என் மலர்tooltip icon

    அமெரிக்கா

    • தனியார் நிறுவனம் மூலம் 15 பேர் கொண்ட குழுவினர் பனிச்சறுக்கு பயணம் மேற்கொண்டனர்.
    • பனிச்சரிவில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 6 பேரை பத்திரமாக மீட்டனர்.

    அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் லேக் தாஹோ அருகிலுள்ள சியரா நெவாடா பகுதியில் தனியார் நிறுவனம் மூலம் 15 பேர் கொண்ட குழுவினர் பனிச்சறுக்கு பயணம் மேற்கொண்டனர்.

    அவர்கள் கேஸ்டில் பீக் பகுதியில் பனிச்சறுக்கில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது திடீரென பலத்த காற்றுடன் பனிப்புயல் வீசியது. இதைதொடர்ந்து கடும் பனிச்சரிவு ஏற்பட்டது. இதில், அனைவரும் சிக்கிக் கொண்டனர்.

    இதுகுறித்து மீட்புப் படையினருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

    சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்பு படையினர் பனிச்சரிவில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 6 பேரை பத்திரமாக மீட்டனர். பனிச்சரிவில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஒருவரை காணவில்லை. அவரை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்து இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

    இந்த சம்பவம் குறித்து நெவாடா கவுண்டி ஷெரிப் ஷானன் மூன் கூறும்போது,"கடந்த 1981-ம் ஆண்டு வாஷிங்டனில் உள்ள மவுண்ட் ரெய்னியரில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 11 பேர் உயிரிழந்த சம்பவத்திற்குப் பிறகு, அமெரிக்காவில் நிகழ்ந்த மிக மோசமான சம்பவமாக இது அமைந்து உள்ளது"என்றார்.

    • ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமெனி அமெரிக்காவுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
    • போர் விமானங்கள் மத்திய கிழக்குக்கு நெருக்கமாக நிலை நிறுத்தப்பட்டு உள்ளன.

    அமெரிக்கா - ஈரான் இடையே அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக மோதல் போக்கு நீடித்து வருகிறது. அணுசக்தி ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திட வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் வலியுறுத்தி வருகிறார். அதற்கு ஈரான் மறுப்பு தெரிவித்து வருகிறது.

    இந்த நிலையில் ஈரானுக்கு எச்சரிக்கை விடும் வகையில் அமெரிக்காவின் போர்க்கப்பல்கள் அந்நாட்டின் அருகே நிலை நிறுத்தப்பட்டுள்ளன.

    இந்த அச்சுறுத்தலுக்கு எல்லாம் அடிபணிய மாட்டோம் என்றும் உங்களின் ராணுவத்தை அழிப்போம் என்றும் ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமெனி அமெரிக்காவுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

    இந்தநிலையில் அமெரிக்கா கடந்த 24 மணி நேரத்தில் 50-க்கும் மேற்பட்ட நவீன போர் விமானங்களை மேற்கு ஆசியா நோக்கி அனுப்பி வைத்து உள்ளது.

    இதையடுத்து இந்த வார இறுதியில் ஈரானை தாக்க அமெரிக்க ராணுவம் தயாராக இருப்பதாகவும் ஆனால் அதிபர் டிரம்ப் ஆயுத மோதலுக்கு அனுமதி அளிப்பாரா என்பது குறித்து இன்னும் இறுதி முடிவை எடுக்கவில்லை என்றும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து வெள்ளை மாளிகை கூறும்போது, இந்த வார இறுதியில் ராணுவம் தாக்குதலுக்கு தயாராக உள்ளது. ஆனால் அதுதான் சிறந்த நடவடிக்கை என்பதில் அதிபர் டிரம்ப் இன்னும் உறுதியாக இல்லை.

    அமெரிக்க தலைமைத் தளபதி தனிப்பட்ட முறையில் ராணுவ நடவடிக்கைக்கு ஆதரவாகவும் எதிராகவும் வாதிட்டார். சிறந்த நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசகர்கள் மற்றும் நட்பு நாடுகளிடம் கருத்துக் கேட்கப்பட்டுள்ளது.

    இந்த வார இறுதிக்குள் டிரம்ப் ஒரு முடிவை எடுப்பாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை. அவர் இதைப் பற்றி சிந்திக்க நிறைய நேரம் செலவிடுகிறார் என்று தெரிவித்துள்ளது.

    இந்த நிலையில் அமெரிக்கா மேற்கு ஆசியாவிற்கு 50-க்கும் மேற்பட்ட போர் விமானங்களை அனுப்பி நிலை நிறுத்தியுள்ளது. எப்-16, எப்-22, எப்-35 போர் விமானங்கள் உட்பட பல நவீன விமானங்கள் அங்கு சென்று உள்ளன.

    யு.எஸ்.எஸ். ஜெரால்ட் போர்டு போர் கப்பல் இந்த வார இறுதியில் ஈரான் அருகே செல்ல உள்ளது. அதே நேரத்தில் அமெரிக்க விமானப்படை டேங்கர்கள் மற்றும் போர் விமானங்கள் மத்திய கிழக்குக்கு நெருக்கமாக நிலை நிறுத்தப்பட்டு உள்ளன. இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

    அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் ஈரான் நிச்சயமாக பதிலடி கொடுக்கும். இதன் காரணமாக அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே எந்நேரத்திலும் போர் மூளும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

    • வாலிபர் துப்பாக்கியை தரையில் வைத்துவிட்டு படுத்துக்கொண்டார்.
    • எரிவாயு, முகமூடி, ஹெல்மெட் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

    அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் உள்ள பாராளுமன்றத்தின் மேற்கு பகுதியில் வாலிபர் ஒருவர் கையில் துப்பாக்கியுடன் வந்தார்.

    அவர் பாராளுமன்றத்துக்குள் நுழைய முயன்றார். இதை பார்த்த பாதுகாப்பு அதிகாரிகள் உடனே அந்த வாலிபரை சுற்றி வளைத்தனர். ஆயுதத்தை கீழே போடும்படி உத்தரவிட்டனர்.

    இதையடுத்து வாலிபர் துப்பாக்கியை தரையில் வைத்துவிட்டு படுத்துக்கொண்டார். பின்னர் அவரை போலீசார் கைது செய்தனர். அந்த வாலிபர் தன்னிடம் வெடி மருந்துகளையும் வைத்திருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

    மேலும், பாராளுமன்ற வளாகம் அருகே நிறுத்தப்பட்டிருந்த வாலிபர் வாகனத்தையும், ஒரு காரையும் போலீசார் சோதனை செய்தனர்.

    அதில் எரிவாயு, முகமூடி, ஹெல்மெட் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. அந்த வாலிபர் யார், எதற்காக துப்பாக்கியுடன் வந்தார் என்பது குறித்த விவரங்களை போலீசார் வெளியிடவில்லை.

    • எப்ஸ்டீன் பைல்ஸ் தொடர்பான ஆவணங்களை அமெரிக்க நீதித்துறை வெளியிட்டது.
    • அதிபர் டிரம்ப் மீது பல்வேறு பாலியல் குற்றச்சாட்டுகளை அவர் முன்வைத்துள்ளார்.

    வாஷிங்டன்:

    சிறுமிகள் மற்றும் இளம்பெண்களைக் கடத்தி பணக்காரர்களுக்கு போகப் பொருளாக விநியோகித்து வந்தவர் அமெரிக்க தொழிலதிபர் ஜெப்ரி எப்ஸ்டீன். இதற்கென தனி தீவே அவர் வைத்திருந்தார்.

    கடந்த 2019 ஜூலை மாதம் கைதான அவர் நியூயார்க் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அதே ஆண்டு ஆகஸ்ட் 10-ம் தேதி சிறையில் தனது அறையில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

    எப்ஸ்டீன் அவரது வாடிக்கையாளர்கள் தொடர்புடைய வீடியோக்கள், ஆவணங்கள், புகைப்படங்கள் ஆகியவற்றை ஆவணப்படுத்தி வைத்திருந்தார். அவை எப்ஸ்டீன் கோப்புகள் என அழைக்கப்படுகின்றன. நீதிமன்ற உத்தரவின்படி இந்த லட்சக்கணக்கான பக்கங்கள் கொண்ட இந்த கோப்புகள் பகுதி பகுதியாக வெளியிடப்பட்டு வருகின்றன.

    இதில், அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது பல்வேறு பாலியல் குற்றச்சாட்டுகளை எப்ஸ்டீன் முன்வைத்துள்ளார். பாதிக்கப்பட்டவர்கள் என சிலர் அளித்த வாக்குமூலமும் எப்ஸ்டீன் கோப்புகளில் இடம்பெற்றிருந்தன.

    இந்த விவகாரத்தில் அமெரிக்க அதிபர் டிரம்புக்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், அவருக்கு எதிராக போராட்டங்களும் நடத்தப்பட்டன.

    இந்நிலையில், அதிபர் டிரம்ப் செய்தியாளர்களிடம் பேசுகையில், எப்ஸ்டீன் விவகாரத்தில் நான் மறைக்க எதுவும் இல்லை. நான் விடுவிக்கப்பட்டேன். ஜெப்ரி எப்ஸ்டீனுடன் எனக்கு எந்தத் தொடர்பும் இல்லை. எப்ஸ்டீன் வழக்கில் நான் முற்றிலும் விடுவிக்கப்பட்டேன். உண்மையில், சிலருடன் சேர்ந்து என்னை அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கக் கூடாது என ஜெப்ரி எப்ஸ்டீன் போராடினார் என தெரிவித்தார்.

    • நாடுகடத்தல் நடவடிக்கைகள் முடியும் வரை காவலில் வைக்கப்படுவார்.
    • ஆவணமின்றி புலம்பெயர்ந்தோருக்கு எதிரான நடவடிக்கை தீவிரப்படுத்தியுள்ளது.

    சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் இந்திய வம்சாவெளியை சேர்ந்த நபரை அமெரிக்க குடியுரிமை அதிகாரிகள் (ICE) கைது செய்துள்ளனர். அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் வொடெலா யஷஸ்வி கோட்டப்பள்ளி என்ற நபர் 13 வயதுக்குட்பட்ட சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது, கொள்ளையடித்தது மற்றும் பொது அமைதியை சீர்குலைத்தது போன்ற குற்றச்சாட்டுகளின் கீழ் கைதாகியுள்ளார்.

    இது குறித்து அமெரிக்க குடியுரிமை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், "இந்தியாவைச் சேர்ந்த சட்டவிரோத குடியேறிய வோடேலா யஷஸ்வி கோட்டப்பள்ளி என்பவர் நியூ ஜெர்சியில் பாலியல் வன்கொடுமை மற்றும் திருட்டு குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார். அவரை நாடுகடத்தல் நடவடிக்கைகள் முடியும் வரை நாங்கள் காவலில் வைத்திருப்போம்," என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்-இன் இரண்டாவது பதவிக் காலத்தில் ஆவணமின்றி புலம்பெயர்ந்தோருக்கு எதிராக ICE நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளது. இந்த நிலையில், குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட வெளிநாட்டினர் சம்பந்தப்பட்ட கைதுகள் மற்றும் தடுப்புக்காவல் விவரங்களை ICE பகிரங்கமாகப் பகிர்ந்துள்ளதால் இந்த அமலாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    டிசம்பரில், ஓரிகானில் இரண்டு பேர் கொல்லப்பட்ட பயங்கரமான விபத்தில் தொடர்புடைய இந்திய லாரி ஓட்டுநர் சம்பந்தப்பட்ட மற்றொரு வழக்கின் விவரங்களையும் ICE வெளியிட்டது. 2022 நவம்பரில் அரிசோனா வழியாக ஓட்டுநர் அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்ததாகவும், பின்னர் கலிபோர்னியா மாநில அதிகாரிகளிடமிருந்து பணி அங்கீகார மற்றும் வணிக ஓட்டுநர் உரிமத்தைப் பெற்றதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    அமெரிக்காவில் கனரக சரக்கு வாகனங்களை ஓட்டும் இந்தியர்கள் சம்பந்தப்பட்ட இதேபோன்ற விபத்துகளைத் தொடர்ந்து இந்த வழக்கு நடந்தது. சமீபத்திய மாதங்களில், புளோரிடா மற்றும் கலிபோர்னியாவில் ஆவணமற்ற இந்திய லாரி ஓட்டுநர்கள் சம்பந்தப்பட்ட குறைந்தது மூன்று ஆபத்தான விபத்துகளை அமெரிக்க அதிகாரிகள் எடுத்துரைத்துள்ளனர்.

    • இந்தியாவில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் உதவியுடன் அவரைத் தொடர்பு கொள்ள முயன்றனர்.
    • FBI வசம் ஒப்படைக்கவும் அந்த மின்னஞ்சலில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    சிறுமிகள் மற்றும் இளம்பெண்களை கடத்தி பணக்காரர்களுக்கு போகப் பொருளாக விநியோகித்து வந்தவர் அமெரிக்க தொழிலதிபர் ஜெப்ரி எப்ஸ்டீன். இதற்கென தனி தீவே அவர் வைத்திருந்தார்.

    கடந்த 2019 ஜூலை மாதம் கைதான அவர் நியூ யார்க் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அதே ஆண்டு ஆகஸ்ட் 10 ஆம் தேதி தனது சிறையில் தனது அறையில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

    எப்ஸ்டீன் அவரது வாடிக்கையாளர்கள் தொடர்புடைய வீடியோக்கள், ஆவணங்கள், புகைப்படங்கள் ஆகியவற்றை ஆவணப்படுத்தி வைத்திருந்தார். அவை எப்ஸ்டீன் கோப்புகள் என்று அழைக்கப்படுகின்றன.

    நீதிமன்ற உத்தரவின்படி இந்த லட்சக்கணக்கான பக்கங்கள் கொண்ட இந்த கோப்புகள் பகுதி பகுதியாக வெளியிடப்பட்டு வருகின்றன.

    அதன்படி, அமெரிக்க நீதித்துறை சமீபத்தில் வெளியிட்ட ஜெப்ரி எப்ஸ்டீன் கோப்புகளில், டொனால்டு டிரம்ப், பில் கேட்ஸ், எலான் மஸ்க், பிரிட்டன் முன்னாள் இளவரசர் ஆண்ட்ரு, அனில் அம்பானி உள்ளிட்ட பலரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

    மேலும் வெளியிடப்பட்ட ஆவணங்களில் எப்ஸ்டீன் வழக்கில் அமெரிக்க அரசு தரப்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த குறிப்புகளும் இடம்பெற்றிருந்தன.

    அந்த வகையில் எப்ஸ்டீனால் பாதிக்கப்பட்டவர்களில் ஒரு இந்திய பெண்(அல்லது சிறுமி) இருந்திருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

    குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீட்டுத் திட்டம் அமெரிக்காவில் நடைமுறையில் உள்ளது. எனவே அந்த திட்டத்தின் கீழ் இந்திய பெண் ஒருவருக்கு நிதியுதவியும், மனநல ஆலோசனையும் அளிக்க அவரை அமெரிக்க அதிகாரிகள் தேடியுள்ளனர்.

    2020 ஜனவரி 13-ஆம் தேதியிட்ட மின்னஞ்சல் ஒன்றில், இந்தியாவில் இருக்கும் இந்தப் பெண்ணைக் கண்டறியும் அமெரிக்க அதிகாரிகளின் முயற்சிகள் குறித்துக் குறிப்பிடப்பட்டுள்ளது.

    அவரது முகவரி மற்றும் தொடர்பு விவரங்கள் கிடைத்தால், இந்தியாவில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் உதவியுடன் அவரைத் தொடர்பு கொள்ள அதிகாரிகள் திட்டமிட்டிருந்தனர்.

    இந்த மின்னஞ்சலில், அந்தப் பெண்ணின் தனிப்பட்ட விவரங்கள் மற்றும் முக்கியத் தகவல்கள் கறுப்பு மையால் மறைக்கப்பட்டுள்ளன. இதற்கான ஆவணங்களை FBI வசம் ஒப்படைக்கவும் அந்த மின்னஞ்சலில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    அமெரிக்க அதிகாரிகள் பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீட்டு நிதி மூலம் அந்தப் பெண்ணிற்கு உதவி வழங்க அவரைத் தேடி வந்ததாகத் தெரியவந்துள்ளது.

    2019 ஆகஸ்ட் மாதம் எப்ஸ்டீன் சிறையில் மரணமடைந்த சில மாதங்களுக்குப் பிறகு இந்தத் தகவல் பரிமாற்றம் நடைபெற்றுள்ளது.

    இந்தத் தகவல் எப்ஸ்டீனின் பாலியல் சுரண்டல் நெட்வொர்க் இந்தியா வரை பரவியிருந்தது என்பதை வெளிச்சம் போட்டு காட்டி உள்ளது.  

    • டெல்லியில் இந்தியா-செயற்கை நுண்ணறிவு (AI) தாக்கம் குறித்த உச்சி மாநாடு தொடங்குகிறது.
    • இதுதொடர்பான கண்காட்சியை பிரதமர் மோடி இன்று மாலை தொடங்கி வைக்கிறார்.

    நியூயார்க்:

    டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் இந்தியா-செயற்கை நுண்ணறிவு(AI) தாக்கம் குறித்த உச்சி மாநாடு இன்று தொடங்குகிறது.

    இந்த மாநாடு வரும் 20ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதுதொடர்பாக கண்காட்சியும் நடைபெற உள்ளது. இந்தக் கண்காட்சியை பிரதமர் மோடி இன்று மாலை தொடங்கி வைக்கிறார். மாநாடு மற்றும் கண்காட்சிக்கு சுமார் 2.5 லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த மாநாட்டில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மேக்ரான், பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா உள்பட 20 நாடுகளின் தலைவர்கள், கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை, அடோப் சிஇஓ சாந்தனு நாராயண் உள்ளிட்ட ஏஐ துறை சார்ந்த பல்வேறு நிபுணர்கள் மற்றும் தொழிலதிபர்கள் பலர் பங்கேற்கின்றனர்.

    இந்நிலையில், ஐ.நா.சபை பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் ஐ.நா.தலைமையகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    ஏஐ தாக்க உச்சி மாநாட்டை நடத்துவதற்காக இந்தியாவை மனதார வாழ்த்துகிறேன். மனித குலத்தின் நன்மைக்காக செயற்கை நுண்ணறிவு தன்னை வளர்த்து கொள்வதும், உலகளாவிய கருவியாக மாறுவதும் மிகவும் அவசியம்.

    உலகின் மிகவும் வெற்றிகரமான வளர்ந்து வரும் பொருளாதார நாடாக உள்ள இந்தியா செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டை நடத்துவதற்கு சரியான இடம்.

    ஏ.ஐ.யின் ஆற்றல் மற்றும் அதன் அனைத்துவித ஆபத்துகள் குறித்து ஆழமாக விவாதிக்கப்படுவதை உறுதி செய்யவும், ஏஐ முழு உலகிற்கும் என்பதை உறுதி செய்யவும் இந்தியா பொருத்தமான இடம்.

    இந்தியாவை வளர்ந்து வரும் பொருளாதாரங்களின் மையமாக நான் பார்க்கிறேன். இந்தப் பன்முக உலகத்தை வடிவமைப்பதில் இந்தியா வகிக்கக்கூடிய பங்களிப்பின் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது என தெரிவித்தார்.

    • லட்சக்கணக்கான பக்கங்கள் கொண்ட கோப்புகள் வெளியாகி வருகின்றன.
    • எப்ஸ்டீனின் கழுத்தில் மூன்று இடங்களில் எலும்பு முறிவுகள் இருந்தன

    சிறுமிகள் மற்றும் இளம்பெண்களை கடத்தி பணக்காரர்களுக்கு போகப் பொருளாக விநியோகித்து வந்தவர் அமெரிக்க தொழிலதிபர் ஜெப்ரி எப்ஸ்டீன். இதற்கென தனி தீவே அவர் வைத்திருந்தார்.

    கடந்த 2019 ஜூலை மாதம் கைதான அவர் நியூ யார்க் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அதே ஆண்டு ஆகஸ்ட் 10 ஆம் தேதி தனது சிறையில் தனது அறையில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

    அந்த நேரத்தில் நியூயார்க் நகர முதன்மை மருத்துவ ஆய்வாளர் அலுவலகம் தூக்கிட்டு தற்கொலை செய்ததாக அறிவித்தது.

    ஆனால் அது தற்கொலையா என்பது குறித்த கேள்வி தொடர்ந்து எழுந்து வருகிறது.

    எப்ஸ்டீன் அவரது வாடிக்கையாளர்கள் தொடர்புடைய வீடியோக்கள், ஆவணங்கள், புகைப்படங்கள் ஆகியவற்றை ஆவணப்படுத்தி வைத்திருந்தார். அவை எப்ஸ்டீன் கோப்புகள் என்று அழைக்கப்படுகின்றன.

    நீதிமன்ற உத்தரவின்படி இந்த லட்சக்கணக்கான பக்கங்கள் கொண்ட இந்த கோப்புகள் பகுதி பகுதியாக வெளியிடப்பட்டு வருகின்றன.

    அதன்படி, அமெரிக்க நீதித்துறை சமீபத்தில் வெளியிட்ட ஜெப்ரி எப்ஸ்டீன் கோப்புகளில், டொனால்டு டிரம்ப், பில் கேட்ஸ், எலான் மஸ்க், பிரிட்டன் முன்னாள் இளவரசர் ஆண்ட்ரு, அனில் அம்பானி உள்ளிட்ட பலரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

    எனவே எப்ஸ்டீன் உண்மையில் சிறையில் தற்கொலை செய்துகொண்டாரா அல்லது வழக்கில் பெரிய புள்ளிகள் சம்பந்தப்பட்டுள்ளதால் அவற்றை மறைக்க கொலை செய்யப்பட்டாரா என்ற சந்தேகம் மீண்டும் பரவலாக எழுந்துள்ளது.

    இந்நிலையில் பிரேத பரிசோதனையில் பார்வையாளராக இருந்த மருத்துவர் மைக்கேல் பேடன் 'தி டெலிகிராப்' இதழுக்கு பேட்டி அளித்துள்ளார்.

    அதில், எப்ஸ்டீனின் மரணம் தூக்கு போட்டதால் நிகழ்ந்ததுபோல் தெரியவில்லை, அவர் யாரோ ஒருவரால் கழுத்து நெரிக்கப்பட்டு கொல்லப்பட்டிருக்கலாம் என்று தான் நம்புவதாக தெரிவித்துள்ளார்.

    எப்ஸ்டீனின் கழுத்தில் மூன்று இடங்களில் எலும்பு முறிவுகள் இருந்தன என்று கூறிய அவர், தனது 50 ஆண்டுகால மருத்துவப் பணியில், தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட எவருடைய கழுத்திலும் இதுபோன்று மூன்று முறிவுகளைத் தான் பார்த்ததே இல்லை என்று பேடன் கூறியுள்ளார்.

    தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் பார்பரா சாம்சன், பிரேதப் பரிசோதனையை நேரில் பார்க்காமலேயே இது தற்கொலை என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்ததாகப் பேடன் குற்றம் சாட்டியுள்ளார்.

    2023-ஆம் ஆண்டு அமெரிக்க நீதித்துறை வெளியிட்ட அறிக்கையில், எப்ஸ்டீன் இருந்த சிறையில் கடுமையான பாதுகாப்பு குறைபாடுகள் இருந்ததை உறுதிப்படுத்தியது. அவரது அறையில் வழக்கமான சோதனைகள் நடத்தப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

    எப்ஸ்டீனின் வழக்கறிஞர்களும் இந்த அதிகாரப்பூர்வ பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தங்களுக்கு நம்பிக்கையில்லை என்று ஆரம்பத்திலிருந்தே கூறி வருகின்றனர்.  

    • கர்நாடகா மாநிலத்தை சேர்ந்தவர் சாகேத் ஸ்ரீனிவாசய்யா.
    • கலிபோர்னியாவின் பெர்க்லே பல்கலைக்கழகத்தில் முதுகலை படித்து வந்தார்.

    வாஷிங்டன்:

    கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்தவர் சாகேத் ஸ்ரீனிவாசய்யா (22). சென்னை ஐஐடியில் இளங்கலை படிப்பை முடித்த இவர் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள பெர்க்லே பல்கலைக்கழகத்தில் முதுகலை படித்து வந்தார்.

    இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை முதல் ஸ்ரீனிவாசய்யாவை காணவில்லை என தெரிகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பார்க் ஹில்ஸ் பகுதியில் உள்ள ஒரு வாசலில் அவரது பாஸ்போர்ட், மடிக்கணினி, அவரது பை உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டது.

    கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த மாணவர் மாயமானது குறித்து இந்திய துணை தூதரகம் ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளது. அவரது குடும்பத்தினருடன் தூதரக அதிகாரிகள் தொடர்பில் இருந்து வருகின்றனர்.

    • இந்தியரான நிகில் குப்தா கைது செய்யப்பட்டு பின்னர் அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டார்.
    • இந்திய அரசுக்கு தொடர்பு இருப்பதாகவும் அமெரிக்கா தெரிவித்தது.

    இந்தியாவில் பஞ்சாப்பை தனி நாடாக அறிவிக்கக்கோரி காலிஸ்தான் அமைப்புகள் போராடி வருகிறார்கள். இதில் குர்பத்வந்த் சிங் பன்னூனின் நீதிக்கான சீக்கியர்கள் அமைப்பு அமெரிக்காவின் நியூயார்க்கை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.

    பஞ்சாப்பை பூர்வீகமாக கொண்ட குர்பத்வந்த் சிங் பன்னூன், அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளின் குடியுரிமை பெற்றவர். அவரை பயங்கரவாதியாக மத்திய அரசு அறிவித்து உள்ளது.

    இதற்கிடையே அமெரிக்காவில் காலிஸ்தான் பிரிவினைவாதி குர்பத்வந்த் சிங் பன்னூனை கொலை செய்ய சதி திட்டம் தீட்டப்பட்டதாக அந்நாட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இதுதொடர்பாக கடந்த 2023-ம் ஆண்டு செக்குடியரசு நாட்டில் இந்தியரான நிகில் குப்தா கைது செய்யப்பட்டு பின்னர் அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டார். அவர் மீதான நியூயார்க் மன்ஹாட்டன் கோர்ட்டில் நடந்து வருகிறது.

    அப்போது அமெரிக்க குடிமகனான பன்னூனைக் கொலை செய்ய முன்னாள் இந்திய உளவுப் பிரிவு அதிகாரி விகாஸ் யாதவுடன் இணைந்து நிகில் குப்தா சதி திட்டம் தீட்டியதாகவும், இந்தக் கொலை முயற்சியை தாங்கள் தடுத்து நிறுத்தியதாகவும் அமெரிக்க அரசு கோர்ட்டில் தெரிவித்தது. இதை நிகில் குப்தா மறுத்து இருந்தார்.

    மேலும், இதில் இந்திய அரசுக்கு தொடர்பு இருப்பதாகவும் அமெரிக்கா தெரிவித்தது. ஆனால் அதை இந்திய அரசு திட்டவட்டமாக மறுத்தது.

    இந்த நிலையில் நிகில் குப்தா தன் மீது சுமத்தப்பட்டுள்ள அனைத்து குற்றச்சாட்டுகளையும் கோர்ட்டில் ஒப்பு கொண்டு உள்ளார்.

    நியூயார்க் கோர்ட்டில் வழக்கு விசாரணை நடந்த போது பன்னூனை கொலை செய்ய சதி செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டார். 54 வயதான நிகில் குப்தா மீது கூலிக்குக் கொலை செய்தல், கொலை செய்யச் சதித் திட்டம், பண மோசடி மற்றும் சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு உள்ளன.

    அவருக்கான தண்டனை விவரம் வருகிற மே 29-ந் தேதி அறிவிக்கப்படும். இதில் அவருக்கு அதிகபட்சமாக 40 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

    இது தொடர்பாக அமெரிக்க அதிகாரிகள் கூறும் போது,"நிகில் குப்தா அமெரிக்க நீதிபதி சாரா நெட்பர்ன் முன் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டார். அவருக்கு மே 29-ந் தேதி அமெரிக்க மாவட்ட நீதிபதி விக்டர் மர்ரெரோ தண்டனை விதிக்க உள்ளார்" என்றனர்.

    • வங்கதேசத்தில் நேற்று முன்தினம் பொதுத் தேர்தல் நடந்தது.
    • தாரிக் ரஹ்மான் தலைமையிலான பிஎன்பி கூட்டணி வெற்றி பெற்றது.

    வாஷிங்டன்:

    வங்கதேசத்தில் கடந்த 2024 ஆகஸ்டில் மாணவர் போராட்டத்தால் ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்ந்தது. தொடர்ந்து அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைந்தது.

    ஆட்சி கவிழ்ந்தபின் 18 மாதங்கள் கழித்து முதல் முறையாக புதிய அரசை தேர்ந்தெடுக்க நேற்று முன்தினம் அங்கு பொதுத் தேர்தல் நடந்தது. இது வங்கதேசத்தின் 13-வது பொதுத்தேர்தல் தேர்தல் ஆகும்.

    இதில், வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான் தலைமையிலான பிஎன்பி கூட்டணி, அதன் முன்னாள் கூட்டாளியான ஜமாத்-இ-இஸ்லாமி ஆகிய கட்சிகளுக்கு இடையே நேரடி போட்டி நடந்தது.

    300 இடங்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் 200-க்கும் மேற்பட்ட இடங்களை தாரிக் ரஹ்மான் தலைமையிலான பிஎன்பி கூட்டணி கைப்பற்றி அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. இதையடுத்து தாரிக் ரஹ்மான் வங்கதேச பிரதமர் ஆவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், வங்கதேசத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற அமெரிக்கா ஆவலுடன் காத்திருக்கிறது என அந்நாட்டு வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.

    மேலும், தேர்தலில் வெற்றி பெற்ற பிஎன்பி கட்சிக்கும், அக்கட்சி தலைவர் தாரிக் ரஹ்மானுக்கு வாழ்த்துக்கள் என குறிப்பிட்டுள்ளார்.

    • சர்வதேச அளவில் சிறப்பு வாய்ந்த நாள்களை கூகுள் நிறுவனம் கொண்டாடி வருகிறது.
    • பண்டிகை காலங்களில் கூகுள் அதன் தேடு பொறியில் புதிய டூடுலை மாற்றியமைக்கும்.

    வாஷிங்டன்:

    இணைய தேடு பொறியில் முதன்மை நிறுவனமாக விளங்குவது கூகுள் நிறுவனம். சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற முக்கிய நாட்கள், பிரபலங்களின் பிறந்த நாட்கள் மற்றும் பண்டிகை காலங்களில் கூகுள் அதன் தேடு பொறியில் புதிய டூடுலை மாற்றியமைக்கும்.

    சர்வதேச அளவில் சிறப்பு வாய்ந்த நாள்களை டூடுல் மூலம் கூகுள் நிறுவனம் கொண்டாடியும், அனுசரித்தும் வருகிறது. தனது டுடூல் அமைப்பை அந்த நாளின் சிறப்புக்கு ஏற்றார் போல் மாற்றி அமைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

    ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14-ம் தேதி காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், காதலர் தினத்தையொட்டி கூகுள் நிறுவனம் சிறப்பு டூடுலை வெளியிட்டுள்ளது.

    ×