என் மலர்
நீங்கள் தேடியது "Bushra Bibi"
- மனைவியை பரிசோதித்த டாக்டர் மீது எனக்கு நம்பிக்கை இல்லை.
- புஷ்ரா பீபியின் மருத்துவப் பரிசோதனை குறித்த விரிவான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு இம்ரான்கானுக்கு கோர்ட்டு உத்தரவிட்டது.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் ஊழல் வழக்குகளில் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் உள்ளார்.
அதே போல் அவரது மனைவியும் புஷ்ரா பீபி, தோஷகானா ஊழல் வழக்கு மற்றும் முஸ்லிம் திருமண சட்டத்தை மீறியது ஆகிய இரண்டு வழக்குகளில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இம்ரான்கானின் வீடு கிளை சிறையாக மாற்றப்பட்டு, அதில் புஷ்ரா பீபி அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் சிறையில் தனது மனைவிக்கு விஷம் கொடுத்து கொல்ல முயற்சி நடந்ததாக இம்ரான்கான் குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளார்.
தோஷகானா ஊழல் வழக்கு தொடர்பான விசாரணையில் இம்ரான்கான் கூறும்போது, அடியாலா கிளை சிறையில் தனது மனைவி புஷ்ரா பீபிக்கு விஷம் கொடுத்து கொல்ல முயற்சிக்கப்பட்டுள்ளது. இதற்கான அடையாளங்கள் அவரது தோலில் இருந்தது. நாக்கில் விஷத்தின் பக்க விளைவு ஏற்பட்டுள்ளது.
இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது எனக்கு தெரியும். எனது மனைவிக்கு ஏதும் விபரீதம் நேர்ந்தால் அதற்கு பாகிஸ்தான் ராணுவ தளபதியே பொறுப்பேற்க வேண்டும். மனைவியை பரிசோதித்த டாக்டர் மீது எனக்கு நம்பிக்கை இல்லை.
புஷ்ராவுக்கு விஷம் கொடுத்து கொல்ல முயன்றது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றார்.
இதையடுத்து புஷ்ரா பீபியின் மருத்துவப் பரிசோதனை குறித்த விரிவான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு இம்ரான்கானுக்கு கோர்ட்டு உத்தரவிட்டது.
இதற்கிடையே புஷ்ரா பீபி கூறும்போது, கழிவறையை சுத்தப்படுத்த பயன்படுத்தப்படும் திரவத்தை எனக்கு உணவில் கலந்து கொடுத்துள்ளனர். அதன்பின் உடல்நிலை மோசமடைந்தது. என் கண்கள் வீங்குகின்றன. மார்பு, வயிற்றில் வலியை உணர்கிறேன், உணவு , தண்ணீரும் கசப்பாக இருக்கிறது. முன்பு தேனில் சில சந்தேகத்திற்கிடமான பொருட்கள் கலந்திருந்தன. தற்போது கழிப்பறையை சுத்தப்படுத்தும் கிளீனர் எனது உணவில் கலக்கப்பட்டுள்ளது என்றார்.
- இம்ரான் கானை புஷ்ரா பிபி சட்டவிரோதமாக திருமணம் செய்ததாக முன்னாள் கணவர் குற்றச்சாட்டு.
- ஏழு வருட தண்டனையும், 5 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
முஸ்லிம் பெண் ஒருவர் விவாகரத்து பெற்ற பிறகு அல்லது அவருடைய கணவர் இறந்த பிறகு 2-வது திருமணம் செய்து கொள்ள ஒரு குறிப்பிட்ட காலம் காத்திருக்க வேண்டும். இந்த மீறி சட்டவிரோதமாக இம்ரான் கான், புஷ்ரா பிபியை திருமணம் செய்து கொண்டதாக புகார் எழும்பியது.
இது தொடர்பான மாவட்ட செசன்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இட்டாட் வழக்கு என மிகவும் பிரபலமாக பார்க்கப்பட்டது. இந்த வழக்கில் பிப்ரவரி 3-ந்தேதி இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பிபி ஆகியோருக்கு நீதிமன்றம் ஏழு வருடம் தண்டனை விதித்தது. அத்துடன் தலா 5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது.
இந்த தண்டனையை எதிர்த்து இருவரும் வழக்கு தொடர்ந்தனர். நேற்று முன்தினம் வழக்கு தொடர்பான விசாரணை முடிவடைந்தது உத்தரவை கூடுதல் மாவட்டம் மற்றும் செசன்ஸ் நீதிமன்ற நீதிபதி அஃப்சல் மஜோகா, இருவரும் கோரிக்கையையும் நிராகரித்தார்.
எப்படியும் இந்த வழக்கில் தீர்வு கிடைக்கும் என எதிர்பார்த்த இருவருக்கும் ஏமாற்றமே மிஞ்சியது. இம்ரான் கான் பிரதமர் பதவியில் இருந்து விலகிய பின் அவர் மீது பல வழக்குகள் தொடரப்பட்டுள்ளது.புஷ்ரா பிபி மீதும் சில வழக்குகள் பதியப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
புஷ்ரா பிபியின் முன்னாள் கணவர் கவர் மனேகா இருவருக்கும் எதிராக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வழக்கு தொடர்ந்தார். இட்டாட் கட்டயாம் காத்திருக்கும் காலத்தை கடைபிடிக்காமல் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அவர்கள் திருமணம் செல்லாது என அறிவிக்க வேண்டும் கூறியிருந்தார்.
இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் 10 நாட்களுக்குள் இம்ரான் வழக்கில் தீர்ப்பு வழங்க வேண்டும் எனக் கூறியிருந்தது. அதன்படி நீதிபதி அஃப்சல் மஜோகா முன் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
முதன்முறையாக வழக்கு விசாரணையின்போது ஷாருக் அர்ஜுமந்த் என்ற நீதிபதி தண்டனை வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.






