என் மலர்tooltip icon

    உலகம்

    • பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான வயது வரம்பும் குறைக்கப்படுகிறது.
    • அரசியல் கட்சிகள் தேர்தலின் போது 4-ல் ஒரு பங்கு அல்லது 3-ல் ஒரு பங்கு இளைஞர்களுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டும்.

    டாக்கா:

    வங்காள தேசத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இட ஒதுக்கீடு தொடர்பாக நடந்த போராட்டம் வன்முறையாக மாறியது. இதையடுத்து பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா பதவியை ராஜினாமா செய்து விட்டு இந்தியாவில் தஞ்சம் அடைந்தார்.

    இதையடுத்து வங்காள தேசத்தின் இடைக்கால அரசின் தலைவராக முகமது யூனுஸ் பொறுப்பேற்றுக் கொண்டார். அதன் பிறகு பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் வங்காள தேசத்தில் ஓட்டு போடும் வயதை குறைக்க இடைக்கால அரசு முடிவு செய்து

    உள்ளது. தற்போது அங்கு வாக்காளர்களின் குறைந்த பட்ச வயது 18- ஆக உள்ளது. இந்த வயதை 18-ல் இருந்து 17 ஆக குறைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாக முகமது யூனுஸ் தெரிவித்து உள்ளார்.

    அடுத்த நடைபெறும் பொதுத்தேர்தலின் போது இது நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதே போல பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான வயது வரம்பும் குறைக்கப்படுகிறது.

    தற்போது அங்கு எம்.பி. தேர்தலில் போட்டியிடும் வயது 25- ஆக இருக்கிறது. இந்த வயதை 21- ஆக குறைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இளைஞர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது.

    இது தொடர்பாக அந்த நாட்டின் அரசியலமைப்பு சீர்திருத்த ஆணைக்குழு தலைவர் பேராசிரியர் அலி ரியாஸ் கூறும்போது 21 வயது இளைஞர் எம்.பி. ஆவதை சாத்தியமாக்கும் ஒரு தீவிரமான மாற்றத்தை குழு சிந்தித்து வருகிறது. அரசியல் கட்சிகள் தேர்தலின் போது 4-ல் ஒரு பங்கு அல்லது 3-ல் ஒரு பங்கு இளைஞர்களுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டும் என தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஒரு அதிகாரி ஷூவைப் பயன்படுத்தி ப்ரூக்ஸின் வயிற்றில் அடித்தார்
    • உடையில் பொருத்தப்பட்ட பாடி கேம் கேமராவில் பதிவான வீடியோ வெளியானது.

    அமெரிக்காவின் நியூ யார்க் சிறையில் கைதி ஒருவரை போலீஸ் அதிகாரிகள் சரமாரியாக தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தாக்கப்பட்ட அடுத்த நாளே அந்த கைதி உயிரிழந்தார்.

    மற்ற சில அதிகாரிகளில் உடையில் பொருத்தப்பட்ட பாடி கேம் கேமராவில் பதிவான அந்த வீடியோவில் கறுப்பின நபரான அவரை போலீஸ் அதிகாரிகள் கண்மூடித்தனமாகத் தாக்கும் காட்சிகள் பதிவாகி உள்ளது.

    தாக்குதலுக்கு உள்ளான கைதி 43 வயதான ராபர்ட் ப்ரூக்ஸ் கடந்த டிசம்பர் 9 ஆம் தேதி நியூயார்க்கில் உள்ள மார்சி கரெக்ஷனல் ஃபெசிலிட்டியில் வைத்து அதிகாரிகளால் தாக்கப்பட்டார்.

    கைவிலங்கிடப்பட்ட அவர் மருத்துவ பரிசோதனை மேசையில் அமரவைக்கப்பட்டார். அவரது வாயில் போலீசார் துணி போன்ற எதையோ திணித்தனர். அதன்பின் அதிகாரிகள் புரூக்ஸின் முகம் மற்றும் இடுப்பில் அடித்தனர். ஒரு கட்டத்தில், ஒரு அதிகாரி ஷூவைப் பயன்படுத்தி ப்ரூக்ஸின் வயிற்றில் அடித்தார், மற்றொருவர் அவரை கழுத்தைப் பிடித்து  மேசையில் தள்ளினார்.

    சிறிது நேரம் கழித்து, அவர்கள் அவரது சட்டை மற்றும் பேண்ட்டைக் கழற்றினர். இதன்பின் புரூக்ஸ் அசைவற்றுக் கிடந்தார். இதற்கு மறு நாள் டிசம்பர் 10 ஆம் தேதி மருத்துவமனையில் அவர் இறந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. ராபர்ட் ப்ரூக்ஸ் வழக்கை விசாரித்து வரும் நியூயார்க் அட்டர்னி ஜெனரல் லெட்டிடியா ஜேம்ஸ், இந்த கேமரா காட்சிகளை நேற்று [வெள்ளிக்கிழமை] வெளியிட்டார்.

    இதனைத்தொடர்ந்து நியூயார்க் கவர்னர் கேத்தி ஹோச்சுல், தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 13 அதிகாரிகள் மற்றும் சிறை உதவியாளர் ஒருவரை பணிநீக்கம் செய்ய உத்தரவிட்டார்.

    உயிரிழந்த ராபர்ட் ப்ரூக்ஸ், 2017 ஆம் ஆண்டில் மன்ரோ கவுண்டியில் முன்னாள் காதலியை கத்தியால் குத்திய குற்றத்தை ஒப்புக்கொண்டு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வந்தவர் ஆவார். 

    • ஜெர்மன் நாட்டு சட்டப்படி பாராளுமன்றம் கலைக்கப்பட்டு 60 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும்
    • சவூதி அரேபிய மருத்துவர் கண்மூடித்தனமாக கார் ஓட்டி 5 பேரை கொன்றார்.

    ஜெர்மன் பாராளுமன்றத்தை அந்நாட்டின் ஜனாதிபதி பிராங்க் வால்டர் ஸ்டெய்ன்மியர் நேற்றைய தினம் கலைத்து உத்தரவிட்டார்.

    சான்சலர் ஓலாப் ஸ்கால்ஸ் தலைமையிலான ஆளும் கூட்டணியில் விரிசல் ஏற்பட்ட நிலையில், கடந்த டிசம்பர் 16 ஆம் தேதி பாராளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

    இதில் சான்சலர் ஸ்கால்ஸ் தோல்வி அடைந்தார். அரசு பெரும்பான்மையை இழந்ததை அடுத்து முன்கூட்டியே தேர்தலை நடத்த பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் ஒப்புதல் அளித்தனர். அதன்படி தேர்தல் தேதியை ஜனாதிபதி நேற்று அரசை கலைத்து அடுத்த தேர்தல் தேதியை நேற்று அறிவித்துள்ளார்.

    ஜெர்மன் நாட்டு சட்டப்படி பாராளுமன்றம் கலைக்கப்பட்டு 60 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும். எனவே அடுத்த பிப்ரவரி 23 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என ஜனாதிபதி அறிவித்தார்.

     

    மேலும் நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மையின் அவசியத்தை வலியுறுத்திய அவர், தேர்தல் பிரச்சாரம் மரியாதையுடனும் கண்ணியத்துடனும் நடத்தப்பட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

    ஐரோப்பாவின் மிகப்பெரிய பொருளாதார நாடாக ஜெர்மனி உள்ள நிலையில் இந்த தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

    முன்னதாக கிழக்கு நகரமான மாக்டேபர்க்கில் உள்ள கிறிஸ்துமஸ் சந்தையில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை, 50 வயதான சவூதி அரேபிய மருத்துவர் தலேப் அல்-அப்துல்மோசென் என்பவர் கண்மூடித்தனமாக கார் ஓட்டி 5 பேரை கொன்றார். இதில் 200 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் அந்நாட்டு அரசியலிலும் எதிரொலித்து வருகிறது.  

    • கூா்ஸ்க் பிராந்தியத்தில் ஊடுருவியுள்ள உக்ரைன் ராணுவத்துக்கு எதிரான போரில் வட கொரிய வீரா்கள் பயன்படுகின்றனர்
    • உக்ரைனின் எரிசக்தி அமைப்பு மற்றும் சில நகரங்கள் மீது ரஷியா கிறிஸ்துமஸ் தினத்தன்று தாக்குதல் நடத்தியது.

    உக்ரைன் போரில் ரஷியாவுக்கு ஆதரவாக வட கொரியா 12,000 வீரர்கள் வரை அனுப்பி வைத்ததாக உக்ரைன் மற்றும் மேற்கு நாடுகள் கூறின. இந்நிலையில் போரில் அதிக எண்ணிக்கையிலான வடகொரிய வீரர்கள் உயிரிழந்துள்ளதாக அமெரிக்க வெள்ளை மாளிகை தரப்பு தெரிவித்துள்ளது.

    ரஷ்யாவின் கூா்ஸ்க் பிராந்தியத்தில் ஊடுருவியுள்ள உக்ரைன் ராணுவத்துக்கு எதிரான போரில் வட கொரிய வீரா்கள் பயன்படுகின்றனர். அங்கு தாங்கள் நடத்தும் தாக்குதல்களில் சுமார் 3000 வட கொரிய வீரர்கள் பலியானதாகவும், உக்ரைன் படைகளால் கைது செய்யப்பட்ட காயமடைந்த வடகொரிய வீரர்கள் பலர் உயிரிழந்துள்ளதாகவும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் தெரிவித்துள்ளார்.

    தென் கொரியாவும் இந்த உயிரிழப்புகளை உறுதி செய்துள்ளது. இருப்பினும் மேலும் புதிய வீரர்கள், இலக்குகளை மோதி அழிக்கக்கூடிய ட்ரோன்கள் உள்ளிட்ட ஆயுதங்களையும் ரஷியாவுக்கு அனுப்ப வட கொரியா திட்டமிட்டுள்ளதாகத் தென் கொரிய முப்படைகளின் கூட்டு தலைமையகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

    இதுதொடர்பாக பேசிய வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி, ரஷிய மற்றும் வட கொரிய இராணுவத் தலைவர்கள் இந்த வீரர்களை மனித கேடயமாகக் கருதி செலவழிக்கின்றனர்.

    தெரிந்தே பல சந்தர்ப்பங்களிலும் உக்ரேனிய படைகளுக்கு எதிரான நம்பிக்கையற்ற தாக்குதல்களுக்கு உத்தரவிடுகிறார்கள் என்பது தெளிவாகிறது. இவை ஒரு முன்பே கணிக்கப்பட்ட கூட்டு உயிரிழப்புகள் என்று அவர் விவரித்தார்.

    மேலும் வரும் நாட்களில் உக்ரைனுக்கு மேலும் உதவிகளை அனுப்ப ஜோ பைடன் ஒப்புதல் அளிப்பார் என்று தெரிவித்தார். முன்னதாக உக்ரைனின் எரிசக்தி அமைப்பு மற்றும் சில நகரங்கள் மீது ரஷியா கிறிஸ்துமஸ் தினத்தன்று தாக்குதல் நடத்தியது. இதற்கு ஜோ பைடன் கண்டனம் தெரிவித்தார். கடந்த 2022 பிப்ரவரியில் தொடங்கிய போர் 3 ஆம் ஆண்டை நெருங்கி வருகிறது.

     

    • வைட்டமின்களில் ஏ, டி, இ, கே ஆகியவை கொழுப்பில் கரையும் தன்மை கொண்டது.
    • வைட்டமின் சி அல்லது டி போன்றவற்றை அதிகமாக உட்கொள்வது சிறுநீரகத்தில் கற்களை அதிகரிக்கும் அபாயத்தை ஏற்படுத்தும்.

    துபாய்:

    அமீரக மருத்துவ நிபுணர்கள் கூறிய விளக்கங்களின் தொகுப்பு பின்வருமாறு:-

    உலகில் பெரும்பாலான உயிரினங்களின் இயல்பான வளர்ச்சிக்கும், செயல்பாட்டுக்கும் மிக சிறிய அளவில் தேவைப்படும் அத்தியாவசியமான நுண்ணூட்டச்சத்து வைட்டமின் ஆகும். வைட்டமின்களின் தேவை பெரும்பாலும் உண்ணும் உணவின் மூலமாகவே பூர்த்தி செய்யப்படுகிறது. உடலுக்கு தேவையான அளவை பெற நல்ல சத்துள்ள உணவுகளை உட்கொள்வது அவசியமாகும். லத்தீனில் விட்டா என்றால் உயிர், அமைன் என்றால் நைட்ரஜன் மூலக்கூறுகள் என்பது பொருளாகும். மனிதர்களுக்கு தேவையான 13 ஊட்டச்சத்துக்கள் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    இந்த வைட்டமின்களில் ஏ, டி, இ, கே ஆகியவை கொழுப்பில் கரையும் தன்மை கொண்டது. பி மற்றும் சி வைட்டமின் நீரில் கரையும் தன்மையுடையது. பழங்கள் மற்றும் காய்கறிகளில் அதிக வைட்டமின்கள் உள்ளன. இதனை கடந்து தற்காலத்தில் பல்வேறு நோய்களுக்கும் வைட்டமின் குறைபாடு காரணம் என கண்டுபிடிக்கப்பட்டு மாத்திரை மற்றும் மருந்து வடிவங்களில் மக்களுக்கு அளிக்கப்படுகிறது. இந்த வைட்டமின்களை செயற்கையாக அதிகப்படியான அளவில் எடுத்துக்கொள்வது மற்றும் தவறான பயன்பாடுகள் காரணமாக உடல்நலனில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.

    சிலர் வைட்டமின்களை உட்கொள்வதில் தீங்கு ஏற்படுவது இல்லை என நம்புகின்றனர். ஆனால் இது தவறு என ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்கள் சிறுநீரகங்கள் மற்றும் கல்லீரலுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். அதேபோல் இரும்பு, துத்தநாகம் ஆகிய நுண்ணூட்ட சத்துகள் செரிமான கோளாறு, குமட்டல், வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும். வைட்டமின் சி அல்லது டி போன்றவற்றை அதிகமாக உட்கொள்வது சிறுநீரகத்தில் கற்களை அதிகரிக்கும் அபாயத்தை ஏற்படுத்தும்.

    வைட்டமின்களை சமூக ஊடகங்களில் பார்த்து நிபுணர்கள் அல்லாதவர்களின் ஆலோசனை கேட்டு உட்கொள்வது ஆபத்தானது ஆகும். ஏனெனில் இந்த பொருட்கள் எதிர்விளைவை ஏற்படுத்தும் தன்மையை பெற்றுள்ளன. நீண்ட காலத்திற்கு கடுமையான உடல்நிலை பாதிப்பை ஏற்படுத்தவும் வாய்ப்பு உள்ளது. எனவே அதிகப்படியான வைட்டமின்களை உட்கொள்வது என்பது விஷமுள்ள தேனை பருகுவது போன்றது ஆகும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.

    • தங்களுக்கு விருப்பமான மேலும் ஒரு இந்து பண்டிகைக்கும் மாணவர்கள் விடுமுறை எடுத்துக் கொள்ள இந்த சட்டத்தில் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
    • இந்த சட்டத்துக்கு அங்குள்ள இந்திய வம்சாவளியினர் பெரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

    வாஷிங்டன்:

    இந்தியர்கள் பெருமளவில் வசிக்கும் அமெரிக்காவில் தீபாவளி பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

    இந்தநிலையில் அங்குள்ள ஒகியோ மாகாணத்தில் தீபாவளி பண்டிகைக்கு அரசு விடுமுறை வழங்கும் வகையில் சட்டம் இயற்றப்பட்டு உள்ளது. இதுதவிர தங்களுக்கு விருப்பமான மேலும் ஒரு இந்து பண்டிகைக்கும் மாணவர்கள் விடுமுறை எடுத்துக் கொள்ள இந்த சட்டத்தில் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

    இந்த சட்டத்துக்கு அங்குள்ள இந்திய வம்சாவளியினர் பெரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

    • இந்தியா ஒரு சிறந்த மனிதரை இழந்துவிட்டது என்றார் அதிபர் மேக்ரான்.
    • அவரது மறைவுக்கு பல்வேறு நாட்டு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    மாஸ்கோ:

    முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மறைவுக்கு அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், இலங்கை, நேபாளம், மாலத்தீவு, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    ரஷிய அதிபர் புதின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி:

    மன்மோகன் சிங் ஒரு சிறந்த அரசியல்வாதி. பிரதமராகவும், பிற உயர் பதவிகளில் பணியாற்றியபோதும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதிலும், உலக அரங்கில் அதன் நலன்களை வலியுறுத்துவதிலும் அவர் நிறைய சாதித்துள்ளார். இரு நாடுகளுக்கு இடையிலான நட்புறவுகளை வலுப்படுத்துவதற்கு அவர் தனிப்பட்ட பங்களிப்பை அளித்தார். அவருடன் நான் பலமுறை பேசும் சந்தர்ப்பம் கிடைத்தது. அவரை நினைவு கூருவோம் என தெரிவித்தார்.

    பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான்:

    இந்தியா ஒரு சிறந்த மனிதரை இழந்துவிட்டது. மன்மோகன் சிங்கின் ஆளுமையில் இந்தியா ஒரு சிறந்த மனிதரையும், பிரான்ஸ் ஒரு உண்மையான நண்பரையும் இழந்துவிட்டது. அவர் தனது வாழ்நாளை தனது நாட்டிற்காக அர்ப்பணித்தார். எங்கள் எண்ணங்கள் அவரது குடும்பத்தினருடனும் இந்திய மக்களுடனும் உள்ளன என தெரிவித்தார்.

    பாகிஸ்தான் துணைப் பிரதமர் இஷாக் தார்:

    இந்தியா-பாகிஸ்தான் உறவுகளை மேம்படுத்துவதில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருந்த மன்மோகன் சிங்கின் மறைவு வருத்தம் அளிக்கிறது. பாகிஸ்தானில் பிறந்த அவர், ஒரு சிறந்த பொருளாதார நிபுணர் மற்றும் அரசியல் தலைவராக இருந்தார். அவரது ஞானம் மற்றும் மென்மையான நடத்தைக்காக அவர் நினைவுகூரப்படுவார். பிராந்திய பிரச்சனைகளில் அவரது அணுகுமுறை பரஸ்பர புரிதல், உரையாடல் மற்றும் ஒத்துழைப்பு ஆகியவை கூட்டு முன்னேற்றத்திற்கு அவசியம் என்ற அவரது நம்பிக்கையை பிரதிபலித்தது. பாகிஸ்தான்-இந்தியா உறவுகளை மேம்படுத்துவதில் அவர் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருந்தார். பாகிஸ்தான் மக்களும், அரசும் மன்மோகன் சிங்கின் குடும்பத்தினருக்கும், இந்திய மக்களுக்கும், இந்திய அரசிற்கும் எங்கள் இதயப்பூர்வமான இரங்கலைத் தெரிவிக்கின்றன என்றார்.

    அமெரிக்க வெளியுறவு மந்திரியான ஆண்டனி பிளிங்கன் இந்தியா, அமெரிக்கா நட்பு சிறப்பாக செயல்பட மிகச்சிறந்த சாம்பியன்களில் ஒருவராக மன்மோகன்சிங் திகழ்ந்தார் என குறிப்பிட்டுள்ளார்.

    இதேபோல், இலங்கை, நேபாளம், மாலத்தீவு, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாட்டு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    • அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் விபத்துக்குள்ளாகி 38 பேர் உயிரிழந்தனர்.
    • ரஷியாவின் ஏவுகணை தாக்குதலுக்கு விமானம் உள்ளாகியிருக்கலாம் என சந்தேகம்.

    அஜர்பைஜானில் இருந்து ரஷியாவுக்கு புறப்பட்டுச் சென்ற அஜர்பைஜான் ஏர்லைன்ஸ்க்கு சொந்தமான விமானம் குரோன்ஸி விமான நிலையத்தில் தரையிறக்க முடியாமல் திருப்பி விடப்பட்டது. கஜகஸ்தானில் தரையிறங்க முயற்சித்த மோதி தரையில் மோதி விபத்துக்குள்ளானது.

    இதில் 38 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ரஷியாவின் ஏவுகணை அல்லது வான் பாதுபாக்கு சிஸ்டத்தால் விமானம் விபத்துக்குள்ளானதாக மீடியாக்கள் சந்தேகம் கிளப்பி வந்தன.

    இந்த நிலையில் முதற்கட்ட விசாரணையில் தொழில்நுட்ப வெளிப்புற குறுக்கீடு (technical external interference) மற்றும் வெளிப்புறத்தில் விமானத்திற்கு பாதிப்பு (physical) ஆகிவற்றால் விமானம் விபத்துக்குள்ளானது என அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.

    இதற்கிடையே ரஷியா செல்லும் அனைத்து விமானங்களையும் அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் தற்காலிகமாக தரையிறக்கியுள்ளது.

    விமானம் தரையிறங்க முயற்சிக்கும்போது பொதுமக்களின் கட்டமைப்புகளை குறிவைத்து குரோன்ஸி மற்றும் விளாடிகவ்காஸ் நகரங்களில் உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தியது என ரஷியா தெரிவித்திருந்தது.

    மாஸ்கோ சேதமடைந்த ஜெட் விமானத்தை கடலைக் கடக்க கட்டாயப்படுத்தியது. பெரும்பாலும் அவர்களின் குற்றத்திற்கான ஆதாரங்களை மறைக்க எங்கள் மீது குற்றம் சாட்டுகிறது என உக்ரைன் தெரிவித்துள்ளது.

    • இந்திய பிரதமர் மன்மோகன் சிங் நேற்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் காலமானார்.
    • பாகிஸ்தானில் அவர் 4-ம் வகுப்புவரை படித்த பள்ளி உள்ள கிராமத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

    இந்தியாவின் முன்னாள் பிரதமரான டாக்டர் மன்மோகன் சிங் நேற்று மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். சேர்க்கப்பட்ட சிறிது நேரத்தில் அவரது உயிர் பிரிந்தது. 92 வயதாக இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்கு இந்திய ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.

    உலகக் தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவரது இறுதிச் சடங்கு நாளை காலை நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் பாகிஸ்தான் நாட்டில் உள்ள ஒரு கிராமம் அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளது.

    ஒட்டுமொத்த கிராமமே அஞ்சலி செலுத்தி இரங்கல் தெரிவித்து வருகிறது. நாங்கள் எங்கள் குடும்பத்தில் உள்ள ஒருவர் மறைந்ததாக உணர்கிறோம் என அல்டாஃப் ஹுசைன் தெரிவித்துள்ளார். இவர் அந்த கிராம மக்களின் தலைவர் ஆவார்.

    மன்மோகன் சிங் 4-ம் வகுப்பு வரை படித்த கா கிராமம் (Gah village) பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

    இந்த கிராமம் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இருந்து தென்மேற்கோ 100 கி.மீ. தொலைவில் உள்ளது. மன்மோகன் சிங் பிறக்கும்போது ஜீலம் மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது. 1986-ம் ஆண்டு சக்வால் மாவட்டமாக பிரிக்கப்படும்போது இதனுடன் சேர்ந்தது.

    மன்மோகன் சிங் உடன் படித்த ராஜி முகமது அலியின் மருமகன் ராஜா ஆஷிக் அலி 2008-ம் ஆண்டு டெல்லி சென்று மன்மோகன் சிங்கை சந்தித்ததாக தெரிவித்தார்.

    கிராமத்தில் உள்ள அனைவரும் மிகுந்த வேதனை அடைகிறோம். மன்மோகன் சிங் இறுதிச் சடங்கில் பங்கேற்க விருப்பம் உள்ளது. ஆனால் நடப்பதற்கு சாத்தியம் இல்லை. ஆகையால் அஞ்சலி செலுத்துகிறோம்.

    • ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று மீனவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
    • தமிழக மீனவர்களை சிறை பிடிப்பதும், படகுகளை பறிமுதல் செய்வதுமாக உள்ளது.

    தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வதும், கடற்கொள்ளையர்கள் அச்சுறுத்துவதும் தொடர்கதையாகவே உள்ளது.

    தமிழக மீனவர்கள் கைது நடவடிக்கையை கண்டித்து தமிழக அரசு தொடர்ந்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதி வருகிறது.

    இருப்பினும், எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக கூறி இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை சிறை பிடிப்பதும், படகுகளை பறிமுதல் செய்வதுமாக உள்ளது.

    இந்த விவகாரத்தில், மத்திய அரசு தரப்பில் இருந்து எந்த ஒரு ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று மீனவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

    இந்நிலையில், "மீனவர் விவகாரத்தில் இலங்கை இந்திய மீனவர்கள் விவகாரத்தில் இனி பேச்சுவார்த்தை இல்லை; பேச்சுவார்த்தை எல்லாம் முடிந்துவிட்டது என இலங்கை அமைச்சர் சந்திரசேகன் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-

    இனி பேச்சு இல்லை. மீனவர் விவகாரத்தில் இலங்கை இந்திய மீனவர்கள் விவகாரத்தில் இனி பேச்சுவார்த்தை இல்லை. பேச்சுவார்த்தை எல்லாம் முடிந்துவிட்டது.

    இலங்கை மீன்வளத் துறை அதிகாரிகள் இந்திய அதிகாரிகளுடன் பேச்சு நடத்துவார்கள். தொழில்நுட்ப ரீதியான பிரச்சினை உள்ளிட்டவையே அந்த பேச்சில் இடம் பெறும். மனிதாபிமான அடிப்படையில் இந்த விவாரத்தில் இனி பேச்சுவார்த்தை நடைப்பெறாது.

    இவவாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • இமயமலையின் மிகப்பெரிய பள்ளத்தாக்கில் அணை கட்ட சீனா முடிவு.
    • 137 பில்லியன் அமெரிக்க டாலர் செலவில் அணை கட்ட சீனா ஒப்புதல் வழங்கியுள்ளது.

    இமயமலையின் பெரிய பள்ளத்தாக்கில் பிரம்மபுத்திரா நதி இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அருசாணச்சல பிரதேசத்திற்கும், வங்கதேசத்தின் வளைந்து செல்லும் பாதையில் அணை கட்ட சீனா திட்டமிட்டுள்ளது.

    இந்திய எல்லை திபெத்தில் சீனா 137 பில்லியன் டாலர் அளவில் உலகில் மிகப்பெரிய அணை கட்ட இருக்கிறது. இதனால் பிரம்மபுத்திராவின் அடிப்பகுதியில் உள்ள மாநிலங்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கும் என இந்திய மாநிலங்கள் மற்றும் வங்கதேச மாநிலங்கள் கவலை தெரிவித்துள்ளன.

    மேலும், டெக்டோனிக் தட்டு எல்லையில் அமைந்துள்ள சுற்றுச்சூழல் ரீதியாக பலவீனமான இமயமலைப் பகுதியாக அணை கட்டப்படும் பகுதி பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில் பிரம்மபுத்திரா அணை திட்டம் கரையோர மாநிலங்களை பாதிக்காது. பாதுகாப்பு கவலை குறித்து 10 வருடங்களுக்கும் மேலாக ஆய்வு செய்துள்ளோம் என சீனாவின் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மயோ நிங் தெரிவித்துள்ளார்.

    உலகின் மிகப்பெரிய அணையால் அடிவாரம் மற்றும் கரையோர பகுதிகளுக்கு பாதிப்பு ஏற்பாடு எனத் தெரிவித்துள்ளார்.

    எல்லை தாண்டிய நதிகளின் வளர்ச்சிக்கு சீனா எப்போதும் பொறுப்பாக இருந்து வருகிறது, மேலும் திபெத்தில் நீர்மின்சார மேம்பாடு பல தசாப்தங்களாக ஆழமாக ஆய்வு செய்யப்பட்டு, திட்டத்தின் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

    உலகின் மிகப்பெரிய திட்டமான இதன் கட்டுமானத்திற்கு கடந்த புதன்கிழமை சீனா அனுமதி வழங்கியுள்ளது.

    இந்த அணையை கட்ட சுமார் 10 வருடத்திற்கு மேல் ஆகும் என கூறப்படுகிறது.

    • மோட்டலில் வைத்து பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கு ஆர்டர் செய்யப்பட்ட பீட்சாக்களை டெலிவரி செய்ய சென்றுள்ளார்.
    • மார்பு, கைகள், கால்கள் மற்றும் வயிற்றுப்பகுதியில் கத்தியால் அல்வேலா கத்தியால் குத்தினார்.

    டெலிவரி செய்த பீட்சாவுக்கு வெறும் 2 டாலர் டிப்ஸ் கொடுத்ததால் கர்பிணி பெண்ணை, பெண் டெலிவரி ஊழியர் 14 முறை கத்தியால் குத்திய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தைச் சேர்ந்தவர் 22 வயதான பெண் ப்ரியானா அல்வெலோ. பீட்சா டெலிவரி ஊழியரான இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று மோட்டலில் வைத்து பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கு ஆர்டர் செய்யப்பட்ட பீட்சாக்களை டெலிவரி செய்ய சென்றுள்ளார்.

    அல்வெலோ பீட்சாவை கர்ப்பிணிப் பெண்ணிடம் டெலிவரி செய்தார், அதன் மொத்த மதிப்பு $33 (சுமார் ரூ. 2,800), ஆனால் $50 (சுமார் ரூ. 4,300) தாளை கொடுத்து அதற்கு சில்லறை வழங்கும்படி ஆர்டர் செய்த கர்ப்பிணிப் பெண் தெரிவித்துள்ளார்.

     

     

    ஆனால் சேஞ் இல்லாததால் பின்னர் அந்த பெண்ணே சில்லறையாக தேடி அல்வெலோவுக்கு கொடுத்துள்ளார். கடைசியில் அல்வெலோவுக்கு டிப்ஸாக வெறும் 2 டாலர் (சுமார் 171 ரூபாய்) மட்டுமே கிடைத்துள்ளது.

    இதனால் ஆத்திரமடைந்த அல்வெலோ 90 நிமிடங்களுக்குப் பிறகு தனது நண்பனுடன் வந்து அந்த கர்ப்பிணிப் பெண்ணை 14 முறை கத்தியால் குத்தி உள்ளார். மார்பு, கைகள், கால்கள் மற்றும் வயிற்றுப்பகுதியில் அல்வேலா கத்தியால் குத்தினார்.

     

    அல்வெலோவுடன் வந்த நண்பன் கையில் துப்பாக்கியோடு மோட்டலில் பெண்ணின் காதலன் மட்டும் 5 வயது ,மகளை மிரட்டி உள்ளார்.

    இறுதியில் இருவரும் அங்கிருந்து தப்பிச் சென்றனர். பெண் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்ட நிலையில் அவரது உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தப்பியோடிய அல்வெலோவையும் அவரது நண்பரையும் போலீஸ் கைது செய்துள்ளது.

     

    ×