என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனாவுக்கு எதிரான போரில் ஒத்துழைப்பு: ராணி 2-ம் எலிசபெத், டிரம்ப் ஆலோசனை
Byமாலை மலர்2 July 2020 5:34 AM GMT (Updated: 2 July 2020 5:34 AM GMT)
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், இங்கிலாந்து ராணி 2ம் எலிசபெத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது கொரோனா வைரஸ் பாதிப்பை எதிர்கொள்வதில் இரு நாடுகளின் ஒத்துழைப்பு குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர்.
வாஷிங்டன் :
கொரோனா வைரஸ் பாதிப்பில் உலக நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அங்கு இந்த வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 27 லட்சத்தை கடந்துள்ளது. அதேபோல் உயிரிழப்பும் ஒரு லட்சத்து 29 ஆயிரத்தை தாண்டியது. அதேபோல் இங்கிலாந்திலும் கொரோனா வைரஸ் பாதிப்பு மிகத் தீவிரமாக உள்ளது. அங்கு நேற்று மதியம் நிலவரப்படி கொரோனா பார்த்தவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 14 ஆயிரத்து 159 ஆக இருந்தது. பலி எண்ணிக்கை 43 ஆயிரத்து 815 ஆக இருந்தது. இந்த நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், இங்கிலாந்து ராணி 2ம் எலிசபெத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது கொரோனா வைரஸ் பாதிப்பை எதிர்கொள்வதில் இரு நாடுகளின் ஒத்துழைப்பு குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர்.
இதுகுறித்து வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் ஜட் டீரே கூறுகையில் “கொரோனா வைரசுக்கு எதிரான போரில் இரு நாடுகளின் ஒத்துழைப்பு குறித்தும் உலகளாவிய பொருளாதாரங்களை மீண்டும் திறப்பது குறித்தும் ஜனாதிபதி டிரம்பும், ராணி 2ம் எலிசபெத்தும் ஆலோசனை நடத்தினர். மேலும் கொரோனா காலத்தில் இரு நாடுகளின் உறவும் முன்பைவிட வலுவாக இருப்பதை இரு நாட்டுத் தலைவர்களும் உறுதி செய்தனர்” எனக் கூறினார். ராணி 2ம் எலிசபெத் உடனான உரையாடலின் போது இங்கிலாந்திலும் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி டிரம்ப் இரங்கல் தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் பாதிப்பில் உலக நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அங்கு இந்த வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 27 லட்சத்தை கடந்துள்ளது. அதேபோல் உயிரிழப்பும் ஒரு லட்சத்து 29 ஆயிரத்தை தாண்டியது. அதேபோல் இங்கிலாந்திலும் கொரோனா வைரஸ் பாதிப்பு மிகத் தீவிரமாக உள்ளது. அங்கு நேற்று மதியம் நிலவரப்படி கொரோனா பார்த்தவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 14 ஆயிரத்து 159 ஆக இருந்தது. பலி எண்ணிக்கை 43 ஆயிரத்து 815 ஆக இருந்தது. இந்த நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், இங்கிலாந்து ராணி 2ம் எலிசபெத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது கொரோனா வைரஸ் பாதிப்பை எதிர்கொள்வதில் இரு நாடுகளின் ஒத்துழைப்பு குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர்.
இதுகுறித்து வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் ஜட் டீரே கூறுகையில் “கொரோனா வைரசுக்கு எதிரான போரில் இரு நாடுகளின் ஒத்துழைப்பு குறித்தும் உலகளாவிய பொருளாதாரங்களை மீண்டும் திறப்பது குறித்தும் ஜனாதிபதி டிரம்பும், ராணி 2ம் எலிசபெத்தும் ஆலோசனை நடத்தினர். மேலும் கொரோனா காலத்தில் இரு நாடுகளின் உறவும் முன்பைவிட வலுவாக இருப்பதை இரு நாட்டுத் தலைவர்களும் உறுதி செய்தனர்” எனக் கூறினார். ராணி 2ம் எலிசபெத் உடனான உரையாடலின் போது இங்கிலாந்திலும் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி டிரம்ப் இரங்கல் தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X