என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • 8 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு ரூ.1 கோடியே 17 லட்சம் ரூபாய் ரொக்கப்பணம் கைப்பற்றப்பட்டு உள்ளது.
    • மோசடி சம்பவம், நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.

    புதுடெல்லி:

    கிழக்கு மத்திய ரெயில்வே மண்டலத்தில், தலைமை லோகோ பைலட் பதவிக்கு, துறை ரீதியான தேர்வு நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற இருந்தது. ரெயில்வேயில் பணிபுரியும் ஊழியர்கள், இந்த தேர்வை எழுதி பதவி உயர்வு பெற முடியும். இந்த தேர்வுக்கான வினாத்தாளை கசியவிடும் முயற்சிகளில் சிலர் ஈடுபடுவதாக சி.பி.ஐ. போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து நேற்று முன்தினம் இரவில் முதல் சராய் பகுதியில் 3 இடங்களில் அவர்கள் திடீர் சோதனை நடத்தினர். அப்போது 17 பேர், கையால் எழுதப்பட்ட ரெயில்வே தேர்வு வினாத்தாள் நகல்களுடன் பிடிபட்டனர். அவர்கள் அனைவரும் ரெயில்வேயில் இளநிலை லோகோ பைலட்டாக (என்ஜின் டிரைவர்) பணிபுரிபவர்கள் என்று தெரியவந்தது. அவர்கள் பணம் கட்டி வினாத்தாள் நகல்களை மோசடியாக பெற்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் வினாத்தாள் நகல்களுடன் கையும், களவுமாக பிடிபட்டு கைது செய்யப்பட்டனர்.

    இவர்களுக்கு வினாத்தாள்களை வினியோகித்ததாக மேலும் 9 ரெயில்வே அதிகாரிகள் பிடிபட்டனர். அவர்களும் கைது செய்யப்பட்டனர். இந்த தேர்வை நடத்தும் பொறுப்பு அதிகாரியான, மண்டல முதுநிலை மின் பொறியாளர் (ஆபரேஷன்) மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    இவர்தான் வினாத்தாளை தயாரிக்கும் அதிகாரி ஆவார். அவர் கைப்பட ஆங்கிலத்தில் வினாக்களை எழுதி ஒரு என்ஜின் டிரைவரிடம் கொடுத்துள்ளார். அந்த நபர் இந்தி மற்றும் வேறு சில மொழிகளிலும் வினாத்தாள்களை தயாரித்து மற்றவர்களுக்கு வினியோகம் செய்துள்ளார். இதனால் மண்டல முதுநிலை பொறியாளரும் கைது செய்யப்பட்டார்.

    இதையடுத்து 8 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு ரூ.1 கோடியே 17 லட்சம் ரூபாய் ரொக்கப்பணம் கைப்பற்றப்பட்டு உள்ளது. இந்த தொகை வினாத்தாள் விற்பனைக்காக வசூலிக்கப்பட்ட தொகை என்று தெரியவந்துள்ளது.

    பிடிபட்டவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட கையெழுத்தில் தயாரிக்கப்பட்ட வினாத்தாளும், நேற்று நடந்த அசல் தேர்வு வினாத்தாள் கேள்விகளும் பொருத்தமாக இருப்பது ஒப்பிடப்பட்டு கண்டறியப்பட்டு உள்ளது. இதை புகாரில் முக்கிய சான்றாக இணைத்து உள்ளனர்.

    இந்த மோசடி சம்பவம், நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.

    • வெடிகுண்டு வைத்து கிங்டா கா உல்லாச சவாரி எந்திரம் தகர்க்கப்பட்டது.
    • 2 கோடிக்கும் அதிகமானோர் சவாரி மேற்கொண்டதாக பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் தனியார் கேளிக்கை பூங்கா ஒன்று செயல்படுகிறது. அங்கு சுமார் 450 அடி உயரமுள்ள கிங்டா கா என்ற ரோலர் கோஸ்டர் இருந்தது.

    உலகின் மிக உயரமான உல்லாச சவாரி எந்திர இருந்த கிங்டா கா அந்த பகுதியின் மிகப்பெரும் அடையாளமாக இருந்தது. ஆனால் தற்போது அதன் ஆயுட்காலம் முடிவுக்கு வந்தது. எனவே அதனை அகற்றி விட்டு புதிய உல்லாச சவாரி எந்திரத்தை அமைக்க பூங்கா நிர்வாகம் முடிவு செய்தது.

    இதனால் வெடிகுண்டு வைத்து கிங்டா கா உல்லாச சவாரி எந்திரம் தகர்க்கப்பட்டது. கடந்த 20 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த இதில் 2 கோடிக்கும் அதிகமானோர் சவாரி மேற்கொண்டதாக பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • அண்டை மாகாணமான தென் கரோலினாவின் ஹோரி, ஸ்பார்டன்பர்க், ஓகோனி உள்ளிட்ட பல நகரங்களுக்கும் தீ பரவியது.
    • தீயை அணைப்பதற்காக ஏராளமான ஹெலிகாப்டர்களும் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணத்தில் கடந்த வாரம் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டது. இந்த காட்டுத்தீ அடுத்தடுத்து அருகில் உள்ள மற்ற பகுதிகளுக்கும் பரவின.

    இதனால் அண்டை மாகாணமான தென் கரோலினாவின் ஹோரி, ஸ்பார்டன்பர்க், ஓகோனி உள்ளிட்ட பல நகரங்களுக்கும் தீ பரவியது.

    இதற்கிடையே தீயை அணைக்கும் பணியில் 500-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் களமிறங்கினர். ஆனால் அதனை சுற்றியுள்ள 175 இடங்களில் தீ பரவியது.

    இதில் சுமார் 4 ஆயிரம் ஏக்கர் வனப்பகுதி எரிந்து நாசமாகின. இதனால் அந்த பகுதி முழுவதும் கரும்புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது. எனவே வட கரோலினா மாகாண கவர்னர் ஹென்றி மெக்மாஸ்டர் அங்கு அவசர நிலை அறிவித்து உத்தரவிட்டார்.

    இதனையடுத்து அங்கு வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டது. அதன்படி இதுவரை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் அங்கிருந்து வெளியேறி உள்ளனர்.

    கடந்த ஒரு வாரமாக நடைபெறும் பணியில் இதுவரை 30 சதவீதம் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக பேரிடர் மீட்பு துறை தெரிவித்துள்ளது. எனவே தீயை அணைப்பதற்காக ஏராளமான ஹெலிகாப்டர்களும் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன.

    • ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி போட்டியில், சிலிர்க்க வைக்கும் வெற்றி பெற்ற நம்முடைய வீரர்களுக்கு வாழ்த்துகள்.
    • வெற்றிக்கான தருணம் தொடர்வதற்கு அவர்களை வாழ்த்துவதுடன், கோப்பையை கொண்டு வரவும் வாழ்த்துகிறேன் என பதிவிட்டு உள்ளார்.

    சாம்பியன்ஸ் டிராபி தொடரில் துபாயில் நடைபெற்ற முதலாவது அரையிறுதியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் விளையாடின.

    இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்த ஆஸ்திரேலிய அணி, 49.3 ஓவர்களின் முடிவில், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 264 ரன்களை எடுத்தது.

     

    இதையடுத்து 265 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி 48.1 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 267 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்த வெற்றியை, பல இடங்களில் மக்கள் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.

    இந்திய அணியின் அபார வெற்றி பற்றி மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வெளியிட்ட எக்ஸ் பதிவில், திறமை மற்றும் மனவுறுதியுடனான மிக சிறந்த ஆட்டம். முழக்கத்துடன் இந்திய அணி இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது. ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி போட்டியில், சிலிர்க்க வைக்கும் வெற்றி பெற்ற நம்முடைய வீரர்களுக்கு வாழ்த்துகள்.

    நாட்டை பெருமையடைய செய்துள்ளீர்கள். இறுதி போட்டியில் சிறப்பாக விளையாட வாழ்த்துகள் என தெரிவித்து உள்ளார்.

    இதேபோன்று மத்திய மந்திரி ஜே.பி. நட்டா வெளியிட்டு உள்ள எக்ஸ் பதிவில், இறுதி போட்டிக்கு முன்னேற்றம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதி போட்டியில், பாராட்டத்தக்க வெற்றியை பெற்ற இந்திய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு வாழ்த்துகள்.

    இந்திய அணி மீண்டும் ஒரு முறை தனித்துவம் வாய்ந்த குழுப்பணி, மனவுறுதி மற்றும் சிறந்த தரம் ஆகியவற்றை வெளிப்படுத்தி உள்ளது. இந்த வெற்றிக்கான தருணம் தொடர்வதற்கு அவர்களை வாழ்த்துவதுடன், கோப்பையை கொண்டு வரவும் வாழ்த்துகிறேன் என பதிவிட்டு உள்ளார்.

    • கல்பனாவுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பிரபல பின்னணி பாடகி கல்பனா. தெலுங்கு, தமிழ் உள்பட பல்வேறு மொழி திரைப்படங்களில் பின்னணி பாடகியாக பணியாற்றியுள்ளார்.

    தமிழில் தாஜ்மகால், ரஜினி முருகன், மாமன்னன், மனிதன், என் ராசவின் மனசுல உள்பட பல்வேறு படங்களில் இடம்பெற்றுள்ள பாடல்களுக்கு பின்னணி குரல் கொடுத்துள்ளார். மேலும், தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கல்பனா பங்கேற்றுள்ளார்.

    இந்நிலையில், பாடகி கல்பனா தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். தெலுங்கானாவின் ஐதரபாத் மாவட்டம் நிசாம்பத் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கல்பனா வசித்து வந்தார்.

    அவரது வீடு கடந்த 2 நாட்களாக திறக்கப்படாமல் இருந்ததை கண்டு சந்தேகமடைந்த குடியிருப்பில் வசித்தவர்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு கல்பனா மயங்கிய நிலையில் கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார், அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கல்பனாவுக்கு செயற்கை சுவாச கருவி உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகளில் முன்னணி இடத்தில் இருப்பவர் நயன்தாரா.
    • ரசிகர்கள் நயன் தாராவை லேடி சூப்பர் ஸ்டார் என அன்போடு அழைப்பர்.

    தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகளில் முன்னணி இடத்தில் இருப்பவர் நயன்தாரா. இவர் கடைசியாக அட்லீ இயக்கத்தில் ஜவான் திரைப்படத்தில் நடித்து இருந்தார். சில மாதங்களுக்கு முன் இவரது திருமணத்தை குறித்த நெட்பிளிக்ஸ் ஆவண திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    இந்த ஆவண திரைப்படத்தில் தனுஷ்-க்கும் நயன் தாராவிற்கும் இடையே சில சர்ச்சைகள் ஏற்பட்டது. ரசிகர்கள் நயன்தாராவை லேடி சூப்பர் ஸ்டார் என அன்போடு அழைப்பர். அவர் நடிக்கும் திரைப்படங்களில் டைட்டில் கார்டுகளிலும் இந்த பெயர் இடம் பெற்று இருக்கும்.

    ஆனால் தற்பொழுது நயன் தாரா இனிமேல் என்னை யாரும் லேடி சூப்பர்ஸ்டார் என அழைக்க வேண்டாம் என ரசிகர்களுக்கு அன்பான வேண்டுக்கோள் விடுத்துள்ளார்.

    அதில் அவர் கூறியதாவது " வணக்கம்.

    இந்தக் குறிப்பு உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் சிறந்த ஆரோக்கியத்துடனும் மகிழ்ச்சியுடனும் காணும் என்று நான் மனதார நம்புகிறேன். என் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகமாக இருந்து வருகிறது, அது எப்போதும் உங்கள் நிபந்தனையற்ற அன்பு மற்றும் பாசத்தால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. எனது வெற்றியின் போது என் தோளில் தட்டினாலும் சரி, அல்லது கஷ்டங்களின் போது என்னைத் தூக்கி நிறுத்த உங்கள் கையை நீட்டியாலும் சரி, நீங்கள் எப்போதும் எனக்காக இருந்திருக்கிறீர்கள்.

    உங்களில் பலர் என்னை "லேடி சூப்பர் ஸ்டார்" என்று அன்புடன் குறிப்பிட்டுள்ளீர்கள், இது உங்கள் மகத்தான பாசத்திலிருந்து பிறந்த ஒரு பட்டம். இவ்வளவு மதிப்புமிக்க பட்டத்தால் எனக்கு முடிசூட்டியதற்காக நான் உங்கள் அனைவருக்கும் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன். இருப்பினும், நீங்கள் அனைவரும் என்னை "நயன்தாரா" என்று அழைக்க வேண்டும் என்று நான் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். ஏனென்றால், அந்தப் பெயர் என் இதயத்திற்கு மிக நெருக்கமானது என்று நான் உணர்கிறேன். அது ஒரு நடிகராக மட்டுமல்ல, ஒரு தனிநபராகவும் நான் யார் என்பதைக் குறிக்கிறது.

    பட்டங்களும் பாராட்டுகளும் விலைமதிப்பற்றவை, ஆனால் அவை சில நேரங்களில் நம் படைப்புகள், மற்றும் பார்வையாளர்களுடன் நாம் பகிர்ந்து கொள்ளும் நிபந்தனையற்ற பிணைப்பிலிருந்து நம்மைப் பிரிக்கும் ஒரு பிம்பத்தை உருவாக்கக்கூடும்.

    நாம் அனைவரும் அன்பின் மொழியைப் பகிர்ந்து கொள்கிறோம் என்று நான் நம்புகிறேன், அது நம்மை எல்லா வரம்புகளையும் தாண்டி இணைக்கிறது. எதிர்காலம் நம் அனைவருக்கும் கணிக்க முடியாததாக இருக்கலாம், ஆனால் உங்கள் மங்காத ஆதரவும், உங்களை மகிழ்விக்க நான் எடுக்கும் கடின உழைப்பும் நிலையாக இருக்கும் என்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

    சினிமாதான் நம்மை ஒற்றுமையாக வைத்திருக்கிறது, அதை ஒன்றாகக் கொண்டாடுவோம். என்றும் அன்புடன், நன்றியுடன் நயன்தாரா" என அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இந்தியா 48.1 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 267 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
    • ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் கிடைத்த தோல்விக்கு ஆஸ்திரேலியாவை இந்தியா பழி தீர்த்தது.

    துபாய்:

    சாம்பியன்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதிப் போட்டி துபாயில் நடைபெற்றது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 264 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியின் கேப்டன் ஸ்மித் 73 ரன்னிலும், அலெக்ஸ் கேரி 61 ரன்னிலும் அவுட்டாகினர்.

    இந்தியா சார்பில் ஷமி 3 விக்கெட்டும், ஜடேஜா, வருண் சக்கரவர்த்தி தலா 2 விக்கெட்டும், அக்சர் படேல், பாண்ட்யா தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    அடுத்து களமிறங்கிய இந்தியா 48.1 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 267 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றதுடன் இறுதிப்போட்டிக்கு

    முன்னேறி அசத்தியது.

    இந்நிலையில், ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் கிடைத்த தோல்விக்கு ஆஸ்திரேலிய அணியை இந்தியா பழி தீர்த்துள்ளது. அரை சதம் கடந்து 84 ரன் எடுத்த விராட் கோலி ஆட்ட நாயகன் விருது வென்றார்.

    • முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 264 ரன்கள் எடுத்தது.
    • அடுத்து ஆடிய இந்தியா 267 ரன்கள் எடுத்து வென்றது.

    துபாய்:

    சாம்பியன்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதிப் போட்டி துபாயில் நடைபெறுகிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 264 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியின் கேப்டன் ஸ்மித் 73 ரன்னிலும், அலெக்ஸ் கேரி 61 ரன்னிலும் அவுட்டாகினர்.

    இந்தியா சார்பில் ஷமி 3 விக்கெட்டும், ஜடேஜா, வருண் சக்கரவர்த்தி தலா 2 விக்கெட்டும், அக்சர் படேல், பாண்ட்யா தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 265 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா, சுப்மன் கில் இறங்கினர். ரோகித் சர்மா அதிரடியாக ஆடினார்.

    ரோகித் சர்மா 28 ரன்னிலும், சுப்மன் கில் 8 ரன்னிலும் அவுட்டாகினர்.

    3வது விக்கெட்டுக்கு இணைந்த விராட் கோலி, ஷ்ரேயஸ் அய்யர் ஜோடி 91 ரன்கள் சேர்த்தது. ஷ்ரேயாஸ் அய்யர் 45 ரன்னில் அவுட்டானார். அக்சர் படேல் 27 ரன்னிலும்

    ஒருபுறம் விக்கெட்கள் வீழ்ந்தாலும் விராட் கோலி அரை சதம் கடந்தார். அவர் 84 ரன்னில் வெளியேறினார். பாண்ட்யா

    இறுதியில், இந்திய அணி 48.1 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 267 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றதுடன் இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியது. கே.எல்.ராகுல் 42 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    • ஏ.ஆர் முருகதாஸ் பாலிவுட் நடிகர் சல்மான் கானை வைத்து சிக்கந்தர் என்ற இந்தி படத்தை இயக்கியுள்ளார்.
    • திரைப்படம் அடுத்தாண்டு ரம்ஜான் பண்டிகையை ஒட்டி வெளியாகவுள்ளது.

    இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் பாலிவுட் நடிகர் சல்மான் கானை வைத்து சிக்கந்தர் என்ற இந்தி படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தை பிரபல தயாரிப்பாளர் சஜித்நதியத்வாலா தயாரிக்கிறார்.

    மேலும் சல்மான்கான் 10 ஆண்டுகளுக்கு பிறகு தயாரிப்பாளர் சஜித் நதியத்வாலாவுடன் இணைந்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். நடிகர் சத்யராஜ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். திரைப்படம் அடுத்தாண்டு ரம்ஜான் பண்டிகையை ஒட்டி வெளியாகவுள்ளது.

    படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ மற்றும் டீசர் சில மாதங்களுக்கு முன் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் படத்தின் முதல் பாடலான ஸோரா ஜபீன் வீடியோ வெளியாகியுள்ளது. இதில் ராஷ்மிகா மந்தனா மற்றும் சல்மான் கான் இணைந்து கலக்கலான நடத்தை வெளிப்படுத்தியுள்ளனர். பாடலின் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ரம்ஜானுக்கு நாம் வாழ்த்து சொல்வதை பார்த்தால் பல பேருக்கு கோபம் வரும்.
    • சிறுபான்மை மக்களுடைய மனதில், பெரும்பான்மை இடத்தை பிடித்த ஒரு அரசு என்றால், அது திராவிட மாடல் அரசுதான்.

    தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் தமிழ்நாடு வக்ஃபு வாரியத்தின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இஃப்தார் (நோன்பு திறக்கும்) நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஏழை, எளிய மக்களுக்கு உணவுப் பொருட்களை வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

    தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தின் ஏற்பாட்டில் நடக்கின்ற இந்த சிறப்புக்குரிய நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் புனித ரம்ஜான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்பதில் உங்களை எல்லாம் சந்திப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

    முதலில் உங்கள் அனைவருக்கும் என்னுடைய புனித ரம்ஜான் வாழ்த்துகளை நான் தெரிவித்துக் கொள்கிறேன். ரம்ஜானுக்கு நாம் வாழ்த்து சொல்வதை பார்த்தால் பல பேருக்கு கோபம் வரும். அதை பற்றியெல்லாம் நமக்கு கவலை இல்லை. ரம்ஜானுக்கு வாழ்த்து சொல்வதால் பலபேருக்கு கோபம் வருகிறது என்றால், இன்னும் நூறு முறை கூட மீண்டும், மீண்டும் நாங்கள் ரம்ஜான் வாழ்த்துகளை சொல்லிக் கொண்டே இருப்போம்.

    இந்தியாவிலேயே இன்றைக்கு சிறுபான்மை மக்கள் உங்களுக்கு சொந்த வீடு போல இருக்கின்ற ஒரு மாநிலம் அப்படியென்றால், அது நம்முடைய தமிழ்நாடு என்று நாம் தைரியமாக சொல்லலாம். சிறுபான்மை மக்களுடைய மனதில், பெரும்பான்மை இடத்தை பிடித்த ஒரு அரசு என்றால், அது நம்முடைய திராவிட மாடல் அரசுதான். அதற்கு உங்களிடம் இருக்கின்ற அந்த மகிழ்ச்சியும், உணர்வும், பாசமுமே சாட்சி.

    திராவிட இயக்கத்துக்கும்– இஸ்லாமிய மக்களுக்குமான உறவு இன்று நேற்று தொடங்கிய உறவு கிடையாது.பெரியவர் மறைந்த கண்ணியமிகு காயிதே மில்லத் அவர்களுடைய காலத்தில் இருந்தே திராவிட இயக்கம் இஸ்லாமிய மக்களுடைய அன்பை பெற்று செயல்பட்டு வருகின்றது.

    இன்றைக்கு கலைஞர் வழியில் தான் நம்முடைய முதலமைச்சர் அவர்களும், இஸ்லாமிய பெருமக்களுக்கு அனைத்து வகையிலும் துணை நின்று வருகிறார். நம்முடைய கழக அரசு ஆட்சிக்கு வந்ததுமே, குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஒன்றிய அரசு திரும்ப பெறவேண்டும் என்று சட்டப்பேரவையில் முதன்முதலில் தீர்மானம் நிறைவேற்றியவர் தான் நம்முடைய முதலமைச்சர்.

    முத்தலாக் சட்டம், என்.ஆர்.சி, இப்படி வருஷா வருஷம் ஏதாவது ஒரு சிக்கலை ஏற்படுத்தி, சிறுபான்மை மக்களை நெருக்கடிக்கு ஆளாக்குகின்ற வேலையை ஒன்றிய அரசு தொடர்ந்து செய்து கொண்டு வருகிறது. ஆனால், அதை எல்லாம் இந்தியாவிலேயே கடுமையாக எதிர்க்கின்ற ஒரு இயக்கம், ஒரு மாநிலம் ஒரு அரசு என்றால், அது திராவிட முன்னேற்றக் கழகம்தான், நம்முடைய முதலமைச்சர்தான்.

    குறிப்பாக, இன்றைக்கு ஒரு புது பிரச்சினையை புதிதாக கையில் எடுத்து இருக்கிறார்கள். அதுதான் வக்ஃப் வாரிய திருத்த மசோதா என்று ஒரு விஷயத்தை நடைமுறைப்படுத்த துடித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த திருத்தம் மட்டும் அமலுக்கு வந்தால், வக்ஃப் வாரிய சொத்துக்கள் வக்ஃப் வாரியங்களிடம் இருந்து அபகரிக்கப்படுகின்ற அபாயத்திற்கு தள்ள முயற்சிக்கிறார்கள்.

    அதுமட்டுமல்ல, வக்ஃப் வாரியங்களுக்கு ஒன்றிய அரசு சொல்கின்ற ஆட்களைதான் நியமனம் செய்ய வேண்டும் என்று இந்த மசோதா குறிப்பிடுகின்றது. குறிப்பாக, முஸ்லிம் அல்லாத நபர்களையும், வக்ஃப் வாரிய உறுப்பினர்களாக சேர்க்கக் கூடிய சூழல் உருவாக இருக்கிறது. அதனால்தான் நம்முடைய தலைவர், இந்த சட்டத்தை துவக்கத்திலிருந்து கடுமையாக எதிர்த்துக் கொண்டு வருகிறார்கள்.

    இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

    • பாலியல் வன்கொடுமைக்கு ஆளான குழந்தைகளில் 30% க்கும் அதிகமானோர் சிறுவர்கள் என்று யுனிசெப் தெரிவித்துள்ளது.
    • பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டவர்களில் 5 மற்றும் 4 வயதுக்கு உட்பட 16 பச்சிளம் குழந்தைகளும் அடங்குவர்.

    வட ஆப்பிரிக்க நாடான சூடானில் கடந்த 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் ராணுவத்துக்கும், துணை ராணுவப் படையினருக்கும் இடையே உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது.

    இதனால் நாடு முழுவதும் பொதுமக்கள் மீது வன்முறை, வெறிச்செயல்கள் அரங்கேறி வருகின்றன. இதுவரை குறைந்தது 20,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

    இந்தப் போரில் 1.4 கோடிக்கும் அதிகமான மக்களை தங்கள் வீடுகளிலிருந்து விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். நாட்டின் சில பகுதிகள் பஞ்சத்தில் சிக்கித் தவித்து வருகிறது.

    இந்நிலையில் சூடானில் கடந்த 1 ஆண்டில் (2024இல்) மட்டும் ஆண் குழந்தைகள் உட்பட 221 குழந்தைகள் ராணுவ வீரர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக ஐநாவுக்கான குழந்தைகள் நிறுவனம் (யுனிசெப்) அறிக்கை வெளியிட்டுள்ளது.

    போர் தொடங்கியதில் இருந்து சுமார் 61 ஆயிரத்து 800 குழந்தைகள் இடம்பெயர்ந்துள்ளனர் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பாலியல் வன்முறை மற்றும் கட்டாய குழந்தை திருமணங்கள் உள்ளிட்ட அட்டூழியங்கள் இரு ராணுவ தரப்பினராலும் செய்யப்பட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

    பாலியல் வன்கொடுமைக்கு ஆளான குழந்தைகளில் 30% க்கும் அதிகமானோர் சிறுவர்கள் என்று யுனிசெப் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் 5 மற்றும் 4 வயதுக்கு உட்பட 16 பச்சிளம் குழந்தைகளும் அடங்குவர். பதிவான வழக்குகளை தவிர்த்து இந்த எண்ணிக்கை பன்மடங்கு அதிகம் இருக்கலாம் என்ற அச்சம் சர்வதேச சமூகங்களிடையே பரவியுள்ளது.

    • அவருக்கு எங்கள் கதவுகள் திறந்தே உள்ளன என்று லாலு பிரசாத் யாதவ் அழைப்பு விடுத்தார்.
    • உங்கள் சாதியைச் சேர்ந்தவர்கள் கூட நான் ஏன் இதைச் செய்கிறேன் என்று என்னிடம் கேட்டார்கள்

    பீகாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணியில் இருந்த நிதிஷ் குமார் கடந்த ஆண்டு மக்களவை தேர்தலுக்கு முன் அக்கூட்டணியில் இருந்து விலகி பா.ஜ.க தலைமையிலான என்டிஏ கூட்டணியில் இணைந்தார்.

    கூட்டணி முறிந்ததில் இருந்து சட்டமன்ற எதிர்கட்சித் தலைவரும் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவின் மகனுமான தேஜஸ்வி யாதவ் நிதிஷ் குமாரை கடுமையாக விமர்சித்து வருகிறார்.

    இதற்கிடையே நிதிஷ் குமாரின் கடந்த கால தவறுகளை மன்னித்து அவர் எங்கள் கூட்டணியில் இணையும் நேரம் வந்துவிட்டது, அவருக்கு எங்கள் கதவுகள் திறந்தே உள்ளன என்று லாலு பிரசாத் யாதவ் அழைப்பு விடுத்தார். ஆனால் இந்த அழைப்பை நிதிஷ் குமார் நிராகரித்தார்.

    இந்நிலையில் பீகாரில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்றைய கூட்டத்தின்போது நிதிஷ் குமாருக்கும், தேஜஸ்வி யாதவுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. 2005 வரை இருந்த லாலு பிரசாத் ஆட்சியோடு தற்போதைய ஆட்சியை ஒப்பிட்ட தேஜஸ்வி, இந்த அரசாங்கம் 40 ஆண்டுகள் ஆட்சி செய்தாலும், 2005க்கு முந்தைய காலத்தையே குறை கூறிக்கொண்டே இருக்கும் என்று தெரிவித்தார்.

    இதனை இடைமறித்து பேசிய நிதிஷ் குமார், முன்பு பீகாரில் என்ன இருந்தது? உன் (தேஜஸ்வி யாதவ்) தந்தை உருவாவதற்கு நான்தான் காரணம். உங்கள் சாதியைச் சேர்ந்தவர்கள் கூட நான் ஏன் இதைச் செய்கிறேன் என்று என்னிடம் கேட்டார்கள், ஆனாலும் நான் அவரை ஆதரித்தேன்.

    பீகாரில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் பிரிக்கப்படுவதை லாலு யாதவ் எதிர்த்தபோது, அது தவறு என்று நான் சொன்னேன். அந்த நேரத்தில் நான் அவரை எதிர்த்தேன் என்று தெரிவித்தார்.

    ×