என் மலர்
நீங்கள் தேடியது "மோசடி கைது"
- மோசடி செய்த ராமாபுரத்தைச் சேர்ந்த பினகாஷ் எர்னஸ்ட்(38) கைது செய்யப்பட்டுள்ளார்.
- மனைவி வான்மதி தலைமறைவாகியுள்ள நிலையில், போலீசார் தேடி வகின்றனர்.
மருத்துவத்துறை மற்றும் மின்சார துறைகளில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி, ரூ. 45.4 லட்சம் மோசடி செய்த ராமாபுரத்தைச் சேர்ந்த பினகாஷ் எர்னஸ்ட்(38) கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், இதற்கு உடந்தையாக இருந்த அவரது மனைவி வான்மதி தலைமறைவாகியுள்ள நிலையில், போலீசார் தேடி வகின்றனர்.
சென்னை, கே.கே நகர், 45வது தெருவில் வசித்து வருபவர் மதியழகன். இவர், கடந்த 16 வருடங்களாக தனியார் நிறுவனத்தில் மருந்தாளுநர் வேலை செய்து வருகிறார்.
இவருக்கு தொழில் ரீதியாக கடந்த 2016ம் ஆண்டு அறிமுகமான மருத்துவர் வான்மதி மற்றும் அவரது கணவர் பினகாஷ் எர்னஸ்ட் ஆகிய இருவரும் சேர்ந்து, தமிழ்நாடு மருத்துவத்துறை மற்றும் மின்சார துறைகளில் உயர் பதவியில் உள்ளவர்களை நன்கு தெரியும் என்றும், மருத்துவதுறையில் அரசு வேலைக்கு ரூ.7 லட்சமும், மின்சாரதுறையில் அரசு வேலைக்கு ரூ.3 லட்சமும் கொடுத்தால், அரசு வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளார்.
அதன்பேரில், மதியழகன் மற்றும் அவருக்கு தெரிந்தவர்கள் என்று சுமார் 15 நபர்கள் சேர்ந்து பணம் ரூ.45,41,000/-ஐ வான்மதி மற்றும் அவரது கணவர் பினகாஷ் எர்னஸ்ட்யிடம் கொடுத்துள்ளார்.
பின்னர் இதுவரை அரசு வேலை வாங்கித்தராமலும், கொடுத்த பணத்தை திருப்பி தராமலும் ஏமாற்றி வருவதாக மதியழகன், கடந்த 02.03.2025 அன்று போலீசில் புகார் தெரிவித்தார்.
புகாரின்பேரில், R-10 எம்.ஜி.ஆர் நகர் காவல் நிலைய குற்றப்பிரிவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணையில் உண்மை தெரியவந்ததை அடுத்து, மோசடியில் ஈடுபட்ட பினகாஷ் எர்னஸ்ட் என்பவை போலீசார் கைது செய்தனர்.
தலைமறைவாக உள்ள மனைவியை பிடிக்க காவல்குழுவினர் தீவிர தேடுதலில் ஈடுபட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட பினகாஷ் எர்னஸ்ட் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி, சிறையில் அடைக்கப்பட்டார்.
- பணம் மோசடி செய்யப்பட்டதை அறிந்த ஜிப்மர் ஊழியர்கள் இதுபற்றி கோரிமேடு போலீசில் புகார் தெரிவித்தனர்.
- போலீசார் விசாரணை நடத்தி ஐ.ஆர்.பி.என். போலீசார் சணில்குமார் மற்றும் அவரது சகோதரர் சுகேஷ் ஆகிய இருவர் மீதும் மோசடி வழக்கு பதிவு செய்துள்ளனர்.
புதுச்சேரி:
புதுவை கோரிமேடு ஆனந்தாநகரை சேர்ந்தவர் தீபக் தாமஸ். இவரது மனைவி அனுமோல் (வயது34). இவர் ஜிப்மர் ஆஸ்பத்திரியில் நர்சாக பணிபுரிந்து வருகிறார்.
இவரிடம் புதுவை காவல்துறையில் ஐ.ஆர்.பி.என். போலீஸ்காரராக பணிபுரியும் சணில்குமார்(41) மற்றும் இவரது அண்ணன் சுகேஷ் (43) ஆகியோர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு புதுவை அருகே மொரட்டாண்டியில் குறைந்த விலையில் வீட்டு மனை வாங்கி தருவதாக கூறினர்.
இதனை நம்பி அனுமோல் வீட்டுமனை வாங்க சணில்குமார் மற்றும் சுகேஷிடம் முன் பணம் கொடுத்தார்.
இதுபோல் ஜிப்மர் ஆஸ்பத்திரியில் பணிபுரியும் அதிகாரிகள், தொழில்நுட்ப ஊழியர்கள், நர்சுகள் 17 பேர் வீட்டுமனை வாங்க ரூ.3 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை சணில்குமார் மற்றும் சுகேஷிடம் ரூ.40 லட்சம் முன்பணம் கொடுத்தனர்.
ஆனால் அவர்கள் வீட்டுமனை வாங்கிதர வில்லை. இதையடுத்து பணம் கொடுத்தவர்கள் திருப்பி கேட்ட போது பணத்தை கொடுக்காமல் காலம் கடத்தி வந்தனர். இதனால் பணம் மோசடி செய்யப்பட்டதை அறிந்த ஜிப்மர் ஊழியர்கள் இதுபற்றி கோரிமேடு போலீசில் புகார் தெரிவித்தனர். போலீசார் விசாரணை நடத்தி ஐ.ஆர்.பி.என். போலீசார் சணில்குமார் மற்றும் அவரது சகோதரர் சுகேஷ் ஆகிய இருவர் மீதும் மோசடி வழக்கு பதிவு செய்துள்ளனர்.
- குணசேகரன் மீது திருவண்ணாமலை போலீசாரால் தொடரப்பட்ட சிலை கடத்தல் வழக்கு நிலுவையில் உள்ளது.
- போலீசார் 2 பேரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய ஜெயிலில் அடைத்தனர்.
வந்தவாசி:
விழுப்புரம் மாவட்டம் நாப்பாளையத்தை சேர்ந்தவர் சங்கர்கணேஷ். வியாபாரியான இவர் வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டு கடனாளி ஆனார். இதையடுத்து நண்பர் மூலமாக ரைஸ் புல்லிங் எந்திரம் வாங்கி குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க முடிவு செய்தார்.
வந்தவாசி தாலுகா அலத்துரை கிராமத்தை சேர்ந்த காண்டீபன் (வயது 40), திருவண்ணாமலை தாலுகா நல்லவன்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த குணசேகரன் (50) ஆகியோர் தங்களிடம் இரிடியம் கண்டுபிடிககும் ரைஸ் புல்லிங் எந்திரம் இருப்பதாக தெரிவித்தனர். அவர்களிடம் சங்கர் கணேஷ் ரூ.20 ஆயிரம் கொடுத்துள்ளார்.
பின்னர் அவர்கள் காட்டிய ரைஸ் புல்லிங் எந்திரத்தை பார்த்தபோது அதில் எந்த பிடிப்பும் இல்லாமல் இருந்தது. இதனால் சந்தேகமடைந்த சங்கர்கணேஷ் கீழ்கொடுங்காலூர் போலீசில் புகார் செய்தார்.
இதையடுத்து வந்தவாசி போலீசார் ஆரியாத்தூர் கிராமத்திற்கு சென்று காண்டீபனை கைது செய்து ரைஸ் புல்லிங் எந்திரம் மற்றும் உபகரணங்களை கைப்பற்றினர்.
மேலும் போலீசார் வருவதை அறிந்து தப்பி ஓடிய குணசேகரனை விரட்டி பிடித்து கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 2 பேரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
காண்டீபன் செங்கல்பட்டு மாவட்டம் எலப்பாக்கம் கிராமத்தில் போலி டாக்டராக மருத்துவம் பார்த்தபோது ஒரத்தி போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. குணசேகரன் மீது திருவண்ணாமலை போலீசாரால் தொடரப்பட்ட சிலை கடத்தல் வழக்கு நிலுவையில் உள்ளது.
மேலும் இவர்கள் கேரள மாநிலம் பாலக்காடு, தஞ்சாவூர், சென்னை புரசைவாக்கம், தர்மபுரி, அரியலூர், புதுச்சேரி, மதுரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ரைஸ் புல்லிங் எந்திரம் விற்பனை செய்தது விசாரணையில் தெரியவந்தது.
அவர்களிடம் இருந்து போலி ரைஸ் புல்லிங் எந்திரம், ரூ.20 ஆயிரம், ஒரு மோட்டார்சைக்கிள், 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து போலீசார் 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய ஜெயிலில் அடைத்தனர்.
சதுரங்க வேட்டை படத்தில் கலசத்தை வைத்து ஏமாற்றும் காட்சி போல் சினிமா பாணியில் நடந்த இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- தலைமறைவாக இருந்த சிவக்குமாரை தனிப்படை போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- கைது செய்யப்பட்டுள்ள சிவக்குமார் மீது பல மோசடி வழக்குகள் உள்ளது.
திருப்பூர்:
திருப்பூர் பல்லடம் ரோடு தென்னம்பாளையத்தை சேர்ந்தவர் ரத்தினசாமி (வயது 62). கடந்த ஆண்டு மே மாதம், இவரிடம், பல்லடம், வேலப்ப கவுண்டன்பாளையத்தை சேர்ந்த சிவக்குமார் (53) என்பவர் 2 கோடி ரூபாய் லோன் வாங்கி தருவதாக கூறி, நில ஆவணம் மற்றும் ரூ.10.75 லட்சம் ரூபாய் பெற்றார். ஆனால் கூறியபடி லோன் பெற்று தராமல் காலம் கடத்தினார்.
இதையடுத்து ரத்தினசாமி, சிவகுமார் அலுவலகத்தை தொடர்பு கொண்ட போது முறையாக பதில் அளிக்கப்படவில்லை. தொடர்ந்து, ரத்தினசாமி போன்று பலரிடம் லோன் வாங்கி தருவதாக கூறி, நிலத்தின் ஆவணம் மற்றும் குறிப்பிட்ட தொகையை பெற்று சிவக்குமார் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதுதொடர்பாக ரத்தினசாமி திருப்பூர் எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளித்தார். திருப்பூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் சிவக்குமார் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வந்த நிலையில், தென்காசியில் தலைமறைவாக இருந்த சிவக்குமாரை தனிப்படை போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும், கைது செய்யப்பட்டுள்ள சிவக்குமார் மீது பல மோசடி வழக்குகள் உள்ளது. இதனால் அவரை அடுத்தடுத்து வழக்குகளில் போலீசார் கைது செய்து வருகின்றனர்.
- 2 ஆண்டுகளில் 230-க்கும் மேற்பட்ட ஆவணங்கள் திரட்டப்பட்டது.
- 14 பேர் தொடர் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
புதுச்சேரி:
புதுச்சேரியை சேர்ந்த ஆண்ட்ரூஸ் என்பவர் கடந்த 2023-ம் ஆண்டு கடன் பெற செல்போனில் உடனடி கடன் ஆப்பை டவுன்லோடு செய்து அதன்மூலம் ரூ.10 ஆயிரம் பணம் வாங்கினார்.
அவர் வாங்கிய ரூ.10 ஆயிரம் கடனுக்கு, வட்டி மேல் வட்டி சேர்த்து, அவரி டமிருந்து ரூ.2 லட்சத்து 99 ஆயிரம் பணத்தை பெற்றுள்ளனர்.
இருப்பினும், அவரை விடாமல் அவருடைய புகைப்படத்தை நிர்வாணமாக சித்தரித்து, அவருடைய செல்போன் தொடர்பு எண்ணிலுள்ள அனைவருக்கும் அனுப்பி மிரட்டி பணம் பறித்துக் கொண்டே இருந்தனர்.
இதுபற்றி அவர் கொடுத்த புகார் சம்பந்தமாக 2023-ம் ஆண்டு சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் கீர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
இதுதொடர்பாக கடந்த 2 ஆண்டுகளில் 230-க்கும் மேற்பட்ட ஆவணங்கள் திரட்டப்பட்டது. மேலும் வங்கி விவரங்கள், செல்போன் விவரங்கள், வாட்ஸ்-அப் விவரங்கள் டெலிகிராம் பற்றிய தகவல்கள் மற்றும் செல்போன்கள் யார்-யார் பெயரில் வாங்கப்பட்டது, எந்தெந்த ஊரில் இருந்து குற்றவாளிகள் செயல்படுகின்றனர், பணம் முதலில் எங்கு செல்கிறது என்பது போன்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டது.

இதில் இந்தியா முழுவதும் 14 பேர் இந்த தொடர் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இது தொடர்பாக சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ் பெக்டர்கள் தியாகராஜன் மற்றும் கீர்த்தி தலைமையில் 2 தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிபடையினர் விசா ரணையில், முதலாவது குற்றவாளியாக முகமது ஷபி (வயது 37) என்பவர் கேரளாவில் உள்ள எர்ணா குளத்தில் கைது செய்யப் பட்டார். லாரி டிரைவரான முகமது ஷபி சைபர் கும்பலுடன் இணைந்து பண மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. அவரிடம் விசாரித்த போது அவருடைய 3 வங்கி கணக்குகளில் மட்டும் ரூ.10 கோடியே 65 லட்சம் பணம் பரிமாற்றம் நடந்துள்ளது கண்டு பிடிக்கப்பட்டது.
மேலும், அவரிடம் வங்கி கணக்கை வாங்கிய நபர்க ளின் விவரங்கள் சேகரிக்கப் பட்டது. மொத்தமாக இந்த 14 பேரின் வங்கிக் கணக்குகள் அனைத்தும் சேர்த்து ரூ. 300 கோடிக்கு மேல் பண பரிவர்த்தனைகள் நடந்துள்ளது விசாரணையில் தெரியவந்தது.
இந்த பணம் அனைத்தும் கிரிப்டோ கரன்சிகளாக மாற்றப்பட்டு வெளிநாட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளது என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியாக செயல்பட்ட குஜராத்தை சேர்ந்த சித்தன் முகேஷா என்பவரை அமலாக்கத்துறையினர் ஏற்கனவே கைது செய்துள்ளனர். அவரின் ரூ.321 கோடி பணத்தை அமலாக்கதுறை முடக்கி வைத்துள்ளது.
மேலும் இந்த மோசடியில் தமிழகத்தை சேர்ந்த முஜிப் என்பவர் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப் பட்டுள்ளார். மொத்தம் 14 பேரில் இதுவரை 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் 11 பேரை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அடுத்தடுத்து குற்றவாளிகளை கைது செய்யப்படும் போது அந்த கிரிப்டோ கரன்சிகள் யாருக்கு சென்றது என்ற விவரங்கள் தெரிய வரும். கடன் வாங்கியோரை கம்போடியாவிலிருந்து தொலைபேசி மூலம் மிரட்டி பணம் பறித்தது தெரியவந்தது.
தற்போது புதுச்சேரி சைபர் கிரைம் மூலம் கைது செய்யப்பட்ட முகமது ஷபியிடமிருந்து 3 செல்போன்கள் மற்றும் ஒரு சொகுசு கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
- 8 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு ரூ.1 கோடியே 17 லட்சம் ரூபாய் ரொக்கப்பணம் கைப்பற்றப்பட்டு உள்ளது.
- மோசடி சம்பவம், நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.
புதுடெல்லி:
கிழக்கு மத்திய ரெயில்வே மண்டலத்தில், தலைமை லோகோ பைலட் பதவிக்கு, துறை ரீதியான தேர்வு நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற இருந்தது. ரெயில்வேயில் பணிபுரியும் ஊழியர்கள், இந்த தேர்வை எழுதி பதவி உயர்வு பெற முடியும். இந்த தேர்வுக்கான வினாத்தாளை கசியவிடும் முயற்சிகளில் சிலர் ஈடுபடுவதாக சி.பி.ஐ. போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து நேற்று முன்தினம் இரவில் முதல் சராய் பகுதியில் 3 இடங்களில் அவர்கள் திடீர் சோதனை நடத்தினர். அப்போது 17 பேர், கையால் எழுதப்பட்ட ரெயில்வே தேர்வு வினாத்தாள் நகல்களுடன் பிடிபட்டனர். அவர்கள் அனைவரும் ரெயில்வேயில் இளநிலை லோகோ பைலட்டாக (என்ஜின் டிரைவர்) பணிபுரிபவர்கள் என்று தெரியவந்தது. அவர்கள் பணம் கட்டி வினாத்தாள் நகல்களை மோசடியாக பெற்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் வினாத்தாள் நகல்களுடன் கையும், களவுமாக பிடிபட்டு கைது செய்யப்பட்டனர்.
இவர்களுக்கு வினாத்தாள்களை வினியோகித்ததாக மேலும் 9 ரெயில்வே அதிகாரிகள் பிடிபட்டனர். அவர்களும் கைது செய்யப்பட்டனர். இந்த தேர்வை நடத்தும் பொறுப்பு அதிகாரியான, மண்டல முதுநிலை மின் பொறியாளர் (ஆபரேஷன்) மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இவர்தான் வினாத்தாளை தயாரிக்கும் அதிகாரி ஆவார். அவர் கைப்பட ஆங்கிலத்தில் வினாக்களை எழுதி ஒரு என்ஜின் டிரைவரிடம் கொடுத்துள்ளார். அந்த நபர் இந்தி மற்றும் வேறு சில மொழிகளிலும் வினாத்தாள்களை தயாரித்து மற்றவர்களுக்கு வினியோகம் செய்துள்ளார். இதனால் மண்டல முதுநிலை பொறியாளரும் கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து 8 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு ரூ.1 கோடியே 17 லட்சம் ரூபாய் ரொக்கப்பணம் கைப்பற்றப்பட்டு உள்ளது. இந்த தொகை வினாத்தாள் விற்பனைக்காக வசூலிக்கப்பட்ட தொகை என்று தெரியவந்துள்ளது.
பிடிபட்டவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட கையெழுத்தில் தயாரிக்கப்பட்ட வினாத்தாளும், நேற்று நடந்த அசல் தேர்வு வினாத்தாள் கேள்விகளும் பொருத்தமாக இருப்பது ஒப்பிடப்பட்டு கண்டறியப்பட்டு உள்ளது. இதை புகாரில் முக்கிய சான்றாக இணைத்து உள்ளனர்.
இந்த மோசடி சம்பவம், நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.






