என் மலர்
தலைப்புச்செய்திகள்
- இந்தி படிக்க தமிழ்நாட்டில் உள்ள மாணவர்களக்கு ஏன் வாய்ப்பு ஏற்படுத்தித் தரவில்லை? என்று கரிசனம் வழிவதுபோல கேட்கிறார்கள்.
- பா.ஜ.க. ஆட்சியாளர்களின் ரகசிய திட்டத்தை வெளிப்படையாக எதிர்க்கும் வலிமை கொண்டது தான் திராவிட இயக்கம்.
சென்னை:
தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில்,
* தமிழையும் பிற மொழிகளையும் அழிப்பது தான் பா.ஜ.க. ஆட்சியாளர்களின் ரகசியத் திட்டம்.
* தமிழ்நாட்டில் ஆதிக்க இந்தியையும் சமஸ்கிருதத்தையும் கட்டாயமாக திணிக்க வேண்டும் என்பதே பா.ஜ.க.வின் நோக்கம். அதனால் தான் இந்தி படிக்க தமிழ்நாட்டில் உள்ள மாணவர்களக்கு ஏன் வாய்ப்பு ஏற்படுத்தித் தரவில்லை? என்று கரிசனம் வழிவதுபோல கேட்கிறார்கள்.
* மொழியை திணிக்காதீர் என்று சொன்னால் ஆறு அறிவுள்ளோருக்கு புரிகிறது. மத்திய பா.ஜ.க. அரசுக்கு மட்டும் புரியவில்லை.
* பா.ஜ.க. ஆட்சியாளர்களின் ரகசிய திட்டத்தை வெளிப்படையாக எதிர்க்கும் வலிமை கொண்டது தான் திராவிட இயக்கம் என்று கூறியுள்ளார்.
- சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல்.
- திருச்செந்தூர் ஸ்ரீமுருகப்பெருமான் சிங்க கேடயம் சப்பரத்தில் பவனி.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு மாசி-20 (செவ்வாய்க்கிழமை)
பிறை: வளர்பிறை.
திதி: பஞ்சமி இரவு 8.14 மணி வரை. பிறகு சஷ்டி.
நட்சத்திரம்: அசுவினி காலை 8.57 மணி வரை. பிறகு பரணி.
யோகம்: சித்தயோகம்.
ராகுகாலம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
எமகண்டம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
சூலம்: வடக்கு
நல்ல நேரம்: காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். திருச்செந்தூர் ஸ்ரீமுருகப்பெருமான் சிங்க கேடயம் சப்பரத்தில் பவனி. நத்தம் ஸ்ரீமாரியம்மன் காப்புக்கட்டு விழா. கோவை ஸ்ரீகோனியம்மனுக்கு திருக்கல்யாணம். குடந்தை ஸ்ரீசக்கரபாணிப் பெருமாள் உற்சவம் ஆரம்பம். வெள்ளி இந்திர விமானத்தில் பவனி. சங்கரன்கோவில் கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் காலையில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம். திருநெல்வேலி சமீபம் 3-ம் நவதிருப்பதி செவ்வாய் பகவானுக்குரிய தலமான ஸ்ரீகுமுதவல்லித் தாயார் சமேத ஸ்ரீவைத்தமாநிதிப் பெருமாள் கோவிலில் காலையில் திருமஞ்சன சேவை. திருநறையூர் ஸ்ரீசித்தநாதீசுவரர் கோவிலில் ஸ்ரீசண்முகருக்கு சத்ரு சம்ஹார அர்ச்சனை. ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீமணவாள மாமுனிகள் புறப்பாடு.
இன்றைய ராசிபலன்
மேஷம்-தெளிவு
ரிஷபம்-கவனம்
மிதுனம்-உழைப்பு
கடகம்-தாமதம்
சிம்மம்-பரிவு
கன்னி-பாசம்
துலாம்- நலம்
விருச்சிகம்- நிறைவு
தனுசு- வரவு
மகரம்-லாபம்
கும்பம்-பக்தி
மீனம்-பண்பு
- ராணுவ உதவிகளை அமெரிக்கா நிறுத்தியுள்ளதாக ப்ளூம்பெர்க் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
- போக்குவரத்து பகுதிகளில் காத்திருக்கும் ஆயுதங்களும் நிறுத்தப்படுகிறது.
உக்ரைனுக்கு வழங்கப்பட்டு வந்த ராணுவ உதவிகளை நிறுத்துவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். முன்னதாக அமெரிக்கா வந்திருந்த உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அமெரிக்க அதிபர் டிரம்ப் உடன் பேச்சுவார்த்தை நடத்தினார். எனினும், இருவரிடையேயான பேச்சுவார்த்தை வாக்குவாதமாக மாறியது. இதனால் அதிபர் ஜெலன்ஸ்கி பாதியிலே வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறினார்.
இந்த சம்பவம் உலக அரசியலில் பேசு பொருளானது. இந்த நிலையில் தான் உக்ரைனுக்கான ராணுவ உதவிகள் நிறுத்தப்படுவதாக அமெரிக்கா அறிவித்து இருக்கிறது. மேலும், அமைதிக்கான நல்லிணக்க உறுதிப்பாட்டை உக்ரைன் வெளிப்படுத்தும் என்று உறுதி அளிக்கும் வரை தற்போது வழங்கி வரும் அனைத்து விதமான ராணுவ உதவிகளையும் அமெரிக்கா நிறுத்தியுள்ளதாக ப்ளூம்பெர்க் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், இதே தகவல்களை பெயர் குறிப்பிட விரும்பாத மூத்த பாதுகாப்பு துறை அதிகாரி தெரிவித்ததாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியாகி இருக்கும் தகவல்களின் படி உக்ரைன் செல்லாத அமெரிக்க ராணுவ உபகரணங்கள் அனைத்தும் இடைநிறுத்தப்படும். மேலும், விமானங்கள், கப்பல் வழி போக்குவரத்தில் உள்ள ஆயுதங்கள் மற்றும் போலாந்தில் போக்குவரத்து பகுதிகளில் காத்திருக்கும் ஆயுதங்களும் நிறுத்தப்படுகிறது.
அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ கடந்த ஜனவரி மாதம் இஸ்ரேல் மற்றும் எகிப்துக்கு செல்லும் வெளிநாட்டு உதவி மானியங்களை தவிர, 90 நாட்களுக்கு வெளிநாட்டு உதவி மானியங்களை நிறுத்துவதாக அறிவித்து இருந்தார்.
- சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டில் இவ்விரு அணிகளும் 4 முறை சந்தித்து இருக்கின்றன.
- இதில் 2 ஆட்டத்தில் இந்தியாவும், ஒன்றில் ஆஸ்திரேலியாவும் வெற்றி கண்டன.
துபாய்:
9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது. 8 அணிகள் பங்கேற்ற இந்த கிரிக்கெட் திருவிழாவில் லீக் சுற்று முடிவில் 'ஏ' பிரிவில் டாப்-2 இடங்களை பிடித்த இந்தியா, நியூசிலாந்து, 'பி' பிரிவில் தென்ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெற்றன. நடப்பு சாம்பியன் பாகிஸ்தான், வங்காளதேசம், இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் வெளியேறின.
இந்த நிலையில் துபாயில் இன்று (செவ்வாய்க்கிழமை) அரங்கேறும் முதலாவது அரைஇறுதியில் முன்னாள் சாம்பியன்களான இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் பலப்பரீட்சையில் இறங்குகின்றன. இரு அணிகளும் ஏறக்குறைய சரிசம பலத்துடன் மல்லுகட்டுவதால் இந்த ஆட்டம் கிரிக்கெட் ரசிகர்களின் ஆவலை தூண்டியுள்ளது.
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி லீக் சுற்றில் வங்காளதேசம், பாகிஸ்தான், நியூசிலாந்து ஆகிய அணிகளை வரிசையாக போட்டுத்தாக்கி தனது பிரிவில் கம்பீரமாக முதலிடத்தை பிடித்தது. சுப்மன் கில், ஸ்ரேயாஸ் ஐயர், அக்ஷர் பட்டேல் பேட்டிங்கில் நல்ல நிலையில் உள்ளனர். தொடர்ந்து தடுமாற்றம் காணும் கேப்டன் ரோகித் சர்மா பார்முக்கு திரும்ப வேண்டியது அவசியமாகும். இதேபோல் கோலியும் கைகொடுத்தால் இந்தியாவின் பேட்டிங் வலிமையடையும்.
பந்து வீச்சில் சுழற்பந்து வீச்சாளர்கள் வருண் சக்ரவர்த்தி, குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா, அக்ஷர் பட்டேல் கலக்குகிறார்கள். முந்தைய நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் வாய்ப்பு பெற்ற வருண் சக்ரவர்த்தி 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அமர்க்களப்படுத்தினார். அந்த ஆட்டத்தில் இந்தியா 4 சுழற்பந்து வீச்சாளர்களுடன் ஆடி நியூசிலாந்தை திக்குமுக்காடச் செய்தது. அதனால் இன்றைய ஆட்டத்திலும் இந்தியா 4 சுழல் யுக்தியை தொடரும் என்று தெரிகிறது. அவ்வாறு நிகழ்ந்தால் வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணாவுக்கு இடம் கிடைக்காது.
'பி' பிரிவில் அங்கம் வகித்த ஆஸ்திரேலிய அணி தனது முதல் ஆட்டத்தில் இங்கிலாந்துக்கு எதிராக 352 ரன்கள் இலக்கை விரட்டிப்பிடித்து வரலாறு படைத்தது. அதில் ஜோஷ் இங்லிஸ் சதம் விளாசினார். தென்ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டங்கள் மழையால் ரத்தானது.
அந்த அணியில் பிரதான வேகப்பந்து வீச்சாளர்கள் கம்மின்ஸ், ஹேசில்வுட், மிட்செல் ஸ்டார்க் இல்லை. அதனால் அவர்களின் பந்து வீச்சு சற்று பலவீனமாகவே தோன்றினாலும், பேட்டிங்கில் அசுர பலம் வாய்ந்ததாக திகழ்கிறது.
டிராவிஸ் ஹெட், கேப்டன் ஸ்டீவன் சுமித், லபுஸ்சேன், ஜோஷ் இங்லிஸ், அலெக்ஸ் கேரி சூப்பர் பார்மில் உள்ளனர். குறிப்பாக டிராவிஸ் ஹெட் இந்தியாவுக்கு எதிராக சிறப்பாக விளையாடி வருகிறார். 2023 ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய பங்காற்றினார். அதே போல் உலக டெஸ்ட் சாம்பியன்ஸ் போட்டியிலும் சமீபத்தில் நடந்த பார்டர் கவாஸ்கர் தொடரில் இந்தியாவுக்கு எதிராக சிறப்பாக விளையாடி உள்ளார்.
அதாவது இந்தியா என்றாலே அடிப்பேன் என்பது போல டிராவிஸ் ஹெட் விளையாடி வருகிறார். இது போன்ற பல மீம்ஸ்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சூழ்நிலையில் டிராவிஸ் ஹெட்டை சீக்கிரமாக வீழ்த்த இந்திய அணி தீவிரமாக போராடும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
பின்னங்காலில் ஏற்பட்ட காயத்தால் விலகிய மேத்யூ ஷார்ட்டுக்கு பதிலாக ஆல்-ரவுண்டர் கூபர் கனோலி சேர்க்கப்பட்டுள்ளார். பந்து வீச்சில் ஆடம் ஜம்பா, துவார்ஷூயிஸ், நாதன் எலிஸ் ஆகியோரைத் தான் அதிகம் நம்பி உள்ளது.
பொதுவாக ஆஸ்திரேலிய அணி ஐ.சி.சி. தொடர்களில் நெருக்கடியை சிறப்பாக கையாளக்கூடியது. அதனால் இந்தியாவுக்கு கடும் சோதனை காத்திருக்கிறது என்பதில் துளியும் சந்தேகமில்லை.
இவ்விரு அணிகள் இதுவரை 151 ஒரு நாள் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 57-ல் இந்தியாவும், 84-ல் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றன. 10 ஆட்டங்களில் முடிவு கிடைக்கவில்லை.
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டில் இவ்விரு அணிகளும் 4 முறை சந்தித்து இருக்கின்றன. இதில் 2 ஆட்டத்தில் இந்தியாவும், ஒன்றில் ஆஸ்திரேலியாவும் வெற்றி கண்டன. மழையால் ஒரு ஆட்டத்தில் முடிவு இல்லை.
- 16 மனைவிகளை ஒரே வீட்டில் வைத்திருக்கிறார் என்றால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா.
- 5 திருமணங்கள் முடிக்கும் வரை அவரது தந்தை, கபிங்காவின் குடும்ப வரவு செலவுகளை கவனித்தார்.
இன்றைய காலத்தில் ஒரு மனைவி, 2 குழந்தைகளை நிர்வகிப்பதே ஆண்களுக்கு பெரிய பொறுப்பாக இருக்கிறது. அவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதே குடும்பத் தலைவருக்கு சவாலாகப் போய்விடுகிறது. பலர் பொறுப்புகளை சுமக்க முடியாமல் திணறிப் போகிறார்கள்.
ஆனால் ஒருவர் 20 மனைவிகள் கட்டி, தகராறு இல்லாமல் வாழ்ந்து வருகிறார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? அதிலும் 16 மனைவிகளை ஒரே வீட்டில் வைத்திருக்கிறார் என்றால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா. யார் அந்த மகராசன் என்று கேட்கத் தோன்றுகிறதா. அந்த அதிசய மனிதரின் பெயரும் அவரது குடும்பத்தைப் போலவே நீண்டது.
எம்சி எர்னஸ்டோ முயினுச்சி கபிங்கா என்பது அவரது முழுப் பெயர். தான்சானியா நாட்டைச் சேர்ந்த அவர், 1961-ல் முதல் திருமணத்தை முடித்தார். அவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்தது. பழங்குடியினத்தில் கூடுதல் மனைவி கட்டிக் கொள்ள தடை இல்லாததால், அவரது தந்தையின் வேண்டுகோளுக்கு இணங்க மேலும் பல மனைவிகளை கட்டி குடும்பத்தை பெருக்கிக் கொண்டார் கபிங்கா. 5 திருமணங்கள் முடிக்கும் வரை அவரது தந்தை, கபிங்காவின் குடும்ப வரவு செலவுகளை கவனித்தார்.

அதன்பிறகு செய்த திருமணங்களுக்கு கபிங்காவே பொறுப்பேற்று முழுமையான குடும்பத் தலைவராக உயர்ந்தார். தற்போது வரை 20 திருமணங்கள் முடித்துள்ளார். 16 மனைவிகளுடன் ஒரே வீட்டில் வாழ்கிறார். மற்ற 4 மனைவிகள் இறந்து போனார்கள். இப்போது அவரது குடும்பத்தில் ஆண்களும், பெண்களுமாக 104 வாரிசுகள் இருக்கிறார்கள். மேலும் 144 பேரன் பேத்திகளும் துள்ளி விளையாடுகிறார்கள். அவரது ஒரு குடும்பமே தனி கிராமம்போல மிகப்பெரியது. கபிங்கா அதன் ராஜாவாக கம்பீரமாக வலம் வருகிறார்.
கபிங்காவின் நற்பெயர் காரணமாக அவரை மணம் முடிக்க சம்மதித்ததாக அவர்களது மனைவிமார்கள் கூறுகிறார்கள். ஒவ்வொருவருக்கும் தனித்தனி வீடு உள்ளது. தனித்தனியாக சமைத்தாலும் ஒரே வீட்டில் வாழ்கிறார்கள். ஒன்றாக சாப்பிடுகிறார்கள். சகோதரிகள் போல சண்டை சச்சரவின்றி வாழ்கிறார்கள். விவசாயம் அவர்களது தொழிலாக உள்ளது. உலகின் பெரிய குடும்பங்களில் ஒன்றாக வரலாற்றில் இடம் பிடித்துள்ளது கபிங்காவின் குடும்பம்...
- சிறையில் உள்ள இம்ரான் கானை 6 பேர் சந்திக்கலாம் என கோர்ட்டு அனுமதி.
- இம்ரான் கானை சந்திக்க அவரது மனைவி புஷ்ரா பீபிக்கும் அனுமதி மறுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
லாகூர்:
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான். பாகிஸ்தான் தெக்ரிக்-இ-இன்சப் கட்சி தலைவரான இவர், 2018 முதல் 2022 வரை பிரதமராக இருந்தார். பின்னர், எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தால் பிரதமர் பதவியை இம்ரான்கான் இழந்தார். மேலும், பாகிஸ்தான் புதிய பிரதமராக ஷபாஸ் ஷெரீப் பொறுப்பேற்றார்.
இதனை தொடர்ந்து இம்ரான் கான் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. இந்த வழக்குகளில் 2023 ஆகஸ்ட் 5ம் தேதி கைது செய்யப்பட்ட இம்ரான்கான் ராவல்பிண்டியில் உள்ள அடிலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், இம்ரான் கான் தனிமைச்சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக அவரது பாகிஸ்தான் தெக்ரிக்-இ-இன்சப் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது. பயங்கரவாதிகளை அடைத்து வைக்கும் தனிமைச்சிறையில் அவர் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழக்க வைக்க சதித்திட்டம் தீடப்படுவதாகவும் அக்கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.
சிறையில் உள்ள இம்ரான் கானை 6 பேர் சந்திக்கலாம் என கோர்ட்டு அனுமதி அளித்தபோதும், அவரை சந்திக்க சிறை அதிகாரிகள் அனுமதி மறுப்பதாகவும் பாகிஸ்தான் தெக்ரிக்-இ-இன்சப் தெரிவித்துள்ளது. மேலும், இம்ரான் கானை சந்திக்க அவரது மனைவி புஷ்ரா பீபிக்கும் அனுமதி மறுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பெண்ணின் மீது வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மும்பை:
பிரேசில் நாட்டின் சாவோ பாலோ நகரில் இருந்து மும்பை சர்வதேச விமான நிலையத்திற்கு விமானம் ஒன்று வந்து தரை இறங்கியது. இந்த விமானத்தில் அதிகளவில் போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில், அந்த விமானத்தில் வந்திறங்கிய பயணிகளிடம் வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர்.
அப்போது, சந்தேகப்படும் வகையில் வந்த பிரேசில் நாட்டை சேர்ந்த பெண் பயணி ஒருவரின் உடைமைகளில் அதிகாரிகள் சோதனை போட்டனர். சோதனையில் அவரது உடைமைகளில் எதுவும் சிக்கவில்லை. இருப்பினும் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அவரை தனி அறைக்கு அழைத்து சென்று சோதனை நடத்தினர்
அப்போது அவர் போதைப்பொருள் அடங்கிய கேப்சூல்களை வயிற்றில் விழுங்கி கடத்தி வந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து கேப்சூல்களை எடுக்க அப்பெண் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
இதையடுத்து அங்கு டாக்டர்கள் இனிமா கொடுத்து அப்பெண்ணின் வயிற்றில் இருந்த 100 கேப்சூல்களை வெளியே எடுத்தனர். அந்த கேப்சூல்களில் 1,096 கிராம் எடையுள்ள கொகைன் என்ற போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு ரூ.10 கோடியே 96 லட்சம் ஆகும். இதையடுத்து அப்பெண்ணின் மீது வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.
மேலும் அவர் போதைப்பொருளை யாரிடம் ஒப்படைக்க கடத்தி வந்தார் என்பது தொடர்பாக அவரிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- நிதித்துறை மந்திரியின் தவறான நிதிக்கொள்கையே காரணம் என குற்றச்சாட்டுகள் எழுந்தன.
- 273 எம்.பி.க்களில் 182 பேர் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
டெஹ்ரான்:
ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து விலகிய பிறகு உலக நாடுகள் பலவும் அதன் மீது பொருளாதார தடை விதித்தன. இதனால் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது.
இந்தநிலையில் டாலருக்கு நிகரான அந்த நாட்டின் பணமதிப்பு தற்போது வெகுவாக குறைந்துள்ளது. இதற்கு நிதித்துறை மந்திரி அப்தோல்நாசர் ஹெம்மாட்டியின் (வயது 68) தவறான நிதிக்கொள்கையே காரணம் என குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதனை தொடர்ந்து ஆளுங்கட்சியிலும் அவருக்கு எதிர்ப்புகள் கிளம்பின. எனவே அவர் மீது நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அப்போது மொத்தமுள்ள 273 எம்.பி.க்களில் 182 பேர் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதனையடுத்து நிதித்துறை மந்திரி ஹெம்மாட்டி பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
- படப்பிடிப்புத் தளத்திற்கு சென்றதும், இயக்குநர் என்னை மேலே கூப்பிடுகிறார் எனக் கூறினார்கள்.
- அஸ்வினி தற்பொழுது அமேசான் பிரைமில் வெளியான சுழல் 2 வெப் தொடரில் நடித்துள்ளார்.
கிழக்குச் சீமையிலே படத்தில் நடித்த நடிகையான அஸ்வினி சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
அதாவது, " நான் எப்போதும் எனது அம்மாவுடன் தான் படப்பிடிப்புத் தளத்திற்குச் செல்வேன். அன்றைய தினம் என் அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் படப்பிடிப்பு தளத்திற்கு வரமுடியவில்லை.
இதனால் படப்பிடிப்புக்கு போகலாமா வேண்டாமா என நான் யோசித்துக் கொண்டிருந்தேன். ஆனால் மேக்கப் போடுவதற்கு பெண் கலைஞர் இருந்ததால், எனது அம்மா என்னை படப்பிடிப்புக்கு போகச் சொன்னார்.
படப்பிடிப்புத் தளத்திற்கு சென்றதும், இயக்குநர் என்னை மேலே கூப்பிடுகிறார் எனக் கூறினார்கள். அப்போது கூட உள்ள பெண்ணை நீங்களும் வங்க மேலே செல்லலாம் என்று அழைத்தேன். அவர் நான் வர வில்லை நீ சென்றுவா என்றார்கள்.
எனக்கு அப்போது ரொம்பவும் சின்ன வயது என்பதால், என்னால் எதையும் வேறு ஒரு கோணத்தில் யோசிக்கும் தன்மை இல்லாமல் இருந்தேன்.
அதனால் மேலே சென்றேன். மேலே போனால் யாருமே இல்லை. ஒரு அறையில் இருந்து இயக்குநரின் குரல் கேட்டது. அவர் என்னை உள்ளே கூப்பிட்டார். நானும் எதுவும் யோசிக்காமல் சென்றுவிட்டேன். உள்ளே சென்ற பின்னர் அவர் என்னிடம் அத்துமீறி நடந்து கொண்டார். நான் இப்படி நடக்கும் என கொஞ்சம் கூட யோசிக்கவில்லை. அங்கிருந்து கீழே வந்த நான், உடனே வீட்டுக்கு வந்துவிட்டேன்.
நடந்ததை என் அம்மாவிடம் கூறினேன். அம்மா மனமுடைந்து அழுதார். இது மட்டும் இல்லாமல், எனக்கு அம்மாவிடம் இதை கூறி அவரைக் காயப்படுத்தி விட்டோமே என்ற எண்ணம் என்னை ரொம்பவும் கஷ்டப்படுத்தியது எனக் கூறியுள்ளார். அவரது இந்த பேட்டி பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த சம்பவம் எந்த படத்தின் படப்பிடிப்பின்போது நடைபெற்றது, யார் இவ்வாறு செய்தார் என பெயரைக் குறிப்பிடவில்லை. மேலும் அஸ்வினியிடம் தவறாக நடந்து கொண்டவர் யார் என்ற கேள்வியையும் எழுப்பி வருகிறார்கள்.
அஸ்வினி தற்பொழுது அமேசான் பிரைமில் வெளியான சுழல் 2 வெப் தொடரில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- குஜராத் அணியில் மூனி - ஹர்லீன் தியோல் ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
- உபி வாரியர்ஸ் தரப்பில் சோஃபி எக்லெஸ்டோன் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
லக்னோ:
5 அணிகள் பங்கேற்கும் மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 14-ம் தேதி குஜராத் மாநிலம் வதோதராவில் தொடங்கியது. இதன் முதல் கட்ட லீக் ஆட்டங்கள் வதோதராவிலும், 2-ம் கட்ட போட்டிகள் பெங்களூருவிலும் நடந்தன. இந்நிலையில், இந்த தொடரில் நேற்று ஓய்வு நாளாகும்.
இதையடுத்து, இந்த தொடரின் 3-வது கட்ட லீக் ஆட்டங்கள் இன்று முதல் லக்னோவில் ஆரம்பமாகின்றன. இன்று லக்னோவில் நடைபெறும் 15-வது லீக் போட்டியில் உ.பி. வாரியர்ஸ் - குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற உ.பி.வாரியர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது.

அதன்படி குஜராத் அணியின் தொடக்க வீரர்களாக பெத் மூனி- தயாளன் ஹேமலதா களமிறங்கினர். தயாளன் ஹேமலதா 2 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து மூனி - ஹர்லீன் தியோல் ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட மூனி கடைசி வரை ஆட்டமிழக்காமல் 96 ரன்கள் குவித்தார்.
இறுதியில் குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 186 ரன்கள் குவித்தது. உபி வாரியர்ஸ் தரப்பில் சோஃபி எக்லெஸ்டோன் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதனையடுத்து 187 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி உபி வாரியர்ஸ் களமிறங்கியது.
இதில் கிரண் நவ்கிரே முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார், அடுத்து களமிறங்கிய ஜார்ஜியா வோல்வும் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார்.
இறுதியில் உபி வாரியர்ஸ் அணி 17.1 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததுடன் 105 ரன்களில் ஆல் அவுட்டானது. குஜராத் அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய காஷ்வி மற்றும் தனுஜா கன்வர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், டியான்டிரா டோட்டி 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதன்மூலம் குஜராத் அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் உபி வாரியர்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து.
- பல இடங்களில் புதிய குவாரிகள் முளைத்துள்ளதாகவும் கிடைத்துள்ள செய்தி மிகுந்த கவலையை அளிக்கிறது.
- பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளான அளவில் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
கனிமவள கொள்ளையை கண்டித்து வரும் 6-ம் தேதி தென்காசியில் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
தென்காசி மாவட்டத்தில் இருந்து பல்லாயிரம் டன் கணக்கிலான கனிம வளங்கள் வெட்டி எடுக்கப்பட்டு நாள்தோறும் பலநூறு லாரிகள் மூலம் கேரளாவிற்கு கொண்டு செல்லப்படுவதாகவும்; தமிழ் நாட்டில் இருப்பதைப் போல பலமடங்கு கனிம வளங்களை வைத்திருக்கும் கேரள மாநிலம் அவற்றை அழியவிடாமல் பாதுகாப்பதோடு, தமிழ் நாட்டில் உள்ள கனி வளங்களை சுரண்டி எடுத்துச் செல்லும் செயலில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும், இதற்கு ஸ்டாலின் மாடல் அரசு உறுதுணையாக இருந்து, தமிழ் நாட்டு மக்களுக்கு மாபெரும் துரோகத்தை இழைத்து வருவதாகவும், அப்பகுதி வாழ் மக்கள் தங்களது ஆதங்கத்தைத் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
அதுமட்டுமல்லாமல், கனிம வளங்களுடன் தினமும் கேரளாவை நோக்கி படையெடுக்கும் நூற்றுக்கணக்கான கனரக வாகனங்களால், அப்பகுதி முழுவதும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்கு செல்லும் பொதுமக்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகி வருவது தொடர்கதையாக இருந்து வருகின்றது.
கனிம வளங்களை கொண்டுசெல்வதற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை சிறிதும் மதிக்காமல், அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக கனிம வளங்களை அள்ளிச் செல்லும் லாரிகள் அசுர வேகத்தில் செல்வதால் பல்வேறு விபத்துகளும், உயிரிழப்புகளும் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் மிகுந்த வேதனையோடு தெரிவிக்கின்றனர். மேலும், பல இடங்களில் புதிய குவாரிகள் முளைத்துள்ளதாகவும் கிடைத்துள்ள செய்தி மிகுந்த கவலையை அளிக்கிறது.
இந்நிலையில், தென்காசி மாவட்டத்தில் இருந்து பல்லாயிரம் டன் கணக்கிலான கனிம வளங்கள் வெட்டி எடுக்கப்பட்டு நாள்தோறும் பலநூறு லாரிகள் மூலம் கேரளாவிற்கு கொண்டு செல்லப்படுவதை கண்டும் காணாமல் இருந்து வரும் திமுகவின் ஸ்டாலின் மாடல் ஆட்சியைக் கண்டித்தும், மக்கள் நலன் கருதி கனிம வளக் கொள்ளையை உடனடியாகத் தடுத்து நிறுத்த வலியுறுத்தியும், அதிமுக தென்காசி வடக்கு மாவட்டத்தின் சார்பில், வருகிற 6-ம் தேதி (வியாழக்கிழமை) காலை 10 மணியளவில், செங்கோட்டை அம்மா உணவகம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், கழக அமைப்புச் செயலாளரும், விருதுநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையிலும்; தென்காசி வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் சி.கிருஷ்ணமுரளி, எம்.எல்.ஏ., முன்னிலையிலும் நடைபெறும். இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், தென்காசி வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த கழக சார்பு அணிகளின் துணை நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள்; மாவட்டத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் இந்நாள், முன்னாள் பிரதிநிதிகள், முன்னாள் வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்ட கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
திமுக அரசைக் கண்டித்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், வியாபாரிகள், பல்வேறு தரப்பட்ட தொழிலாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளான அளவில் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- வரதட்சணை மரணங்கள் கடுமையான சமூகப் பிரச்சனையாக இருப்பது துரதிர்ஷ்டவசமானது.
- இதுபோன்ற வழக்குகளில் ஜாமின் வழங்கப்பட்ட சூழ்நிலைகளை ஆழமாக ஆராய நீதிமன்றங்கள் கடமைப்பட்டுள்ளன .
வரதட்சணை மரணங்கள் கடுமையான சமூகப் பிரச்சனையாக இருப்பது துரதிர்ஷ்டவசமானது என்றும், இதுபோன்ற வழக்குகளில் ஜாமின் வழங்கப்பட்ட சூழ்நிலைகளை ஆழமாக ஆராய நீதிமன்றங்கள் கடமைப்பட்டுள்ளன என்றும் உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலத்தில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம், திருமணம் முடிந்த இரண்டு வருடத்தில் கணவர் வீட்டில் பெண் இறந்து போனார். மாமனார், மாமியார் மற்றும் இரண்டு மைத்துனிகள் வரதட்சணை கேட்டு கொடுமையை படுத்தியதாலும், கொடூரமாக தாக்கியதாலும் உயிரிழந்ததாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த வழக்கு விசாரணையின்போது அலகாபாத் உயர்நீதிமன்றம் நான்கு பேருக்கும் ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. ஜாமின் வழங்கியதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மேல்முறையீடு மனு விசாரணையின் போது நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேக்தா ஆகியோர் மைத்துனிகள் இருவருக்கும் ஜாமின் வழங்கியது செல்லும், ஆனால் மாமனார் மற்றும் மாமியாருக்கு வழங்கிய ஜாமினை ரத்து செய்ததுடன், வரதட்சணை மரணங்கள் கடுமையான சமூகப் பிரச்சினையாக இருப்பது துரதிர்ஷ்டவசமானது என்றும், இதுபோன்ற வழக்குகளில் ஜாமீன் வழங்கப்பட்ட சூழ்நிலைகளை ஆழமாக ஆராய நீதிமன்றங்கள் கடமைப்பட்டுள்ளன என தீர்ப்பு வழங்கினர்.
மேலும், உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் துன்புறுத்தப்பட்டதாக ஆதாரங்கள் சுட்டிக்காட்டும் நிலையில் இத்தகைய கொடூரமான செயல்களைச் செய்ததாகக் கூறப்படும் முக்கிய குற்றவாளிகள் பிணையில் இருக்க அனுமதிப்பது, அவர்கள் விசாரணையின் நியாயத்தை மட்டுமல்ல, குற்றவியல் நீதி அமைப்பின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையையும் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் எனத் தெரிவித்துள்ளனர்.






