என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அமெரிக்கா: அரசியல் விளம்பரங்களை தற்காலிகமாக நிறுத்திய கூகுள் நிறுவனம்
Byமாலை மலர்13 Jan 2021 8:35 PM GMT (Updated: 13 Jan 2021 8:35 PM GMT)
ஜோ பைடன் பதவியேற்பு நடைபெற உள்ள நிலையில் வன்முறை சம்பவங்களை தடுக்கும் வகையில் தங்கள் இணையதள பக்கங்களில் அரசியல் ரீதியிலான விளம்பரங்களை வெளியிட கூகுள் நிறுவனம் தற்காலிகமாக தடை விதித்துள்ளது.
வாஷிங்டன்:
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றார். இவர் அமெரிக்க அதிபராக வரும் 20-ம் தேதி பதவியேற்க உள்ளார்.
இதற்கிடையே கடந்த 6-ந் தேதி ஜோபைடனின் வெற்றியை உறுதி செய்து சான்றிதழ் அளிப்பதற்காக அமெரிக்க பாராளுமன்றம் கூடியது. அப்போது டிரம்ப் ஆதரவாளர்கள் பாராளுமன்றத்துக்குள் நுழைந்து பெரும் வன்முறையில் ஈடுபட்டனர்.
இந்த கலவரத்தில் போலீஸ் அதிகாரி உள்பட 5 பேர் உயிரிழந்தனர். இந்த கலவரத்துக்கு டிரம்ப் காரணம் என்றும் அவர் தனது ஆதரவாளர்களை தூண்டியதாகவும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில், ஜோ பைடன் வரும் 20-ம் தேதி பதவியேற்க உள்ள நிலையில், தங்கள் இணையதள பக்கங்களில் அரசியல் ரீதியிலான விளம்பரங்களை வெளியிட கூகுள் நிறுவனம் தற்காலிக தடை விதித்துள்ளது.
ஜோ பைடன் பதவியேற்பு, பாராளுமன்ற கட்டிட வன்முறை, டொனால்டு டிரம்ப் பதவிநீக்கம் செய்யும் நடைமுறைகள் தொடர்பான அரசியல் ரீதியிலான விளம்பரங்களை இன்று முதல் வரும் 21-ம் தேதி வரை வெளியிட கூகுள் நிறுவனம் தடை விதித்துள்ளது.
ஜோ பைடன் 20-ம் தேதி பதவியேற்க உள்ள நிலையில், கூகுள் நிறுவனத்தின் இந்த அறிவிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருத்தப்படுகிறது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றார். இவர் அமெரிக்க அதிபராக வரும் 20-ம் தேதி பதவியேற்க உள்ளார்.
இதற்கிடையே கடந்த 6-ந் தேதி ஜோபைடனின் வெற்றியை உறுதி செய்து சான்றிதழ் அளிப்பதற்காக அமெரிக்க பாராளுமன்றம் கூடியது. அப்போது டிரம்ப் ஆதரவாளர்கள் பாராளுமன்றத்துக்குள் நுழைந்து பெரும் வன்முறையில் ஈடுபட்டனர்.
இந்த கலவரத்தில் போலீஸ் அதிகாரி உள்பட 5 பேர் உயிரிழந்தனர். இந்த கலவரத்துக்கு டிரம்ப் காரணம் என்றும் அவர் தனது ஆதரவாளர்களை தூண்டியதாகவும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
இந்த விவகாரத்தில் இணையதள பக்கங்களில் வெளியான தேர்தல் முடிவுகள் தொடர்பான அரசியல் ரீதியிலான விளம்பரங்கள் வன்முறைக்கு ஒரு காரணமாக இருந்தது.
தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாக பல கருத்துக்கள் சமூகவலைதளம் மூலம் பரவியது. இந்த விளம்பரங்கள் வன்முறை ஏற்பட காரணமாகவும் அமைந்தன
இந்நிலையில், ஜோ பைடன் வரும் 20-ம் தேதி பதவியேற்க உள்ள நிலையில், தங்கள் இணையதள பக்கங்களில் அரசியல் ரீதியிலான விளம்பரங்களை வெளியிட கூகுள் நிறுவனம் தற்காலிக தடை விதித்துள்ளது.
ஜோ பைடன் பதவியேற்பு, பாராளுமன்ற கட்டிட வன்முறை, டொனால்டு டிரம்ப் பதவிநீக்கம் செய்யும் நடைமுறைகள் தொடர்பான அரசியல் ரீதியிலான விளம்பரங்களை இன்று முதல் வரும் 21-ம் தேதி வரை வெளியிட கூகுள் நிறுவனம் தடை விதித்துள்ளது.
ஜோ பைடன் 20-ம் தேதி பதவியேற்க உள்ள நிலையில், கூகுள் நிறுவனத்தின் இந்த அறிவிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருத்தப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X