என் மலர்
நீங்கள் தேடியது "ஈரான் மந்திரி"
- அணு ஆயுத பயன்பாடு குறித்து அமெரிக்கா, ஈரான் இடையே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
- இதில் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை இந்த வார இறுதியில் நடைபெற உள்ளது.
மாஸ்கோ:
அணு ஆயுத பயன்பாடு குறித்த அமெரிக்கா உடனான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை ரோம் நகரில் இந்த வார இறுதியில் நடைபெறும் என ஈரான் அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ஈரானிய வெளியுறவுத்துறை மந்திரி அப்பாஸ் அராக்சி இன்று ரஷிய தலைநகர் மாஸ்கோ வந்தடைந்தார். அவர் கிரெம்ளின் மாளிகையில் அதிபர் விளாடிமிர் புதினைச் சந்தித்துப் பேசினார்.
இதுதொடர்பாக, ஈரான் அதிகாரிகள் கூறுகையில், அணுசக்தி பிரச்சனையைப் பொறுத்தவரை, எங்கள் நண்பர்களான சீனா மற்றும் ரஷியாவுடன் நாங்கள் எப்போதும் நெருக்கமான ஆலோசனைகளைக் கொண்டிருந்தோம். இப்போது ரஷிய அதிகாரிகளுடன் அவ்வாறு செய்ய இது ஒரு நல்ல வாய்ப்பு என தெரிவித்துள்ளனர்.
- நிதித்துறை மந்திரியின் தவறான நிதிக்கொள்கையே காரணம் என குற்றச்சாட்டுகள் எழுந்தன.
- 273 எம்.பி.க்களில் 182 பேர் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
டெஹ்ரான்:
ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து விலகிய பிறகு உலக நாடுகள் பலவும் அதன் மீது பொருளாதார தடை விதித்தன. இதனால் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது.
இந்தநிலையில் டாலருக்கு நிகரான அந்த நாட்டின் பணமதிப்பு தற்போது வெகுவாக குறைந்துள்ளது. இதற்கு நிதித்துறை மந்திரி அப்தோல்நாசர் ஹெம்மாட்டியின் (வயது 68) தவறான நிதிக்கொள்கையே காரணம் என குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதனை தொடர்ந்து ஆளுங்கட்சியிலும் அவருக்கு எதிர்ப்புகள் கிளம்பின. எனவே அவர் மீது நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அப்போது மொத்தமுள்ள 273 எம்.பி.க்களில் 182 பேர் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதனையடுத்து நிதித்துறை மந்திரி ஹெம்மாட்டி பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
ராணுவ பலத்தை வைத்து எங்களை எந்த வெளிநாடும் மிரட்ட முடியாது என ஈரான் ராணுவ மந்திரி அமிர் ஹட்டாமி குறிப்பிட்டுள்ளார்.
சிரியா மற்றும் ஈராக்கில் உள்ள சன்னி போராளிகளை தாக்கி, ஒடுக்கி, அழிப்பதில் இஸ்லாமிய ராணுவம் என்றழைக்கப்படும் ஈரான் நாட்டு ராணுவம் வெற்றி பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ள அமிர் ஹட்டாமி, ’எங்கள் நாட்டை தற்காத்து பாதுகாக்க தேவையான சக்தி பெற்றதாக இஸ்லாமிய ஈரானின் பலம் இன்று அமைந்துள்ளது. ராணுவ பலத்தை வைத்து எங்களை எந்த வெளிநாட்டு சக்தியும் மிரட்ட முடியாது’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஈரான் நாட்டுடன் செய்துகொண்ட அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக நேற்று அறிவித்துள்ள நிலையில் ஈரான் ராணுவ மந்திரி அமிர் ஹட்டாமி தெரிவித்துள்ள இந்த கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. #Iranmilitarily






