என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "US President election"
- கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த தேர்தலில் அதிகமான மாநிலங்களில் வெற்றி பெற்றார்.
- வேட்பாளராக நிற்பதற்கு போதுமான 1968 பிரதிநிதிகளின் ஆதரவை பெற்றுள்ளார்.
அமெரிக்க அதிபராக ஜோ பைடன் உள்ளார். இந்த மாதம் இறுதியில் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நடைபெற இருக்கிறது. தொடர்ந்து இரண்டாவது முறையாக ஜோ பைடன் களம் இறங்க முடிவு செய்தார். தற்போது அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜனநாயக கட்சி சார்பில் நடைபெற்று வருகிறது.
கடந்த செவ்வாய்க்கிழமை 10-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் ஒரே நேரத்தில் தேர்தல் நடைபெற்றது. இதில் பெரும்பாலான இடத்தில் ஜோ பைடன் வெற்றி பெற்றார். இந்த நிலையில் ஜார்ஜியாவில் வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் வேட்பாளர் போட்டியில் வெற்றி பெறுவதற்கான போது 1,968 பிரதிநிதிகள் ஆதரவை இவர் பெற்றுள்ளார்.
இதன்மூலம் அமெரிக்கா தேர்தலில் ஜோடி பைடன் ஜனநாயக கட்சி சார்பில் 2-வது முறையாக போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.
ஜோ பைடன் 37 வருடத்திற்கு முன் அதிபர் தேர்தல் வேட்பாளருக்கான போட்டியில் களம் இறங்கினார். தற்போது 81 வயதில் 2-வது முறையாக தேர்தலில் போட்டியிட எந்தவித நெருக்கடியும் அவருக்கு ஏற்படவில்லை.
37 வருடத்திற்கு முன்னதாக போட்டியிட்டபோது வாக்காளர்களின் ஆர்வமின்மை, குறைந்த அளவிலான மதிப்பீடு ஆகியவற்றால் அந்த நேரத்தில் அவரால் ஆதிக்கம் செலுத்த முடியவில்லை.
ஜோ பைடனை எதிர்த்து குடியரசு கட்சி சார்பில் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார். அதிபர் தேர்தலில் இருவரும் மீண்டும் நேருக்குநேர் சந்திக்க இருக்கின்றனர்.
- சமீபத்தில் கொலராடோ மாகாண கோர்ட்டு டொனால்டு டிரம்புக்கு தடைவிதித்தது.
- அரசாங்கத்தின் அஸ்திவாரங்கள் மீதான தாக்குதலை அமெரிக்க அரசியலமைப்பு பொறுத்துக் கொள்ளாது.
கடந்த 2020-ம் ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்ட அப்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் தோல்வி அடைந்தார். ஆனால் தேர்தலில் முறைகேடு நடந்ததாக கூறி டிரம்ப் தனது தோல்வியை ஏற்க மறுத்ததால் அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் பாராளுமன்றத்துக்குள் புகுந்து வன்முறையில் ஈடுபட்டனர். வன்முறையை தூண்டியதாக டிரம்ப் மீது பல்வேறு மாகாண கோர்ட்டுகளில் வழக்குகள் தொடரப்பட்டன. சமீபத்தில் கொலராடோ மாகாண கோர்ட்டு அளித்த தீர்ப்பில், அந்த மாகாணத்தில் டிரம்ப், அதிபருக்கான குடியரசு கட்சி முதன்மை தேர்தலில் போட்டியிட தடைவிதித்தது.
இந்த நிலையில் மற்றொரு மாகாணத்தில் டிரம்ப் போட்டியிட தடைவிதிக்கப்பட்டுள்ளது. மைனே மாகாண செயலாளர் ஷென்னர் பெல்லோஸ் கூறும்போது, "குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர் தேர்தலில் மைனே மாகாணத்தில் டிரம்ப் போட்டியிட தடைவிதிக்கப்படுகிறது. அரசாங்கத்தின் அஸ்திவாரங்கள் மீதான தாக்குதலை அமெரிக்க அரசியலமைப்பு பொறுத்துக் கொள்ளாது. பாராளுமன்ற வன்முறைகள், டிரம்பின் அறிவுறுத்தலின் பேரிலும், ஆதரவுடன் நிகழ்ந்துள்ளன" என்றார்.
- கடந்த தேர்தல் தோல்வியின் காரணமாக அவரது ஆதரவாளர்கள் பாராளுமன்றத்தை முற்றுகையிட்டனர்.
- மேல்முறையீடு செய்யும் வகையில் ஜனவரி 4-ந்தேதி வரை தீர்ப்பை நிறுத்தி வைத்துள்ளது.
கடந்த முறை நடைபெற்ற அமெரிக்க அதிபருக்கான போட்டியில் டொனால்டு டிரம்ப் போட்டியிட்டார். ஏற்கனவே அதிபர் பதவியில் இருந்து 2-வது முறையாக போட்டியிட்ட அவர், ஜோ பைடனிடம் தோல்வியடைந்தார்.
இருந்த போதிலும் டொனால்டு தனது தோல்வியை ஏற்க மறுத்து வந்தார். அவரது ஆதரவாளர்களும் டொனால்டு டிரம்ப் தோல்வியை ஏற்க மறுத்தனர். மேலும், அமெரிக்க பாராளுமன்றத்தில் நுழைந்து போராட்டம் நடத்தினர்.
இந்த போராட்டத்தில் டொனால்டு டிரம்பிற்கு பங்கு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பாக அமெரிக்காவின் பல்வேறு மாகாணத்தில் உள்ள நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டது.
அந்த வகையில் கொலராடோவில் உள்ள நீதிமன்றத்தில் வழக்க தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை முடிவில், டொனால்டு டிரம்ப் மீண்டும் அமெரிக்க அதிபர் பதவிக்கு தகுதியற்றவர் என நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது.
மேலும், குடியரசு கட்சி சார்பில் யார் வேட்பாளர் என்பதற்கான தேர்தல் நடைபெறும்போது, வாக்குச்சீட்டில் அவரது பெயர் இடம் பெறக்கூடாது. ஒருவேளை பெயர் இடம் பெற்றாலும் அவருக்கு வாக்களித்திருந்தால் அது கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது எனத் தெரிவித்துள்ளது.
இருந்தபோதிலும் அதிபருக்கான முக்கியமான தேர்தலில் தடைவிதிக்கப்படவில்லை. இந்த தீர்ப்பை எதிர்த்துள்ள டொனால்டு தரப்பினர், மேல்முறையீடு செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.
மேல்முறையீடு செய்யும் வகையில் இந்த தீர்ப்பு அடுத்த ஆண்டு ஜனவரி 4-ந்தேதி வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
- டிரம்ப் அதிபர் தேர்தலில் 3-வது முறையாக போட்டியிட உள்ளார்.
- கடந்த தேர்தலில் போட்டியிட்ட டிரம்ப் ஜோ பைடனிடம் தோல்வி அடைந்தார்.
வாஷிங்டன்:
அமெரிக்க முன்னாள் அதிபரான டொனால்ட் டிரம்ப், தற்போதைய ஜோ பைடன் அரசு நிர்வாகத்தை கடுமையாக விமர்சித்து வருகிறார்.
இதற்கிடையே 2024-ம் ஆண்டு நடக்கும் அதிபர் தேர்தலில் டிரம்ப் மீண்டும் போட்டியிடுவார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கிடையே நவம்பர் 15-ந்தேதி (நேற்று) முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிடுவதாக டிரம்ப் அறிவித்து இருந்தார். அதன்படி அவர் இன்று அந்த அறிவிப்பை வெளியிட்டார். 2024-ம் ஆண்டு அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ளதாக டிரம்ப் தெரிவித்தார்.
இதையடுத்து அவர் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக அமெரிக்க மத்திய தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பித்து உள்ளார்.
டிரம்ப் தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
அமெரிக்கா அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்கிறேன். அமெரிக்காவின் மறுபிரவேசம் இப்போதே தொடங்குகிறது என்றார்.
டிரம்ப் அதிபர் தேர்தலில் 3-வது முறையாக போட்டியிட உள்ளார். கடந்த தேர்தலில் போட்டியிட்ட அவர் ஜோ பைடனிடம் தோல்வி அடைந்தார். ஆனால் தேர்தலில் முறைகேடு நடந்ததாக கூறி தனது தோல்வியை ஏற்க டிரம்ப் மறுத்தார். அவரது ஆதரவாளர்கள் பாராளுமன்றத்தில் புகுந்து வன்முறையில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவில் வாழும் இந்து மக்களின் எண்ணிக்கை அந்நாட்டின் மக்கள்தொகையில் ஒருசதவீதமாக மட்டுமே உள்ள நிலையில் கடந்த 2016 பாராளுமன்ற தேர்தலில் 5 இடங்களில் இந்திய வம்சாவளியினர் வெற்றி பெற்றனர்.
இவர்களில் ஒருவரான கமலா ஹாரிஸ் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுவார் என்று பரவலான எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், ஜனநாயக கட்சியை சேர்ந்த துல்சி கபார்ட், 2020-ம் ஆண்டு அமெரிக்க அதிபர் பதவிக்கு நடைபெறும் தேர்தலில் டிரம்ப்பை எதிர்த்து போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்ந்து நான்காவது முறையாக ஹவாய் மாநிலத்தில் இருந்து பாராளுமன்ற பிரதிநிதிகள் சபை (செனட்) உறுப்பினராக சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட துல்சி கபார்ட், அதிபர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றால் அந்த நாட்டின் முதல் பெண் அதிபர் மற்றும் இந்து மதத்தை சேர்ந்த அதிபர் என்ற சிறப்பிடத்தை பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த அறிவிப்பை தொடர்ந்து தனது டுவிட்டர் பக்கத்தில் ஆதரவு திரட்டும் இயக்கத்தை தொடங்கிய துல்சி கபார்ட், ‘நமது நாட்டுக்காகவும் நமக்காகவும் நாம் ஒன்றிணைந்து நின்றால் நம்மால் வெல்ல முடியாத சவால் என்று ஏதுமில்லை. நீங்கள் என்னோடு இணைவீர்களா?’ என்று குறிப்பிட்டுள்ளார். #TulsiGabbard #2020presidentialrun
அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் பதவி ஏற்றார். அவர் பதவி ஏற்று 2 ஆண்டுகள் விரைவில் முடிய இருக்கிறது.
அமெரிக்க அதிபரின் பதவி காலம் 4 ஆண்டுகள் ஆகும். இதனால் 2020-ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் நடக்கிறது. அமெரிக்காவை பொறுத்த வரை அதிபர் தேர்தல் பணிகள் ஒரு ஆண்டு முன்பே தொடங்கிவிடும்.
அமெரிக்காவில் அதிபராக இருக்கும் ஒருவர் 2 முறை தேர்தலில் போட்டியிடலாம், அதன்படி குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்டு டிரம்ப் அடுத்த தேர்தலிலும் போட்டியிடுவார்.
ஜனநாயக கட்சியில் இருந்து டிரம்புக்கு எதிராக வேட்பாளர் நிறுத்தப்படுவார். அமெரிக்க அதிபர் தேர்தல் விதிகளின்படி ஒருவரை வேட்பாளராக தேர்வு செய்ய கட்சிக்குள்ளே தனித்தனியாக தேர்தல் நடைபெறும். உறுப்பினர்கள் ஓட்டுபோடுவார்கள். அதில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்கள்தான் வேட்பாளராக முடியும்.
47 சதவீத பேர் அவருக்கு எதிராக மனநிலையில் உள்ளனர்.
ஆக்சியோஸ் கருத்து கணிப்பில் ஹிலாரி கிளிண்டன் 6 புள்ளிகள் வித்தியாசத்தில் குடியரசு கட்சி வேட்பாளரையும், மிச்சேல் ஒபாமா 16 புள்ளிகள் வித்தியாசத்தில் குடியரசு கட்சி வேட்பாளரையும் தோற்கடிப்பார் என்று தெரிவித்துள்ளது.
நியூயார்க் செனட்டர் கிறிஸ்டியன் கில்பிரான்ட் 8 புள்ளிகள் வித்தியாசத்தில் டிரம்பை தோற்கடிப்பார் என்றும் அந்த கணிப்பில் தெரிவிக்கப்பட்டது. #USPresidentElection #Trump
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்