என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • ஆகாஷ் ஜெகன்நாத் நடித்துள்ள அடுத்த படம் ரிலீசுக்கு தயாராகி உள்ளது.
    • சமீபத்தில் இதன் வீடியோ கிளிம்ப்ஸ் வெளியிடப்பட்டது.

    பிரபல இயக்குநர் பூரி ஜெகன்நாத் மகன் ஆகாஷ் ஜெகன்நாத். திரைத்துறையில் தொடர்ந்து நடித்து வரும் இவர் கடந்த சில ஆண்டுகளில் திறமை மிக்க நடிகராக உருவெடுத்திருக்கிறார். குழந்தை நட்சத்திரமாக பயணத்தை தொடங்கிய ஆகாஷ் ஜெகன்நாத் ஏராளமான திரைப்படங்களில் நடித்த பிறகு கதாநாயகனாக அறிமுகமானார்.

    இவர் நடிப்பில் வெளியான பல்வேறு திரைப்படங்கள் பெரும் வெற்றி பெற்ற நிலையில், ஆகாஷ் ஜெகன்நாத் நடித்துள்ள அடுத்த படம் ரிலீசுக்கு தயாராகி உள்ளது. 'தல்வார்' என்ற தலைப்பில் உருவாகி இருக்கும் இந்தப் படம் பெரும் பொருட்செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. இ.எல்.வி. குழும நிறுவனங்கள் மற்றும் வார்னிக் ஸ்டூடியோஸ் நிறுவனர் டாக்டர் பாஸ்கர் இ.எல்.வி. இந்தப் படத்தை தயாரித்துள்ளார். காசி பரசுராம் இப்படத்தை இயக்கியுள்ளார்.

    சமீபத்தில் இதன் ஆடியோ கிளிம்ப்ஸ் வெளியிடப்பட்டது. இந்த கிளிம்ப்ஸ் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றதோடு, படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருக்கிறது. மிக பிரமாண்டமாக உருவாகி இருக்கும் 'தல்வார்' அதிரடி சண்டை காட்சிகள் நிறைந்த ஆக்ஷன் திரைப்படமாக உருவாகியுள்ளது.

     


    தல்வார் திரைப்படத்தை பான்-இந்தியன் படமாக வெளியிட படக்குழு திட்டமிட்டு வருகிறது. தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படப்பிடிப்பு பணிகள் வருகிற ஜூன் மாதம் நிறைவுபெற இருக்கிறது. இதைத் தொடர்ந்து இந்தப் படம் வருகிற செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.

    இந்தப் படம் ரசிகர்களுக்கு தலைசிறந்த சினிமா அனுபவத்தை வழங்கும் நோக்கில் இயக்குனர் காசி பரசுராம் இயக்கியுள்ளார் என்று வார்னிக் ஸ்டூடியோஸ்-இன் தயாரிப்பு பிரிவு தலைவர் ஜானி பாஷா தெரிவித்துள்ளார். இந்தப் படத்திற்கு கேசவ கிரண் இசையமைக்கிறார். சண்டை காட்சிகளை தினேஷ் காசி மேற்கொள்ள, ஒளிப்பதிவு பணிகளை திரிலோக் சித்து மேற்கொண்டுள்ளார். இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடா மற்றும் மலையாளம் மொழிகளில் உருவாக்கப்பட்டு வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.



    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை தடுத்து நிறுத்தினர்.
    • சாலை மறியலில் ஈடுபட்ட ஜெயக்குமார் உள்ளிட்ட அ.தி.மு.க.வினரை போலீசார்கைது செய்தனர்.

    அ.தி.மு.க. நிர்வாகி மீதான தாக்குதலை கண்டித்து அக்கட்சியினர் திருக்கழுக்குன்றத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்து இருந்தனர். அதன்படி இன்று நடைபெற இருந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள வந்த அ.தி.மு.க.வினரை போலீசார் கைது செய்தனர்.

    மேலும், ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை தடுத்து நிறுத்தினர். இதனை அடுத்து, ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வந்த அ.தி.மு.க.வினரை கைது செய்த காவல்துறையை கண்டித்து ஜெயக்குமார் உள்ளிட்ட அ.தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதனை அடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட ஜெயக்குமார் உள்ளிட்ட அ.தி.மு.க.வினரை போலீசார்கைது செய்தனர். 

    • உண்மையான மொழிகள் இப்போது கடந்த காலத்தின் நினைவுச்சின்னங்கள்.
    • சில மொழிகள் இந்திக்கு இடம் கொடுத்தன; இருந்த இடம் தெரியாமல் தொலைந்தன!

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    மற்ற மாநிலங்களைச் சேர்ந்த என் அன்பான சகோதரிகளே, சகோதரர்களே,

    இந்தி எத்தனை இந்திய மொழிகளை விழுங்கிவிட்டிருக்கிறது என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? போஜ்புரி, மைதிலி, அவதி, பிரஜ், பண்டேலி, கர்வாலி, குமாவோனி, மகாஹி, மார்வாரி, மால்வி, சத்திஸ்கர், சந்தாலி, அங்கிகா, ஹோ, காரியா, கோர்தா, கூர்மாலி, குருக், முண்டாரி மற்றும் இன்னும் பல இப்போது உயிர்வாழ்வதற்காக மூச்சுத் திணறுகின்றன.

    ஒற்றைக்கல் (monolithic) இந்தி அடையாளத்திற்கான அழுத்தம் பண்டைய தாய்மொழிகளைக் கொல்கிறது. உ.பி. மற்றும் பீகார் ஒருபோதும் வெறும் "இந்தி இதயப்பகுதிகள்" அல்ல. அவற்றின் உண்மையான மொழிகள் இப்போது கடந்த காலத்தின் நினைவுச்சின்னங்கள்.

    இது எங்கே முடிகிறது என்பது நமக்குத் தெரியும் என்பதால் தமிழ்நாடு எதிர்க்கிறது. தமிழ் விழித்தது; தமிழினத்தின் பண்பாடு பிழைத்தது! சில மொழிகள் இந்திக்கு இடம் கொடுத்தன; இருந்த இடம் தெரியாமல் தொலைந்தன! என்று கூறியுள்ளார்.



    • இந்தப் படம் கிரீஸ் நாட்டின் ஏதென்ஸ் மற்றும் கோர்பு(CORFU) பகுதிகளில் படமாக்கப்பட்டது.
    • இன்று (பிப்ரவரி 27) மும்பையில் தொடங்கும் 5வது வென்ச் திரைப்பட விழாவில் திரையிடப்பட உள்ளது.

    தமிழ் சினிமாவில் முன்னணி நாடியாக வளம் வரும் ஸ்ருதி ஹாசன் கடைசியாக பிரபாஸுக்கு ஜோடியாக சலார் படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் ஸ்ருதி ஹாசன் நடிப்பில் ஹாலிவுட் படம் ஒன்று தயாராகி உள்ளது.

    'தி ஐ' (The Eye) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை டாப்னே ஷ்மோன் இயக்கியுள்ளார். இதில் ஸ்ருதி ஹாசனுடன் மார்க் ரவுலி, அன்னா சவ்வா, லிண்டா மார்லோ உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

    இந்தப் படம் கிரீஸ் நாட்டின் ஏதென்ஸ் மற்றும் கோர்பு(CORFU) பகுதிகளில் படமாக்கப்பட்டது. தனித் தீவில் நீரில் மூழ்கி உயிரிழந்த தனது காதலனின் அஸ்தியை கரைக்க ஸ்ருதி ஹாசன் முயலும்போது அங்குள்ள உள்ளூர் மக்களால் பின்பற்றப்படும் ஒரு பழங்கால சடங்கினால் சிக்கல் ஏற்படுவதாக கதை நகர்கிறது.

    மெலனி டிக்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்க்கு ஜேம்ஸ் செக்வின் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தின் டிரெய்லர்தற்போது வெளியாகி உள்ளது. சைகோலாஜிக்கல் திரில்லர் படமாக இது உருவாகி உள்ளது.

    இந்தியாவில் இந்த படத்தின் ரிலீஸ் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம் இன்று (பிப்ரவரி 27) மும்பையில் தொடங்கும் 5வது வென்ச் திரைப்பட விழாவில் திரையிடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. 

    உங்கள் அருகாமையில் உள்ள ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • விஜயலட்சுமி நேற்று வளசரவாக்கம் போலீஸ் நிலையத்தில் ஆஜராகி சீமானுக்கு எதிரான ஆதாரங்களை தாக்கல் செய்துள்ளார்.
    • ஆவணங்களை சீமானுக்கு எதிராக முக்கிய சாட்சியங்களாக சேர்ப்பதற்கு போலீசார் முடிவு செய்து குற்றப்பத்திரிகையை தயாரித்து வருகிறார்கள்.

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக இருந்து வரும் சீமான் மீது சினிமா நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரின் பேரில் அவர் மீது கடந்த 2011-ம் ஆண்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி பாலியல் உறவில் ஈடுபட்டதாக விஜயலட்சுமி அளித்த புகாரின் பேரில் வளசரவாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில், சீமான் மீது அளித்த புகாரை வாபஸ் பெறுவதாக விஜயலட்சுமி 2012-ம் ஆண்டு தெரிவித்தார். இருப்பினும் வழக்கு விசாரணையிலேயே இருந்து வருகிறது.

    இந்த நிலையில் தன் மீதான கற்பழிப்பு வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில் சீமான் தொடர்ந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணையை விரைந்து முடித்து 12 வாரத்துக்குள் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய வேண்டும் என்று ஐகோர்ட் அறிவுறுத்தியுள்ளது.

    பாதிப்புக்குள்ளாகி இருக்கும் பெண் 7 முறை கருக்கலைப்பு செய்து இருப்பதாக குற்றம் சாட்டியிருப்பதாலும் பாலியல் வழக்கு என்பதாலும் இதனை போலீசார் முறையாக விசாரிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இதைத் தொடர்ந்து வளசரவாக்கம் போலீசார் சீமான் மீதான விசாரணையை விரைந்து முடித்து 12 வாரத்துக்குள் குற்ற பத்திரிகையை தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

    இதற்காக நடிகை விஜயலட்சுமி நேற்று வளசரவாக்கம் போலீஸ் நிலையத்தில் ஆஜராகி சீமானுக்கு எதிரான ஆதாரங்களை தாக்கல் செய்துள்ளார். இருவரும் ஒன்றாக இருந்த புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் மருத்துவ ஆதாரங்களையும் அவர் போலீஸ் நிலையத்தில் கொடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இந்த ஆவணங்களை சீமானுக்கு எதிராக முக்கிய சாட்சியங்களாக சேர்ப்பதற்கு போலீசார் முடிவு செய்து குற்றப்பத்திரிகையை தயாரித்து வருகிறார்கள். ஐகோர்ட் அறிவுறுத்தியபடி விரைவில் கோர்ட்டில் அதனை தாக்கல் செய்யவும் போலீசார் முடிவு செய்துள்ளனர். இந்த நிலையில் தன் மீதான கற்பழிப்பு வழக்கை ரத்து செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் சீமான் மனு தாக்கல் செய்துள்ளார்.

    இந்த மனு மீது அடுத்த வாரம் சுப்ரீம் கோர்ட் விசாரணை நடத்த வாய்ப்பு இருப்பதாக நாம் தமிழர் கட்சி வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். இந்த விசாரணையின் போது சீமான் மீதான கற்பழிப்பு வழக்கை ரத்து செய்ய சுப்ரீம் கோர்ட் உத்தரவிடுமா? இல்லை ஐகோர்ட் உத்தரவில் தலையிட முடியாது என்று கூறி வழக்கு விசாரணையை தொடர்ந்து நடத்த சொல்லுமா? என்பது தெரியவில்லை.

    திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் உறவு கொள்வது கற்பழிப்பு குற்றமாகவே கருதப்படும் என்று சுப்ரீம் கோர்ட் ஏற்கனவே ஒரு உத்தரவில் தெரிவித்துள்ளது. இது போன்ற சூழலில் தான் சீமானின் மனு மீது சுப்ரீம் கோர்ட் விசாரணை நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.

    இதனால் சீமான் மீதான வழக்கில் சுப்ரீம் கோர்ட் எந்த மாதிரியான உத்தரவை பிறப்பிக்க போகிறது என்பது நாம் தமிழர் கட்சியினர் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அரசியல் அரங்கிலும் இந்த விவகாரம் பேசு பொருளாக மாறி இருக்கிறது.

    • கூலி படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
    • கூலி படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

    ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி வரும் புதிய படம் "கூலி." சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இந்தப் படத்தில் சத்யராஜ், நாகர்ஜுனா, சௌபின் ஷாஹிர், சுருதிஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்திற்கு கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார். அன்பறிவ் சண்டைக் காட்சிகளை இயக்குகின்றனர்.

    இந்நிலையில், 'கூலி' படத்தின் பாடலுக்கு நடிகை பூஜா ஹெக்டா நடனம் ஆடியிருப்பதாக படக்குழு தற்போது அறிவித்து இருக்கிறது.

    முன்னதாக ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படத்தில் நடிகை தமன்னா ஆடிய, 'காவாலா' பாடல் பெரிய ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது. அந்த வரிசையில், இந்தப் பாடலும் நல்ல வரவேற்பை பெறும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.



    • வருகிற 3-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
    • அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தல்.

    சென்னை:

    கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று முதல் வருகிற 3-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    அதே சமயம், இன்று முதல் வருகிற 1-ந்தேதி வரை தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தேனி, மதுரை, திண்டுக்கல் தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது

    இந்த நிலையில், வருகிற 1-ந்தேதி வரை டெல்டா மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை தொடர்பாக 12 மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு கடிதம் அனுப்பி உள்ளது.

    கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் எனவும் அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் மாவட்ட ஆட்சியர்களுக்கு அக்கடிதத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • எம்.எஸ். தோனிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
    • சி.எஸ்.கே. அணி சார்பில் வீடியோ வெளியிடப்பட்டு உள்ளது.

    18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் வருகிற மார்ச் 22-ம் தேதி தொடங்குகிறது. பத்து அணிகள் மோதும் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் (சி.எஸ்.கே.) அணிக்காக விளையாடி வருகிறார். சென்னை அணியின் கேப்டனாக இருந்த எம்.எஸ். தோனி தற்போது விக்கெட் கீப்பர், பேட்டராக மட்டுமே செயல்பட்டு வருகிறார்.

    2025 ஐ.பி.எல். தொடர் தொடங்குவதற்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், எம்.எஸ். தோனி சென்னை வந்துள்ளார். சென்னை வந்துள்ள எம்.எஸ். தோனிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக சி.எஸ்.கே. அணி சார்பில் சிறப்பு வீடியோ ஒன்று வெளியிடப்பட்டு உள்ளது.

    வீடியோவில் விடாமுயற்சி திரைப்படத்தின் பாடல் பின்னணியில் ஒலிக்க, கலங்கரை விலக்கத்தில் 7-ம் எண் தீப்பற்றி எரிவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மேலும், விமான நிலையத்தில் இருந்து பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் எம்.எஸ். தோனி வெளியே வரும் காட்சிகளும், ஓட்டலில் அவருக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு அடங்கிய காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

    இதனிடையே எம்.எஸ். தோனி அணிந்திருந்த டி-ஷர்ட்-இல் புள்ளிகளால் எழுதப்பட்ட குறியீடுகள் இடம்பெற்றுள்ளன. தமிழ்நாட்டில் மும்மொழி கொள்கை தொடர்பான பிரச்சினை தீவிரம் அடைந்துள்ள நிலையில், எம்.எஸ். தோனி டி-ஷர்ட்-இல் மொழியற்ற குறியீடுகள் இடம்பெற்று இருந்தது பேசு பொருளாகி உள்ளது.

    எம்.எஸ். தோனி ரசிகர்கள் சிலர் 2025 ஐ.பி.எல். தொடரோடு விடைபெற்றுக் கொள்வதை உணர்த்துவதற்கு தான் அவர் இந்த டி-ஷர்ட் அணிந்து வந்தாரோ என்று சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். சிலர், அந்த குறியீடுகளுக்கு என்ன அர்த்தம் என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மீதமுள்ள பங்குகள் பொது பங்குகளாக இருக்க வேண்டும்.
    • பொதுத்துறை வங்கிகளில் மத்திய அரசு அதிக அளவு பங்குகளை தன்வசம் வைத்துள்ளது.

    5 பொதுத்துறை வங்கிகள் ஒவ்வொன்றிலும் தனது 20 சதவீத பங்கை விற்பனை செய்ய மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

    பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபியின் விதிமுறைகளை பின்பற்றும் விதமாக இந்த நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொள்ள திட்டமிட்டு வருகிறது என்று கூறப்படுகிறது. சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின், புரோமோட்டார் வசம் 75 சதவிகித பங்குகள்தான் இருக்க வேண்டும் என்பதே செபியின் விதிமுறை.

    மீதமுள்ள பங்குகள் பொது பங்குகளாக இருக்க வேண்டும். ஆனால் பொதுத்துறை வங்கிகளில் மத்திய அரசு அதிக அளவு பங்குகளை தன்வசம் வைத்துள்ளது.

    எனவே மகாராஷ்டிரா வங்கி, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, யூகோ வங்கி, பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி ஆகியவற்றின் 20 சதவீத பங்குகளை மத்திய அரசு விற்க விரைவில் அமைச்சரவையில் ஒப்புதல் பெறப்படும் என்று கூறப்படுகிறது. 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்வேறு மொழி பேசும் மக்கள் தமிழ்நாட்டில் உள்ளனர்.
    • நீங்கள் யார் என்பதை புரிந்து கொள்ள உங்கள் தாய் மொழியை கற்றுக்கொள்ள வேண்டும்.

    சென்னை:

    தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்வேறு மொழி பேசும் மக்கள் தமிழ்நாட்டில் உள்ளனர். இங்கு தமிழும், இந்தியும் இணைந்து வாழ முடியும். அது ஒரு பிரச்சனை அல்ல. ஆனால் மொழியை திணிப்பதுதான் பிரச்சனை.

    கலை, கலாச்சாரம், மொழி, திரைப்படங்கள் போன்றவற்றை இழந்த பல மாநிலங்களை நான் உங்களுக்கு காட்ட முடியும். அவர்களின் இலக்கியம், திரைப்படங்கள், இசையை இந்தி மாற்றி இருக்கிறது.

    இன்று கேரளா, கர்நாடகா இந்தி கற்றுக்கொள்கின்றன. ஆனால் தென் இந்திய மொழியை கற்றுக்கொண்ட ஒரு வடஇந்திய மாநிலத்தை எனக்கு காட்டுங்கள். 3 மொழிகளை கற்றுக் கொள்வது ஒரு பெரிய விஷயம்.

    வசதியான குழந்தைகள் மட்டுமே அதை கற்க முடியும் என்பது கட்டுக்கதை. நீங்கள் யார் என்பதை புரிந்து கொள்ள உங்கள் தாய் மொழியை கற்றுக்கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் மாண்டரின் மற்றும் ஜப்பானிய மொழி உள்பட எந்த மொழியையும் ஒருவர் கற்றுக்கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மீனவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
    • சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சி மடத்திலிருந்து கடந்த டிசம்பர் 23-ந்தேதி 13 மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச்சென்றனர். நள்ளிரவில் இலங்கை கடற்படை ரோந்து கப்பல் வந்து மீனவர்களின் விசைப்படகை மடக்கிப்பிடித்து, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக குற்றம்சாட்டி 13 மீனவர்களையும் கைது செய்தது.

    இதேபோல், ராமேஸ்வரத்தில் இருந்து கடந்த ஜனவரி 26ந்தேதி 14 மீனவர்கள் விசைப்படகு ஒன்றில் கடலுக்குச்சென்று மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். நள்ளிரவில் அங்கு வந்த இலங்கை கடலோர காவல்படையின் ரோந்து கப்பல், ராமேஸ்வரம் மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக குற்றம்சாட்டி 14 மீனவர்களையும் கைதுசெய்து, அவர்களது விசைப்படகையும் பறிமுதல் செய்தனர். பின்னர் 14 பேரையும் இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    ராமேஸ்வரம் மீனவர்கள், இலங்கை கடற்படையால் அடுத்தடுத்து கைதுசெய்யப்பட்டுள்ள சம்பவங்களை கண்டித்து மீனவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

    இதற்கிடையே, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோருக்கு அவசர கடிதங்கள் எழுதி, கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாடு மீனவர்களையும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரி வலியுறுத்தினார்.

    இதனைத் தொடர்ந்து, இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள், இலங்கை அரசு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இந்த நிலையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராமேஸ்வரம் மற்றும் தங்கச்சி மடம் மீனவர்கள் 27 பேரும், விடுவிக்கப்பட்டு, இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

    உடனடியாக தூதரக அதிகாரிகள், மீனவர்களை விமானம் மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்க ஏற்பாடுகள் செய்தனர். 27 மீனவர்களுக்கும் எமர்ஜென்சி சர்டிபிகேட்களை, தூதரக அதிகாரிகள் வழங்கினர். அதோடு மீனவர்களுக்கு விமான டிக்கெட்டுகளை ஏற்பாடு செய்தனர்.

    இதை அடுத்து நேற்று இரவு, இலங்கை தலைநகர் கொழும்பிலிருந்து சென்னைக்கு வரும் ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் 27 மீனவர்களும், சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    சென்னை வந்தடைந்த மீனவர்களை தமிழ்நாடு மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்று, தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்திருந்த வாகனங்கள் மூலம், மீனவர்களை அவர்களுடைய சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.


    • ஊர் ஊராய் போய் கொடி ஏற்றவேண்டியதில்லை.
    • ஊர் ஊராய் சென்று மக்களை சந்திக்க வேண்டியது இல்லை.

    தருமபுரியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைபெற்ற நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சியில் அதன் தலைவர் திருமாவளவன் பங்கேற்று பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    1990 இல் இந்த இயக்கத்தினுடைய தலைவராக நான் பொறுப்பேற்றேன். அதன் பின் 35 ஆண்டு காலம் எனது இளமையை இழந்தேன், வாழ்க்கையை இழந்தேன், குடும்பத்தை இழந்தேன், உறவுகளை இழந்தேன். ஆனால் இவற்றையெல்லாம் இழந்து இந்த இயக்கத்திற்காக நான் கடுமையாக உழைத்தேன். அதன் விளைவாக தான் இன்றைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில அந்தஸ்து பெற்று இருக்கிறது.

    சில பேர் 50, 60 வயது வரை சினிமாவில் நடித்து புகழை தேடி, பொருளை தேடி, சுகத்தை தேடி, சொகுசான வாழ்க்கையை அனுபவித்துவிட்டு, இளமையான காலத்தையெல்லாம் சொகுசாக கழித்து விட்டு, தேவையான அளவுக்கு சொத்து சேர்த்து வைத்துக்கொண்டு காலாவதியான காலத்தில் அரசியலுக்கு வந்து அதிகாரத்தை கைப்பற்றுகிறார்கள். அவர்கள் ஊர் ஊராக இப்படி போய் அலைய வேண்டியது இல்லை. ஊர் ஊராய் போய் கொடி ஏற்றவேண்டியதில்லை. ஊர் ஊராய் சென்று மக்களை சந்திக்க வேண்டியது இல்லை. உடனே கட்சியை தொடங்கலாம்.. அடுத்து ஆட்சிக்கு போகலாம் என்று கூறினார்.

    திருமாவளவன் தொடர்பான இந்த பேச்சு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ குறித்து கருத்து கூறும் அரசியல் நிபுணர்கள், திருமாவளவன் குறிப்பிடுவது கமல்ஹாசன் தான் என்று கருதுகிறார்கள். நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு அளித்த கமல்ஹாசனுக்கு ஒரு ராஜ்யசபா சீட் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் திருமாவளவனின் பேச்சு கமல்ஹாசனை தொடர்புப்படுத்தி பேசுப்பொருளாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

    ×