search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Environment Minister"

    • டெல்லியில் 1ம் முதல் 9ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு ஏற்கனவே விடுமுறை அறிவிக்கப்பட்டது.
    • 10ம், 12ம் வகுப்புகளை தவிர மற்ற வகுப்புகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    தலைநகர் டெல்லியில் கடந்த சில நாட்களாக காற்று மாசு அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு நாளும் மாலை 4 மணிக்குப் பதிவுசெய்யப்பட்ட 24 மணி நேர சராசரி காற்றுத் தரக் குறியீடு சனிக்கிழமை 415ஆக இருந்து ஞாயிற்றுக்கிழமை 454 ஆக அதிகரித்து மோசமடைந்தது.

    இதன் எதிரொலியால், டெல்லியில் 1ம் முதல் 9ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு ஏற்கனவே விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், நவம்பர் 11ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 10ம், 12ம் வகுப்புகளை தவிர மற்ற வகுப்புகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    காற்று மாசுவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக வரும் நவம்பர் 13 முதல் 20 வரை டெல்லியில் வாகனங்களில் ஒற்றை- இரட்டை இலக்க திட்டம் அமல்படுத்தப்படும் என்று டெல்லி சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் அறிவித்துள்ளார்.

    மேலும், நவம்பர் 20ம் தேதிக்குப் பிறகு இந்தத் திட்டத்தை நீட்டிக்க முடிவு செய்யப்படும் என்றார்.

    ஒற்றைப்படை அல்லது இரட்டை எண் தகடுகளின் அடிப்படையில் மாற்று நாட்களில் கார்களை இயக்கப்படுவதே ஒற்றை- இரட்டை இலக்க திட்டம் ஆகும்.

    ஸ்டெர்லைட் ஆலை பற்றி ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு இருப்பதாக மத்திய சுற்றுச்சூழல் துறை மந்திரி ஹர்ஷ வர்தன் கூறினார். #SterliteProtest #Thoothukudi
    புதுடெல்லி:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டம் மற்றும் துப்பாக்கி சூடு சம்பவம் பற்றி மத்திய மந்திரி ஹர்ஷ வர்தனிடம் நிருபர்கள் கருத்து கேட்டனர்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டம் பற்றிய தகவல்களை பத்திரிகைகள் மூலம் அறிந்தேன். 13 பேர் பலியாகி இருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது. ஸ்டெர்லைட் ஆலையின் செயல்பாடு குறித்து விரிவாக ஆய்வு செய்து, முழுமையான தகவல்களை திரட்டி அறிக்கை தாக்கல் செய்யுமாறு மத்திய சுற்றுச்சூழல் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு இருக்கிறேன். இந்த ஆலை இயங்குவதற்கான அனுமதி முந்தைய மத்திய அரசால் வழங்கப்பட்டு உள்ளது.

    இவ்வாறு ஹர்ஷ வர்தன் கூறினார்.

    அப்போது அவருடன் இருந்த அதிகாரிகள் கூறுகையில், தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் அறிக்கை கேட்டு இருப்பதாகவும், அதன்படி மாசு கட்டுப்பாட்டு வாரியம் அளிக்கும் தகவல்கள் முக்கியமானதாக இருக்கும் என்றும் தெரிவித்தனர்.  #SterliteProtest #Thoothukudi  #EnvironmentMinister #HarshVardhan
    ×