என் மலர்
தலைப்புச்செய்திகள்
- 'நுணலும் தன் வாயால் கெடும்' என்று சொல்வார்கள் சீமான் தன்னுடைய வாயாலே தன்னை கெடுத்துக்கொண்டிருக்கிறார்.
- கம்யூனிஸ்டுகள் என்றாலே போராட்டக்காரர்கள் என்று தான் உலகம் முழுவதும் இருக்கக்கூடிய இந்திய மக்கள் புரிந்து கொண்டு இருக்கிறார்கள்.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது, பாலியல் வழக்கு குறித்து பேச தகுதியற்றவர்கள் கம்யூனிஸ்டு கட்சியினர். காம்ரேட்டில் இருந்து கார்ப்பரேட்டாக மாறி உள்ளனர். பாலியல் குற்றவாளி என நீதிமன்றம் கூறாத நிலையில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாநில செயலாளர் சண்முகம் என்னை எப்படி பாலியல் குற்றவாளி என கூறுகிறார்?. கம்யூனிஸ்டு கட்சியில் செயல்படாத தலைவர்கள் உள்ளனர்.
அண்ணா பல்கலைக்கழக பாலியல் சம்பவம், பொள்ளாச்சி சம்பவம் உள்ளிட்ட 26-க்கும் மேற்பட்ட பாலியல் சம்பவங்கள் நடந்துள்ளன. ஆனால் அதை பற்றி கம்யூனிஸ்டு கட்சியினர் வாய் திறக்கவில்லை என்று கூறி இருந்தார்.
இந்நிலையில் சீமான் கூறியதற்கு பதில் அளித்து மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் சண்முகம் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:
'நுணலும் தன் வாயால் கெடும்' என்று சொல்வார்கள் சீமான் தன்னுடைய வாயாலே தன்னை கெடுத்துக்கொண்டிருக்கிறார் என்பதற்கு அவரது ஏராளமான ஊடக பேட்டிகள், மேடை பேச்சுகள் ஒரு உதாரணம்.
பிரச்சனைகளை பட்டியலிட்டு இதில் எல்லாம் கம்யூனிஸ்ட்டுகள் என்ன செய்தார்கள் என்று அவர் கேள்வி கேட்டு இருக்கிறார்.
அவர் பட்டியலிட்ட எல்லா பிரச்சனைகளிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி களப் போராட்டத்தில் நின்று, பலவற்றில் வெற்றி பெற்றுள்ளோம் என்பதை நெஞ்சை நிமிர்த்தி என்னால் சொல்ல முடியும்.
இந்த போராட்டம் நடைபெற்ற காலம் முழுவதும் சீமான் கருத்து கந்தசாமியாகவும், வாயால் வடை சுடுகிற வேலையை மட்டுமே செய்து கொண்டிருந்தார். அவர் களப் போராட்டத்திற்கு என்றுமே வந்ததில்லை என்பதை சம்பந்தப்பட்ட பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருக்கிற மக்கள் அறிவார்கள்.
அதனால் கம்யூனிஸ்டுகள் போராடுகிறார்களா என்ற சான்றிதழ்களை சீமான் போன்றவர்கள் வழங்க வேண்டியதில்லை. கம்யூனிஸ்டுகள் என்றாலே அவர்கள் போராட்டக்காரர்கள் என்று தான் உலகம் முழுவதும் இருக்கக்கூடிய இந்திய மக்கள் புரிந்து கொண்டு இருக்கிறார்கள்.
ஆகவே சீமானிடம் இருந்து கம்யூனிஸ்டுகளுக்கான சான்றிதழை பெற வேண்டிய நிலையில் நாங்கள் இல்லை என்பதை சொல்லிக்கொள்கிறேன் என்று கூறி உள்ளார்.
- சமூக சேவை செய்ய மனதில் தைரியம், ஆசை யாருக்கெல்லாம் இருக்கோ அவர்கள் எல்லாம் அரசியலுக்கு வரலாம்.
- மனிதனின் வாழ்க்கையில் எந்தவொரு விஷயத்தையும் திணிக்க முடியாது.
சென்னை கோடம்பாக்கத்தில் விஷால் மக்கள் இயக்க மாவட்ட செயலாளர் ரஞ்சித்குமார் இல்ல நிகழ்ச்சியில் நடிகர் விஷால் பங்கேற்றார். இதன் பின் செய்தியாளர்களை சந்தித்த விஷாலிடம் விஜய் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் கூறுகையில்,
விஜய் முதலில் செய்தியாளர்களை சந்திக்கட்டும். அவர் செய்தியாளர்களை சந்தித்தால் நீங்க கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் பதில் வரும். சமூக சேவை செய்ய மனதில் தைரியம், ஆசை யாருக்கெல்லாம் இருக்கோ அவர்கள் எல்லாம் அரசியலுக்கு வரலாம்.
எல்லா பள்ளிகளிலும் மும்மொழி கொள்கை பின்பற்றப்படுகிறது. அப்படி நீங்க மும்மொழியை ஒழிக்கணும்னா எல்லா பள்ளிகளிலும் ஒழிக்கணும்.
மனிதனின் வாழ்க்கையில் எந்தவொரு விஷயத்தையும் திணிக்க முடியாது. அது வெற்றி அடையாது. அது மத்திய அரசாக இருந்தாலும் சரி, மாநில அரசாக இருந்தாலும் சரி. பொதுத்தேர்வு எழுதும் பிளஸ்2 மாணவர்களுக்கு வாழ்த்துகள். நல்ல படிங்க என்றார்.
மேலும், சட்டமன்ற தேர்தல் குறித்த கேள்விக்கு நடிகர் ரஜினிகாந்த் போல் மேலே கை காமித்து, நல்லதா நடக்கும் என்று கூறினார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- போதைப்பொருள் தடுப்புப்பிரிவின் கீழ் வழக்குப் பதிவு.
- அவர் வைத்திருந்த கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.
பிரயாக்ராஜில் நடைபெற்ற மகா கும்பமேளாவில் கலந்து கொண்ட பிறகு பிரபலமான ஐ.ஐ.டி. பாபா கஞ்சா வழக்கில் கைதான சம்பவம் அரங்கேறியுள்ளது. இவர் மீது போதைப்பொருள் தடுப்புப்பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஐ.ஐ.டி. பாம்பேயில் பட்டம் பெற்ற அபய் சிங் (ஐ.ஐ.டி. பாபா) மகா கும்பமேளாவில் கலந்து கொண்ட பிறகு பிரபலமடைந்தார். உண்மையை தேடிய பயணத்தால் ஆன்மிகத்தில் ஈர்க்கப்பட்டதாக தெரிவித்த அபய் சிங் பிறகு ஐ.ஐ.டி. பாபாவாக உருவெடுத்தார்.
இந்த நிலையில், ஜெய்ப்பூரை அடுத்த ரித்தி சித்தி பகுதியில் செயல்பட்டு வரும் ஓட்டல் ஒன்றில் ஐ.ஐ.டி. பாபா பிரச்சினை செய்வதாக காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் ஐ.ஐ.டி. பாபாவை கைது செய்து, அவர் வைத்திருந்த கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.
நிர்ணயிக்கப்பட்டதை விட குறைந்த அளவில் கஞ்சா வைத்திருந்ததை அடுத்து ஐ.ஐ.டி. பாபா மீது வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், பிறகு அவரை ஜாமினில் விடுவித்தனர்.
இது குறித்து பேசிய ஐ.ஐ.டி. பாபா, "நான் தங்கியிருந்த ஓட்டலுக்கு வந்த காவல் துறையினர் என்னை கைது செய்தனர். அவர்களுக்கு நான் பிரச்சினை செய்து கொண்டிருப்பதாக தகவல் கிடைத்ததாக என்னிடம் கூறினர். அந்த காரணம் எனக்கு வினோதமாக இருந்தது. கும்பமேளாவில் ஒவ்வொரு பாபாவும் கஞ்சாவை பிரசாதமாக எடுத்துக் கொள்கிறார்கள். அவர்கள் அனைவரையும் கைது செய்வீர்களா?" என்று கூறினார்.
- ரிசர்வ் வங்கி வழிகாட்டுதல்களை பின்பற்ற தவறியதாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டி உள்ளது.
- சட்டத்துக்கு உட்பட்டு இப்பிரச்சனைக்கு தீர்வு காண முயன்று வருவதாக பேடிஎம் செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.
புதுடெல்லி:
பேடிஎம் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஓ.சி.எல்., அதன் நிர்வாக இயக்குனர், அதன் துணை நிறுவனங்களான லிட்டில் இன்டர்நெட், நியர்பை இண்டியா ஆகியோருக்கு அமலாக்கத்துறை விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
மேற்கண்ட நிறுவனங்கள் வெளிநாட்டில் முதலீடு செய்தது, வெளிநாட்டில் இருந்து அன்னிய நேரடி முதலீடு பெற்றது போன்றவற்றில் அன்னிய செலாவணி மேலாண்மை சட்ட (பெமா) விதிமுறைகளை மீறியதாகவும், ரிசர்வ் வங்கி வழிகாட்டுதல்களை பின்பற்ற தவறியதாகவும் அமலாக்கத்துறை குற்றம்சாட்டி உள்ளது.
3 நிறுவனங்களும் மொத்தம் ரூ.611 கோடி அளவுக்கு பண பரிமாற்றம் செய்ததில் இந்த விதிமீறல்களில் ஈடுபட்டதால், நோட்டீஸ் அனுப்பி இருப்பதாக அமலாக்கத்துறை கூறியுள்ளது.
சட்டத்துக்கு உட்பட்டு இப்பிரச்சனைக்கு தீர்வு காண முயன்று வருவதாக பேடிஎம் செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.
- கோயம்பேட்டில் இருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்கப்பட்ட பஸ்கள் தற்போது கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்படுகின்றன.
- கூடுதலாக 104 பேருந்துகள் 816 பயணநடைகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சென்னை :
சென்னையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக கிளாம்பாக்கத்தில் புதிய பஸ் நிலையம் திறக்கப்பட்டது. இதையடுத்து கோயம்பேட்டில் இருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்கப்பட்ட பஸ்கள் தற்போது கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்படுகின்றன. கிளாம்பாக்கம் பஸ் நிலையம் பயன்பாட்டுக்கு வந்தபோதும், தாம்பரம் வரை பஸ்கள் இயக்கப்படுவதால் நெரிசலை கட்டுப்படுத்துவது சவாலாக இருந்து வருகிறது.
இதனை தொடர்ந்து தாம்பரத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தாம்பரம் மாநகர போக்குவரத்துக் காவல் துறை வழங்கியுள்ள பரிந்துரையின்படி தமிழகத்தின் தென்மாவட்டங்களிலிருந்து செங்கல்பட்டு, திண்டிவனம் வழியாக தாம்பரம் வரை இயக்கப்பட்டு வந்த தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகள் அனைத்தும் இன்று முதல் சென்னை கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் வரை இயக்கப்படும் என்று போக்குவரத்து கழகம் அறிவித்து உள்ளது.
எனவே கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திலுருந்து சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பயணிகளின் நலன் கருதி மா.போ. கழகத்தில் தற்போது 80 வழித்தடங்களில் 589 பேருந்துகள் 3795 பயணநடைகள் இயக்கப்பட்டு வருவதுடன் கூடுதலாக 104 பேருந்துகள் 816 பயணநடைகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
- 6 லட்சம் ரூபாயிலிருந்து இருந்து 8 லட்சமாக உயர்த்தி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணை பிறப்பித்துள்ளார்.
- தின உதவி தொகை ரூ.350-ல் இருந்து ரூ.500 ஆக உயர்த்தி வழங்கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை:
இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட விசைப்படகு உரிமையாளர்களுக்கான நிவாரணத் தொகையை உயர்த்தி முதலமைச்சர்.மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
6 லட்சம் ரூபாயிலிருந்து இருந்து 8 லட்சமாக உயர்த்தி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணை பிறப்பித்துள்ளார்.
மேலும் இலங்கை சிறையில் வாடும் மீனவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் தின உதவி தொகை ரூ.350-ல் இருந்து ரூ.500 ஆக உயர்த்தி வழங்கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
- இந்தி படிக்க தமிழ்நாட்டில் உள்ள மாணவர்களக்கு ஏன் வாய்ப்பு ஏற்படுத்தித் தரவில்லை? என்று கரிசனம் வழிவதுபோல கேட்கிறார்கள்.
- பா.ஜ.க. ஆட்சியாளர்களின் ரகசிய திட்டத்தை வெளிப்படையாக எதிர்க்கும் வலிமை கொண்டது தான் திராவிட இயக்கம்.
சென்னை:
தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில்,
* தமிழையும் பிற மொழிகளையும் அழிப்பது தான் பா.ஜ.க. ஆட்சியாளர்களின் ரகசியத் திட்டம்.
* தமிழ்நாட்டில் ஆதிக்க இந்தியையும் சமஸ்கிருதத்தையும் கட்டாயமாக திணிக்க வேண்டும் என்பதே பா.ஜ.க.வின் நோக்கம். அதனால் தான் இந்தி படிக்க தமிழ்நாட்டில் உள்ள மாணவர்களக்கு ஏன் வாய்ப்பு ஏற்படுத்தித் தரவில்லை? என்று கரிசனம் வழிவதுபோல கேட்கிறார்கள்.
* மொழியை திணிக்காதீர் என்று சொன்னால் ஆறு அறிவுள்ளோருக்கு புரிகிறது. மத்திய பா.ஜ.க. அரசுக்கு மட்டும் புரியவில்லை.
* பா.ஜ.க. ஆட்சியாளர்களின் ரகசிய திட்டத்தை வெளிப்படையாக எதிர்க்கும் வலிமை கொண்டது தான் திராவிட இயக்கம் என்று கூறியுள்ளார்.
- சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல்.
- திருச்செந்தூர் ஸ்ரீமுருகப்பெருமான் சிங்க கேடயம் சப்பரத்தில் பவனி.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு மாசி-20 (செவ்வாய்க்கிழமை)
பிறை: வளர்பிறை.
திதி: பஞ்சமி இரவு 8.14 மணி வரை. பிறகு சஷ்டி.
நட்சத்திரம்: அசுவினி காலை 8.57 மணி வரை. பிறகு பரணி.
யோகம்: சித்தயோகம்.
ராகுகாலம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
எமகண்டம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
சூலம்: வடக்கு
நல்ல நேரம்: காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். திருச்செந்தூர் ஸ்ரீமுருகப்பெருமான் சிங்க கேடயம் சப்பரத்தில் பவனி. நத்தம் ஸ்ரீமாரியம்மன் காப்புக்கட்டு விழா. கோவை ஸ்ரீகோனியம்மனுக்கு திருக்கல்யாணம். குடந்தை ஸ்ரீசக்கரபாணிப் பெருமாள் உற்சவம் ஆரம்பம். வெள்ளி இந்திர விமானத்தில் பவனி. சங்கரன்கோவில் கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் காலையில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம். திருநெல்வேலி சமீபம் 3-ம் நவதிருப்பதி செவ்வாய் பகவானுக்குரிய தலமான ஸ்ரீகுமுதவல்லித் தாயார் சமேத ஸ்ரீவைத்தமாநிதிப் பெருமாள் கோவிலில் காலையில் திருமஞ்சன சேவை. திருநறையூர் ஸ்ரீசித்தநாதீசுவரர் கோவிலில் ஸ்ரீசண்முகருக்கு சத்ரு சம்ஹார அர்ச்சனை. ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீமணவாள மாமுனிகள் புறப்பாடு.
இன்றைய ராசிபலன்
மேஷம்-தெளிவு
ரிஷபம்-கவனம்
மிதுனம்-உழைப்பு
கடகம்-தாமதம்
சிம்மம்-பரிவு
கன்னி-பாசம்
துலாம்- நலம்
விருச்சிகம்- நிறைவு
தனுசு- வரவு
மகரம்-லாபம்
கும்பம்-பக்தி
மீனம்-பண்பு
- ராணுவ உதவிகளை அமெரிக்கா நிறுத்தியுள்ளதாக ப்ளூம்பெர்க் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
- போக்குவரத்து பகுதிகளில் காத்திருக்கும் ஆயுதங்களும் நிறுத்தப்படுகிறது.
உக்ரைனுக்கு வழங்கப்பட்டு வந்த ராணுவ உதவிகளை நிறுத்துவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். முன்னதாக அமெரிக்கா வந்திருந்த உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அமெரிக்க அதிபர் டிரம்ப் உடன் பேச்சுவார்த்தை நடத்தினார். எனினும், இருவரிடையேயான பேச்சுவார்த்தை வாக்குவாதமாக மாறியது. இதனால் அதிபர் ஜெலன்ஸ்கி பாதியிலே வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறினார்.
இந்த சம்பவம் உலக அரசியலில் பேசு பொருளானது. இந்த நிலையில் தான் உக்ரைனுக்கான ராணுவ உதவிகள் நிறுத்தப்படுவதாக அமெரிக்கா அறிவித்து இருக்கிறது. மேலும், அமைதிக்கான நல்லிணக்க உறுதிப்பாட்டை உக்ரைன் வெளிப்படுத்தும் என்று உறுதி அளிக்கும் வரை தற்போது வழங்கி வரும் அனைத்து விதமான ராணுவ உதவிகளையும் அமெரிக்கா நிறுத்தியுள்ளதாக ப்ளூம்பெர்க் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், இதே தகவல்களை பெயர் குறிப்பிட விரும்பாத மூத்த பாதுகாப்பு துறை அதிகாரி தெரிவித்ததாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியாகி இருக்கும் தகவல்களின் படி உக்ரைன் செல்லாத அமெரிக்க ராணுவ உபகரணங்கள் அனைத்தும் இடைநிறுத்தப்படும். மேலும், விமானங்கள், கப்பல் வழி போக்குவரத்தில் உள்ள ஆயுதங்கள் மற்றும் போலாந்தில் போக்குவரத்து பகுதிகளில் காத்திருக்கும் ஆயுதங்களும் நிறுத்தப்படுகிறது.
அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ கடந்த ஜனவரி மாதம் இஸ்ரேல் மற்றும் எகிப்துக்கு செல்லும் வெளிநாட்டு உதவி மானியங்களை தவிர, 90 நாட்களுக்கு வெளிநாட்டு உதவி மானியங்களை நிறுத்துவதாக அறிவித்து இருந்தார்.
- சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டில் இவ்விரு அணிகளும் 4 முறை சந்தித்து இருக்கின்றன.
- இதில் 2 ஆட்டத்தில் இந்தியாவும், ஒன்றில் ஆஸ்திரேலியாவும் வெற்றி கண்டன.
துபாய்:
9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது. 8 அணிகள் பங்கேற்ற இந்த கிரிக்கெட் திருவிழாவில் லீக் சுற்று முடிவில் 'ஏ' பிரிவில் டாப்-2 இடங்களை பிடித்த இந்தியா, நியூசிலாந்து, 'பி' பிரிவில் தென்ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெற்றன. நடப்பு சாம்பியன் பாகிஸ்தான், வங்காளதேசம், இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் வெளியேறின.
இந்த நிலையில் துபாயில் இன்று (செவ்வாய்க்கிழமை) அரங்கேறும் முதலாவது அரைஇறுதியில் முன்னாள் சாம்பியன்களான இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் பலப்பரீட்சையில் இறங்குகின்றன. இரு அணிகளும் ஏறக்குறைய சரிசம பலத்துடன் மல்லுகட்டுவதால் இந்த ஆட்டம் கிரிக்கெட் ரசிகர்களின் ஆவலை தூண்டியுள்ளது.
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி லீக் சுற்றில் வங்காளதேசம், பாகிஸ்தான், நியூசிலாந்து ஆகிய அணிகளை வரிசையாக போட்டுத்தாக்கி தனது பிரிவில் கம்பீரமாக முதலிடத்தை பிடித்தது. சுப்மன் கில், ஸ்ரேயாஸ் ஐயர், அக்ஷர் பட்டேல் பேட்டிங்கில் நல்ல நிலையில் உள்ளனர். தொடர்ந்து தடுமாற்றம் காணும் கேப்டன் ரோகித் சர்மா பார்முக்கு திரும்ப வேண்டியது அவசியமாகும். இதேபோல் கோலியும் கைகொடுத்தால் இந்தியாவின் பேட்டிங் வலிமையடையும்.
பந்து வீச்சில் சுழற்பந்து வீச்சாளர்கள் வருண் சக்ரவர்த்தி, குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா, அக்ஷர் பட்டேல் கலக்குகிறார்கள். முந்தைய நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் வாய்ப்பு பெற்ற வருண் சக்ரவர்த்தி 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அமர்க்களப்படுத்தினார். அந்த ஆட்டத்தில் இந்தியா 4 சுழற்பந்து வீச்சாளர்களுடன் ஆடி நியூசிலாந்தை திக்குமுக்காடச் செய்தது. அதனால் இன்றைய ஆட்டத்திலும் இந்தியா 4 சுழல் யுக்தியை தொடரும் என்று தெரிகிறது. அவ்வாறு நிகழ்ந்தால் வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணாவுக்கு இடம் கிடைக்காது.
'பி' பிரிவில் அங்கம் வகித்த ஆஸ்திரேலிய அணி தனது முதல் ஆட்டத்தில் இங்கிலாந்துக்கு எதிராக 352 ரன்கள் இலக்கை விரட்டிப்பிடித்து வரலாறு படைத்தது. அதில் ஜோஷ் இங்லிஸ் சதம் விளாசினார். தென்ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டங்கள் மழையால் ரத்தானது.
அந்த அணியில் பிரதான வேகப்பந்து வீச்சாளர்கள் கம்மின்ஸ், ஹேசில்வுட், மிட்செல் ஸ்டார்க் இல்லை. அதனால் அவர்களின் பந்து வீச்சு சற்று பலவீனமாகவே தோன்றினாலும், பேட்டிங்கில் அசுர பலம் வாய்ந்ததாக திகழ்கிறது.
டிராவிஸ் ஹெட், கேப்டன் ஸ்டீவன் சுமித், லபுஸ்சேன், ஜோஷ் இங்லிஸ், அலெக்ஸ் கேரி சூப்பர் பார்மில் உள்ளனர். குறிப்பாக டிராவிஸ் ஹெட் இந்தியாவுக்கு எதிராக சிறப்பாக விளையாடி வருகிறார். 2023 ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய பங்காற்றினார். அதே போல் உலக டெஸ்ட் சாம்பியன்ஸ் போட்டியிலும் சமீபத்தில் நடந்த பார்டர் கவாஸ்கர் தொடரில் இந்தியாவுக்கு எதிராக சிறப்பாக விளையாடி உள்ளார்.
அதாவது இந்தியா என்றாலே அடிப்பேன் என்பது போல டிராவிஸ் ஹெட் விளையாடி வருகிறார். இது போன்ற பல மீம்ஸ்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சூழ்நிலையில் டிராவிஸ் ஹெட்டை சீக்கிரமாக வீழ்த்த இந்திய அணி தீவிரமாக போராடும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
பின்னங்காலில் ஏற்பட்ட காயத்தால் விலகிய மேத்யூ ஷார்ட்டுக்கு பதிலாக ஆல்-ரவுண்டர் கூபர் கனோலி சேர்க்கப்பட்டுள்ளார். பந்து வீச்சில் ஆடம் ஜம்பா, துவார்ஷூயிஸ், நாதன் எலிஸ் ஆகியோரைத் தான் அதிகம் நம்பி உள்ளது.
பொதுவாக ஆஸ்திரேலிய அணி ஐ.சி.சி. தொடர்களில் நெருக்கடியை சிறப்பாக கையாளக்கூடியது. அதனால் இந்தியாவுக்கு கடும் சோதனை காத்திருக்கிறது என்பதில் துளியும் சந்தேகமில்லை.
இவ்விரு அணிகள் இதுவரை 151 ஒரு நாள் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 57-ல் இந்தியாவும், 84-ல் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றன. 10 ஆட்டங்களில் முடிவு கிடைக்கவில்லை.
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டில் இவ்விரு அணிகளும் 4 முறை சந்தித்து இருக்கின்றன. இதில் 2 ஆட்டத்தில் இந்தியாவும், ஒன்றில் ஆஸ்திரேலியாவும் வெற்றி கண்டன. மழையால் ஒரு ஆட்டத்தில் முடிவு இல்லை.
- 16 மனைவிகளை ஒரே வீட்டில் வைத்திருக்கிறார் என்றால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா.
- 5 திருமணங்கள் முடிக்கும் வரை அவரது தந்தை, கபிங்காவின் குடும்ப வரவு செலவுகளை கவனித்தார்.
இன்றைய காலத்தில் ஒரு மனைவி, 2 குழந்தைகளை நிர்வகிப்பதே ஆண்களுக்கு பெரிய பொறுப்பாக இருக்கிறது. அவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதே குடும்பத் தலைவருக்கு சவாலாகப் போய்விடுகிறது. பலர் பொறுப்புகளை சுமக்க முடியாமல் திணறிப் போகிறார்கள்.
ஆனால் ஒருவர் 20 மனைவிகள் கட்டி, தகராறு இல்லாமல் வாழ்ந்து வருகிறார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? அதிலும் 16 மனைவிகளை ஒரே வீட்டில் வைத்திருக்கிறார் என்றால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா. யார் அந்த மகராசன் என்று கேட்கத் தோன்றுகிறதா. அந்த அதிசய மனிதரின் பெயரும் அவரது குடும்பத்தைப் போலவே நீண்டது.
எம்சி எர்னஸ்டோ முயினுச்சி கபிங்கா என்பது அவரது முழுப் பெயர். தான்சானியா நாட்டைச் சேர்ந்த அவர், 1961-ல் முதல் திருமணத்தை முடித்தார். அவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்தது. பழங்குடியினத்தில் கூடுதல் மனைவி கட்டிக் கொள்ள தடை இல்லாததால், அவரது தந்தையின் வேண்டுகோளுக்கு இணங்க மேலும் பல மனைவிகளை கட்டி குடும்பத்தை பெருக்கிக் கொண்டார் கபிங்கா. 5 திருமணங்கள் முடிக்கும் வரை அவரது தந்தை, கபிங்காவின் குடும்ப வரவு செலவுகளை கவனித்தார்.

அதன்பிறகு செய்த திருமணங்களுக்கு கபிங்காவே பொறுப்பேற்று முழுமையான குடும்பத் தலைவராக உயர்ந்தார். தற்போது வரை 20 திருமணங்கள் முடித்துள்ளார். 16 மனைவிகளுடன் ஒரே வீட்டில் வாழ்கிறார். மற்ற 4 மனைவிகள் இறந்து போனார்கள். இப்போது அவரது குடும்பத்தில் ஆண்களும், பெண்களுமாக 104 வாரிசுகள் இருக்கிறார்கள். மேலும் 144 பேரன் பேத்திகளும் துள்ளி விளையாடுகிறார்கள். அவரது ஒரு குடும்பமே தனி கிராமம்போல மிகப்பெரியது. கபிங்கா அதன் ராஜாவாக கம்பீரமாக வலம் வருகிறார்.
கபிங்காவின் நற்பெயர் காரணமாக அவரை மணம் முடிக்க சம்மதித்ததாக அவர்களது மனைவிமார்கள் கூறுகிறார்கள். ஒவ்வொருவருக்கும் தனித்தனி வீடு உள்ளது. தனித்தனியாக சமைத்தாலும் ஒரே வீட்டில் வாழ்கிறார்கள். ஒன்றாக சாப்பிடுகிறார்கள். சகோதரிகள் போல சண்டை சச்சரவின்றி வாழ்கிறார்கள். விவசாயம் அவர்களது தொழிலாக உள்ளது. உலகின் பெரிய குடும்பங்களில் ஒன்றாக வரலாற்றில் இடம் பிடித்துள்ளது கபிங்காவின் குடும்பம்...
- சிறையில் உள்ள இம்ரான் கானை 6 பேர் சந்திக்கலாம் என கோர்ட்டு அனுமதி.
- இம்ரான் கானை சந்திக்க அவரது மனைவி புஷ்ரா பீபிக்கும் அனுமதி மறுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
லாகூர்:
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான். பாகிஸ்தான் தெக்ரிக்-இ-இன்சப் கட்சி தலைவரான இவர், 2018 முதல் 2022 வரை பிரதமராக இருந்தார். பின்னர், எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தால் பிரதமர் பதவியை இம்ரான்கான் இழந்தார். மேலும், பாகிஸ்தான் புதிய பிரதமராக ஷபாஸ் ஷெரீப் பொறுப்பேற்றார்.
இதனை தொடர்ந்து இம்ரான் கான் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. இந்த வழக்குகளில் 2023 ஆகஸ்ட் 5ம் தேதி கைது செய்யப்பட்ட இம்ரான்கான் ராவல்பிண்டியில் உள்ள அடிலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், இம்ரான் கான் தனிமைச்சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக அவரது பாகிஸ்தான் தெக்ரிக்-இ-இன்சப் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது. பயங்கரவாதிகளை அடைத்து வைக்கும் தனிமைச்சிறையில் அவர் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழக்க வைக்க சதித்திட்டம் தீடப்படுவதாகவும் அக்கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.
சிறையில் உள்ள இம்ரான் கானை 6 பேர் சந்திக்கலாம் என கோர்ட்டு அனுமதி அளித்தபோதும், அவரை சந்திக்க சிறை அதிகாரிகள் அனுமதி மறுப்பதாகவும் பாகிஸ்தான் தெக்ரிக்-இ-இன்சப் தெரிவித்துள்ளது. மேலும், இம்ரான் கானை சந்திக்க அவரது மனைவி புஷ்ரா பீபிக்கும் அனுமதி மறுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.






