search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமெரிக்க அதிபர் தேர்தல்"

    • கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த தேர்தலில் அதிகமான மாநிலங்களில் வெற்றி பெற்றார்.
    • வேட்பாளராக நிற்பதற்கு போதுமான 1968 பிரதிநிதிகளின் ஆதரவை பெற்றுள்ளார்.

    அமெரிக்க அதிபராக ஜோ பைடன் உள்ளார். இந்த மாதம் இறுதியில் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நடைபெற இருக்கிறது. தொடர்ந்து இரண்டாவது முறையாக ஜோ பைடன் களம் இறங்க முடிவு செய்தார். தற்போது அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜனநாயக கட்சி சார்பில் நடைபெற்று வருகிறது.

    கடந்த செவ்வாய்க்கிழமை 10-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் ஒரே நேரத்தில் தேர்தல் நடைபெற்றது. இதில் பெரும்பாலான இடத்தில் ஜோ பைடன் வெற்றி பெற்றார். இந்த நிலையில் ஜார்ஜியாவில் வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் வேட்பாளர் போட்டியில் வெற்றி பெறுவதற்கான போது 1,968 பிரதிநிதிகள் ஆதரவை இவர் பெற்றுள்ளார்.

    இதன்மூலம் அமெரிக்கா தேர்தலில் ஜோடி பைடன் ஜனநாயக கட்சி சார்பில் 2-வது முறையாக போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.

    ஜோ பைடன் 37 வருடத்திற்கு முன் அதிபர் தேர்தல் வேட்பாளருக்கான போட்டியில் களம் இறங்கினார். தற்போது 81 வயதில் 2-வது முறையாக தேர்தலில் போட்டியிட எந்தவித நெருக்கடியும் அவருக்கு ஏற்படவில்லை.

    37 வருடத்திற்கு முன்னதாக போட்டியிட்டபோது வாக்காளர்களின் ஆர்வமின்மை, குறைந்த அளவிலான மதிப்பீடு ஆகியவற்றால் அந்த நேரத்தில் அவரால் ஆதிக்கம் செலுத்த முடியவில்லை.

    ஜோ பைடனை எதிர்த்து குடியரசு கட்சி சார்பில் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார். அதிபர் தேர்தலில் இருவரும் மீண்டும் நேருக்குநேர் சந்திக்க இருக்கின்றனர்.

    • டொனால்டு டிரம்ப், நிக்கி ஹாலே ஆகியோருக்கு இடையே அதிபர் வேட்பாளர் யார் என்கிற போட்டி நிலவி வந்தது.
    • இந்நிலையில், நிக்கி ஹேலி அமெரிக்க அதிபர் வேட்பாளர் போட்டியிலிருந்து விலகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    அமெரிக்காவில் இவ்வருடம் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் போட்டியிட உள்ள தற்போதைய அதிபர் ஜோ பைடனை எதிர்த்து முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் களம் இறங்கி உள்ளார்.

    குடியரசு கட்சியில் டொனால்டு டிரம்ப், நிக்கி ஹாலே ஆகியோருக்கு இடையே அதிபர் வேட்பாளர் யார் என்கிற போட்டி நிலவி வந்தது.

    இந்நிலையில், நேற்று 15 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேச பகுதியில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் 12 மாநிலங்களில் ட்ரம்ப் வெற்றி பெற்றார். மேலும் குடியரசுக் கட்சி பிரதிநிதிகளில் மூன்றில் ஒரு பங்கு ஆதரவை டிரம்ப் பெற்றுள்ளார். ஆனால் வேட்பாளர் தேர்தலில் நான் தோற்றிருந்தாலும், அதிபர் வேட்பாளர் போட்டியில் நான் நீடிப்பேன் என்று இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிக்கி ஹேலி தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், நிக்கி ஹேலி அமெரிக்க அதிபர் வேட்பாளர் போட்டியிலிருந்து விலகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து, குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.

    நவம்பரில் நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில், ஜனநாயகக் கட்சி வேட்பாளராக மீண்டும் களமிறங்கும் தற்போதைய அதிபர் ஜோ பைடனை எதிர்த்து முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் களமிறங்கவுள்ளதாக எதிர்பார்க்கப்படும் நிலையில், அதிபர் தேர்தலில் போட்டி கடுமையாகியுள்ளது.

    அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவி வகித்தபோது ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதராக பொறுப்பு வகித்த நிக்கி ஹேலி, கடந்த 2011 முதல் 2017-ஆம் ஆண்டு வரை தெற்கு கரோலினா ஆளுநராகப் பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் வேட்பாளர் தேர்தலில் டிரம்ப், நிக்கி ஹாலே இடையே போட்டி நிலவுகிறது.
    • தெற்கு மாகாணத்தில் நடந்த தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் ஜோ பைடன் பதவி வகித்து வருகிறார். இந்த ஆண்டு அவரது பதவிக்காலம் முடியவுள்ள நிலையில், வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடக்கவுள்ளது.

    அதிபர் தேர்தலில் வேட்பாளராக போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் கட்சி உறுப்பினர்களின் ஆதரவைப் பெறவேண்டும். அதற்கு மாகாணங்கள் தோறும் வாக்குப்பதிவு நடைபெறும். இரு கட்சிகள் சார்பிலும் நடக்கும் மாநாட்டில் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்டு தங்கள் கட்சியின் அதிபர் வேட்பாளரை தேர்ந்தெடுப்பார்கள்.

    இதற்கிடையே, அமெரிக்க அதிபர் தேர்தல் களம் களைகட்டத் தொடங்கியுள்ளது. குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் வேட்பாளர் தேர்வு நடந்து வருகிறது. இதில் முன்னாள் அதிபர் டிரம்ப், இந்திய வம்சாவளியைச் சோ்ந்தவரும், தெற்கு கரோலினா மாகாண முன்னாள் ஆளுநருமான நிக்கி ஹாலே இடையே போட்டி நிலவுகிறது.

    இந்நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளரை தேர்வு செய்ய தெற்கு கரோலினா மாகாணத்தில் நடந்த தேர்தலில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். தெற்கு மாகாணத்தில் நடந்த வாக்குப்பதிவில் அவர் வெற்றி பெற்றுள்ளார்.

    ஏற்கனவே நியூ ஹாம்ப்ஷையர் மற்றும் லோவா காகசஸ் மாகாணங்களில் நடந்த தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 2011லிருந்து 2017 வரை தென் கரோலினா கவர்னராக இருந்தவர் நிக்கி
    • நிக்கி-மைக்கேல் தம்பதிக்கு ரேனா எனும் மகள், நலின் எனும் மகன் உள்ளனர்

    இவ்வருட இறுதியில் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது.

    இரு கட்சி ஜனநாயக முறை பின்பற்றப்படும் அந்நாட்டில் ஜனநாயக கட்சியை சேர்ந்தவரும் தற்போதைய அதிபருமான ஜோ பைடன் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து குடியரசு கட்சியை சேர்ந்த முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் களமிறங்கி உள்ளார்.

    2011லிருந்து 2017 வரை தென் கரோலினா முன்னாள் கவர்னராகவும், 2017லிருந்து 2018 வரை ஐ.நா. சபைக்கான அமெரிக்க தூதராகவும் பணியாற்றிய நிக்கி ஹாலே, குடியரசு கட்சியில் டொனால்ட் டிரம்பிற்கு எதிராக உட்கட்சி போட்டியில் இறங்கி உள்ளார்.

    ஜனவரி 22 அன்று, 52 வயதான நிக்கி ஹாலே, நியூ ஹாம்ப்ஷையர் (New Hampshire) மாநிலத்தில், சலேம் பகுதியில் உள்ள ஆர்டிசன் ஓட்டலில் தனது ஆதரவாளர்களிடம் பிரசாரம் செய்து வாக்கு சேகரித்து வந்தார்.

    எதிர்பாராத விதமாக, அப்போது அக்கூட்டத்தில் இருந்த ஒருவர் நிக்கி ஹாலேவை நோக்கி, "நீங்கள் என்னை திருமணம் செய்து கொள்வீர்களா?" என கேட்டார்.


    உடனே சிரித்து விட்ட ஹாலே, "எனக்கு வாக்களிப்பீர்களா?" என மென்மையாக கேட்டார்.

    இதற்கு, "நான் டிரம்பிற்கு வாக்களிக்க உள்ளேன்" என அந்த மனிதர் பதிலளித்தார்.

    இதையடுத்து, அவரை அங்கிருந்து வெளியேறுமாறு பொறுமையாக நிக்கி கேட்டு கொண்டார்.

    கூட்டத்தில் உரையாற்றும் போது ஏற்பட்ட எதிர்பாராத நிலைமையை கண்ணியமாக கையாண்ட நிக்கி ஹாலேவை சமூக வலைதளங்களில் பாராட்டி வருகின்றனர்.

    இந்திய வம்சாவளியை சேர்ந்த நிக்கி ஹாலே, திருமணம் ஆனவர். அவரது கணவர் மேஜர். மைக்கேல் ஹாலே.

    இத்தம்பதியினருக்கு ரேனா எனும் மகளும், நலின் எனும் மகனும் உள்ளனர்.


    நேற்றைய நிலவரப்படி குடியரசு கட்சியின் உட்கட்சி போட்டியில் டொனால்ட் டிரம்ப் முன்னிலை வகிக்கிறார். ஆனாலும், போட்டியில் இருந்து நிக்கி ஹாலே பின்வாங்கவில்லை.

    • கடந்த தேர்தல் தோல்வியின் காரணமாக அவரது ஆதரவாளர்கள் பாராளுமன்றத்தை முற்றுகையிட்டனர்.
    • மேல்முறையீடு செய்யும் வகையில் ஜனவரி 4-ந்தேதி வரை தீர்ப்பை நிறுத்தி வைத்துள்ளது.

    கடந்த முறை நடைபெற்ற அமெரிக்க அதிபருக்கான போட்டியில் டொனால்டு டிரம்ப் போட்டியிட்டார். ஏற்கனவே அதிபர் பதவியில் இருந்து 2-வது முறையாக போட்டியிட்ட அவர், ஜோ பைடனிடம் தோல்வியடைந்தார்.

    இருந்த போதிலும் டொனால்டு தனது தோல்வியை ஏற்க மறுத்து வந்தார். அவரது ஆதரவாளர்களும் டொனால்டு டிரம்ப் தோல்வியை ஏற்க மறுத்தனர். மேலும், அமெரிக்க பாராளுமன்றத்தில் நுழைந்து போராட்டம் நடத்தினர்.

    இந்த போராட்டத்தில் டொனால்டு டிரம்பிற்கு பங்கு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பாக அமெரிக்காவின் பல்வேறு மாகாணத்தில் உள்ள நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டது.

    அந்த வகையில் கொலராடோவில் உள்ள நீதிமன்றத்தில் வழக்க தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை முடிவில், டொனால்டு டிரம்ப் மீண்டும் அமெரிக்க அதிபர் பதவிக்கு தகுதியற்றவர் என நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது.

    மேலும், குடியரசு கட்சி சார்பில் யார் வேட்பாளர் என்பதற்கான தேர்தல் நடைபெறும்போது, வாக்குச்சீட்டில் அவரது பெயர் இடம் பெறக்கூடாது. ஒருவேளை பெயர் இடம் பெற்றாலும் அவருக்கு வாக்களித்திருந்தால் அது கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது எனத் தெரிவித்துள்ளது.

    இருந்தபோதிலும் அதிபருக்கான முக்கியமான தேர்தலில் தடைவிதிக்கப்படவில்லை. இந்த தீர்ப்பை எதிர்த்துள்ள டொனால்டு தரப்பினர், மேல்முறையீடு செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.

    மேல்முறையீடு செய்யும் வகையில் இந்த தீர்ப்பு அடுத்த ஆண்டு ஜனவரி 4-ந்தேதி வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    • இரு கட்சி வேட்பாளர்களுக்கே மாறி மாறி வாக்களித்து வருகின்றனர்
    • கென்னடி ஜூனியருக்கு 19 சதவீத வாக்குகள் கிடைக்கலாம் என ஆய்வு தெரிவிக்கின்றது

    அமெரிக்காவில் அடுத்த வருடம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது.

    இரு கட்சி ஜனநாயக முறை கடைபிடிக்கப்படும் அமெரிக்காவில், தற்போது ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடன் (80) அதிபராக பதவி வகிக்கிறார். அவரை எதிர்த்து குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் (77) தீவிரமாக ஆதரவு சேகரித்து வருகிறார்.

    பல வருடங்களாக இரண்டு கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்களுக்கே அமெரிக்க மக்கள் மாறி மாறி வாக்களித்து வருகின்றனர்.

    இந்நிலையில், இரு முன்னணி வேட்பாளர்களை விட புதிய மற்றும் இளைய வயது வேட்பாளர்களை அமெரிக்கர்கள் களத்தில் காண விரும்புவதாக ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது.

    அமெரிக்காவில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு பொருளாதார சிக்கல்கள் உருவெடுத்துள்ளது. பல துறைகளில் வேலைவாய்ப்புகள் குறைய ஆரம்பித்துள்ளன. விலைவாசி கட்டுக்கு அடங்காமல் உயர்ந்து வருகிறது. இஸ்ரேல்-ஹமாஸ் போர் மற்றும் ரஷிய-உக்ரைன் போர் ஆகியவற்றில் அமெரிக்காவின் நிலைப்பாடு பல விமர்சனங்களை எழுப்பி உள்ளது.

    இப்பின்னணியில், 2024 அதிபர் தேர்தல் நடைபெற போகிறது.

    இரு கட்சிகளின் செயல்பாடுமே திருப்தி அளிப்பதாக இல்லை என்றும் இரு கட்சி வேட்பாளர்களுக்கே மாறி மாறி வாக்களித்து வந்ததால் சலிப்படைந்து விட்டதாகவும், மூன்றாவதாக ஒரு கட்சி தேவை எனும் மனநிலைக்கு அமெரிக்க மக்கள் வந்துள்ளதாகவும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

    இரு கட்சியை சாராமல் இதுவரை மூன்றாவதாக எந்த வேட்பாளரும் அங்கு வென்றதில்லை.

    1992ல் தொழிலதிபர் ராஸ் பெரோ (Ross Perot) இரு கட்சிகளையும் சாராத சுயேட்சை வேட்பாளராக 19 சதவீத வாக்குகள் வாங்கியிருந்தார் என்பதும் 2000ல் ரால்ஃப் நாடர் (Ralph Nader) 3 சதவீத வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

    தற்போது சுயேட்சை வேட்பாளராக ராபர்ட் எஃப் கென்னடி ஜூனியர், (Robert F. Kennedy Jr) மூன்றாவது வேட்பாளராக களம் இறங்கினால் உருவாகும் மும்முனை போட்டியில் 20 சதவீத வாக்குகளை அவர் வெல்ல கூடும் என்றும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது. தேர்தல் நெருங்கும் போது அவருக்கு ஆதரவு கூடலாம் என்றும் மக்கள் நினைக்கின்றனர்.

    நீண்ட காலமாக உள்ள அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல் தலைவர்களிடம் பொதுமக்களுக்கு - குறிப்பாக இளம் வயதினருக்கு - ஒரு சலிப்பு ஏற்பட்டு விடுவதாகவும், அதனால் புதிய முகங்களையே வேட்பாளர்களாக தேட தொடங்குவதாகவும் அரசியல் நிபுணர்களும், உளவியல் வல்லுனர்களும் கருத்து தெரிவிக்கின்றனர். 

    • டொனால்ட் ட்ரம்பிற்கு அடுத்த இடத்தில் விவேக் ராமசாமி உள்ளார்
    • மலையேறுதலை போன்ற சவாலான போட்டி இது என பென்ஸ் கூறினார்

    அமெரிக்காவில் அடுத்த வருடம் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது.

    அமெரிக்காவில், ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ பைடன் தற்போதைய அதிபராக உள்ளார். வரவிருக்கும் தேர்தலில், அவரை எதிர்த்து குடியரசு கட்சியின் சார்பில் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிட உள்ளார். ஆனால், டொனால்ட் டிரம்ப் மீது பல வழக்குகள் உள்ளதால், அவர் அதிபர் வேட்பாளராக களம் இறங்குவதில் உறுதியற்ற தன்மை நீடிக்கிறது.

    இதனால், அக்கட்சியில் அவருக்கு அடுத்து பல முன்னணி தலைவர்கள் ஆர்வமுடன் நாடு முழுவதும் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர். தற்போதைய நிலவரப்படி, டொனால்ட் டிரம்பிற்கு அடுத்த இடத்தில் இந்திய வம்சாவளி தொழிலதிபரான விவேக் ராமசாமி முன்னிலை வகிக்கிறார்.

    அந்நாட்டு மரபுப்படி அமெரிக்காவிற்கு உள்ள சிக்கல்கள், அந்நாடு சந்தித்து வரும் சவால்கள், அவற்றுக்கான தங்களது தீர்வுகள் ஆகியவற்றை பல கூட்டங்களில் வேட்பாளர் போட்டியில் இடம்பெறுபவர்கள் விளக்க வேண்டும். இதில் அவர்களுக்கு கிடைக்கும் மக்கள் ஆதரவை பொறுத்து அவர்களுக்கு இறுதி வேட்பாளராக களம் இறங்கும் வாய்ப்பு வழங்கப்படும்.

    குடியரசு கட்சியின் சார்பில் முன்னாள் அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் (Mike Pence), 2024 அதிபர் தேர்தலில் போட்டியிட விரும்பி களத்தில் இருந்தார்.

    இந்நிலையில், தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு வந்த மைக் பென்ஸ், அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடைபெற்ற குடியரசு கட்சியின் யூதர்களுக்கான கூட்டமைப்பில் கலந்து கொண்டு பேசிய போது, "விரிவான கலந்துரையாடல்கள் மற்றும் சந்திப்புகளுக்கு பிறகு நான் போட்டியிலிருந்து விலகுகிறேன். மலையேறுதலை போன்ற கடினமான சவாலான போட்டி இது என்பது தெரிந்தே இருந்தது. விலகுவதால் எனக்கு எந்த வருத்தமுமில்லை" என அறிவித்துள்ளார்.

    அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவி வகித்த போது, அவரது நம்பிக்கைக்குரியவராக கருதப்பட்ட மைக் பென்ஸ், தற்போது போதுமான மக்கள் ஆதரவு இல்லாததாலும், நிதி நெருக்கடியினாலும் இவ்வாறு முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதனால் அவரது ஆதரவாளர்கள் வருத்தமடைந்துள்ளனர்.

    • விவேக் ராமசாமிக்கு அமெரிக்கா முழுவதும் ஆதரவு பெருகி வருகிறது
    • எதிரிக்கு புரிந்த மொழியில் பேச வேண்டும் என்றார் விவேக்

    அமெரிக்காவில் அடுத்த வருடம், அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது.

    ஜனநாயக கட்சியை சேர்ந்த தற்போதைய அதிபர் ஜோ பைடனுக்கு எதிராக குடியரசு கட்சியை சேர்ந்த முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் களத்தில் உள்ளார். டொனால்ட் டிரம்பின் மீது பல வழக்குகள் உள்ளதால், அவர் வேட்பாளராக நிற்பது உறுதியாகவில்லை. இதனால் அக்கட்சியில் அவருக்கு அடுத்த இடத்தில் களத்தில் உள்ள இந்திய வம்சாவளி தொழிலதிபரான விவேக் ராமசாமி, தீவிரமாக தனக்கென ஆதரவு தேடி பிரச்சாரம் செய்து வருகிறார்.

    இதற்கிடையே பாலஸ்தீன ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழிக்க, அந்நாட்டின் காசா பகுதியில் இஸ்ரேல் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. இப்போரில் இஸ்ரேலை அமெரிக்கா ஆதரிக்கிறது.

    இந்நிலையில், அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில், குடியரசு கட்சியின் யூதர்களுக்கான கூட்டமைப்பில் உரையாற்றிய விவேக் ராமசாமி, இஸ்ரேல்-ஹமாஸ் போர் குறித்து பேசினார்.

    அப்போது அவர் தெரிவித்ததாவது:

    தனது கையில் உள்ள அனைத்து அதிகாரங்களையும், பலத்தையும் பிரயோகித்து ஹமாஸ் அமைப்பினரை இஸ்ரேல் முற்றிலுமாக நசுக்க வேண்டும். இஸ்ரேல் யூதர்களின் நாடு. புனித நோக்கங்களுக்காக, அந்த புனித தலத்தை புனித பரிசாக பெற்றுள்ளனர் யூதர்கள். பலம் எனும் ஒரு மொழிதான் எதிரிகளுக்கு புரியும் என்றால் தன் நாட்டை காக்க இஸ்ரேல் அதனை பிரயோகிக்க தயங்க கூடாது. இரு நாடு தத்துவம் சரிப்படாது என இஸ்ரேல் கருதினால் அதை செயல்படுத்தலாம். பாலஸ்தீனர்களை தங்கள் நாட்டிற்குள் நுழையவும், வசிக்கவும் அரபு நாடுகள் அனுமதிக்க வேண்டும். பாலஸ்தீனர்களை பொறுப்பில் எடுத்து கொள்ள தயங்கி, தங்கள் நாடுகளுக்குள் சேர்க்கவும் மறுத்து, இஸ்ரேலை மட்டும் கண்டிக்கும் வழிமுறையை அரபு நாடுகள் கைவிட வேண்டும். எந்த அரசியல்வாதியும் இந்த உண்மையை பேச விரும்புவதில்லை; ஆனால், நான் பேசுவேன். ஹமாஸ் அமைப்பினரின் 100 முதன்மை தலைவர்களின் தலைக்கு விலை வைத்து மீண்டும் ஒரு "அக்டோபர் 7" சம்பவம் நடைபெறாதவாறு செய்து, தனது நாட்டினருக்கான எதிர்கால எல்லையை பலப்படுத்த இஸ்ரேலால் முடியும் என நான் நம்புகிறேன்.

    இவ்வாறு விவேக் பேசியுள்ளார்.

    காசாவில் ஹமாஸ் அமைப்பினருடனான தங்களது போர் புதிய கட்டத்தை எட்டியுள்ளதாகவும், இனி வான், தரை மற்றும் கடல் என அனைத்து வழியாகவும் தாக்குதலில் ஈடுபட போவதாகவும் இஸ்ரேல் ராணுவ படை தெரிவித்துள்ளது. இப்பின்னணியில் விவேக் ராமசாமியின் இந்த அதிரடி கருத்து அரசியல் விமர்சகர்களால் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

    • அதிபர் தேர்தலில் போட்டியிட இந்திய வம்சாவளியை சேர்ந்த நிக்கி ஹாலே, ஹர்ஷ் வர்தன், விவேக் ராமசாமி ஆகியோரும் விருப்பம் தெரிவித்து இருக்கின்றனர்.
    • தமிழ்நாட்டின் ராஜபாளையம், முகவூரை பூர்வீகமாக கொண்டவர் சிவா அய்யாதுரை.

    சென்னை:

    அமெரிக்க அதிபர் தேர்தல் அடுத்த ஆண்டு (2024) நவம்பர் மாதம் 5-ந் தேதி நடக்க இருக்கிறது. இந்த தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடன் மீண்டும் போட்டியிட உள்ளார். இதேபோல், குடியரசு கட்சியின் வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பும் களம் இறங்க இருக்கிறார்.

    மேலும் அதிபர் தேர்தலில் போட்டியிட இந்திய வம்சாவளியை சேர்ந்த நிக்கி ஹாலே, ஹர்ஷ் வர்தன், விவேக் ராமசாமி ஆகியோரும் விருப்பம் தெரிவித்து இருக்கின்றனர். இந்த 3 பேரும் குடியரசு கட்சியின் சார்பில் போட்டியிட போவதாக அறிவித்து உள்ளனர். இவர்களில் யார் வேட்பாளர் என்பதை கட்சி உறுப்பினர்கள்தான் தேர்ந்தெடுக்க வேண்டும்.

    இந்த நிலையில் இந்திய வம்சாவளி வரிசையில் 4-வது நபராக சிவா அய்யாதுரை என்பவர் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட போவதாக அறிவித்து இருக்கிறார். இந்திய வம்சாவளியை சேர்ந்த மற்ற 3 பேரும் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்திருந்த நிலையில், விஞ்ஞானியும், தொழில் அதிபருமான சிவா அய்யாதுரையோ சுயேச்சையாக போட்டியிட உள்ளார்.

    தமிழ்நாட்டின் ராஜபாளையம், முகவூரை பூர்வீகமாக கொண்டவர் சிவா அய்யாதுரை. இவருடைய தந்தை பெயர் வெள்ளையப்பன் நாடார். தாயார் மீனாட்சியம்மாள். சிவா அய்யாதுரையின் தாயார் தூத்துக்குடி மாவட்டம் பரமன்குறிச்சியை சேர்ந்தவர்.

    அமெரிக்க நடிகை பிரான் டிரெஷ்சரை திருமணம் செய்த சிவா அய்யாதுரை, அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்புக்கு மிகவும் நெருக்கமானவர். உள்அலுவலக மின்னஞ்சல் (இ-மெயில்) முறையை கண்டுபிடித்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • விவேக்கிற்கு அபூர்வா எனும் மனைவியும் 2 மகன்களும் உள்ளனர்
    • ஊதியமாக ரூ.83 லட்சம் என்பது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது

    அமெரிக்காவில் அடுத்த வருடம் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் குடியரசு கட்சியின் சார்பாக உள்ள போட்டியாளர்களில் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு அடுத்த நிலையில் இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமி களத்தில் தீவிரமாக உள்ளார். அவருக்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகுகிறது.

    அமெரிக்காவின் எதிர்காலம் குறித்த தனது அதிரடி திட்டங்களால் போட்டியாளர்களிடையே வேகமாக முன்னேறி வரும் விவேக் ராமசாமிக்கு திருமணமாகி அபூர்வா எனும் மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர்.

    இந்நிலையில் விவேக் தம்பதியினர் தங்கள் குழந்தைகளை கவனித்து கொள்ள ஒரு பணிப்பெண்ணை தேடி வருகிறார்கள்.

    இது குறித்து அவர்கள் ஒரு விளம்பரம் வெளியிட்டுள்ளனர். அந்த விளம்பரத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

    ஆர்வமும் துடிப்பும் வழிமுறையாக உள்ள ஒரு குடும்பத்துடன் இணைந்து, அவர்களின் உற்சாகமான குடும்ப நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு அவர்களின் குழந்தைகளின் வளர்ச்சியிலும் கவனம் செலுத்தி பணியாற்ற இது ஒரு அரிய வாய்ப்பு. வார காலத்தில் 96 மணி நேரம் வரை வேலை இருக்கும். அதற்கு பிறகு ஒரு முழு வாரம் விடுமுறை. குழந்தைகளுக்கு தடையின்றி தினசரி நடவடிக்கைகள் அமைவதை உறுதி செய்ய இப்பணியில் சேர்பவர் எங்களின் தலைமை சமையற்காரர், பிற ஊழியர்கள், வீட்டின் பாதுகாவலர்கள் மற்றும் மெய்காப்பாளர்கள் ஆகியோருடன் இணைந்து பணியாற்ற தயாராக இருக்க வேண்டும். குழந்தைகளுக்கான விளையாட்டு இடங்கள், அவர்களின் பொம்மைகள், ஆடைகள் ஆகியவற்றை பராமரித்து குழந்தைகள் ஒரு கட்டுக்கோப்பான சூழலில் வளர்வதை உறுதி செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    விவேக் ராமசாமியின் பெயரோ அல்லது அவரது குடும்பத்தினர் எவரின் பெயரோ வெளியிடாமல் ஒரு வேலை வாய்ப்பிற்கான வலைதளத்தில் இந்த விளம்பரம் வெளியிடப்பட்டாலும், இது விவேக் ராமசாமியின் குடும்ப விளம்பரம் என தகவல்கள் உறுதி செய்கின்றன.

    இந்த பணிக்கு ஊதியமாக இந்திய மதிப்பில் ரூ.83 லட்சம் ($100,000) வழங்கப்படும் என விளம்பரத்தில் வெளியிடப்பட்டுள்ளதால் சமூக வலைதளங்களில் பலர் - குறிப்பாக இந்திய தாய்மார்கள் - சுவாரசியமான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    • டொனால்ட் டிரம்ப் மீது பல மாநிலங்களில் பல வழக்குகள் பதிவாகியுள்ளது
    • 33-வயதில் தாமஸ் ஜெபர்ஸன் சுதந்திர பிரகடனத்தை எழுதினார்

    அமெரிக்காவில், அடுத்த வருடம் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது.

    இத்தேர்தலில் வெற்றி பெற ஆளும் ஜனநாயக கட்சியின் சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடனும் குடியரசு கட்சியின் சார்பில் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் தீவிரமாக போட்டி போட்டு வருகின்றனர். ஆனால், டொனால்ட் டிரம்ப் மீது பதிவாகியுள்ள கிரிமினல் வழக்குகளின் தீர்ப்பை பொறுத்தே அவரது தகுதி நிர்ணயிக்கப்படும் எனும் நிலை உள்ளது.

    இதனால் குடியரசு கட்சியில் அவருக்கு அடுத்த நிலையில் உள்ள இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்கரான 38-வயதான விவேக் ராமசாமிக்கு ஆதரவு நாளுக்கு நாள் கூடி வருகிறது. பல்வேறு பிரச்சினைகள் குறித்து அவர் தெரிவித்து வரும் ஆணித்தரமான, துணிச்சலான கருத்துக்களால் அவருக்கு எதிர்ப்பும் அதிகரித்து வருகிறது.

    இந்நிலையில் ஒரு தனியார் தொலைக்காட்சி பேட்டியில் தனது மீதான விமர்சனங்களை குறித்து விவேக் ராமசாமி கருத்து தெரிவித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:

    எனது வளர்ச்சி பலருக்கு பொறாமையை ஏற்படுத்தியுள்ளது. எனது குறைந்த வயது காரணமாக நான் இந்த பதவிக்கு தகுதியானவன் அல்ல என சிலர் நினைக்கின்றனர். சுதந்திர பிரகடனத்தை (Declaration of Independence) எழுதும் போது அப்போதைய அதிபர் தாமஸ் ஜெபர்ஸன், 33 வயதே ஆனவர் என்பதை நாம் அறிவோம். குறைந்த வயதுள்ளவர்கள் அவர்களது வாழ்நாளில் இனிமேல்தான் சிறப்பான நாட்களை எதிர்கொள்ள போகிறார்கள். எனவே, தனது வாழ்நாளின் சிறப்பான நாட்களை எதிர்கொள்ளும் வாய்ப்புள்ள ஒருவர்தான் ஒரு நாட்டிற்கு கிடைக்க போகும் சிறப்பான எதிர்கால நாட்களையும் உருவாக்கி தர முடியும். சிறப்பான தகுதி, மேன்மையை தேடுதல், பொருளாதார வளர்ச்சி, கருத்து சுதந்திரம் மற்றும் வெளிப்படையான விவாதம் போன்ற அடிப்படை விஷயங்களைத்தான் அமெரிக்கர்கள் இன்னமும் மதிக்கிறார்கள். இதனை நிலைநிறுத்துவதே எனது லட்சியம். வெறும் விமர்சனங்களை மட்டுமே முன்வைத்து அரசியல் செய்வதை நான் விரும்பவில்லை.

    இவ்வாறு விவேக் தெரிவித்தார்.

    கணினி மென்பொருள் துறையிலும், பிற உயர் தொழில்நுட்ப துறையிலும் இந்திய இளைஞர்கள் மிகவும் ஆர்வத்துடன் பெற போராடும் அமெரிக்காவின் ஹெச்-1பி விசா எனும் அந்நாட்டின் உள்நுழையும் நடைமுறையை நீக்கி விடுவேன் என சில தினங்களுக்கு முன் விவேக் அறிவித்தார். இதற்கு இந்தியர்களிடையே பெரும் எதிர்ப்பு கிளம்பியது குறிப்பிடத்தக்கது.

    • தேர்தல் நேரத்தில் பைடன் 82 நெருங்குவார்; டிரம்ப் 78 நிறைவு செய்வார்
    • எனது பெற்றோர் நீண்ட காலம் உயிர் வாழ்ந்தனர் என்றார் டிரம்ப்

    அமெரிக்காவில் அடுத்த வருடம் அதிபர் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதில் போட்டியிட முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் (77) மற்றும் தற்போதைய அதிபர் ஜோ பைடன் (81) ஆகியோர் களத்தில் இருக்கின்றனர். தேர்தல் நெருங்கும் நேரத்தில் பைடன் 82 வயதை நெருங்குவார் என்பதும் டிரம்ப் 78 வயதை நிறைவு செய்வார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், அமெரிக்காவில் வாக்காளர்களிடம் ஆங்காங்கே நடத்தப்படும் கருத்து கணிப்புகளில் பேட்டி காணப்படும் 3 பேரில் ஒருவர், ஜோ பைடனின் அதிக வயது குறித்தும், அதனால் அவரால் மீண்டும் அதிபராக திறம்பட செயல்பட முடியுமா என்பது குறித்தும் ஆழ்ந்த சந்தேகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர் என தெரிய வந்துள்ளது.

    "ஜோ பைடன் மிகவும் வயதானவராகி விட்டதாக நான் நினைக்கவில்லை. ஆனால் அவர் அப்பதவிக்கு திறனில்லாதவர்; அதுதான் மிக பெரிய பிரச்சனை என நான் நினைக்கிறேன். எனது பெற்றோர் நீண்ட வயது உயிர் வாழ்ந்தனர். எனது மரபணுவில் அது உள்ளது. எனவே நான் வயதை ஒரு பொருட்டாக கருதவில்லை" என இது குறித்து ஒரு பேட்டியில் டொனால்ட் டிரம்ப் கூறினார்.

    இரண்டு போட்டியாளர்களும் மது அருந்துவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    ×