்டசபையில் காலியாக உள்ள 18 தொகுதிகளுக்கு வரும் 18-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

    இதே தேதியில் காலியாக உள்ள திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், சூலூர், அரவக்குறிச்சி ஆகிய 4 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தினர். ஆனால் இந்த கோரிக்கையை தேர்தல் கமிஷன் நிராகரித்து விட்டது. இதுதொடர்பாக தொடரப்பட்ட வழக்கும் தள்ளுபடி ஆனது.

    இந்நிலையில்,  திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், சூலூர், அரவக்குறிச்சி ஆகிய 4 தொகுதிகளுக்கு மே 19-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் கமிஷன் இன்று அறிவித்துள்ளது.

    ஏப்ரல் 22-ம் தேதி - வேட்பு மனுதாக்கல் தொடக்கம், 29-ம் தேதி - வேட்பு மனு தாக்கல் செய்ய இறுதி நாள்,  30-ம் தேதி வேட்புமனு பரிசீலனை நிறைவடைகிறது. மே 2ம் தேதி வேட்புமனுக்களை திரும்ப பெற கடைசி நாளாகும்.

    மேற்கண்ட நான்கு தொகுதிகளில் பதிவாகும் வாக்குகளின் எண்ணிக்கை பாராளுமன்ற தேர்தல் மற்றும் தமிழகத்தின் 18 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளுடன் சேர்த்து மே 23-ம் தேதி நடத்தப்படும்  என தேர்தல் கமிஷன் இன்று வெளியிட்டுள்ள் அறிவிப்பில் தெரிவித்துள்ளது.  #EC #Bypolls #TNByelections #Sulur #Aravakurichi #Thiruparankundram #Ottapidaram
    Next Story
    ×