search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்டெர்லைட் ஆலை பற்றி ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவு - மத்திய சுற்றுச்சூழல் மந்திரி தகவல்
    X

    ஸ்டெர்லைட் ஆலை பற்றி ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவு - மத்திய சுற்றுச்சூழல் மந்திரி தகவல்

    ஸ்டெர்லைட் ஆலை பற்றி ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு இருப்பதாக மத்திய சுற்றுச்சூழல் துறை மந்திரி ஹர்ஷ வர்தன் கூறினார். #SterliteProtest #Thoothukudi
    புதுடெல்லி:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டம் மற்றும் துப்பாக்கி சூடு சம்பவம் பற்றி மத்திய மந்திரி ஹர்ஷ வர்தனிடம் நிருபர்கள் கருத்து கேட்டனர்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டம் பற்றிய தகவல்களை பத்திரிகைகள் மூலம் அறிந்தேன். 13 பேர் பலியாகி இருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது. ஸ்டெர்லைட் ஆலையின் செயல்பாடு குறித்து விரிவாக ஆய்வு செய்து, முழுமையான தகவல்களை திரட்டி அறிக்கை தாக்கல் செய்யுமாறு மத்திய சுற்றுச்சூழல் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு இருக்கிறேன். இந்த ஆலை இயங்குவதற்கான அனுமதி முந்தைய மத்திய அரசால் வழங்கப்பட்டு உள்ளது.

    இவ்வாறு ஹர்ஷ வர்தன் கூறினார்.

    அப்போது அவருடன் இருந்த அதிகாரிகள் கூறுகையில், தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் அறிக்கை கேட்டு இருப்பதாகவும், அதன்படி மாசு கட்டுப்பாட்டு வாரியம் அளிக்கும் தகவல்கள் முக்கியமானதாக இருக்கும் என்றும் தெரிவித்தனர்.  #SterliteProtest #Thoothukudi  #EnvironmentMinister #HarshVardhan
    Next Story
    ×