என் மலர்tooltip icon

    அமெரிக்கா

    • ஈரான் அருகே யு.எஸ்.எஸ் ஆபிரகாம் லிங்கன் போர்க்கப்பல் நிறுத்தப்பட்டுள்ளது.
    • அமெரிக்கா மேற்கு ஆசியாவிற்கு 2-வது விமானம் தாங்கிக் கப்பலை அனுப்புகிறது.

    ஈரானில் பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வால் அரசு மற்றும் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமெனிக்கு எதிராக போராட்டங்கள் நடந்தது. போராட்டத்தை ஒடுக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்ததில் வன்முறை வெடித்தது.

    போராட்டம்-வன்முறையில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியானார்கள். ஈரானில் போராட்டக்காரர்களுக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்தது.

    மேலும், ஈரானை நோக்கி அமெரிக்காவின் மிகப்பெரிய கடற்படை அனுப்பப்பட்டது. அதன்படி ஈரான் அருகே யு.எஸ்.எஸ் ஆபிரகாம் லிங்கன் போர்க்கப்பல் நிறுத்தப்பட்டுள்ளது.

    இதற்கிடையே அணுசக்தி ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திட வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் வலியுறுத்தினர். இதுதொடர்பாக இரு நாடுகள் இடையே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதில் உடன்பாடு எட்டப்படவில்லை.

    இந்தநிலையில் ஈரானை நோக்கி மேலும் ஒரு அமெரிக்க போர்க்கப்பல் செல்ல உத்தரவிடப்பட்டு உள்ளது. கரீபியன் கடல் பகுதியில் உள்ள அமெரிக்க விமானம் தாங்கி போர்க்கப்பலான ஜெரால்ட் ஆர் போர்டு, மத்திய கிழக்கு பகுதிக்கு புறப்பட உத்தரவிடப்பட்டது.

    இதையடுத்து அந்த போர்க்கப்பல் ஈரானை நோக்கி தனது பயணத்தை தொடங்கி உள்ளது.

    ஈரானுடனான பதட்டங்களுக்கு மத்தியில், அமெரிக்கா மேற்கு ஆசியாவிற்கு 2-வது விமானம் தாங்கிக் கப்பலை அனுப்புகிறது.

    ஈரானின் தலைவர்களுக்கு எதிராக அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுத்து வரும் நிலையில் பாரசீக வளைகுடாவில் உள்ள யு.எஸ்.எஸ். ஆபிரகாம் லிங்கன் போர்க்கப்பலுடன் ஜெரால்ட் ஆர் போர்டு போர்க்கப்பல் இணைய உள்ளது.

    • வாகனத்தை ஓட்டி வந்த போலீஸ் டேவ், துறையிலிருந்தும் பணிநீக்கம் செய்யப்பட்டார்.
    • 20 மில்லியன் டாலர் தொகையை நகரத்தின் காப்பீட்டு நிறுவனம் ஏற்கும்

    அமெரிக்காவில் உயிரிழந்த இந்திய மாணவிக்கு 29 மில்லியன் டாலர் (ரூ.260 கோடி) இழப்பீடு வழங்க சியாட்டில் நகர நிர்வாகம் ஒப்புக் கொண்டுள்ளது.

    ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 23 வயதான ஜான்வி கண்டுலா, சியாட்டில் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப்படிப்பு படித்து வந்தார். இச்சூழலில் கடந்த 2023 ஜனவரியில் சாலையைக் கடக்க முயலும்போது அதிவேகத்தில் வந்த போலீஸ் வாகனம் மோதி அவர் உயிரிழந்தார்.

    ஒரு இடத்தில் போதைப்பொருள் அளவுக்கு அதிகமாக பயன்படுத்துவதாக புகார் வந்ததாகவும், அதற்காக அதிகாரிகள்  சென்றுகொண்டிருந்ததாகவும், விபத்தை ஏற்படுத்திய போலீஸ் அதிகாரி கெவின் டேவ், மணிக்கு 40 கி.மீ வேகம் செல்ல வேண்டிய இடத்தில் சுமார் 119 கி.மீ வேகத்தில் வாகனத்தை ஓட்டியதாகவும் தெரிவிக்கப்பட்டது. வாகனத்தில் அவசரக்கால எச்சரிக்கை விளக்குகள் (Emergency lights) ஒளிரவிடப்பட்டிருந்தாலும், எச்சரிக்கை ஒலி சந்திப்புகளில் மட்டுமே பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

    இதனிடையே ஜான்வியின் மரணம் குறித்து மற்றொரு போலீஸ் அதிகாரி டேனியல் ஆட்ரர் கேலியாகப் பேசிய வீடியோ வெளியாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதனால் இந்த விவகாரத்தில் நீதி கேட்டு இந்திய அரசும் முறையிட்டது. இதனைத்தொடர்ந்து காவல்துறை தொழிற்சங்கத் தலைவராகப் பணியாற்றி வந்த ஆடெரர், பணியில் இருந்து நீக்கப்பட்டார். கந்துலாவை மோதிய வாகனத்தை ஓட்டி வந்த போலீஸ் டேவ், துறையிலிருந்தும் பணிநீக்கம் செய்யப்பட்டார். மேலும்  கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதாக குற்றம் சாட்டப்பட்டு கெவின் டேவுக்கு $5,000 (ரூ.4.50 லட்சம்) அபராதமும் விதிக்கப்பட்டது. 

    இந்நிலையில் ஜான்வியின் குடும்பத்தினர் தொடர்ந்த வழக்கில், தற்போது இந்த மிகப்பெரிய தொகை இழப்பீடாக வழங்கப்பட உள்ளது. இதில் சுமார் 20 மில்லியன் டாலர் தொகையை நகரத்தின் காப்பீட்டு நிறுவனம் ஏற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை கிங் கவுண்டி உயர் நீதிமன்றம் இந்த தீர்ப்பை உறுதி செய்துள்ளது.

    • அமெரிக்க நிலக்கரியை ஒரு சிறந்த தயாரிப்பாக நிலைநிறுத்தும் விதமாக ஒப்பந்தம் அமைந்துள்ளது.
    • இந்த ஒப்பந்தங்கள் அமெரிக்காவின் ஏற்றுமதி திறனை வலுப்படுத்தும் என்றும் டிரம்ப் பேச்சு.

    இந்தியா-அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் ஒரு ஆண்டு பேச்சுவார்த்தைக்கு பிறகு சமீபத்தில் எட்டப்பட்டது. இதுதொடர்பாக இருநாடுகளும் கூட்டறிக்கையை வெளியிட்டன. மேலும், இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது.

    இந்த நிலையில் இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தம் வரலாற்று சிறப்புமிக்கது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.

    ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று அவர் பேசியதாவது:-

    உலகின் முதன்மையான எரிசக்தி உற்பத்தியாளராக அமெரிக்கா உள்ளது. நாம் ஒரு பெரிய எரிசக்தி ஏற்றுமதியாளராக மாறி வருகிறோம். கடந்த சில மாதங்களில் நமது நிலக்கரி ஏற்றுமதியை வியத்தகு முறையில் அதிகரிக்க இந்தியா, ஜப்பான், கொரியா மற்றும் பிற நாடுகளுடன் வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தங்களைச் செய்துள்ளோம்.

    நமது நிலக்கரியின் தரம் உலகில் எங்கும் சிறந்ததாக இருக்க வேண்டும். சர்வதேச சந்தைகளில் அமெரிக்க நிலக்கரியை ஒரு சிறந்த தயாரிப்பாக நிலைநிறுத்துவதற்கான ஒரு பகுதியாக இந்தியாவுடனான ஒப்பந்தம் அமைந்துள்ளது.

    இந்த ஒப்பந்தங்கள் வெளிநாடுகளில் நிலக்கரி ஏற்றுமதியை கூர்மையாக அதிகரிக்கவும் அமெரிக்காவின் ஏற்றுமதி திறனை வலுப்படுத்தவும் வடிவமைக்கப்பட்டுள்ளன. நாட்டின் மாற்றம் விரைவானது மற்றும் தீர்க்கமானது. அது இனி உள்நாட்டு விநியோகத்தில் மட்டும் கவனம் செலுத்துவதில்லை.

    உலகளாவிய ஏற்றுமதியில் கவனம் செலுத்தி அதை அதிகரித்து வருகிறது.

    இவ்வாறு டிரம்ப் கூறினார்.

    • எப்ஸ்டீன் கோப்பு தொடர்பாக தந்தையிடம் கேள்வி கேட்ட மகள்
    • ஒருவேளை நான் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டிருந்தால் எனக் கேள்வி கேட்ட மகள் பலி.

    அமெரிக்காவின் டெக்சாஸில் வசித்து வருபவர் கிரிஸ் ஹாரிசன். இவரது 23 வயது மகள் லூசி ஹாரிசன் தந்தையை சந்திப்பதற்காக தனது காதலன் சாம் லிட்லர் உடன் அமெரிக்கா சென்றுள்ளார்.

    கிரிஸ் ஹாரிசன் வீட்டின் பாதுகாப்புக்காக துப்பாக்கி ஒன்றை வாங்கி வைத்துள்ளார். ஆனால் துப்பாக்கி கலாச்சாரத்துக்கு எதிரான லூசி இதை அறிந்தததும் கோபம் அடைந்துள்ளார்.

    கடந்த ஜனவரி 10 அன்று காலை துப்பாக்கி கலாச்சாரம் குறித்தும், டொனால்ட் டிரம்ப் குறித்து தந்தைக்கும் மகளுக்கும் இடையே பெரிய வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

    டிரம்ப் குறித்து எப்ஸ்டீன் கோப்புகளில் உள்ள தகவல்கள் குறித்துப் பேசிக்கொண்டிருந்தபோது, "ஒருவேளை நான் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டிருந்தால் நீங்கள் எப்படி உணர்வீர்கள்?" என்று லூசி தனது தந்தையிடம் கேட்டுள்ளார்.

    அதற்கு, "எனக்கு இன்னும் இரண்டு மகள்கள் இருக்கிறார்கள், அதனால் எனக்கு அவ்வளவு பெரிய பாதிப்பு இருக்காது" என்று கிரிஸ் பதிலளித்துள்ளார். இதனால் மிகுந்த மனவேதனை அடைந்த லூசி தனது அறைக்குச் சென்றுள்ளார்.

    வாக்குவாதம் நடந்து சுமார் அரை மணி நேரத்திற்குப் பிறகு, கிரிஸ் தனது மகள் லூசியைத் தனது படுக்கையறைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அடுத்த சில நொடிகளிலேயே துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டுள்ளது.

    காதலன் லிட்லர் ஓடிச் சென்று பார்த்தபோது, லூசி நெஞ்சில் குண்டு பாய்ந்த நிலையில் சடலமாகக் கிடந்துள்ளார்.

    தான் பாதுகாப்பிற்காக வைத்திருந்த துப்பாக்கியை மகளிடம் காட்ட முயன்றபோது, எதிர்பாராத விதமாக அது வெடித்ததாகக் கிரிஸ் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

    கிரிஸ் முன்னதாக மதுவுக்கு அடிமையாக இருந்தவர் என்பதும் மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்ததும் தெரியவந்தது.

    சம்பவத்தன்று அவர் 500 மி.லி. வெள்ளை ஒயின் அருந்தியிருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த வழக்கு தொடர்ந்து நடந்து வருகிறது. லூசியின் காதலன் சாம் லிட்லர் நீதிமன்றத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்துள்ளார்.

    13 வயது சிறுமியை அமெரிக்க அதிபர் டிரம்ப் பாலியல் வன்கொடுமை செய்ததாக அண்மையில் வெளியான எப்ஸ்டீன் கோப்புகளில் குறிப்பிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.   

    • இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு அமெரிக்கா சென்று அதிபர் டிரம்ப்-ஐ சந்தித்தார்.
    • முந்தைய அமெரிக்க நிர்வாகம் ஈரானுடன் செய்துகொண்ட அணுசக்தி ஒப்பந்தம் மிகவும் முட்டாள்தனமான ஒப்பந்தம்

    அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே ஓமனில் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதற்கிடையே இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு அமெரிக்கா சென்று அதிபர் டிரம்ப்-ஐ சந்தித்தார்.

    இந்நிலையில் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால் ஈரான் மீது அமெரிக்கா ராணுவத் தாக்குதலை நடத்தும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    டிரம்ப் கூறியதாவது, "ஒப்பந்தம் செய்துகொள்வதில் ஈரான் ஆர்வம் காட்டி வருகிறது. பேச்சுவார்த்தை வெற்றிகரமாக அமையும் என்று நம்புகிறோம். அதே நேரத்தில், இப்பகுதியில் அமெரிக்கப் போர்க்கப்பல்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்தும் ஆலோசித்து வருகிறோம்.

    ஈரான் ஒப்பந்தம் செய்து கொள்ளவில்லை என்றால் தாக்குதல் நடத்தப்படும். அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகள் குறித்து ஒப்பந்தம் எட்டப்பட வேண்டும். முந்தைய அமெரிக்க நிர்வாகம் ஈரானுடன் செய்துகொண்ட அணுசக்தி ஒப்பந்தம் மிகவும் முட்டாள்தனமான ஒப்பந்தம்" என்று தெரிவித்தார். 

    கடந்த ஆண்டு ஜூன் 22 ஆம் தேதி ஈரான் மீது அமெரிக்க ராணுவம் போர் விமானங்கள் மூலம் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதில் ஈரானின் அணுசக்தி நிலையங்கள் முற்றிலும் அழிக்கப்பட்டதாக டிரம்ப் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    • இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு இன்று அமெரிக்கா சென்றுள்ளார்.
    • பிரதமர் நேதன்யாகு அந்நாட்டு அதிபர் டிரம்பை வெள்ளை மாளிகை சென்று சந்தித்தார்.

    வாஷிங்டன்:

    ஈரான் உடனான அணுசக்தி பேச்சுவார்த்தைகளை விரிவுபடுத்துமாறு அதிபர் டிரம்ப்பை வலியுறுத்தும் நோக்கில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு இன்று அமெரிக்காவுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டார்.

    இந்நிலையில், அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நேதன்யாகு இன்று அந்நாட்டு அதிபர் டிரம்பை வெள்ளை மாளிகைக்குச் சென்று சந்தித்தார். வரை அதிபர் டிரம்ப் உற்சாகமாக வரவேற்றார்.

    அப்போது, ஈரானின் யுரேனியம் வளங்களை நிறுத்தவேண்டும், அதன் பாலிஸ்டிக் ஏவுகணைத் திட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் மற்றும் கிளர்ச்சிப் படைகளுடனான உறவுகளை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என இஸ்ரேல் பிரதமர் வலியுறுத்தினார்.

    ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் பல அதிரடி நடவடிக்கைகளுக்கு இஸ்ரேல் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகின்றது.

    • 30 சதவீத வரி அறிவிப்புக்குப் பிறகு எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.
    • அவர்கள் ஒரு சிறிய நாடு என்றும், வரிகளின் சுமையை அவர்கள் மீது சுமத்த வேண்டாம் என்றும் கூறினார்.

    சுவிட்சர்லாந்து நாட்டிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா 39 சதவீதம் வரி விதித்துள்ளது.

    இந்நிலையில் முதலில் 30 சதவீதமே வரி விதித்ததாகவும், ஆனால் கூடுதலாக 9 சதவீதம் வரிவிதிக்க ஒரு காரணம் உள்ளதாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

    இதுகுறித்து பாக்ஸ் நியூஸ் செய்தி நிறுவனத்திற்கு டிரம்ப் அளித்த பேட்டியில், சுவிட்சர்லாந்து மீதான 30 சதவீத வரி அறிவிப்புக்குப் பிறகு எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.

    அது முதலில் சுவிஸ் பிரதமர் என்று நினத்தேன். ஆனால் மறுப்புறம் போனில் பேசியது சுவிஸ் கூட்டாட்சி கவுன்சில் உறுப்பினர் கரின் கெல்லர்.

    அவர் வரிகளைப் பற்றிக் குறிப்பிட்டு, அவர்கள் ஒரு சிறிய நாடு என்றும், வரிகளின் சுமையை அவர்கள் மீது சுமத்த வேண்டாம் என்றும் கூறினார்.

    நீங்கள் ஒரு சிறிய நாடாக இருந்தாலும், எங்களுடன் வர்த்தகத்தில் உங்களுக்கு 42 பில்லியன் டாலர் உபரி உள்ளது நான் விளக்கினேன்.

    இருப்பினும், 'நாங்கள் ஒரு சிறிய நாடு' என்று அவர் மீண்டும் மீண்டும் கூறினார். அவர் பேசிய விதம் எனக்கு பிடிக்கவில்லை, அதனால்தான் வரிகளை 30 சதவீதத்திலிருந்து 39 சதவீதமாக உயர்த்தினேன்" என்று கூறியுள்ளார்.   

    • ஒரு கோடி உயிர்கள் காப்பாற்றப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
    • இரு தரப்பிலும் சேர்த்து சுமார் 10 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக மீண்டும் ஒருமுறை கூறியுள்ளார்

    2025 மே மாதம் நடைபெற்ற இந்திய-பாகிஸ்தான் மோதலைத் தனது வரி அச்சுறுத்தல் மூலம் தடுத்து நிறுத்தியதாக மீண்டும் அமெரிக்க அதிபர் டிரம்ப் இன்றுடன் 80-வது முறையாக தெரிவித்துள்ளார்.

    பாக்ஸ் பிசினஸ்ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் பேசிய டிரம்ப், "நீங்கள் போரை நிறுத்தவில்லை என்றால், உங்கள் மீது மிக அதிக வரி விதிக்கப்படும் என்று இரு நாடுகளையும் அச்சுறுத்தியே அமைதி ஏற்படுத்தியதாகவும் தெரிவித்தார்.

    இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே ஒரு முழுமையான அணுஆயுதப் போர் மூளும் அபாயம் இருந்ததாகவும், தனது தலையீட்டால் ஒரு கோடி உயிர்கள் காப்பாற்றப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

    மேலும், இந்த மோதலின் போது இரு தரப்பிலும் சேர்த்து சுமார் 10 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக மீண்டும் ஒருமுறை கூறியுள்ளார்

    ஏப்ரல் 22, 2025 இல் ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் உட்பட 26 பேர் கொல்லப்பட்டனர்.

    மே 7 ஆம் தேதி இதற்குப் பதிலடியாக இந்திய விமானப்படை பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் தாக்குதல் நடத்தியது. பதிலுக்குப் பாகிஸ்தான் பதில் தாக்குதல் நடத்தியது. பேச்சுவார்த்தைக்குப் பிறகு மே 10 அன்று போர் நிறுத்தம் ஏற்பட்டது.

    மோதலைத் தணிக்க எந்த ஒரு மூன்றாவது நாட்டின் தலையீடும் இல்லை என்று இந்தியா தொடர்ந்து கூறி வருகிறது. 

    • வங்கதேசம் தயாரிக்கும் ஆடை, ஜவுளிப் பொருட்களுக்கு முழு வரி விலக்கு அளிக்க அமெரிக்க அரசு முடிவு
    • அமெரிக்க விவசாயப் பொருட்களை வாங்க முன்னுரிமை அளிக்க வங்கதேசம் ஒப்புக்கொண்டுள்ளது.

    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்கள் மீதும் 50 சதவீதம் கூடுதல் வரியை விதித்தார்.

    இதைத்தொடர்ந்து வரியை குறைக்கும் வகையில், இருநாடுகளுக்கு இடையே வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தையும் நடந்து வந்தது. இந்நிலையில், இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டதாகவும், இந்தியா மீது விதிக்கப்பட்ட வரி குறைக்கப்பட்டதாகவும் டிரம்ப் அறிவித்தார்.

    அதன்படி அமெரிக்காவின் இறக்குமதி வரி 25 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். அதில், அமெரிக்காவிடமிருந்து 500 பில்லியன் டாலர் மதிப்பிலான எரிசக்தி, தொழில்நுட்பம் மற்றும் விவசாய பொருட்களை இந்தியா வாங்கும் என்று டிரம்ப் குறிப்பிட்டிருந்தார்

    இதையடுத்து இருநாட்டு வர்த்தக ஒப்பந்தம் குறித்த கூட்டறிக்கையும் வெளியானது. இடைக்கால ஒப்பந்தம் குறித்த கூட்டறிக்கையை அமெரிக்கா சார்பில் வெள்ளை மாளிகை வெளியிட்டது.

    இடைக்கால ஒப்பந்த அம்சங்களை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டார்.

    அதில், அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் தானியக் கழிவுகள், கால்நடை தீவனங்களுக்கு வரிகுறைக்கப்படும். அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் விவசாயப் பொருட்களுக்கான வரியும் குறைக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

    இந்நிலையில், வங்கதேசத்துடன் அமெரிக்கா புதிய வர்த்தக ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இதையடுத்து அந்நாட்டு மீதான வரியை 19% ஆக அமெரிக்கா குறைத்துள்ளது.

    அதன்படி அமெரிக்காவின் பருத்தி மற்றும் நூற்பு இழைகள் மூலம் வங்கதேசம் தயாரிக்கும் ஆடை, ஜவுளிப் பொருட்களுக்கு முழு வரி விலக்கு அளிக்க அமெரிக்க அரசு முடிவு செய்துள்ளது.

    இதற்குப் பதிலாக, அமெரிக்க விவசாயப் பொருட்களை வாங்க முன்னுரிமை அளிக்க வங்கதேசம் ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

    • நடுரோட்டில் தரையிறங்கிய விமானம் அங்கிருந்த 3 வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது.
    • இந்த விபத்து தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் இயந்திரக் கோளாறு காரணமாக சிறிய ரக விமானம் ஒன்று நடுரோட்டில் சட்டெனத் தரையிறங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    நடுரோட்டில் தரையிறங்கிய விமானம் அங்கிருந்த 3 வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தினால் பெரிய அளவிலான பாதிப்புகள் இல்லை என போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.

    இந்த விபத்து தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • டி20 உலகக் கோப்பை தொடர் இந்தியா, இலங்கையில் நடந்து வருகிறது.
    • நேற்று முன்தினம் நடந்த லீக் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.

    வாஷிங்டன்:

    டி20 உலகக் கோப்பை தொடர் இந்தியா, இலங்கையில் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் மும்பையில் நடந்த லீக் போட்டியில் அமெரிக்க அணி இந்திய அணியுடன் மோதியது. இதில் இந்திய அணி வெற்றி பெற்றது.

    உலகக் கோப்பையில் விளையாடி வரும் அமெரிக்க அணிக்கு அந்நாட்டு அதிபர் டிரம்ப் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், இந்தியாவில் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடந்து கொண்டிருப்பதாகக் கேள்விப்பட்டேன். அமெரிக்க அணிக்கு எனது வாழ்த்துகள். அமெரிக்க கிரிக்கெட் அணி வலுவாக இருக்கிறது. உங்கள் வெற்றிக்காக அமெரிக்கா காத்திருக்கிறது என தெரிவித்துள்ளார்.

    • 20-ஆம் நூற்றாண்டில் ஹிட்லர் தலைமையிலான நாஜிக்கள் பின்பற்றிய Eugenics கோட்பாடு ஆகும்.
    • ஸ்டீபன் ஹாக்கிங் போன்ற உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானிகளைத் தனது தனித்தீவுக்கு அழைத்து விருந்தளித்துள்ளார்.

    சிறுமிகள் மற்றும் இளம்பெண்களை கடத்தி பணக்காரர்களுக்கு போகப் பொருளாக விநியோகித்து வந்தவர் ஜெப்ரி எப்ஸ்டீன். இதற்காக தனி தீவு ஒன்றையே எப்ஸ்டீன் வைத்திருந்தார்.

    அவர் மற்றும் அவரது வாடிக்கையாளர்கள் தொடர்புடைய வீடியோக்கள், ஆவணங்கள், புகைப்படங்கள் எப்ஸ்டீன் கோப்புகள் என்று அழைக்கப்படுகின்றன.

    நீதிமன்ற உத்தரவின்படி இந்த லட்சக்கணக்கான பக்கங்கள் கொண்ட இந்த கோப்புகள் பகுதி பகுதியாக வெளியிடப்பட்டு வருகின்றன.

    அதன்படி, அமெரிக்க நீதித்துறை சமீபத்தில் வெளியிட்ட ஜெப்ரி எப்ஸ்டீன் கோப்புகளில், டொனால்டு டிரம்ப், பில் கேட்ஸ், எலான் மஸ்க், பிரிட்டன் முன்னாள் இளவரசர் ஆண்ட்ரு, அனில் அம்பானி உள்ளிட்ட பலரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

    இந்நிலையில் Super Race மனித இனத்தை எப்ஸ்டீன் உருவாக்கத் திட்டமிட்டிருந்தது தற்போது வெளியாகியுள்ள 'எப்ஸ்டீன் கோப்புகள்' மூலம் தெரியவந்துள்ளது.

    நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியின்படி, அமெரிக்காவின் நியூ மெக்சிகோவில் உள்ள தனது 10,000 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஜோரோ ராஞ்ச் எஸ்டேட்டில், ஒரே நேரத்தில் 20 பெண்களைத் தேர்ந்தெடுத்து அவர்களைத் தனது விந்தணு மூலம் கருத்தரிக்கச் செய்ய அவர் திட்டமிட்டிருந்தார்.

    மரபணு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கர்ப்பத்திலேயே அசாதாரண ஆற்றல்களையும் அறிவுத்திறனையும் வழங்கி தனது மரபணுக்களைக் கொண்ட ஒரு Super Race மனித இனத்தை உருவாக்க அவர் விரும்பினார்.

    தேர்ந்தெடுக்கப்பட்ட மனிதர்கள் மூலம் தூய ஆரிய இன சந்ததியினரை உருவாக்கி, மனித இனத்தை மேம்படுத்த வேண்டும் என்ற விபரீத எண்ணம், 20-ஆம் நூற்றாண்டில் ஹிட்லர் தலைமையிலான நாஜிக்கள் பின்பற்றிய Eugenics கோட்பாடு ஆகும்.

    ஹிட்லர் ஜெர்மனியில் அதிகாரத்தில் இருந்த காலகட்டத்தில் சில கிராமங்களில் இது ரகசியமாக பரிசோதித்தும் பார்க்கப்பட்டது என கூறப்படுகிறது.

    இதே பாணியில் நவீன அறிவியல் வளர்ச்சியை பயன்படுத்தி எப்ஸ்டீன் தனது விருப்பத்தை மெய்ப்பிக்க முடியும் என்று நம்பியுள்ளார்.

    தனது இந்தத் திட்டங்களுக்கு ஒரு அறிவியல் அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்பதற்காக, ஸ்டீபன் ஹாக்கிங் போன்ற உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானிகளைத் தனது தனித்தீவுக்கு அழைத்து விருந்தளித்துள்ளார்.

    மேலும், ஹார்வர்டு பல்கலைக்கழகம் போன்ற கல்வி நிறுவனங்களுக்குப் பல மில்லியன் டாலர்களை நிதியுதவியாக வழங்கியுள்ளார்.

    தான் இறந்த பிறகு தனது உடல், குறிப்பாகத் தலை மற்றும் பிறப்புறுப்பு ஆகியவற்றை உறைநிலையில் பாதுகாத்து வைக்க வேண்டும் என்றும், எதிர்காலத் தொழில்நுட்பம் மூலம் மீண்டும் உயிர் பெற முடியும் என்றும் அவர் நம்பியுள்ளார் என்று தெரிய வருகிறது. 

    ×