என் மலர்tooltip icon

    உலகம்

    • இன்று காலை பயங்கர நிலநடுக்கம் உணரப்பட்டது.
    • நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    தென் அமெரிக்க நாடான பெருவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. ரிக்டரில் இந்த நிலநடுக்கம் 7.2 ஆக பதிவாகி இருக்கிறது. நிலநடுக்கம் காரணமாக அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது. இதனால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.


    நிலநடுக்கத்தின் போது பதிவான சிசிடிவி காட்சி அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. வீடியோவில் தெருவில் நிறுத்தி வைக்கப்பட்ட கார் பூமியோடு சேர்ந்து குலுங்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. 


    இதே போன்று வீட்டினுள் இருந்த மின்விளக்குகள் நிலநடுக்கத்தால் குலுங்கின. இது தொடர்பான வீடியோ வெளியாகி உள்ளது.


    காராவெலியிலே ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக மலையில் இருந்த பாறைகள் சரிந்து பான்-அமெரிக்க நெடுஞ்சாலையில் விழுந்தன. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • நேரடி விமானங்களை இயக்குவதற்கு ரஷியா சில நிபந்தனைகளை விதித்துள்ளது.
    • இரு நாடுகள் இடையே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

    ஜகார்த்தா, ஜூன் 28-

    இந்தோனேசியாவின் பொருளாதாரத்தில் சுற்றுலா துறை முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே சுற்றுலா துறையை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்தவகையில் இந்தோனேசியாவின் சுற்றுலாத்துறை வருமானத்தில் ரஷியா முக்கிய பங்கு வகிக்கிறது.

    ஆனால் கொரோனா தொற்று காரணமாக இரு நாடுகள் இடையே இயக்கப்பட்ட நேரடி விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. தற்போது இயல்புநிலை திரும்பி உள்ளதால் அதனை மீண்டும் இயக்க இந்தோனேசியா முயற்சித்து வருகிறது.

    ஆனால் நேரடி விமானங்களை இயக்குவதற்கு ரஷியா சில நிபந்தனைகளை விதித்துள்ளது. இதுகுறித்து இரு நாடுகள் இடையே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அந்த நிபந்தனைகள் பூர்த்தி செய்த பிறகு விரைவில் இரு நாடுகள் இடையேயான நேரடி விமானம் மீண்டும் இயக்கப்படும் என இந்தோனேசிய சுற்றுலாத்துறை மந்திரி சந்தியாகா யூனோ கூறினார்.

    • மாலத்தீவில்இருந்து இந்திய படைகளை வெளியேற்றியது உட்பட பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார்
    • அவர்களது பதவிகள் பறிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்

    இந்தியப் பெருங்கடலில் அமைத்துள்ள தீவு நாடான மாலத்தீவில், மாலத்தீவு ஜனநாயக கட்சியைச் சேர்ந்த முகமது முய்சு கடந்த 2023 ஆம் ஆண்டு அதிபாராக பதவியேற்பட்டார். மாலத்தீவில் இருந்து இந்திய படைகளை வெளியேற்றியது உட்பட பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் முய்சு சீன ஆதரவாளராக பார்க்கப்படுகிறார்.

    இந்நிலையில் அதிபர் முகமது முய்சுவுக்கு எதிராக பிளாக் மேஜிக் மூலம் பில்லி சூனியம் வைக்க முயன்றதாக அவரது கட்சியைச் சேர்த்த 2 அமைச்சர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

     

    மாலத்தீவு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஷாம்னாஸ் சலீம் மற்றும் அதிபர் அலுவலகத்தில் அமைச்சராக பணியாற்றிவரும் அவரது கணவர் ஆதம் ரமீஸ் ஆகியோர் சேர்ந்து அதிபர் முகமது முய்சுவுக்கு பில்லி சூனியம் வைக்க முயன்றதால் அவர்களது பதவிகள் பறிக்கப்பட்டு உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளனர் என்று அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த விவகாரத்தில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

     

    முகமது முய்சு மாலத்தீவு தலைநகர் மாலேவில் மேயர் பதவியில் இருந்த காலக்கட்டத்தில் இருந்தே நகர சபை உறுப்பினர்களாக ஷாம்னாஸ் சலீம் மற்றும் அவரது கணவர் ஆதம் ரமீஸ் ஆகியோர் அவருடன் பணியாற்றிய நிலையில் தற்போது அவர்கள் இவ்வாறு செய்ததற்கான காரணம் தெரியாவரவில்லை. இதற்கிடையில், கைது செய்யப்பட்ட நால்வரும் 7 நாட்களுக்கு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.  அதிபர் முய்சு சமீபத்தில் இந்திய பிராமராக மோடி பதிவேற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

    • அமெரிக்காவில் போதைப்பொருள் புழக்கம் பைடன் ஆட்சியில் அதிகரித்துள்ளது.
    • அமெரிக்க வரலாற்றிலேயே மோசமான அதிபராக இருந்தவர் டிரம்ப்.

    அமெரிக்காவில் வரும் நவம்பர் 5-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில், ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டிரம்ப் போட்டியிடுகிறார். இந்த தேர்தலின் முக்கிய அம்சமாக, வேட்பாளர்கள் பல்வேறு கட்டங்களில் நேருக்கு நேர் விவாதிப்பது வழக்கம்.

    அந்த வகையில் முதலாவது நேரடி விவாத நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. மொத்தம் 90 நிமிடம் விவாதம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. விவாதத்தில் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தக்கூடாது உள்ளிட்ட கடுமையான விதிமுறைகள் உள்ளன. பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை.

    ஜார்ஜியா தலைநகர் அட்லாண்டாவில் நடைபெற்ற நிகழ்வில் ஜோ பைடனும், டொனால்ட் டிரம்பும் நேருக்கு நேர் சந்தித்து விவாதித்தனர்.

    அமெரிக்க அதிபர் தேர்தலில் பொருளாதார பிரச்சனையை மையமாக வைத்து விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தின் போது தான் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை பட்டியலிட்டு ஜோ பைடனும், டொனால்ட் டிரம்பும் வாக்காளர்களிடம் ஆதரவு கேட்டனர். தங்களின் செயல்பாடுகள் எப்படி இருக்கும்? என்பது குறித்தும் விளக்கம் அளித்தனர்.

    அப்போது, டிரம்ப் நீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்டவர் என பைடன் கூறியதற்கு, ஜெயிலுக்கு போக வேண்டியது யார் என்பதை கமிட்டி முடிவு செய்யும். பைடனின் மகனும் நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்ட குற்றவாளி தான். பைடன் கூறும் குற்றச்சாட்டுகள் பொய்யானவை என நிரூபிக்கப்பட்டுள்ளன. நாளுக்கு நாள் எனக்கு மக்கள் ஆதரவு அதிகரித்து வருகிறது. வேலையை ஒழுங்காக செய்யாதவர்களை பணிநீக்கம் செய்துவிடுவேன்.

    குற்றவாளிகளை அனுமதிப்பவர்களை வேலையை விட்டு நீக்கி இருக்கிறீர்களா? எல்லையை திறந்து அன்னியர்களை அனுமதிக்க நினைக்கிறார் பைடன். அவர் மீண்டும் அதிபரானால் அமெரிக்காவை யாராலும் காப்பாற்ற முடியாது. அமெரிக்க வரலாற்றிலேயே மோசமான அதிபர் டைபன் தான். மிகப்பெரிய நிதி பற்றாக்குறை பைடன் ஆட்சியல் தான் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவை சீனா அழித்து கொண்டிருப்பதை அனுமதிக்கிறார் பைடன். எல்லையில் சட்ட விரோத குடியேற்றங்களால் போதைப் பொருள் புழக்கம் அதிகரிப்பு. அமெரிக்காவில் போதைப்பொருள் புழக்கம் பைடன் ஆட்சியில் அதிகரித்துள்ளது. நான் ஆட்சிக்கு வந்தவுடன் ரஷியாவில் உள்ள பிணைக்கைதிகள் விடுவிக்கப்படுவார்கள். மனதளவிலும், உடல் அளவிலும் நான் நல்ல நிலையில் தான் இருக்கிறேன் என்று டிரம்ப் கூறினார்.

    இதனிடையே, மகனின் மறைவுக்கு பிறகு அரசியலுக்கு வரவேண்டாம் என நினைத்தேன். அமெரிக்க வரலாற்றிலேயே மோசமான அதிபராக இருந்தவர் டிரம்ப். போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்துவதில் முழு கவனம் செலுத்தி வருகிறோம். மிக மிக மோசமான பொருளாதாரத்தை என்னிடம் விட்டுச்சென்றார் டிரம்ப். அமெரிக்காவில் தற்போதைய பொருளாதாரம் மாறி உள்ளது. எத்தனை பிரச்சனை இருந்தாலும் உலகின் முன்னணி நாடாகாவை தற்போதும் திகழ்ந்து வருகிறது என்று பைடன் கூறினார்.

    • குழந்தைகளுக்கு எதிராக பாகிஸ்தானில் தொடர்ந்து கடுமையான மீறல்கள் உள்ளன.
    • அதன் கவனத்தை திசை திருப்புவதற்கான வழக்கமான மற்றொரு முயற்சி.

    ஐ.நா.வின் பாதுகாப்பு கவுன்சிலில் குழந்தைகள் மற்றும் ஆயுதங்கள் விதிமீறல் தொடர்பான விவாதம் நடைபெற்றது. அப்போது பாகிஸ்தான் தூதர் காஷ்மீர் குறித்து பேசினார். அதற்கு இந்தியாவுக்கான ஐ.நா.வின் துணை நிரந்தர பிரதிநிதி ஆர். ரவீந்திரா கடும் கண்டனம் தெரவித்ததுடன், தக்க பதிலடி கொடுத்தார்.

    குழந்தைகளுக்கு எதிராக பாகிஸ்தானில் தொடர்ந்து கடுமையான மீறல்கள் உள்ள நிலையில், அதன் கவனத்தை திசை திருப்புவதற்கான வழக்கமான மற்றொரு முயற்சி. எந்த தடையுமின்றி பாகிஸ்தானில் தொடர்ந்து மீறல்கள் நடைபெற்று வருகிறது.

    எங்கள் நாட்டிற்கு எதிராக ஒரு பிரதிநிதி கூறிய குற்றச்சாட்டுக்கு காலத்தின் நலன் கருதி இது முற்றிலும் அரசியல் உள்நோக்கம் கொண்டது. ஆதாரமற்றது என குறுகிய பதில் அளிக்கிறேன். இந்த அடிப்படையற்ற கருத்துகளை நான் திட்டவட்டமாக நிராகரித்து அவர்களை கண்டிக்கிறேன் என்றார்.

    மேலும், ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களைப் பொறுத்தவரை இந்த குறிப்பிட்ட பிரதிநிதி அல்லது அவரது நாடு எதை நம்பினாலும் அல்லது விரும்பினாலும், அவை இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதியாக இருந்தன, எப்போதும் இருக்கும் என்றார்.

    • இம்ரான் கானை புஷ்ரா பிபி சட்டவிரோதமாக திருமணம் செய்ததாக முன்னாள் கணவர் குற்றச்சாட்டு.
    • ஏழு வருட தண்டனையும், 5 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

    முஸ்லிம் பெண் ஒருவர் விவாகரத்து பெற்ற பிறகு அல்லது அவருடைய கணவர் இறந்த பிறகு 2-வது திருமணம் செய்து கொள்ள ஒரு குறிப்பிட்ட காலம் காத்திருக்க வேண்டும். இந்த மீறி சட்டவிரோதமாக இம்ரான் கான், புஷ்ரா பிபியை திருமணம் செய்து கொண்டதாக புகார் எழும்பியது.

    இது தொடர்பான மாவட்ட செசன்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இட்டாட் வழக்கு என மிகவும் பிரபலமாக பார்க்கப்பட்டது. இந்த வழக்கில் பிப்ரவரி 3-ந்தேதி இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பிபி ஆகியோருக்கு நீதிமன்றம் ஏழு வருடம் தண்டனை விதித்தது. அத்துடன் தலா 5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது.

    இந்த தண்டனையை எதிர்த்து இருவரும் வழக்கு தொடர்ந்தனர். நேற்று முன்தினம் வழக்கு தொடர்பான விசாரணை முடிவடைந்தது உத்தரவை கூடுதல் மாவட்டம் மற்றும் செசன்ஸ் நீதிமன்ற நீதிபதி அஃப்சல் மஜோகா, இருவரும் கோரிக்கையையும் நிராகரித்தார்.

    எப்படியும் இந்த வழக்கில் தீர்வு கிடைக்கும் என எதிர்பார்த்த இருவருக்கும் ஏமாற்றமே மிஞ்சியது. இம்ரான் கான் பிரதமர் பதவியில் இருந்து விலகிய பின் அவர் மீது பல வழக்குகள் தொடரப்பட்டுள்ளது.புஷ்ரா பிபி மீதும் சில வழக்குகள் பதியப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    புஷ்ரா பிபியின் முன்னாள் கணவர் கவர் மனேகா இருவருக்கும் எதிராக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வழக்கு தொடர்ந்தார். இட்டாட் கட்டயாம் காத்திருக்கும் காலத்தை கடைபிடிக்காமல் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அவர்கள் திருமணம் செல்லாது என அறிவிக்க வேண்டும் கூறியிருந்தார்.

    இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் 10 நாட்களுக்குள் இம்ரான் வழக்கில் தீர்ப்பு வழங்க வேண்டும் எனக் கூறியிருந்தது. அதன்படி நீதிபதி அஃப்சல் மஜோகா முன் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

    முதன்முறையாக வழக்கு விசாரணையின்போது ஷாருக் அர்ஜுமந்த் என்ற நீதிபதி தண்டனை வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ரெயிலில் தண்ணீர் தெளித்து பயணிகளை இளைஞர்கள் தொந்தரவு செய்தனர்.
    • இதையடுத்து ரெயிலை நிறுத்திய அவர்களில் சிலர் அந்த இளைஞர்களை சரமாரி தாக்கினர்.

    இஸ்லாமாபாத்:

    டிக்டாக் செயலி மூலம் வீடியோக்கள் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிடும் பொழுதுபோக்கு அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில் இதனால் சிக்கல்களிலும் சிலர் சிக்கி கொள்கிறார்கள். இதுபோன்ற ஒரு சம்பவம் பாகிஸ்தானில் நடந்துள்ளது.

    பாகிஸ்தானில் ரெயில்வே தண்டவாளம் அருகே நீர்நிலையில் இளைஞர்கள் சிலர் குளித்துக் கொண்டும், வாகனத்தைக் கழுவி கொண்டும் இருந்தனர்.

    அப்போது அந்தப் பகுதியில் ரெயில் ஒன்று வந்து கொண்டிருந்தது. இதை கவனித்த இளைஞர்கள் பைக்கின் ஆக்சிலேட்டரை திருகி ரெயிலில் செல்பவர்கள் மீது தண்ணீர் தெளித்து விளையாடினர். இதனை அவர்கள் வீடியோவாக பதிவுசெய்தனர்.

    அப்போது திடீரென ரெயில் நின்றது. அதிர்ச்சி அடைந்த இளைஞர்கள் ரெயிலை பார்த்துக்கொண்டு இருந்தார்கள்.

    ரெயிலில் இருந்து கீழே இறங்கிய பயணிகளில் சிலர் இளைஞர்களை சரமாரி தாக்கினர். மேலும், தண்ணீர் தெளித்துக் கொண்டிருந்த பைக்கையும் ரெயிலில் ஏற்றிச் சென்றனர்.

    இதனால் ஆத்திரம் அடைந்த இளைஞர்கள் கற்களைக் கொண்டு ரெயில் பெட்டிகள் மீது வீசினர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • 9 பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து விலகி தடம் புரண்டது.
    • விபத்தில் உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை என தகவல்.

    ரஷியாவின் வடகிழக்கு பகுதியான கோமியில் உள்ள வோர்குடா நகரில் இருந்து கருங்கடல் துறைமுக பகுதியான நோவோரோசிஸ்க் நகருக்கு பயணிகள் ரெயில் சென்று கொண்டிருந்தது.

    அதில் 500-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். இன்டா நகர் அருகே சென்றபோது ரெயில் தடம் புரண்டது.

    9 பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து விலகி தடம் புரண்டது. இந்த விபத்தில் 70 பேர் காயம் அடைந்தனர். விபத்தில் உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

    கனமழை காரணமாக விபத்து ஏற்பட்டதாக ரஷிய ரெயில்வே துறை தெரிவித்துள்ளது. விபத்து நடந்த பகுதிக்கு இரண்டு மீட்பு ரெயில்களுடன் மீட்புப் படையினர் சென்றுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    அவசர சேவை மற்றும் மருத்துவ குழுக்கள் அந்த இடத்திற்கு அனுப்பப்பட்டு மீட்பு பணியில் ஈடுபட்டனர். கனமழையே விபத்துக்கு முக்கிய காரணமாக இருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

    500-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற ரெயில் ஆர்க்டிக் வட்டத்திற்கு அருகிலுள்ள சுரங்க நகரமான வோர்குடாவிலிருந்து நோவோரோசிஸ்க் கருங்கடல் துறைமுகத்திற்கு சென்று கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • பொலிவியன் ராணுவத்தின் சில பிரிவுகளால் ஒழுங்கற்ற அணி திரட்டல்களை நாங்கள் கண்டிக்கிறோம்.
    • சிறிது நேரத்தில் ராணுவ தளபதி ஜுவான் ஜோஸ் ஜூனிகாவை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து ஆட்சி கவிழ்ப்பு சதி முறியடிக்கப்பட்டது.

    சுக்ரே:

    தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் அதிபராக லூயிஸ் ஆர்ஸ் உள்ளார். இந்த நிலையில் அங்கு ராணுவ தளபதி ஜுவான் ஜோஸ் ஜூனிகா திடீரென்று ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியில் ஈடுபட்டார். அவரது உத்தரவின்பேரில் ராணுவத்தின் சில பிரிவினர் ராணுவ புரட்சிக்கு முயன்றனர்.

    அதிபர் மாளிகை, பாராளுமன்றம் அமைந்துள்ள பிளாசா முரில்லோ வரலாற்று சதுக்கத்தில் ராணுவ வீரர்கள், டாங்கிகள் குவிக்கப்பட்டன. இதில் ஒரு டாங்கி மூலம் அதிபர் மாளிகையின் கதவை உடைக்க முயன்றனர். அதேபோல் அரசு கட்டிடங்களும் முற்றுகையிடப்பட்டன.இதனால் பெரும் பதற்றம் நிலவியது.

    இதுதொடர்பாக ராணுவ தளபதி ஜுவான் ஜோஸ் ஜூனிகா கூறும்போது, ஜனநாயகத்தை ஆயுதப் படைகள் மறுசீரமைக்க விரும்புகின்றன. அதை உண்மையான ஜனநாயகமாக மாற்ற விரும்புகின்றன. நாங்கள் எங்கள் தாயகத்தை மீட்டெடுக்கப் போகிறோம். அதிபர் லூயிஸ் ஆர்சை மதிக்கிறேன்.

    அதேவேளையில் அரசாங்கத்தில் மாற்றம் ஏற்படும். சிறையில் உள்ள முன்னாள் தலைவர் ஜீனைன் அனெஸ் உட்பட அரசியல் கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என்றார். சுமார் 5 மணி நேரத்துக்கு பிறகு ராணுவ வீரர்கள் பின்வாங்கினர். ராணுவ டாங்கிகளும் அங்கிருந்து புறப்பட்டு சென்றன. அதன்பின் சிறிது நேரத்தில் ராணுவ தளபதி ஜுவான் ஜோஸ் ஜூனிகாவை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து ஆட்சி கவிழ்ப்பு சதி முறியடிக்கப்பட்டது.

    இதுகுறித்து அதிபர் லூயிஸ் ஆர்ஸ் கூறும்போது, பொலிவியன் ராணுவத்தின் சில பிரிவுகளால் ஒழுங்கற்ற அணிதிரட்டல்களை நாங்கள் கண்டிக்கிறோம். ஜனநாயகம் மதிக்கப்பட வேண்டும். மீண்டும் ஒரு முறை, பொலிவியர்களின் உயிரைப் பறிக்கும் சதி முயற்சிகளை நாம் அனுமதிக்க முடியாது.

    ஜனநாயகத்தைப் பாதுகாக்க ஒரு தேசிய அணி திரட்டலுக்கு மக்களுக்கு நாங்கள் அழைப்பு விடுக்கிறோம் என்றார். ராணுவ தளபதி ஜூனிகா மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்தவர்களுக்கு எதிராக கிரிமினல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும் என்று அரசு தரப்பில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது.

    பொலிவியாவில் ஆட்சி கவிழ்ப்பு முயற்சிக்கு அமெரிக்கா, பிரேசில்,சிலி, ஈக்வடார், பெரு, மெக்சிகோ, கொலம்பியா,வெனிசுலா ஆகிய நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

    • கலிபோர்னியா மாகாணத்தில் அதிகபட்சமாக தெலுங்கு பேசும் மக்கள் உள்ளனர்.
    • அமெரிக்காவில் அதிகம் பேசப்படும் மொழிகளில் தெலுங்கு 11-வது இடத்தில் உள்ளது.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் இந்திய மாணவர்கள் பலர் படித்து வருகிறார்கள். ஏராளமானோர் தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் பணியாற்றி வருகிறார்கள்.

    இந்த நிலையில் அமெரிக்காவில் தெலுங்கு மொழி பேசும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. 2016- ம் ஆண்டு அமெரிக்கா முழுவதும் தெலுங்கு பேசும் மக்கள் தொகை 3.2 லட்சமாக இருந்தது.

    தற்போது 2024-ம் ஆண்டில் தெலுங்கு பேசும் மக்கள் தொகை 12.3 லட்சமாக உள்ளது. கடந்த 8 ஆண்டுகளில் நான்கு மடங்கு உயர்ந்துள்ளது. கலிபோர்னியா மாகாணத்தில் அதிகபட்சமாக தெலுங்கு பேசும் மக்கள் உள்ளனர். அங்கு 2 லட்சம் பேர் வசிக்கிறார்கள்.

    டெக்சாசில் 1.5 லட்சம் பேர், நியூ ஜெர்சியில் 1.1 லட்சம் பேர், இல்லினாய்சில் 83 ஆயிரம் பேர், வர்ஜீனியாவில் 78 ஆயிரம் பேர், ஜார்ஜியாவில் 52 ஆயிரம் பேர் உள்ளனர்.

    அமெரிக்காவில் அதிகம் பேசப்படும் மொழிகளில் தெலுங்கு 11-வது இடத்தில் உள்ளது.

    இதுகுறித்து வட அமெரிக்காவின் தெலுங்கு சங்கத்தின் முன்னாள் செயலாளர் அசோக் கொல்லா கூறும்போது, ஒவ்வொரு ஆண்டும் 60 ஆயிரம் முதல் 70 ஆயிரம் மாணவர்கள் அமெரிக்காவிற்கு வருகிறார்கள். அவர்களுடன் 10 ஆயிரம் எச்1பி விசா வைத்திருப்பவர்களும் வருகிறார்கள்.

    அமெரிக்காவில் தெலுங்கு பேசுபவர்களில் பழைய தலைமுறையினர் பெரும்பாலும் தொழில்முனைவோராக உள்ளனர். அதே–சமயம் 80 சதவீத இளைஞர்கள் தகவல் தொழில்நுட்பம் மற்றும் நிதித்துறையில் உள்ளனர் என்றார். இந்த தகவல் அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்பு பணியகம் வெளியிட்ட தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கடந்த 5-ந்தேதி சுனிதா வில்லியம்ஸ் மீண்டும் விண்வெளி பயணம் மேற்கொண்டார்.
    • சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் விண்வெளிக்கு பயணித்தனர்.

    நாசா:

    இந்திய வம்சாவளியை சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ். அமெரிக்க கடற்படை அகாடமியில் படித்த இவர், 1998-ம் ஆண்டு நாசா விண்வெளி பயணத்திற்கு தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து 2006 மற்றம் 2012-ம் ஆண்டுகளில் சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் மேற்கொண்டிருக்கிறார்.

    இதன்மூலம் அதிகநேரம், அதாவது 50 மணி நேரம் 40 நிமிடங்கள் விண்வெளியில் நடந்த இரண்டாவது பெண் என்ற பெருமையை பெற்றார். இந்நிலையில் கடந்த 5-ந்தேதி சுனிதா வில்லியம்ஸ் மீண்டும் விண்வெளி பயணம் மேற்கொண்டார்.

    அவருடன் புட்ச் வில்மோர் என்பவருடன் விண்வெளி பயணம் மேற்கொண்டிருந்தார். இருவரும் அமெரிக்காவின் கேப் கனாவெரல் ஏவுதளத்தில் இருந்து புறப்பட்டு சென்றனர். அவர்கள் கடந்த 7-ந்தேதி சர்வதேச விண்வெளி மையத்தை அடைந்தனர். இதன்மூலம் மூன்றாவது முறையாக விண்வெளி நிலையத்தை சுனிதா வில்லியம்ஸ் அடைந்தார்.

    சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் விண்வெளி பயணத்தை முடித்துக்கொண்டு கடந்த 13-ந்தேதி பூமிக்கு திரும்பும் வகையில் பயண திட்டம் அமைக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர்கள் திரும்ப இருந்த பயணம் திடீரென 26-ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. பின்பு அந்த தேதியிலும் அவர்கள் புறப்படவில்லை. அவர்கள் இருந்த விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சினை காரணமாக அவர்கள் திரும்பி வருவதில் பிரச்சினை ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. விண்வெளி துறையில் தனியாரின் பங்களிப்பு அதிகரித்து வருகிறது. அந்த வகையில் விமான தயாரிப்பு நிறுவனமான போயிங், ஸ்பேஸ் ஷிப்பை தயாரித்திருக்கிறது.

    'ஸ்டார் லைனர்' என்றுபெயரிடப்பட்ட இந்த ஸ்பேஸ் ஷிப் சர்வதேச விண்வெளி மையத்திற்கு விண்வெளி வீரர்களை அழைத்துச் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது. இதற்கு முன்பு வரை இந்த பணிகளை நாசா தான் மேற்கொண்டு வந்தது. ஆனால் விண்வெளி துறையில் தனியாரை ஊக்குவிக்கும் விதமாக போயிங் நிறுவனத்துக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

    போயிங் நிறுவனம் ஏற்கனவே எலான் மஸ்க்கின்ஸ் ஸ்பேஸ் ஷிப்களை வடிவமைத்திருக்கிறது. எனவே போயிங் தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி 'ஸ்டார் லைனர்' என்கிற ஸ்பேஸ ஷிப்பை வடிவமைத்தது. அதிலேயே சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் விண்வெளிக்கு பயணித்தனர்.

    இந்த பயணத்தை தொடங்குவதற்கு முன்னரே பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் விண்வெளிக்கு சென்ற நிலையில் விண்கலத்தில் பிரச்சினை ஏற்பட்டிருக்கிறது. போயிங் 'ஸ்டார் லைனர்' விண்கலத்தில் ஹீலியம் வாயு கசிவு ஏற்பட்டிருக்கிறது. 5 முறை கசிவு ஏற்பட்டதன் காரணமாக விண்கலத்தை இயக்க முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

    இதனால் சுனிதா வில்லியம்ஸ் மற்றும புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் திரும்பி வருவதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. விண்கலத்தில் உள்ள 28 த்ரஸ்டர்களில் பழுதடைந்த 14 த்ரஸ்டர்களை மீட்டெக்க வேண்டும். 'ஸ்டார் லைனர்' விண்கலத்தில் 45 நாட்கள் வரை தங்கியிருக்க முடியும், அதே நேரத்தில் பல்வேறு காப்பு பிரதி அமைப்புகளால் 75 நாட்கள் வரை இணைக்கப்பட்டிருக்கும்.

    இந்த விவகாரத்தில் சிக்கலை சரிசெய்து சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து பூமிக்கு விண்கலம் திருப்பி அனுப்பப்படும் என்று நாசா நம்புகிறது. 'ஸ்டார் லைனர்' விண்கலம் மூலம் பத்திரமா திரும்ப முடியாவிட்டால் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகிய இருவரையும் காப்பாற்ற 'எலான் மஸ்க்' கேட்கப்படலாம் என்று தெரிகிறது. சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் பூமிக்கு திரும்பும் திட்டம் நேற்று இரவு இருக்கலாம் என்று கருதப்பட்ட நிலையில், அதுவும் கைவிடப்பட்டது. அது ஜூலை 2-ந்தேதிக்கு மாற்றப்படலாம் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

    • கடந்த ஆண்டு இரண்டு மாதங்களாக திடீரென மாயமானார்.
    • மக்கள் பார்வையில் தென்படாத நிலையில், பாதுகாப்பு மந்திரி பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

    சீனாவின் முன்னாள் பாதுகாப்பு மந்திரி லி ஷாங்க்ஃபு. இவர் கடந்த ஆண்டு திடீரென மாயமானார். இரண்டு மாதங்களுக்கு மேலாக மக்கள் பார்வையில் தென்படாத நிலயைில், பாதுகாப்பு மந்திரி பதவியில் இருந்து கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் லி ஷாங்க்ஃபு நீக்கப்பட்டார்.

    இந்த நிலையில் கம்யூனிஸ்ட் கட்சி அவரை கட்சியில் இருந்து நீக்கியுள்ளது. அவர் மீது ஊழல் மற்றும் லஞ்சம் குற்றச்சாட்டு உள்ள நிலையில், அது தொடர்பாக விசாரணை நடைபெற்ற வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ×