என் மலர்
கிரிக்கெட் (Cricket)

வேட்டைக்கு தயார்.. தீவிர வலைபயிற்சியில் ரோகித்- வைரல் வீடியோ
- ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ரோகித், விராட் கோலி இடம் பிடித்துள்ளனர்.
- ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டி வருகிற 19-ந் தேதி தொடங்குகிறது.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வரும் இந்திய அணி, இதனையடுத்து ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வெள்ளை பந்து தொடரில் விளையாட உள்ளது.
முதலில் ஒருநாள் தொடரும் அதனை தொடர்ந்து டி20 தொடரும் நடைபெற உள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி வருகிற 19-ந் தேதி தொடங்குகிறது.
இந்த தொடருக்கான இந்திய அணி சில தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. அந்த அணியில் சீனியர் வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி இடம் பெற்றுள்ளனர். இதனால் இந்த தொடரை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
இந்நிலையில் இந்த தொடருக்காக இந்திய அணி வீரர் ரோகித் சர்மா, மும்பையில் உள்ள சிவாஜி பூங்காவில் தனது வலை பயிற்சியை தொடங்கி உள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Next Story






