என் மலர்tooltip icon

    அமெரிக்கா

    • டேங்கர் லாரியில் இருந்து திடீரென ரசாயன வாயு கசிந்தது.
    • இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாகக் காட்சி அளித்தது.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் ஓக்லஹோமா மாகாணம் வெதர்போர்டு நகரில் நட்சத்திர ஓட்டல் ஒன்று அமைந்துள்ளது.

    இந்த ஓட்டலுக்குச் சொந்தமான வாகன நிறுத்துமிடத்தில் நின்று கொண்டிருந்த டேங்கர் லாரியில் இருந்து திடீரென ரசாயன வாயு கசிந்தது. இதனால் அந்தப் பகுதி முழுவதும் புகை மண்டலமாகக் காட்சி அளித்தது.

    இதையடுத்து அங்கிருந்தவர்களுக்கு மூச்சுத்திணறல் மற்றும் கண் எரிச்சல் ஏற்பட்டன.

    இதுகுறித்து மீட்புப் படையினருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அவர்கள் அங்கு விரைந்ததும் மூச்சுத் திணறல் ஏற்பட்ட 36 பேரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    இந்தச் சம்பவத்தால் அங்கு வசிக்கும் நூற்றுக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.

    • தடை செய்யப்பட்ட நிறுவனங்களில் இந்தியா-வைச் சேர்ந்த 'Farmlane பிரைவேட் லிமிடெட்' என்ற ரசாயன நிறுவனமும் அடங்கும்.
    • அமெரிக்க கருவூலத் துறை குற்றம் சாட்டியுள்ளது.

    ஈரானின் ஏவுகணை மற்றும் டிரோன் தயாரிப்பு திட்டங்களுக்கு ஆதரவளித்ததாகக் கூறி, இந்தியா, சீனா, ஐக்கிய அரபு அமீரகம், துருக்கி உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 32 நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.

    தடை செய்யப்பட்ட நிறுவனங்களில் இந்தியா-வைச் சேர்ந்த 'Farmlane பிரைவேட் லிமிடெட்' என்ற ரசாயன நிறுவனமும் அடங்கும்.

    இந்த நிறுவனம், ஆகிய அரபு அமீரகத்தை தளமாகக் கொண்ட மார்கோ கிளிங்கே நிறுவனத்துடன் இணைந்து, ஏவுகணை மோட்டார்களில் பயன்படுத்தப்படும் சோடியம் குளோரேட் மற்றும் சோடியம் பெர்க்ளோரேட் போன்ற ரசாயனப் பொருட்களை ஈரான் பெற உதவியதாக அமெரிக்க கருவூலத் துறை குற்றம் சாட்டியுள்ளது.

    கடந்த ஜூலை மாதம், ஈரான் பெட்ரோலியம் மற்றும் பெட்ரோ கெமிக்கல் வர்த்தகத்தில் ஈடுபட்டதாகக் கூறி ஆறு இந்திய நிறுவனங்கள் மீது அமெரிக்கா தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.    

    • வெடிகுண்டு நிபுணர்கள் 4 பள்ளிகளிலும் ஒவ்வொரு அறைகளாக சோதனை செய்தனர்.
    • வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது யார்? என்று தெரியவில்லை.

    அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் புல்லர்னில் உள்ள 4 பள்ளிகளுக்கு தொடர் வெடி குண்டு மிரட்டல்கள் வந்தது.

    அங்குள்ள சன்னிஹில் பள்ளி, யூனியன் பள்ளி, டிராய் மற்றும் பெர்ன் டிரைவ் பள்ளிகளுக்கு தொலைபேசி மூலம் பள்ளியில் குண்டுகள் வைக்கப்பட்டு உள்ளதாக மிரட்டல் விடுக்கப்பட்டது.

    இதையடுத்து அந்த பள்ளிகளில் இருந்து மாணவர்கள் அவசர, அவசரமாக வெளியேற்றப்பட்டு யாரும் உள்ளே செல்லாமல் இருக்க பூட்டப்பட்டது.

    பின்னர் வெடிகுண்டு நிபுணர்கள் 4 பள்ளிகளிலும் ஒவ்வொரு அறைகளாக சோதனை செய்தனர். இறுதியில் அது வெறும் புரளி என தெரியவந்தது.

    இந்த வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது யார்? என்று தெரியவில்லை. இந்த சம்பங்களால் புல்லர்டன் பகுதி பரபரப்பாக காணப் பட்டது. மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் பீதி நிலவியது.

    • இந்தியா- அமெரிக்கா இடையே வர்த்தக உறவில் விரிசல் ஏற்பட்டது.
    • இந்தியாவுடனான வர்த்தக முன்னேற்றத்திற்கான ஒரு படிக்கல்லாக பார்க்கப்படுகிறது.

    அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவி ஏற்றபிறகு இந்தியா உள்பட பல்வேறு நாடுகளின் இறக்குமதி பொருட்களுக்கு கடும் வரி விதித்தார்.

    ரஷியாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணை வாங்கி வருவதால் மொத்தம் 50 சதவீதம் வரி விதிக்கப்பட்டது. ஆனால் அமெரிக்காவின் இந்த மிரட்டலுக்கு இந்தியா பணியவில்லை.

    தொடர்ந்து இந்தியா ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கி வருகிறது. இதனால் இந்தியா- அமெரிக்கா இடையே வர்த்தக உறவில் விரிசல் ஏற்பட்டது.

    இந்தநிலையில் இந்தியாவுடனான நட்பை தொடர்ந்து நீடிப்பதற்கான முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டு வருகிறது. பிரதமர் மோடி தனது சிறந்த நண்பர் என அதிபர் டிரம்ப் சொல்லி வருகிறார். மேலும், இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்வதற்கான சூழ்நிலை உருவாகி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு டிரம்பின் நெருங்கிய நண்பரான செர்ஜியோ கோர் இந்தியாவின் புதிய தூதரக பொறுப்பேற்றுக் கொண்டார்.

    அவர் பதவி ஏற்ற விழாவில் பேசிய அதிபர் இந்திய இறக்குமதி பொருட்களுக்கு வரி குறைக்கப்படும் என சூசகமாக தெரிவித்தார். அவரின் இந்த கருத்து இந்தியாவுடனான வர்த்தக முன்னேற்றத்திற்கான ஒரு படிக்கல்லாக பார்க்கப்படுகிறது.

    இந்த சூழ்நிலையில் இது தொடர்பாக அமெரிக்க அதிபர் ஒருவர் கூறும் போது,"இந்தியாவுடன் எங்களுக்கு 2 விஷயங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.

    நிச்சயமாக எங்களுக்குள் ஒரு பரஸ்பர பேச்சுவார்த்தை நடந்து முடிந்து இந்த ஆண்டு இறுதிக்குள் வர்த்தக ஒப்பந்தம் ஏற்படும்" என தெரிவித்து உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    • இந்த பொது முடக்கம் காரணமாக 700,000 பேர் ஊதியமின்றி வேலை செய்கின்றனர்.
    • அமெரிக்காவில் உள்ள ஏழைக் குடும்பங்களுக்கு வழங்கும் உணவுப் பொருட்களின் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.

    வரலாற்றில் மிகப்பெரிய பொது முடக்கத்தை எதிர்கொண்டுள்ள அமெரிக்கா, முன்னெப்போதும் இல்லாத நெருக்கடியை எதிர்கொள்கிறது.

    அக்டோபர் 1 ஆம் தேதி தொடங்கிய அரசு முடக்கம், எந்த மாற்றமும் இல்லாமல் 43வது நாளாக இன்று வரை தொடர்ந்தது.

    இந்த பொது முடக்கம் காரணமாக 700,000 பேர் ஊதியமின்றி வேலை செய்கின்றனர். 670,000 பேர் வேலை இழந்துள்ளனர். லட்சக்கணக்கான அமெரிக்கர்கள் அத்தியாவசிய சேவைகளை கூட அணுக முடியவில்லை.

    அமெரிக்காவில் உள்ள 40 முக்கிய விமான நிலையங்களின் செயல்பாடுகளும் இந்த நிறுத்தம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளன.

    இதன் காரணமாக, அமெரிக்காவில் உள்ள ஏழைக் குடும்பங்களுக்கு வழங்கும் உணவுப் பொருட்களின் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.

    இதனுடன், அமெரிக்காவில் வேலையின்மையும் மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது. 4.6 சதவீதமாக இருந்த சராசரி வேலையின்மை விகிதம் 6 சதவீதமாக உயர்ந்துள்ளது.

    டிரம்பின் பிடிவாதமே இந்த பணிநிறுத்தம் தொடரக் காரணம் என்று ஜனநாயகக் கட்சியினர் கூறினர்.

    இந்நிலையில் அமெரிக்க வரலாற்றில் மிக நீண்ட முடக்கத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான நிதி மசோதாவை பிரதிநிதிகள் சபை நிறைவேற்றியுள்ளது .

    மசோதாவுக்கு ஆதரவாக 222 உறுப்பினர்களும், எதிராக 209 உறுப்பினர்களும் வாக்களித்தனர். ஆறு ஜனநாயகக் கட்சியினரும் மசோதாவை ஆதரித்தனர்.

    இந்த மசோதா செனட்டில் நிறைவேற்றப்பட்டு, பிரதிநிதிகள் சபைக்கு சென்றடைந்துள்ளது. இதன் மூலம் தற்காலிகமாக வரும் ஜனவரி 30 ஆம் தேதி வரை அமெரிக்காவில் அரசு சேவைகளுக்கான நிதி விடுவிக்கப்படும்.

     இந்த நிதி மசோதாவில் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார்.  இதனைத்தொடர்ந்து அரசு அலுவலகங்கள் மீண்டும் செயல்படத் தொடங்க உள்ளது. 

    இருப்பினும், விமான சேவைகள் உட்பட அமெரிக்கா இயல்பு நிலைக்குத் திரும்புவதற்கு சிறிது நேரம் ஆகும்.  

     முன்னதாக பணிநிறுத்தத்தால் அமெரிக்க பொருளாதாரத்திற்கு 7 பில்லியன் டாலர்களுக்கும் மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அரசு அமைப்பான காங்கிரஸ் பட்ஜெட் அலுவலகம் மதிப்பிடப்பட்டது.

    1981 முதல் அமெரிக்க அரசாங்கத்தில் 15 முறை இதுபோன்ற பணிநிறுத்தம் ஏற்பட்டுள்ளது. டொனால்ட் டிரம்ப் அதிபராக இருந்த சமயம் 2018-19 ஆம் ஆண்டில் அதிகபட்சமாக 35 நாட்கள் பணிநிறுத்தம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. 

    • டிரம்ப் நிர்வாகம் அமெரிக்கர்களுக்கே வேலைகளுக்கு முன்னுரிமை அளிக்கிறது
    • திறமையான பணியாளர்கள் அமெரிக்காவில் இல்லை

    அமெரிக்காவில் வேலைக்குச் செல்லும் வெளிநாட்டினர் இனிமேல் H-1B விசா பெற ஆண்டுதோறும் $1,00,000 (ரூ. 88 லட்சம்) செலுத்த வேண்டும் என டிரம்ப் அரசு அண்மையில் உத்தரவிட்டது. மேலும் H-1B விசா தொடரான பல புதிய விதிகளும் அறிவிக்கப்பட்டன.

    இந்தக் கட்டண உயர்வு, அமெரிக்க நிறுவனங்கள் வெளிநாட்டு ஊழியர்களை நியமிப்பதற்குப் பதிலாக, அமெரிக்கப் பணியாளர்களை அதிக அளவில் வேலைக்கு அமர்த்த ஊக்குவிக்கும் என டிரம்ப் நிர்வாகம் நம்புகிறது.

    H-1B திட்டம் இந்த நிறுவனங்களுக்கு இந்தியா, சீனா போன்ற நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான உயர் திறன்கொண்ட ஊழியர்களைப் பணியமர்த்த உதவியது. ஒவ்வொரு ஆண்டும் அனுமதிக்கப்பட்ட H-1B விண்ணப்பங்களில் 70 சதவீதத்துக்கும் அதிகமானவை இந்தியர்களுக்கே கிடைத்துள்ளன.

    இந்நிலையில் டிரம்ப் அரசு கொண்டுவந்துள்ள கட்டண உயர்வு இந்தியர்களுக்கும் அவர்களை பணியமர்த்தும் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களுக்கும் பெரும் பாதிப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், H-1B விசா திட்டம் குறித்து தனது முந்தைய நிலைப்பாடுகளில் இருந்து மாறி, அதற்கு ஆதரவாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார்.

    ஃபாக்ஸ் நியூஸ் சேனலுக்கு அளித்த பேட்டியில் பேசிய டிரம்ப், "தனது நிர்வாகம் அமெரிக்கர்களுக்கே வேலைகளுக்கு முன்னுரிமை அளிக்கிறது. இருப்பினும் சிக்கலான, பல உயர் தொழில்நுட்பப் பணிகளுக்குத் தேவையான திறமையான பணியாளர்கள் அமெரிக்காவில் இல்லை, உலகம் முழுவதிலும் இருந்து திறமையானவர்களை அமெரிக்கா ஈர்ப்பது மிக அவசியம்" என்று தெரிவித்தார்.

    • நமது முழு பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரி அமைப்பையும் அழிக்க யாரும் விரும்பமாட்டார்கள்.
    • சர்வதேச கல்விக் கட்டணத்தை நம்பி உள்ள பல்கலைக்கழகங்களையும் பாதிக்கும்.

    அமெரிக்க அதிபர் டிரம்ப், குடியேற்றம் தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தார். இதில் அமெரிக்காவில் படிக்க விரும்பும் வெளிநாட்டு மாணவர்களுக்கு கடும் விசா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பல மாணவர்களின் விசாக்கள் ரத்து செய்யப்பட்டன.

    இந்தநிலையில் வெளிநாட்டு மாணவர்களுக்கு ஆதரவாக டிரம்ப் திடீரென்று கருத்து தெரிவித்து உள்ளார்.

    அவர் தனியார் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    அமெரிக்கப் பல்கலைக்கழகங்களுக்கு நிதி உதவி செய்வதில் வெளிநாட்டு மாணவர்களின் பங்கு முக்கியமானது. உலகம் முழுவதிலுமிருந்து வரும் மாணவர்களில் பாதி பேரை நீக்கிவிட்டு, நமது முழு பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரி அமைப்பையும் அழிக்க யாரும் விரும்பமாட்டார்கள்.

    நான் அதைச் செய்ய விரும்பவில்லை. சர்வதேச மாணவர்கள் இருப்பது நன்மை பயக்கும் என்று நான் நம்புகிறேன். நான் உலகத்துடன் ஒத்துப்போக விரும்புகிறேன்.

    பல அமெரிக்க பல்கலைக்கழகங்கள் தொடர்ந்து செயல்பட வெளிநாட்டு மாணவர்களை நம்பி உள்ளன. சீனா மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை கடுமையாகக் குறைவது அமெரிக்காவில் உள்ள பாதி கல்லூரிகளை வணிகத்திலிருந்து வெளியேற்றக்கூடும்.

    வெளிநாட்டு மாணவர்கள் அமெரிக்க பொரு ளாதாரத்திற்கு டிரில்லியன் கணக்கான டாலர்களை பங்களிக்கிறார்கள். உள்நாட்டு மாணவர்களின் கல்விக் கட்டணத்தை விட 2 மடங்கு அதிகமாக செலுத்துகிறார்கள். நான் அவர்களை விரும்புகிறேன் என்பதைவிட அதை ஒரு வணிகமாகவே பார்க்கிறேன்.

    வெளிநாட்டு மாணவர் சேர்க்கையைக் குறைப்பது சிறிய கல்லூரிகளையும், வரலாற்று ரீதியாக சர்வதேச கல்விக் கட்டணத்தை நம்பி உள்ள பல்கலைக்கழகங்களையும் பாதிக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • டபிள்யு.டி.ஏ. பைனல்ஸ் ஒற்றையர் இறுதிப்போட்டி கடந்த வாரம் நடந்தது.
    • இதில் நம்பர் 1 வீராங்கனை சபலென்காவை வீழ்த்தி கஜகஸ்தான் வீராங்கனை எலினா ரிபாகினா வென்றார்.

    நியூயார்க்:

    டென்னிஸ் அரங்கில் சாதித்தவர்களுக்கான தரவரிசை பட்டியலை ஏ.டி.பி. வெளியிட்டது.

    இதில் டபிள்யு.டி.ஏ. பைனல்ஸ் ஒற்றையர் பிரிவில் கஜகஸ்தானின் எலினா ரிபாகினா வென்றதால், 6வது இடத்தில் இருந்து ஒரு இடம் முன்னேறி 5வது இடம் பிடித்துள்ளார்.

    இந்தப் பட்டியலில் பெலாரசின் சபலென்கா முதலிடத்தில் நீடிக்கிறார். போலந்தின் ஸ்வியாடெக் 2வது இடமும், அமெரிக்காவின் கோகோ காப் 3வது இடமும், அமெரிக்காவின் அனிசிமோவா 4வது இடமும் பிடித்துள்ளனர்.

    • சமீபத்தில் நடந்த ஹெலனிக் சாம்பியன்ஷிப் தொடரில் ஜோகோவிச் கோப்பை வென்றார்.
    • இதன்மூலம் ஒரு இடம் முன்னேறி செர்பியாவின் ஜோகோவிச் 4வது இடத்துக்கு முன்னேறினார்.

    நியூயார்க்:

    டென்னிஸ் அரங்கில் சாதித்தவர்களுக்கான தரவரிசை பட்டியலை ஏ.டி.பி. வெளியிட்டது.

    இதில் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ் (11,050 புள்ளி) 2வது இடத்தில் இருந்து நம்பர்-1 இடத்த்துக்கு மீண்டும் முன்னேறினார்.

    இவர் தற்போது நடந்து ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரின் 3 லீக் போட்டியிலும் வெற்றி பெற்றால் ஆண்டு இறுதியில் வெளியாகும் ஏ.டி.பி. தரவரிசையில் முதலிடத்தை தக்கவைத்துக் கொள்ளலாம்.

    இந்தப் பட்டியலில் இத்தாலியின் ஜானிக் சின்னர் (10,000 புள்ளி) முதலிடத்தில் இருந்து 2வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

    ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ் (4,960 புள்ளி) 3வது இடத்தில் நீடிக்கிறார்.

    சமீபத்தில் நடந்த ஹெலனிக் சாம்பியன்ஷிப் தொடரில் கோப்பை வென்ற செர்பியாவின் ஜோகோவிச் (4,830 புள்ளி) 4வது இடத்துக்கு முன்னேறினார்.

    அமெரிக்காவின் பென் ஷெல்டன் (3,970 புள்ளி) 5வது இடம் பிடித்துள்ளார்.

    • பிரதமர் மோடியுடன் எங்களுக்கு ஒரு அற்புதமான உறவு இருக்கிறது.
    • இப்போது அவர்கள் ரஷிய எண்ணெயைப் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டனர்.

    இந்தியாவிற்கான புதிய அமெரிக்க தூதராக நியமனான செர்ஜியோ கோர் பதவியேற்பு விழா அதிபர் டிரம்ப் முன்னிலையில் வெள்ளை மாளிகையில் நடைபெற்றது.

    இதன்போது பேசிய டிரம்ப், அமெரிக்கா - இந்தியா இடையிலான உறவு முக்கியமானது. இந்தியா உலகின் மிகப் பழமையான நாகரிகங்களில் ஒன்று. மேலும், உலகின் மிகப்பெரிய நாடு. இந்தியா மிக வேகமாக வளரும் நடுத்தர வர்க்கத்தையும் கொண்டுள்ளது. பிரதமர் மோடியுடன் எங்களுக்கு ஒரு அற்புதமான உறவு இருக்கிறது.

    ரஷிய எண்ணெய் காரணமாக இந்தியா மீதான நமது வரிகள்மிக அதிகமாக உள்ளன. இப்போது அவர்கள் ரஷிய எண்ணெயைப் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டனர். அது மிகவும் கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளது. எனவே நாங்கள் வரிகளை குறைக்கப் போகிறோம். எதோ ஒரு கட்டத்தில் நாங்கள் அவற்றைக் குறைப்போம்" என்று கூறினார். மேலும் இந்தியா-அமெரிக்கா இடையே எல்லோருக்கும் பயனளிக்கக்கூடிய ஒரு வரி ஒப்பந்தத்தை எட்டுவதற்கு மிக அருகாமையில் வந்துள்ளதாக அவர் தெரிவித்தார். 

    முன்னதாக ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கி உக்ரைன் போருக்கு நிதியளிப்பதாக இந்திய பொருட்கள் மீது அபராதமாக அமெரிக்காவால் 50 சதவீதம் வரி விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

    • துப்பாக்கி சூட்டில் பெண் உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே குண்டு பாய்ந்து உயிரிழந்தனர்.
    • முன்விரோதம் காரணமாக இந்த சம்பவம் நடந்து இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    அமெரிக்காவில் சமீப காலமாக துப்பாக்கி கலாச்சாரம் அதிகரித்து உள்ளது. அடிக்கடி துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடைபெறுவது வாடிக்கையாகிவிட்டது.

    அமெரிக்காவின் டெக் சாஸ் நகரில் வடக்கு பகுதியில் உள்ள வணிக வளாத்தில் உள்ள ஒரு நிறுவனத்தில் வாலிபர் ஒருவர் திடீரென கையில் வைத்து இருந்த துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். இந்த துப்பாக்கி சூட்டில் பெண் உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே குண்டு பாய்ந்து உயிரிழந்தனர்.

    இதைப்பார்த்த மற்றவர்கள் அங்கிருந்து தப்பி ஓடினார்கள். பின்னர் துப்பாக்கி சூடு நடத்திய வாலிபரும் தனக்குதானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று அந்த பகுதியை தங்கள் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்தனர்.

    போலீசார் நடத்திய விசாரணையில் துப்பாக்கியால் சுட்டவர் பெயர் ஜோஸ் ஹெர்னாண்டஸ் காலோ (வயது 21) என அடையாளம் காணப்பட்டு உள்ளது. சுட்டுக்கொல்லப்பட்ட 3 பேரும் சக ஊழியர்கள் என்பதும் தெரியவந்தது.

    இந்த சம்பவத்துக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. முன்விரோதம் காரணமாக இந்த சம்பவம் நடந்து இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

    • இந்தியா உள்ளிட்ட அனைத்து நாடுகளுக்கும் அதிகளவில் இறக்குமதி வரி விதித்தார்.
    • வரி பணம் 37 டரில்லியன் டாலர் தேசிய கடனை குறைக்க பயன்படுத்தப்படுகிறது.

    அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவி ஏற்றபிறகு பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுத்தார். இந்தியா உள்ளிட்ட அனைத்து நாடுகளுக்கும் அதிகளவில் இறக்குமதி வரி விதித்தார்.

    அவரின் இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு கிளம்பினாலும் தனது முடிவில் அவர் பிடிவாதமாக இருந்து வருகிறார். இறக்குமதி வரிகள் தான் தனது வலிமையான பொருளாதார ஆயுதம் என்றும் இந்த கொள்கை அமெரிக்காவை வலிமையானதாகவும், செல்வந்தராகவும் மாற்றி உள்ளது என்றும் அவர் கூறி வருகிறார். மேலும், அவர் தனது வர்த்தக கொள்கைகளை எதர்ப்பவர்களை கடுமையாக விமர்சித்து வருகிறார்.

    இந்த நிலையில் டிரம்ப் தனது ட்ரூத் சமூக வலை தளபக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறி இருப்பதாவது:-

    இறக்குமதி வரிகள் மூலம் அமெரிக்கா டிரில்லியன் கணக்கான டாலர்களை வருவாய் ஈட்டி வருகிறது. இந்த பணம் 37 டரில்லியன் டாலர் தேசிய கடனை குறைக்க பயன்படுத்தப்படுகிறது. விரைவில் எனது நிர்வாகம் அதனை செலுத்த உள்ளது.

    இந்த வருவாய் மூலம் அதிக வருமானம் உள்ளவர்களை தவிர அமெரிக்கர்கள் ஒவ்வொருவருக்கும் குறைந்தபட்சம் தலா 2 ஆயிரம் டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.1 லட்சத்து 77 ஆயிரம்) ஈவுத்தொகை வழங்கப்படும்.

    தனது நிர்வாகம் அமெரிக்காவை மிகவும் பணக்கார நாடாகவும், மிகவும் மதிக்கத்தக்க நாடாகவும் மாற்றி இருக்கிறது. கிட்டத்தட்ட பணவீக்கம் எதுவும் இல்லை. பங்கு சந்தை விலையில் சாதனை படைத்து இருக்கிறது.

    எனது வரிக்கொள்கை உள்நாட்டு முதலீடு அதிகரிப்பதற்கு வழி வகுக்கிறது. கட்டணங்களால் மட்டுமே அமெரிக்காவில் தொழில்கள் குவிகின்றன. வரிகளை எதிர்ப்பவர்கள் முட்டாள்கள். அமெரிக்காவின் அனைத்து பகுதிகளிலும் தொழிற்சாலைகள் அதிகரித்து வருகின்றன.

    இவ்வாறு டிரம்ப் கூறினார்.

    ×