search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    குப்பையை கூட கையாள தெரியாத திராவிட கட்சிகளுக்கு குட்-பை சொல்லுங்கள்- தமிழிசை
    X

    குப்பையை கூட கையாள தெரியாத திராவிட கட்சிகளுக்கு 'குட்-பை' சொல்லுங்கள்- தமிழிசை

    • சென்னை சிங்கப்பூராக மாறும் என்றார்கள். மாறியதா? சிங்கப்பூர் நிறுவனத்துக்கு காண்டிராக்ட் மாறியது.
    • வெள்ளத்துக்கு தீர்வு கண்டார்களா? குப்பைக்கு தீர்வு கண்டார்களா? தொகுதிக்கு என்ன மாற்றத்தை தந்தார்கள்.

    சென்னை:

    வேளச்சேரியில் பிரசாரம் செய்த தென்சென்னை பா.ஜனதா வேட்பாளர் டாக்டர் தமிழிசையிடம் பெருங்குடி குப்பை கிடங்கை பொதுமக்கள் காட்டி தீர்வு காண வலியுறுத்தினார்கள்

    இது தொடர்பாக அவர் பேசியதாவது:-

    திராவிடமாடலின் பெருமையும், அடையாளமும் பெருங்குடி மற்றும் கொடுங்கையூர் குப்பை கிடங்குகள்தான். ஒவ்வொரு தேர்தலிலும் தீர்வு காண்பதாக சொல்லி ஏமாற்றினார்கள். தீர்வு காண முடியாத பிரச்சினையா? அவர்கள் செய்யமாட்டார்கள். சென்னை சிங்கப்பூராக மாறும் என்றார்கள். மாறியதா? சிங்கப்பூர் நிறுவனத்துக்கு காண்டிராக்ட் மாறியது. அவர்களுக்கு பணம் கைமாறியது. அவ்வளவு தான். நான் புதுவை கவர்னராக இருந்தபோது அங்கும் இதே போல் 20 ஆண்டுகளாக தீர்க்க முடியாத குப்பை கிடங்கு பிரச்சினை இருந்தது.

    அதற்கான நிபுணர்களை வரவழைத்து ஆய்வு செய்து மத்திய அரசு துறைகளும் பரிசீலித்து 9 மாதங்களில் பிரச்சினை தீர்ந்தது. இப்போது மேலாண்மை தொழிற்சாலை போல் செயல்படுகிறது. மக்கள் நிம்மதியாக வாழ்கிறார்கள்.

    60 ஆண்டுகள் தமிழகத்தை ஆட்சி செய்தும் குப்பையை கூட கையாள தெரியாத கையாலாகாத அரசுகளாகத்தான் இரு கழக அரசுகளும் இருந்து உள்ளன. இதே தென் சென்னையில் ஏழெட்டு தடவை தி.மு.க. எம்.பி.க்கள் வெற்றி பெற்றுள்ளார்கள்.

    ஆனால் வெள்ளத்துக்கு தீர்வு கண்டார்களா? குப்பைக்கு தீர்வு கண்டார்களா? தொகுதிக்கு என்ன மாற்றத்தை தந்தார்கள். நீங்கள் மாற்றி யோசியுங்கள். மாற்றமா? ஏமாற்றமா? முடிவு செய்யுங்கள்.

    குப்பையை கூட சீராக்காத திராவிட கட்சிகளுக்கு குட்பை சொல்லுங்கள். நாடே முன்னேறும் போது சென்னையும் முன்னேற வேண்டாமா? எனக்கு ஒரு வாய்ப்பு தந்தால் ஒரே வருடத்தில் குப்பை பிரச்சினைக்கு தீர்வு காண்பேன். தாமரைக்கு வாக்களியுங்கள். வளர்ச்சிக்கு வித்திடுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×