search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஏமாற்றம், விரக்தி என்னை நெருங்க முடியாது: தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி பேச்சு
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    ஏமாற்றம், விரக்தி என்னை நெருங்க முடியாது: தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி பேச்சு

    • 10 வருடங்களில் நாங்கள் செய்தது எல்லாம் டிரைலர்தான்.
    • மோடி முத்தலாக் சட்டம் மூலம் இஸ்லாமிய சகோதரிகளை மட்டும் பாதுகாக்கவில்லை.

    பிரதமர் மோடி ராஜஸ்தான் மாநிலம் சுருவில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஏமாற்றம் மற்றும் விரக்தி என்னை (மோடி) நெருங்க முடியாது. இன்று ஒட்டுமொத்த நாடும் இந்தியாவை முன்னனேற்ற வேண்டும் என்ற தீர்மானத்தோடு பணியாற்றி கொண்டிருக்கிறது. இதில் ராஜஸ்தான் மிகப்பெரிய பங்கு வகிக்கிறது.

    மற்ற கட்சிகளை போன்று பா.ஜனதா வெறும் கோஷ்னா பத்ரா செய்யவில்லை. நாங்கள் சங்கல்ப் பத்ரா கொண்டு வருகிறோம். 2019-ல் கொடுத்த பெரும்பாலான வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளேன்.

    10 வருடங்களில் நாங்கள் செய்தது எல்லாம் டிரைலர்தான். பசியை தூண்டுவதுபோல், முக்கியமானது இன்னும் வெளியாகவில்லை. முத்தலாக் சட்டம் மூலம் இஸ்லாமிய சகோதரிகளை மட்டும் பாதுகாக்கவில்லை. மொத்த இஸ்லாமிய குடும்பங்களையும் பாதுகாத்துள்ளேன்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×