என் மலர்
பாராளுமன்ற தேர்தல் 2024
- இந்திய கூட்டணி ஆட்சிக்கு வந்தால், கேஸ் விலை 500 ரூபாயாக குறைக்கப்படும்.
- இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால், சுங்கச்சாவடிகள் அகற்றப்படும்.
கும்பகோணத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, மயிலாடுதுறை காங்கிரஸ் வேட்பாளர் சுதாவை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.
அப்போது அவர் பேசியதாவது:-
கும்பகோணத்தை மாவட்டமாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். கும்பகோணம் ஸ்மார்ட் சிட்டியாக மாற்றப்படும்.
கேஸ் விலையை 10 ஆண்டுகளில் 800 ரூபாய் உயர்த்திவிட்டு, 100 ரூபாய் குறைத்துள்ளனர்.
இந்திய கூட்டணி ஆட்சிக்கு வந்தால், கேஸ் விலை 500 ரூபாயாக குறைக்கப்படும்.
இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால், சுங்கச்சாவடிகள் அகற்றப்படும்.
முரசொலியையும், உதயசூரியனையும் பிரிக்க முடியாது. மோடி நமக்கு பல முறை வேட்டு வைத்துள்ளார். தற்போது நாம் அவருக்கு வேட்டு வைக்க வேண்டும்.
5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெல்ல வையுங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சென்னை சிங்கப்பூராக மாறும் என்றார்கள். மாறியதா? சிங்கப்பூர் நிறுவனத்துக்கு காண்டிராக்ட் மாறியது.
- வெள்ளத்துக்கு தீர்வு கண்டார்களா? குப்பைக்கு தீர்வு கண்டார்களா? தொகுதிக்கு என்ன மாற்றத்தை தந்தார்கள்.
சென்னை:
வேளச்சேரியில் பிரசாரம் செய்த தென்சென்னை பா.ஜனதா வேட்பாளர் டாக்டர் தமிழிசையிடம் பெருங்குடி குப்பை கிடங்கை பொதுமக்கள் காட்டி தீர்வு காண வலியுறுத்தினார்கள்
இது தொடர்பாக அவர் பேசியதாவது:-
திராவிடமாடலின் பெருமையும், அடையாளமும் பெருங்குடி மற்றும் கொடுங்கையூர் குப்பை கிடங்குகள்தான். ஒவ்வொரு தேர்தலிலும் தீர்வு காண்பதாக சொல்லி ஏமாற்றினார்கள். தீர்வு காண முடியாத பிரச்சினையா? அவர்கள் செய்யமாட்டார்கள். சென்னை சிங்கப்பூராக மாறும் என்றார்கள். மாறியதா? சிங்கப்பூர் நிறுவனத்துக்கு காண்டிராக்ட் மாறியது. அவர்களுக்கு பணம் கைமாறியது. அவ்வளவு தான். நான் புதுவை கவர்னராக இருந்தபோது அங்கும் இதே போல் 20 ஆண்டுகளாக தீர்க்க முடியாத குப்பை கிடங்கு பிரச்சினை இருந்தது.
அதற்கான நிபுணர்களை வரவழைத்து ஆய்வு செய்து மத்திய அரசு துறைகளும் பரிசீலித்து 9 மாதங்களில் பிரச்சினை தீர்ந்தது. இப்போது மேலாண்மை தொழிற்சாலை போல் செயல்படுகிறது. மக்கள் நிம்மதியாக வாழ்கிறார்கள்.
60 ஆண்டுகள் தமிழகத்தை ஆட்சி செய்தும் குப்பையை கூட கையாள தெரியாத கையாலாகாத அரசுகளாகத்தான் இரு கழக அரசுகளும் இருந்து உள்ளன. இதே தென் சென்னையில் ஏழெட்டு தடவை தி.மு.க. எம்.பி.க்கள் வெற்றி பெற்றுள்ளார்கள்.
ஆனால் வெள்ளத்துக்கு தீர்வு கண்டார்களா? குப்பைக்கு தீர்வு கண்டார்களா? தொகுதிக்கு என்ன மாற்றத்தை தந்தார்கள். நீங்கள் மாற்றி யோசியுங்கள். மாற்றமா? ஏமாற்றமா? முடிவு செய்யுங்கள்.
குப்பையை கூட சீராக்காத திராவிட கட்சிகளுக்கு குட்பை சொல்லுங்கள். நாடே முன்னேறும் போது சென்னையும் முன்னேற வேண்டாமா? எனக்கு ஒரு வாய்ப்பு தந்தால் ஒரே வருடத்தில் குப்பை பிரச்சினைக்கு தீர்வு காண்பேன். தாமரைக்கு வாக்களியுங்கள். வளர்ச்சிக்கு வித்திடுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
- டிராபிக் ஏற்படும் என்று கருதிய கண்காணிப்பு நிலைக்குழுவினர் அவரது காரை ஓரமாக நிறுத்துமாறு கூறினர்.
- "இப்படித்தான் உங்களை மிரட்ட சொன்னாங்களா? எந்த மனிதராக இருந்தாலும் முதலில் மரியாதையாக சொல்லுங்க.. என்று ஆவேசமாக பேசினார்.
கோபிசெட்டிபாளையம்:
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெறுகிறது. இதற்கான பிரசாரம் 17-ந்தேதி மாலையுடன் ஓய்கிறது. இதனால் அரசியல் தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே, தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுக்கும் விதமாக தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ரூ.50 ஆயிரத்திற்கு மேல் பணம் வைத்திருப்போர் உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு சென்றால் அப்பணம் பறிமுதல் செய்யப்படுகிறது. மேலும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள், நிர்வாகிகள் உள்ளிட்டோரின் காரிலும் தீவிர சோதனை நடத்தப்படுகிறது.
இந்நிலையில், வாழ்நாள் முழுக்க கோர்ட்டுக்கு அலைய வைத்துவிடுவேன் என்று சோதனையில் ஈடுபட்டிருந்த தேர்தல் கண்காணிப்பு குழுவினரை திருப்பூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர் ஏ.பி. முருகானந்தம் மிரட்டியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பகுதியில் போலீசாருடன் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு பா.ஜ.க. வேட்பாளர் ஏ.பி. முருகானந்தம் காரில் வந்துகொண்டிருந்தார். அந்த நேரத்தில் டிராபிக் ஏற்படும் என்று கருதிய கண்காணிப்பு நிலைக்குழுவினர் அவரது காரை ஓரமாக நிறுத்துமாறு கூறினர்.
அப்போது கோபமடைந்த ஏ.பி.முருகானந்தம், கண்காணிப்பு அலுவலரை பார்த்து, உங்க பெயர் என்னன்னு சொல்லுங்க... என்னவாக இருக்கீங்க என்று கேட்டார். அவர் ஒவ்வொரு கேள்வியாக கேட்க, தேர்தல் ஆணைய கண்காணிப்பு குழுவினரும், போலீசாரும் ஒவ்வொரு கேள்விகளுக்காக பதில் சொல்லியபடி இருந்தனர். தொடர்ந்து பேசிய ஏ.பி. முருகானந்தம், "இப்படித்தான் உங்களை மிரட்ட சொன்னாங்களா? எந்த மனிதராக இருந்தாலும் முதலில் மரியாதையாக சொல்லுங்க.. என்று ஆவேசமாக பேசினார்.
கண்காணிப்பு நிலைக்குழுவினரும், 'செக் பண்ண சொல்லிருக்காங்க.. அதனால் செக் பண்றோம்.. நாங்கள் மிரட்டவே இல்லை.. டிராபிக் ஆகும் என்று கூறி தான் ஓரமாக வர சொன்னோம்.." என்று பதில் சொன்னார்கள்.
அதற்கு, மரியாதையாக பேசி பழக வேண்டும்.. புரியுதா?.. இல்லையெனில் வாழ்நாள் முழுவதும் கோர்ட்டுக்கு அலைய வைத்து விடுவேன் என ஏ.பி.முருகானந்தம் கூறினார்.
அப்போது, பதில் அளித்த போலீசார், "சார்.. நாங்கள் மரியாதையாக தானே பேசுகிறோம்.. அங்கே டிராபிக் ஆவதால் இங்கே ஓரமாக வரத்தான் சொன்னோம்.. யாரையுமே நாங்கள் மரியாதை குறைவாக பேசவில்லை" என்று கூறினர்.
மீண்டும் பேசிய ஏ.பி.முருகானந்தம், போலீசார் சமாதானப்படுத்திய பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
- கோவை மாவட்டம் அ.தி.மு.க.வின் எக்கு கோட்டை, இங்கு எந்த கட்சியினராலும் நுழைய முடியாது.
- இரட்டை வேடம் போடும் கட்சிதான் தி.மு.க. அ.தி.மு.க. அப்படி அல்ல.
கோவை:
கோவை பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் சிங்கை ராமச்சந்திரனை ஆதரித்து கோவை கொடிசியா அருகே உள்ள மைதானத்தில் பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார். அவர் கூறியதாவது:-
தேர்தல் பிரசார கூட்டத்தில் ஒவ்வொரு இடமாக சென்று வருகிறேன். எங்கு சென்றாலும் மக்கள் வெள்ளமாக திரண்டு வருகிறார்கள். அதை பார்த்துதான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தேர்தல் ஜூரம் வந்துவிட்டது. அதனால்தான் அவர் ஏதேதோ பேசிக்கொண்டு வருகிறார்.
கோவை மாவட்டம் அ.தி.மு.க.வின் எக்கு கோட்டை, இங்கு எந்த கட்சியினராலும் நுழைய முடியாது. கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் இந்த மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் வெற்றி பெற்றோம். அந்த மாவட்டத்தில் போட்டியிடும் நமது வேட்பாளர் பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். அவருடைய வெற்றி அகில இந்திய அளவில் எதிரொலிக்கும் வகையில் இருக்க வேண்டும்.
அ.தி.மு.க. ஒரு இடத்தில் கூட வெற்றிப்பெறாது என்று பேசி வருகிறார்கள். மு.க.ஸ்டாலின் செல்லும் இடங்களில் எல்லாம் பேசி வருகிறார். அவர் கண்ட கனவு வேறு. கூட்டணி பலம் அதிகமாக இருக்கிறது, 40 தொகுதிகளிலும் வெற்றி பெறலாம் என்று நினைத்தார். அது பகல் கனவாக போனது. கூட்டணி அனைத்து கட்சிகளுக்கும் தேவைதான். ஆனால் அ.தி..மு.க.வுக்கு மக்கள் பலம் உள்ளது.
நீங்கள் கூட்டணியை நம்பி தேர்தலில் நிற்கிறீர்கள். ஆனால் அதி.மு.க. மக்கள் பலத்தை நம்பி தேர்தலில் நிற்கிறது. மக்கள் பலம்தான் வலிமையானது. அந்த மக்கள் பலத்தால்தான் வெற்றி பெற முடியும். அது எங்கள் பக்கம் இருக்கிறது. அ.திமு.க. உழைப்பாளிகள் அதிகமாக இருக்கும் கட்சி. நாங்கள் உழைப்பு, மக்களை நம்பி இருக்கிறோம். எனவே இந்த தேர்தலில் எங்களுக்கு வெற்றி நிச்சயம்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்போடு பேச வேண்டும். எங்கள் கட்சி தொண்டன் பேச ஆரம்பித்துவிட்டால் உங்களால் தாக்குப்பிடிக்க முடியாது. அ.தி.மு.க.வில் அனைவருமே சமம். அனைவருக்கும் பொறுப்பும், உணர்வும், லட்சியமும் இருக்கிறது.
அ.தி.மு.க. பல்வேறு திட்டங்களை அறிவித்ததால் அதன் மூலம் மக்கள் ஏராளமான பயன் பெற்றனர். நீங்கள் பொறுப்பேற்று இந்த 3 ஆண்டுகளில் என்னென்ன திட்டங்கள் போட்டோம் என்று மக்களுக்கு எடுத்துச்சொல்லுங்கள். நீங்கள் எந்த திட்டத்தையும் செய்யவில்லை. அதனால்தான் உங்களிடம் பேசுவதற்கு எதுவும் இல்லை. அதி.மு.க.வை விமர்சனம் செய்கிறீர்கள்.
அ.தி.மு.க. இருண்ட ஆட்சி என்று பேசி வருகிறீர்கள். நீங்கள் ஒரு பொதுக்கூட்டத்தை போடுங்கள், உங்கள் ஆட்சியில் போடப்பட்ட திட்டம் குறித்து நீங்கள் பேசுங்கள், எங்கள் ஆட்சியில் போடப்பட்ட திட்டம் குறித்து நானே நேரில் வந்து பேசுகிறேன். எந்த இடத்துக்கும் வந்து பேச நான் தயார். 10 ஆண்டுகால ஆட்சியில் செய்த சாதனைகளை சொல்லி வாக்கு கேட்கிறோம். வேண்டும் என்று திட்டமிட்டு அவதூறு பரப்பி பொய்யான குற்றத்தை சுமத்தி அரசியல் ஆதாயம் தேட பார்க்கிறீர்கள். தமிழக மக்கள் நன்றாக கவனித்து வருகிறார்கள். அ.தி.மு.க. மீது நீங்கள் கூறும் பொய் பிரசாரம் எடுபடாது.
நாங்கள் பா.ஜனதாவை கண்டு பயப்படவில்லை. இந்தியாவில் உள்ள எந்த கட்சியை கண்டும் எங்களுக்கு பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. எங்களுக்கு மடியில் கனம் இல்லை. இதனால் யாரையும் கண்டு பயப்பட வேண்டிய அவசியமும் இல்லை. தி.மு.க.தான் பா.ஜனதாவுடன் ரகசியமாக கூட்டணி வைத்து உள்ளது. எதிர்க்கட்சியாக இருக்கும் கோ பேக் மோடி என போராட்டம் நடத்தினீர்கள். ஆளும்கட்சியான பிறகு வெல்கம் மோடி என்றீர்கள்.
பிரதமர் மோடியை தமிழகத்துக்கு 6 முறை அழைத்து வந்து, நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைக்க உதவி செய்தீர்களே.
இரட்டை வேடம் போடும் கட்சிதான் தி.மு.க. அ.தி.மு.க. அப்படி அல்ல. தமிழகத்துக்கு நலம் சார்ந்த பிரச்சனை என்றால் அதை எதிர்ப்போம். தமிழகத்துக்கு நன்மை தரும் திட்டம் என்றால் அதை வரவேற்போம். தற்போது நாங்கள் பா.ஜனதா கூட்டணியை விட்டு வெளியே வந்துவிட்டோம். நாங்கள் கூட்டணியில் இருந்து வெளியே வந்தது தி.மு.க.வுக்கு பிடிக்க வில்லை. அவர்களுக்கு பயம் வந்துவிட்டது. அதனால்தான் அதைபற்றி பேசி வருகிறார்கள்.
எங்கள் மீது குறை சொல்ல எதுவுமே இல்லை. இதனால்தான் எங்களை பற்றி மக்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தவறாக பேசி வருகிறார். தற்போது அவர் 23-வது புலிகேசி படத்தில் வடிவேலு வருவதுபோன்று தான் செய்து வருகிறார். எனவே அவருக்கு வெள்ளை குடை பிடித்த வேந்தர் என்று பட்டம் கொடுக்கலாம்.
தற்போது கச்சத்தீவு குறித்த பா.ஜனதா கையில் எடுத்து பேசி வருகிறது. அந்த கச்சத்தீவு குறித்து பேச அ.தி.மு.க.வுக்குதான் தகுதி இருக்கிறது. கச்சத்தீவை தாரை வார்த்து கொடுத்ததில் இருந்து அதை மீட்டெடுக்க அ.தி.மு.க. போராடி வருகிறது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்கள்.
2014-ம் ஆண்டு மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு பா.ஜனதா ஆட்சிக்கு வந்தது. உடனே பிரதமர் மோடிக்கு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதினார். நேரில் சந்தித்தும் வலியுறுத்தினார். ஆனால் கடந்த 10 ஆண்டு காலமாக மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது தேர்தல் வந்துவிட்டதால் கிடப்பில் போடப்பட்ட கச்சத்தீவை கையில் எடுத்து உள்ளனர்.
கச்சத்தீவு தொடர்பாக கோர்ட்டில் வழக்கு இருந்து வருகிறது. ஆனால் அந்த வழக்கு தொடர்பாக மத்திய அரசு இதுவரை எந்த பதில் மனுவும் தாக்கல் செய்யவில்லை. அப்படி பதில் மனு தாக்கல் செய்து, ஏற்கனவே இலங்கைக்கு வழங்கப்பட்ட கச்சத்தீவை மறுபரிசீலனை செய்வோம் என்ற வாக்கியத்தை சேர்த்து மனு தாக்கல் செய்தால் தானாகவே கோர்ட்டு மூலம் அந்த கச்சத்தீவை நாம் பெற முடியும்.
ஆனால் அதை அவர்கள் செய்யவில்லை. மீனவர்களின் வாக்குகள் தேவை என்பதால் தற்போது அந்த பிரச்சனையை பா.ஜனதா கையில் எடுத்து பேசி வருகிறது. மத்தியில் 10 ஆண்டுகாலம் ஆட்சி செய்தார்களே அப்போது அவர்கள் எங்கே சென்றார்கள். தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகள் ஆகிவிட்டது. கச்சத்தீவு தொடர்பாக கோர்ட்டில் வழக்கு நடந்து வருவது தொடர்பாக ஏதாவது மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எண்ணினாரோ?, இல்லையே.
மத்தியில் ஆட்சி செய்த பா.ஜனதாவுக்கும், மாநிலத்தில் ஆட்சி செய்து வரும் தி.மு.க.வுக்கும் மீனவ மக்கள் மீது எவ்வித அக்கறையும் இல்லை. ஆனால் அ.தி.மு.க. மீனவ மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து, கோர்ட்டு மூலம் கச்சத்தீவை மீட்க தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம். அந்த தீவை மீட்கும் வரை தொடர்ந்து குரல் கொடுப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஆவுடையப்பன் அலுவலகத்தில் நேற்று சோதனை நடத்தப்பட்டது.
- நெல்லை மாவட்டத்தில் பறக்கும் படையினரும், வருமான வரித்துறை அதிகாரிகளும் அதிரடி சோதனை ஈடுபட்டு வருகின்றனர்.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தை சேர்ந்த பிரபல அரசு ஒப்பந்ததாரர் ஒருவரது வீட்டில் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
வள்ளியூர் அருகே உள்ள விஜயநாராயணம் பகுதியில் ஒப்பந்ததாரரின் பண்ணை வீட்டில் இந்த சோதனை இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது.
பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்வதற்காக பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என்பதை அறிய நெல்லை மாவட்டத்தில் பறக்கும் படையினரும், வருமான வரித்துறை அதிகாரிகளும் அதிரடி சோதனை ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஆவுடையப்பன் அலுவலகத்தில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. இந்நிலையில் இன்று பிரதான கட்சி ஒன்றின் பிரமுகராக இருந்து வரும் அரசு ஒப்பந்ததாரர் ஒருவரது வீட்டில் நடத்தப்படும் சோதனையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
- அருணாச்சல பிரதேசத்தில் பல நிறுவனங்களில் சீன மக்கள் பணியாற்றி வருகின்றனர்.
- நாட்டில் நீட் தேர்வு கொண்டு வந்தது காங்கிரசின் தி.மு.க. கூட்டணி ஆட்சியில் தான்.
வேலூர்:
வேலூரில் இன்று நடிகை குஷ்பு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கச்சத்தீவை தாரைவார்த்து கொடுத்தது தி.மு.க.வும் காங்கிரசும் தான். தற்போது இலங்கை துறைமுகத்தில் சீனாவுக்கு ஒப்பந்தம் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படும் நிலை உள்ளது.
இந்த சூழ்நிலைக்கு காங்கிரசும் தி.மு.க.வும் தான் காரணம். ஆனால் தேர்தலுக்காக மறைத்து நாடகம் ஆடிக்கொண்டிருக்கின்றனர்.
அருணாச்சல பிரதேசத்தில் சில பகுதிகளை சீனா ஆக்கிரமித்து உள்ளதாக தி.மு.க.வினர் கூறி வருகின்றனர். உண்மைக்கு புறம்பான தகவல்களை அவர்கள் பரப்பி வருகின்றனர்.
அருணாச்சல பிரதேசத்தில் பல நிறுவனங்களில் சீன மக்கள் பணியாற்றி வருகின்றனர். எனவே அவர்களுக்கு புரியும் வகையில் சீனா மொழியில் பெயர் பலகை வைத்துள்ளனர். இது ஆக்கிரமிப்பு என்று கூற முடியாது.
உத்தர பிரதேசம் பீகாருக்கு அதிக நிதி வழங்குவதாக கூறுகின்றனர். ஆனால் தமிழகத்திற்கும் ரூ.2 லட்சத்து 76 ஆயிரம் கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிதியில் மக்களுக்கு என்ன திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது என்பதை விளக்க வேண்டும்.
நாட்டில் நீட் தேர்வு கொண்டு வந்தது காங்கிரசின் தி.மு.க. கூட்டணி ஆட்சியில் தான்.
சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின் அடிப்படையில் இந்த தேர்வினை யாராலும் நீக்க முடியாது. இதனை காங்கிரஸ் சிதம்பரத்தின் மனைவி வக்கீல் நளினி சிதம்பரமே கோர்ட்டு முன்பு தெரிவித்துவிட்டார்.
தற்போது தேர்தலை ஒட்டி நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று தி.மு.க.வும், மாநில அரசு விரும்பினால் அதிலிருந்து விலக்கு அளித்துக் கொள்ளலாம் என்று காங்கிரசும் தெரிவித்து இருப்பது மக்களை ஏமாற்றும் பிரசாரம். இதனை மக்கள் நம்பமாட்டார்கள். பா.ஜ.க. மேல் மக்களுக்கு நம்பிக்கை உள்ளது.
பாரத பிரதமர் நரேந்திர மோடி வருகிற 10-ந்தேதி வேலூருக்கு பிரசாரம் செய்ய வருகிறார்.
காலை 10.30 மணிக்கு வேலூர் கோட்டை மைதானத்தில் நடைபெறும் கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு பேசுகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ராபர்ட் வதேரா இதுவரை நேரடிடையாக அரசியலில் ஈடுபட்டது இல்லை.
- சோனியா காந்தியின் குடும்பத்தை விமா்சிப்பதைத் தவிர, வேறெந்த பணியும் அவா் மேற்கொள்ளவில்லை.
அமேதி:
உத்தரபிரதேச மாநிலத்தில் அமேதி, ரேபரேலி ஆகிய 2 தொகுதிகளும் காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக திகழ்ந்தவை. இந்திராகாந்தி காலத்தில் இருந்தே அங்கு காங்கிரஸ் கட்சிதான் வெற்றி பெற்று வருகிறது.
அமேதி தொகுதியில் கடந்த 2004, 2009, 2014 ஆகிய ஆண்டுகளில் ராகுல் காந்தி தொடா்ந்து வெற்றி பெற்றாா்.
கடந்த 2019-ம் ஆண்டு பாராளுமன்றத் தோ்தலில் ராகுலை எதிர்த்து பாரதிய ஜனதா கட்சி ஸ்மிருதி இரானியை நிறுத்தியது. மக்கள் மத்தியில் காங்கிரஸ் மீது ஏற்பட்ட எதிர்ப்பு காரணமாக சுமாா் 55 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் காந்தி தோல்வியை தழுவினார்.
வெற்றி பெற்ற ஸ்மிருதி இரானி மத்திய மந்திரியாக பொறுப்பேற்றார். அதன் பிறகு அவர் அமேதி தொகுதியில் பல்வேறு வளர்ச்சி பணிகளை மேற் கொண்டு அந்த தொகுதியை பாரதிய ஜனதாவுக்கு ஆதரவான தொகுதியாக மாற்றி இருக்கிறார்.
இந்த நிலையில் தற்போதைய பாராளுமன்ற தோ்தலில் அமேதி தொகுதியில் பா.ஜ.க. சாா்பில் மீண்டும் ஸ்மிருதி இரானி களமிறங்கி உள்ளார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் போட்டியிடப் போவது யார் என்பது தொடர்ந்து சஸ்பென்சாக உள்ளது.
உத்தரபிரதேசத்தில் போட்டியிடும் அனைத்து தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துவிட்ட காங்கிரஸ் அமேதி தொகுதிக்கு மட்டும் வேட்பாளரை இன்னும் அறிவிக்காமல் உள்ளது
கடந்த முறை தோல்வியை தழுவிய ராகுல் மீண்டும் வயநாடு தொகுதியில் போட்டியிட மனு செய்து உள்ளார். அவர் அமேதியில் ஸ்மிருதி இரானியை எதிர்த்து மீண்டும் போட்டியிடுவாரா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. அமேதியில் மே 20-ந்தேதி 5-ம் கட்ட ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. இந்த நிலையில் பிரியங்கா ரேபரேலி தொகுதியில் களம் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே அமேதியில் பிரியங்காவின் கணவர் ராபர்ட்வதேராவை போட்டியிட செய்ய முயற்சி நடப்பது தெரிய வந்துள்ளது.
இது தொடர்பாக பேட்டியளித்த ராபா்ட் வதேரா, 'ஸ்மிருதி இரானியை தோ்வு செய்ததன் மூலம் தாங்கள் செய்த தவறை அமேதி தொகுதி மக்கள் இப்போது உணா்ந்து விட்டனா். சோனியா காந்தியின் குடும்பத்தை விமா்சிப்பதைத் தவிர, வேறெந்த பணியும் அவா் மேற்கொள்ளவில்லை.
சோனியா குடும்பத்தைச் சோ்ந்த ஒருவா்தான் தங்கள் தொகுதியை மீண்டும் பிரதி நிதித்துவப்படுத்த வேண்டும் என அமேதி தொகுதி மக்கள் எதிா்பார்க்கின்றனா். நான் அரசியலில் ஈடுபட முடிவு செய்தால், அமேதி தொகுதியை தோ்வு செய்ய வேண்டும் என்று அந்த தொகுதி மக்களிடம் இருந்து எனக்கு கோரிக்கைகள் வருகின்றன. என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பாா்ப்போம் என்றாா்.
ராபர்ட் வதேரா இதுவரை நேரடிடையாக அரசியலில் ஈடுபட்டது இல்லை. அவர் மீது நில மோசடி வழக்குகள் உள்ளன. அரசு நிலத்தை குறைந்த விலைக்கு வாங்கி ரியல் எஸ்டேட் அதிக விலைக்கு விற்றதாக அவர் மீது குற்றச்சாட்டு உள்ளது.
அவர் தேர்தலில் போட்டியிட்டால் அந்த மோசடி புகார்களை பாரதிய ஜனதா கட்சியினர் தேர்தல் பிரசாரத்தில் எழுப்புவார்கள் என்று கூறப்படுகிறது.
- 10 வருடங்களில் நாங்கள் செய்தது எல்லாம் டிரைலர்தான்.
- மோடி முத்தலாக் சட்டம் மூலம் இஸ்லாமிய சகோதரிகளை மட்டும் பாதுகாக்கவில்லை.
பிரதமர் மோடி ராஜஸ்தான் மாநிலம் சுருவில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
ஏமாற்றம் மற்றும் விரக்தி என்னை (மோடி) நெருங்க முடியாது. இன்று ஒட்டுமொத்த நாடும் இந்தியாவை முன்னனேற்ற வேண்டும் என்ற தீர்மானத்தோடு பணியாற்றி கொண்டிருக்கிறது. இதில் ராஜஸ்தான் மிகப்பெரிய பங்கு வகிக்கிறது.
மற்ற கட்சிகளை போன்று பா.ஜனதா வெறும் கோஷ்னா பத்ரா செய்யவில்லை. நாங்கள் சங்கல்ப் பத்ரா கொண்டு வருகிறோம். 2019-ல் கொடுத்த பெரும்பாலான வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளேன்.
10 வருடங்களில் நாங்கள் செய்தது எல்லாம் டிரைலர்தான். பசியை தூண்டுவதுபோல், முக்கியமானது இன்னும் வெளியாகவில்லை. முத்தலாக் சட்டம் மூலம் இஸ்லாமிய சகோதரிகளை மட்டும் பாதுகாக்கவில்லை. மொத்த இஸ்லாமிய குடும்பங்களையும் பாதுகாத்துள்ளேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- உத்தரபிரதேசம் மாநிலத்திற்கு ஒரு ரூபாய் ஜிஎஸ்டி வரி கட்டினால் மூன்று ரூபாய் திரும்ப கொடுக்கிறது
- மாநில உரிமைகளை மீட்டெடுக்க வேண்டுமென்றால் நாம் இந்திய கூட்டணியை வெற்றி பெற செய்ய வேண்டும்.
பட்டுக்கோட்டை:
தஞ்சை பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் முரசொலியை ஆதரித்து இன்று பட்டுக்கோட்டையில் இளைஞரணி செயலாளரும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரசாரம் செய்தார்.
பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு மோடி உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள பரிசு என்பது கேஸ் சிலிண்டர் விலை ரூ.100 குறைத்தது மட்டுமே. ஆனால் அவர்கள் ஆட்சிக்கு வரும் முன்பு கேஸ் சிலிண்டர் விலை ரூ.450-ஆக இருந்தது. தற்போது ரூ.1200 என்பதை மறந்து விட கூடாது. 100 ரூபாய் குறைத்து ஏமாற்ற பார்க்கிறார்கள்.
இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும். கியாஸ் சிலிண்டர் விலை 500 ரூபாய்க்கு கொடுக்கப்படும். பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 75 , டீசல் ரூ.65 -க்கு கொடுக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதி கொடுத்துள்ளார். அதனை உறுதியாக அவர் நிறைவேற்றி தருவார்.
ஜி.எஸ்.டி தொகை ஒரு ரூபாய் என்றால் நமது மாநிலத்திற்கு மத்திய அரசு கொடுக்கும் தொகை 29 பைசா மட்டுமே. ஆனால் பா.ஜனதா ஆளும் அதே உத்தரபிரதேசம் மாநிலத்திற்கு ஒரு ரூபாய் ஜிஎஸ்டி வரி கட்டினால் மூன்று ரூபாய் திரும்ப கொடுக்கிறது. நிதீஷ் குமார் ஆட்சி செய்யும் பீகார் மாநிலத்திற்கு ஒரு ரூபாய் ஜிஎஸ்டி வரி கட்டினால் 7 ரூபாய் அவர்களுக்கு திருப்பி கொடுக்கிறது. அதனால்தான் அடுத்த முறை மோடியை நீங்கள் சந்திக்கும் போது மிஸ்டர் 29 பைசா என்று கூப்பிடுங்கள் என்று கூறுகிறேன் .
ஏனென்றால் இந்த 29 பைசா என்பது இன்று செல்லாக்காசு. வரும் தேர்தலுக்குப் பிறகு மோடியும் செல்லாக்காசாகி விடுவார். இந்த முறை 40-க்கு 40 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். மாநில உரிமைகளை மீட்டெடுக்க வேண்டுமென்றால் நாம் இந்திய கூட்டணியை வெற்றி பெற செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- இந்த தேர்தல் ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்கானது என்பதை மக்கள் புரிந்து கொள்வது அவசியம்.
- 2004-ல் "இந்தியா ஒளிர்கிறது" என்ற வகையில் பிரசாரம் செய்யப்பட்டது. அதேபோன்று தற்போதும் பரப்பப்படுகிறது.
காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டது. டெல்லி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, ப. சிதம்பரம் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது பேசும்போது ராகுல் காந்தி கூறியதாவது:-
அரசமைப்பு மற்றும் ஜனநாயகத்தை அழிக்க முயற்சி செய்பவர்களுக்கும், அவைகளை பாதுகாக்க முயற்சி செய்பவர்களுக்கும் இடையில்தான் தேர்தல். இது ஒரு மோசடியான போட்டி. நியாயமான ஒன்று அல்ல. இந்த தேர்தல் ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்கானது என்பதை மக்கள் புரிந்து கொள்வது அவசியம்.
2004-ல் "இந்தியா ஒளிர்கிறது" என்ற வகையில் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. அதேபோன்று தற்போதும் பரப்பப்படுகிறது. அந்த தேர்தலில் வெற்றி பெற்றது யார் என்பதை நினைவு கொள்ளுங்கள்.
கருத்தியல் தேர்தலில் போட்டியிட்டுள்ளோம் என இந்தியா கூட்டணி முடிவு செய்துள்ளது. தேர்தலுக்குப் பிறகு பிரதமர் வேட்பாளர் குறித்து முடிவு எடுக்கப்படும். ஊடகங்களால் பரப்பப்படுவதை விட மிகவும் நெருக்கமான போட்டி. நாங்கள் தேர்தலில் வெற்றி பெற போகிறோம்.
இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
- அரசு விரைவு பஸ்களில் பயணம் செய்ய 60 நாட்களுக்கு முன்னதாக முன்பதிவு செய்யும் வசதி உள்ளது.
- ஓட்டுப்போட சொந்த ஊர் செல்லக் கூடியவர்கள் முன் கூட்டியே முன்பதிவு செய்து பயண திட்டத்தை வகுத்து கொள்ளுமாறு போக்குவரத்து கழகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
சென்னை:
பாராளுமன்ற தேர்தல் 19-ந்தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி 19-ந்தேதி பொது விடுமுறையாக அரசு அறிவித்துள்ளது.
பொது மக்கள் அனைவரும் ஓட்டுப்பதிவு செய்ய வேண்டும் என்பதற்காக தனியார் நிறுவன ஊழியர்களுக்கும் விடுமுறை விட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் சென்னையில் தங்கி வேலை செய்யும் ஊழியர்கள், தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல அரசு சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிட்டுள்ளன.
தேர்தல் நடைபெறும் நாள் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டிருப்பதால் அதனை தொடர்ந்து வரும் சனி, ஞாயிற்றுக்கிழமை என 3 நாட்கள் விடுமுறை கிடைக்கிறது. இதனால் வெளியூர் பயணம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. சென்னை மற்றும் அதனையொட்டிய புறநகர் பகுதியில் வசிக்கும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
அதனால் தேர்தலையொட்டி 17,18 ஆகிய தேதிகளில் அரசு விரைவு போக்குவரத்து கழகம் மற்றும் பிற போக்குவரத்து கழகங்கள் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. சென்னையில் இருந்து 7 ஆயிரம் சிறப்பு பஸ்களும் பிற நகரங்களில் இருந்து 12 ஆயிரம் சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.
அரசு விரைவு பஸ்களில் பயணம் செய்ய 60 நாட்களுக்கு முன்னதாக முன்பதிவு செய்யும் வசதி உள்ளது. அரசு பஸ்களில் மொத்தம் 1 லட்சத்து 21 ஆயிரத்து 728 இடங்கள் முன்பதிவு செய்வதற்காக ஒதுக்கப்பட்டுள்ளன. 18-ந் தேதி பயணம் செய்ய 13,800 பேரும், 17-ந்தேதி 3,075 பேரும், 16-ந்தேதி பயணத்திற்கு 633 பேரும் முன்பதிவு செய்துள்ளனர்.
ஓட்டுப்போட சொந்த ஊர் செல்லக் கூடியவர்கள் முன் கூட்டியே முன்பதிவு செய்து பயண திட்டத்தை வகுத்து கொள்ளுமாறு போக்குவரத்து கழகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
கடைசி நேரத்தில் கூட்டமாக வந்தால் பஸ் வசதி ஏற்பாடு செய்வதில் சிரமங்கள் ஏற்படுகிறது என்றும் அதனால் முன்பதிவு செய்து பயணத்தை தொடர்ந்தால் உதவியாக இருக்கும் என்றும் பொதுமக்களுக்கு வேண்டுகோளாக வைக்கப்படுகிறது.
முன்பதிவு செய்யும் போது சிறப்பு பஸ்கள் திட்டமிட்டு இயக்குவதற்கு உதவியாக இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
- வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித் தாடுகிறது.
- தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டிருக்கிறது.
சென்னை:
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
கடந்த 10 ஆண்டுகளாக கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாமல் பிரச்சனைகளை திசைத் திருப்பி மக்களை ஏமாற்றி வாக்குகளை அபகரித்து விடலாம் என்று மோடியும், பா.ஜ.க.வினரும் நயவஞ்சகமாக பேசி வருகிறார்கள்.
ஆனால், மிகப்பெரிய பொருளாதார பேரழிவிற்கு வித்திட்ட பிரதமர் மோடியின் ஆட்சியால் பலனடைந்த ஏழை, எளிய மக்கள் எவரும் இல்லை. அதற்கு மாறாக இந்திய மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருக்கிறது.

விலைவாசி உயர்ந்திருக்கிறது. வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித் தாடுகிறது. விவசாயிகளின் வருமானம் இருமடங்காக வாக்குறுதியின்படி கூடவில்லை. மாநில உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன.
தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டிருக்கிறது. தமிழகம் திட்டமிட்டு வஞ்சிக்கப்பட்டு வருகிறது. இதற்கெல்லாம் விமோசனம் காண பாசிச, சர்வாதிகார பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவு கட்ட இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு தமிழக வாக்காளர்கள் ஆதரவு அளிக்க வேண்டுமென அன்போடு கேட்டுக் கொள்கிறேன். இதன்மூலமே சர்வாதிகாரம் வீழ்த்தப்படும், ஜனநாயகம் காப்பாற்றப்படும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






