என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • புல்லட் ரெயில் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி 2015-ம் ஆண்டில் அறிவித்தார்.
    • இந்தத் திட்டத்துக்கு 2017-ம் ஆண்டு செப்டம்பரில் அடிக்கல் நாட்டப்பட்டது.

    அகமதாபாத்:

    மும்பை மற்றும் அகமதாபாத் நகரங்களுக்கு இடையே அதிவேகம் கொண்ட புல்லட் ரெயில் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி 2015-ம் ஆண்டில் அறிவித்தார். இந்தத் திட்டத்துக்கு 2017-ம் ஆண்டு செப்டம்பரில் அடிக்கல் நாட்டப்பட்டது.

    இவ்விரு நகரங்களுக்கு இடையேயான 508 கி.மீ. தூரத்திற்கு 12 ரெயில் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. ஜப்பான் தொழில் நுட்பத்தில் அமைக்கப்படும் புல்லட் ரெயில் திட்டத்தின் மதிப்பீடு ரூ.2 லட்சம் கோடி.

    இந்நிலையில், நாட்டின் முதல் புல்லட் ரெயில் எப்போது இயக்கப்படும் என மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

    குஜராத்தில் கண்பத் பல்கலைக்கழகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த கருத்தரங்கு மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் பேசியதாவது:

    புல்லட் ரெயில் திட்டத்திற்கான அனைத்துப் பணிகளும் அதிவேகமாக நடைபெற்று வருகிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். குஜராத்தில் அதன் பணிகள் திறம்பட நடைபெற்று வருகின்றன.

    ரெயில் தண்டவாள பாதைகள் அமைப்பது, மின்சார வினியோகம் என அனைத்துப் பணிகளும் துரித வேகத்தில் நடக்கிறது.

    சமீபத்தில் ஜப்பான் மந்திரி நகானோ குஜராத்திற்கு வந்திருந்தார். இந்தத் திட்டத்தில் ஏற்பட்டு வரும் முன்னேற்றங்கள் குறித்து கேட்டறிந்தார்.

    ஆகஸ்ட், 2027-ம் ஆண்டு புல்லட் ரெயில் சேவையை தொடங்க வேண்டும். மக்கள் சேவைக்கு அதை அளிக்க வேண்டும் என்பது எங்களின் இலக்காக இருக்கிறது என தெரிவித்தார்.

    • மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா, இலங்கையில் நடந்து வருகிறது.
    • முதலில் ஆடிய நியூசிலாந்து 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 227 ரன்கள் எடுத்தது.

    கவுகாத்தி:

    மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது.

    அசாம் மாநிலம் கவுகாத்தியில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து, வங்கதேசம் அணிகள் மோதின. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 227 ரன்கள் எடுத்தது. சோபி டெவைன் 63 ரன்னும், புரூக் ஹாலிடே 69 ரன்னும், மேடி க்ரீன் 25 ரன்னும் எடுத்தனர்.

    வங்கதேசம் சார்பில் ரெபேயா கான் 3 விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து, 228 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேசம் களமிறங்கியது. நியூசிலாந்து அணியினரின் துல்லிய பந்துவீச்சில் சிக்கி விரைவில் விக்கெட்களை இழந்தது. அதிகபட்சமாக பாஹிமா கதுன் 34 ரன்னும், ரெபேயா கான் 25 ரன்னும் எடுத்தனர்.

    இறுதியில், வங்கதேசம் 39.5 ஓவரில் 127 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 100 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற நியூசிலாந்து நடப்பு தொடரில் முதல் வெற்றியைப் பதிவு செய்தது.

    நியூசிலாந்து சார்பில் ஜெஸ் கெர், லீ தகுகு தலா 3 விக்கெட்டும், ரோஸ்மேரி 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

    • Watch Railway Cop Snatches Woman's Phone On Train To Teach Lesson Video Viral
    • போலீஸ் அதிகாரி என்பது தெரியவந்ததால் பெண் பெருமூச்சு.

    ரெயிலில் பயணம் செய்யும்போது, ரெயில்வே போலீசார் காவலுக்கு இருந்தாலும் பயணிகள் தங்களை பாதுகாத்துக் கொள்ளும் வகையில் சுதாகரிப்பாக இருக்க வேண்டும். எப்போதும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். ஜன்னல் அருகே இருப்பவர்கள் தங்கச் செயின் அணிந்திருந்தால் கவனமாக இருக்க வேண்டும். செல்போனை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என ரெயில் அதிகாரிகள் வழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

    இருந்தபோதிலும் சிலர் அஜாக்கிரதையாக இருக்கிறார்கள். அப்படி ஒரு பெண் அஜாக்கிரதையாக இருப்பதை கவனித்த ஆர்.பி.எஃப். அதிகாரி ரிது ராஜு சவுத்ரி என்பவர், ரியலாக பாடம் கற்பிக்க வரும்பினார்.

    அந்த பெண் போனில் மூழ்கியிருக்க, அதிகாரி ரிது அதை கவனித்து சற்றென்று பறித்துவிடுவார். இதனால் அந்த பெண் பயணி அதிர்ந்து வெளியில் பார்ப்பார்.

    அதன்பின் அந்த அதிகாரி அந்த பெண்ணிடம், கவனமாக இருக்க வேண்டும் என தெரிவித்தார். இந்த வீடியோ வைரலாகி வெளியாகி, அதிகாரிக்கு பாராட்டு தெரிவித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    • இந்த வருடத்திற்கான அமைதிக்கான நோபல் பரிசுக்குக்கு வெனிசுலா நாட்டின் மரியா கொரினா மச்சாடோ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
    • நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் காத்திருந்தார்.

    உலகின் உயரிய அங்கீகாரமாகக் கருதப்படும் நோபல் பரிசு மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம் மற்றும் அமைதி ஆகியவற்றுக்காக வழங்கப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் 2025-ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி இன்று அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வருடத்திற்கான அமைதிக்கான நோபல் பரிசுக்குக்கு வெனிசுலா நாட்டின் மரியா கொரினா மச்சாடோ (Maria Corina Machado) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் தற்போது வெனிசுலா நாட்டு அரசியல்வாதியான இவர் அந்நாட்டின் எதிர்கட்சித் தலைவராக உள்ளார்.

    முன்னதாக இந்தியா- பாகிஸ்தான் உள்ளிட்ட 7 போர்களை கடந்த 6 மாதங்களில் நிறுத்தியதாகவும் அதனால் தனக்கே அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப், வழி மேல் விழி வைத்து காத்திருந்த நிலையில் அவரது கனவு பொய்த்துள்ளது.

    அமைதியை விட அரசியலுக்கு முக்கியத்துவம் என்பதை மீண்டும் ஒருமுறை நோபல் கமிட்டி நிரூபித்துள்ளது என வெள்ளை மாளிகை விமர்சித்துள்ளது.

    இந்நிலையில் எனக்கு வழங்கிய அமைதிக்கான நோபல் பரிசை ட்ரம்புக்கும் அர்ப்பணிக்கிறேன் என நோபல் பரிசு வென்ற வெனிசுலா எதிர்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ கூறினார்.

    அதில் கூறியதாவது:-

    எனக்கு வழங்கிய அமைதிக்கான நோபல் பரிசை வெனிசுலா மக்களுக்கும், எனக்கு தொடர்ந்து உறுதியான ஆதரவை அளித்துவரும் அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கும் அர்ப்பணிக்கிறேன்.

    இவ்வாறு மரியா கொரினா மச்சாடோ கூறினார்.

    • காபூல் நகர் மீது பாகிஸ்தான் ராணுவம் வான்வழி தாக்குதல்.
    • தாக்குதலில் காயம், சேதம் ஏற்பட்டதாக என்பது தெரியவில்லை.

    ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடந்து வருகிறது. இதற்கிடையே ஆப்கானிஸ்தானில் செயல்படும் தெக்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் அமைப்பினர் அடிக்கடி பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.

    இதற்கு பாகிஸ்தானும் பதிலடி கொடுத்து வருகிறது. இந்த நிலையில் ஆப்கானிஸ்தானுக்குள் தெக்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் அமைப்பினரை குறிவைத்து பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல் நடத்தி உள்ளது.

    தலைநகர் காபூலின் கிழக்கு பகுதியில் தெக்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் அமைப்பு தலைவர் நூர் வாலி மெஹ்சுத்தை குறிவைத்து வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இந்த தாக்குதலில் இருந்து நூர் வாலி தப்பி பாதுகாப்பாக இருப்பதாகவும், அவரது மகன் கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே காபூலில் 2 சக்தி வாய்ந்த குண்டு வெடிப்புச் சத்தங்கள் கேட்டது என்றும், துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடந்தது என்றும் பொதுமக்கள் தெரிவித்தனர். நகரின் வான்வெளியில் ஒரு போர் விமானத்தின் சத்தம் கேட்டதாகவும் தெரிவித்தனர்.

    இதற்கிடையே ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதியில் உள்ள மார்க்கெட் மீதும் குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளது.

    பாகிஸ்தானின் இந்த தாக்குதல் முன்னெப்போதும் இல்லாதவை, கொடூரனமாவை, தங்களுடைய வான்வெளியை மீறியதாக பாகிஸ்தான் மீது தலிபான் அரசு குற்றம்சாட்டியுள்ளது.

    அரசின் தலைமை செய்திதொடர்பாளர் ஜபிகுல்லா முஜாஹித் கூறுகையில் "அந்த நேரத்தில் அங்கு காயம் சேதம் ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை. அது ஒரு விபத்து. இது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்" என்றார்.

    ஆனால், ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகம் இன்று "இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான்தான் பொறுப்பு. கிழக்கு மாகாணமான பாக்தியாவிலும் தாக்குதல் நடத்தப்பட்டது" எனத் தெரிவித்துள்ளது. காபூலிலில் விமானங்கள் சுட்டுவீழ்த்த முடியாத வகையில் எப்படி பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது என்பது குறித்து பாதுகாப்பு அமைச்சகம் ஏதும் தெரிவிக்கவில்லை.

    இந்த தாக்குதல் முன்எப்போதும் இல்லாதது, வன்முறையானது. கொடூரமானது. இந்த சூழ்நிலை இன்னும் மோசமானால் பாகிஸ்தான் ராணுவம் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

    2022ஆம் ஆண்டுக்குப் பிறகு அமெரிக்கா காபூர் நகர் மீது தாக்குதல் நடத்திய பிறகு, நடத்தப்படும் முதல் தாக்குதல் இதுவாகும்.

    ஆப்கானிஸ்தானில் கடந்த 2021ஆம் ஆண்டு அதிகாரத்திற்கு வந்தபின், முதன்முறையாக இந்தியாவில் ராஜாங்கரீதியிலான பேச்சுவார்த்தையில் தலிபான் அரசு ஈடுபட்ட நிலையில், பாகிஸ்தான் இந்த தாக்குதலை நடத்தியுள்ளது.

    பயங்கரவாதிகளுக்கு ஆப்கானிஸ்தான் அடைக்கலம் கொடுப்பதாக பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் பகிரங்கமாக குற்றம்சாட்டிய 48 மணி நேரத்திற்குள் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ரோகித், விராட் கோலி இடம் பிடித்துள்ளனர்.
    • ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டி வருகிற 19-ந் தேதி தொடங்குகிறது.

    வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வரும் இந்திய அணி, இதனையடுத்து ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வெள்ளை பந்து தொடரில் விளையாட உள்ளது.

    முதலில் ஒருநாள் தொடரும் அதனை தொடர்ந்து டி20 தொடரும் நடைபெற உள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி வருகிற 19-ந் தேதி தொடங்குகிறது.

    இந்த தொடருக்கான இந்திய அணி சில தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. அந்த அணியில் சீனியர் வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி இடம் பெற்றுள்ளனர். இதனால் இந்த தொடரை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

    இந்நிலையில் இந்த தொடருக்காக இந்திய அணி வீரர் ரோகித் சர்மா, மும்பையில் உள்ள சிவாஜி பூங்காவில் தனது வலை பயிற்சியை தொடங்கி உள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

    • பீகாரில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.
    • என்டிஏ கூட்டணியில் பாஜக, நிதிஷ் குமார் கட்சி பிரதான கட்சிகளாக உள்ளன.

    பீகார் மாநிலத்தில் அடுத்த மாதம் 6 மற்றும் 11ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெற இருக்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், இந்தியா கூட்டணிக்கும் நேரடி போட்டி நிலவுகிறது.

    தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக, ராஷ்டிரிய ஜனதா தளம் (நிதிஷ் குமார் கட்சி) முக்கிய கட்சிகளாகும். இந்தியா கூட்டணியில் ராஷ்ரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் பிரதான கட்சிகள் ஆகும்.

    இந்த முறை தேர்தல் மிகக்கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று முதல்கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது.

    இந்த நிலையில் பீகார் மாநில பாஜக தலைவர், திலிப் ஜெய்ஸ்வால், ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அரை டஜன் எம்.எல்.ஏ.-க்கள் பாஜகவில் இணைவார்கள் எனத் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக திலிப் ஜெய்ஸ்வால் கூறியதாவது:-

    இன்னும் அடுத்த சில நாட்களில் அரை டஜன் எதிர்க்கட்சி எம்.எம்.ஏ.-க்கள் பாஜகவில் இணைவார்கள். இது பிரதமர் மோடி மற்றும் முதல்வர் நிதிஷ் குமார் தலைமைத்துவம் மீது வளர்ந்து வரும் நம்பிக்கையின் தெளிவான அறிகுறியாகும்.

    இவ்வாறு திலிப் ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.

    ஆனால் கட்சி தாவும் எம்.எல்.ஏ.-க்கள் யார் யார் என்பதை வெளியிடவில்லை. முன்னதாக இரணடு முறை எம்.பி.யாகவும், கடந்த முறை காங்கிரஸ் சார்பில் முசாபர்பூர் மக்களவை தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த அஜய் நிஷாத் மீண்டும் பாஜக கட்சிக்கு திரும்பினார். அவரை வரவேற்றார். அவரது வருகறை திர்கட் பிராந்தியத்தில் கூடுதல் வலிமையைக் கொடுக்கும் என்றார்.

    • வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2-வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் ஜெய்ஸ்வால் 173 ரன்கள் குவித்தார்.
    • இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 318 ரன்கள் குவித்தது.

    இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் நாள் முடிவில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 318 ரன்கள் குவித்தது. ஜெய்ஸ்வால் 173 ரன்களுடனும் கில் 20 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.

    இந்த போட்டியில் 150 ரன்களுக்கு மேல் குவித்ததன் மூலம் ஆஸ்திரேலிய ஜாம்பவான் டான் பிராட்மேன் சாதனை பட்டியலில் ஜெய்ஸ்வால் இணைந்துள்ளார்.

    அதன்படி டெஸ்ட் கிரிக்கெட்டில் 23 வயதிற்குள் அதிகமுறை 150+ ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் டான் பிராட்மேனுக்கு அடுத்த வீரராக ஜெய்ஸ்வால் இணைந்துள்ளார்.

    8 முறை 150+ ரன்கள் அடித்து முதலிடத்தில் பிராட்மேன் நீடிக்கும் நிலையில், 2-வது வீரராக 5 முறை அடித்து ஜெய்ஸ்வால் நீடிக்கிறார்.

    இந்த பட்டியலில் இந்தியாவின் ஜாம்பவான் சச்சின் 4 சதங்களுடன் 5-வது இடத்தில் உள்ளார்.

    • பல நாடுகளில் போரை நிறுத்தியதால் தனக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் என டிரம்ப் தெரிவித்திருந்தார்.
    • வெனிசுலா நாட்டின் எதிர்க்கட்சி பெண் தலைவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

    உலகின் உயரிய அங்கீகாரமாகக் கருதப்படும் நோபல் பரிசு மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம் மற்றும் அமைதி ஆகியவற்றுக்காக வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2025 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டன.

    இன்று அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. இந்த வருடத்திற்கான அமைதிக்கான நோபல் பரிசுக்கு வெனிசுலா நாட்டின் மரியா கொரினா மச்சாடோ (Maria Corina Machado) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தற்போது வெனிசுலா நாட்டு அரசியல்வாதியான இவர் அந்நாட்டின் எதிர்கட்சித் தலைவராக உள்ளார்.

    வெனிசுலா மக்களின் ஜனநாயக உரிமைகளை மேம்படுத்துவதற்காகவும், சர்வாதிகாரத்திலிருந்து ஜனநாயகத்திற்கு நியாயமான மற்றும் அமைதியான மாற்றத்தை அடைவதற்கான அவரது போராட்டத்திற்காகவும் மரியா கொரினா மச்சாடோவுக்கு 2025 ஆம் ஆண்டுக்கான நோபல் அமைதிப் பரிசை வழங்க நார்வே நோபல் கமிட்டி முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என வெளிப்படையாக அறிவித்தார். இந்திய- பாகிஸ்தான் உள்ளிட்ட பல போர்களை நிறுத்தி அமைதியை ஏற்படுத்தியுள்ளேன் எனத் தெரிவித்தார். அவருக்கு அமைதிக்கான நோபல் பரிவு வழங்க வேண்டும் என பாகிஸ்தான் உள்ளிட்ட சில நாடுகள் கோரிக்கை வைத்தன.

    டிரம்பிற்கு நோபல் பரிவு வழங்கப்படாத நிலையில், நார்வே நோபல் கமிட்டியை வெள்ளை மாளிகை கடுமையாக விமர்சித்துள்ளது.

    இது தொடர்பாக வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ஸ்டீபன் செயுங் கூறுகையில் "அமைதியை விட அரசியலுக்கு முக்கியத்துவம் என்பதை மீண்டும் ஒருமுறை நோபல் கமிட்டி நிரூபித்துள்ளது. ஆனால், டொனால்டு டிரம்ப் தொடர்ந்து அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதை தொடர்ந்து செய்வார். போரை முடிவுக்கு கொண்டு வருவார். மக்கள் உயிரை காப்பாற்றுவார். அவர் மனிதாபிமான இதயத்தை கொண்டுள்ளார். டிரம்ப் தனது விருப்பத்தின் சக்தியால் மலைகளை கூட நகர்த்துவார். அவரை போன்று எவரும் இருக்க முடியாது" எனத் தெரிவித்துள்ளார்.

    ஆனால், டொனால்டு டிரம்ப் இது தொடர்பாக நேரடியாக கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.

    • டொனால்டு டிரம்ப் 20 அம்ச திட்டங்களை பரிந்துரைத்து போர் நிறுத்த முயற்சியை மேற்கொண்டார்.
    • இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் டிரம்பின் பரிந்துரையை ஏற்றுக்கொண்டு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன.

    இஸ்ரேல்- காசா (ஹமாஸ் அமைப்பு) இடையிலான போர் நிறுத்தம் இன்று வெள்ளிக்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ளதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. இதனால் காசாவில் இரண்டு வருடத்திற்கு மேலாக நடைபெற்று வரும் போர் முடிவுக்கு வரும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

    டொனால்டு டிரம்ப் போரை முடிவுக்குக் கொண்டுவர 20 அம்ச திட்டத்தை அறிவித்தார். இதை இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு ஏற்றுக்கொண்டார். ஹமாஸ் விரைவாக இதை ஏற்றுக்கொண்டு ஒப்பந்தம் ஏற்பட வேண்டும். இல்லையென்றால் யாரும் பார்க்க விரும்பாத பெரிய ரத்தக்களரி தொடர்ந்துவிடும் என எச்சரிக்கை விடுத்தார்.

    இதனைத்தொடர்ந்து இஸ்ரேல், ஹமாஸ் அதிகாரிகள் கத்தாரில் ஒப்பந்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தனர். பிறகு போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி முதல்கட்டமாக ஹமாஸ் அமைப்பினர், பணயக்கைதிகளை விடுவிக்க வேண்டும். இஸ்ரேல் ராணுவம் காசாவில் இருந்து வெளியேற வேண்டும்.

    அதன்படி காசா போர் நிறுத்தம் அமலுக்கு வந்ததாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து ஹமாஸ் அமைப்பினர் பணயக்கைதிகள் விடுவிப்பார்கள் என நம்பப்படுகிறது. ஹமாஸ் பிடியில் 48 பணயக்கைதிகள் உள்ளனர். இவர்கள் 20 பேர் உயிருடன் இருப்பதாக நம்பப்படுகிறது.

    இந்த முதற்கட்ட போர் நிறுத்தம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டால், காசாவில் போர் நிறுத்தத்திற்கான நம்பிக்கை வலுப்பெறும்.

    • சண்டிகரை சேர்ந்த பிரபல தொழில் அதிபரை திரிஷா திருமணம் செய்ய போகிறார் என்று செய்தி வெளியானது.
    • என்னுடைய வாழ்க்கையை பிறர் திட்டமிடுவது எனக்கு மிகவும் பிடிக்கும்.

    தென்னிந்திய திரை உலகில் கடந்த 22 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் திரிஷா. தனது அழகாலும், நடிப்பினாலும் ஏராளமான ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டு வருகிறார்.

    42 வயதாகிவிட்ட நிலையிலும் திருமணம் செய்து கொள்ளாத திரிஷா யாரை திருமணம் செய்வார்? எப்போது திருமணம் செய்வார்? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியிலும் திரையுலக வட்டாரத்திலும் பல ஆண்டுகளாக மிகுந்த எதிர்பார்ப்பாக உள்ளது.

    அடிக்கடி அவரது திருமணம் குறித்து சமூக வலைதளங்களில் செய்திகள் பரபரப்பாக வருகிறது. ஆனால் கடைசியில் அது வதந்தியாகவே நின்று விடுகிறது. தற்போது மீண்டும் அவர் திருமணம் செய்து கொள்ளப்போவதாக இன்று காலை முதல் பரபரப்பான தகவல்கள் வெளியானது.

    சண்டிகரை சேர்ந்த பிரபல தொழில் அதிபரை திரிஷா திருமணம் செய்ய போகிறார் என்றும் தற்போது அவர் ஆஸ்திரேலியாவில் பல வணிக நிறுவனங்களை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

    இரு குடும்பங்களும் பல ஆண்டுகளாக நெருங்கிய நட்புடன் இருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் இவர்களது திருமணம் இரு வீட்டாரின் சம்மதத்துடன் நடைபெற இருப்பதாகவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

    இந்த தகவல் குறித்து திரிஷாவின் தாயாரை தொடர்பு கொண்டபோது, சிரித்தபடி இது அடிக்கடி வரும் தகவல்கள்தான். இதில் உண்மை இல்லை. திரிஷாவுக்கு திருமணம் நடந்தால் சந்தோஷம்தான் என்றார்.

    இந்த நிலையில் திரிஷா தன்னுடைய இன்ஸ்டா ஸ்டோரியில் "என்னுடைய வாழ்க்கையை பிறர் திட்டமிடுவது எனக்கு மிகவும் பிடிக்கும். எனது தேனிலவையும் திட்டமிட்டு கொடுப்பார்கள் என காத்திருக்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

    இதனால் திரிஷா இன்னும் திருமணத்திற்கு தயாராகவில்லை எனத் தெரிகிறது.

    • இப்படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார்.
    • பைசன் திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வருகிற 17-ம் தேதி வெளியாக உள்ளது

    மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள படம் 'பைசன்'. இப்படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். இது கபடி வீரரின் வாழ்க்கை வரலாற்று கதை ஆகும். இந்த படத்தை பா. ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் அப்ளாஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.

    இந்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன், ரெஜிஷா விஜயன், பசுபதி, கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வருகிற 17-ம் தேதி வெளியாக உள்ளது.

    படம் வெளியாவதற்கு இன்றும் 7 நாட்களே உள்ள நிலையில் இன்று படத்தின் டிரெய்லர் வெளியாகும் என படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது.

    இந்நிலையில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த நிலையில் டிரெய்லர் வெளியாகி தேதியை மாற்றியது படக்குழு. அதன்படி வருகிற 13- ந் தேதி டிரெய்லர் வெளியாகும் என புதிய போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த போஸ்டரில் அமீர், துருவ் விக்ரம் மற்றும் லால் ஆகியோர் உள்ளனர்.

    ×