search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    வீட்டுமனை வாங்கி தருவதாக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரி ஊழியர்களிடம் ரூ.40 லட்சம் மோசடி செய்த போலீஸ்காரர்
    X

    வீட்டுமனை வாங்கி தருவதாக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரி ஊழியர்களிடம் ரூ.40 லட்சம் மோசடி செய்த போலீஸ்காரர்

    • பணம் மோசடி செய்யப்பட்டதை அறிந்த ஜிப்மர் ஊழியர்கள் இதுபற்றி கோரிமேடு போலீசில் புகார் தெரிவித்தனர்.
    • போலீசார் விசாரணை நடத்தி ஐ.ஆர்.பி.என். போலீசார் சணில்குமார் மற்றும் அவரது சகோதரர் சுகேஷ் ஆகிய இருவர் மீதும் மோசடி வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுவை கோரிமேடு ஆனந்தாநகரை சேர்ந்தவர் தீபக் தாமஸ். இவரது மனைவி அனுமோல் (வயது34). இவர் ஜிப்மர் ஆஸ்பத்திரியில் நர்சாக பணிபுரிந்து வருகிறார்.

    இவரிடம் புதுவை காவல்துறையில் ஐ.ஆர்.பி.என். போலீஸ்காரராக பணிபுரியும் சணில்குமார்(41) மற்றும் இவரது அண்ணன் சுகேஷ் (43) ஆகியோர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு புதுவை அருகே மொரட்டாண்டியில் குறைந்த விலையில் வீட்டு மனை வாங்கி தருவதாக கூறினர்.

    இதனை நம்பி அனுமோல் வீட்டுமனை வாங்க சணில்குமார் மற்றும் சுகேஷிடம் முன் பணம் கொடுத்தார்.

    இதுபோல் ஜிப்மர் ஆஸ்பத்திரியில் பணிபுரியும் அதிகாரிகள், தொழில்நுட்ப ஊழியர்கள், நர்சுகள் 17 பேர் வீட்டுமனை வாங்க ரூ.3 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை சணில்குமார் மற்றும் சுகேஷிடம் ரூ.40 லட்சம் முன்பணம் கொடுத்தனர்.

    ஆனால் அவர்கள் வீட்டுமனை வாங்கிதர வில்லை. இதையடுத்து பணம் கொடுத்தவர்கள் திருப்பி கேட்ட போது பணத்தை கொடுக்காமல் காலம் கடத்தி வந்தனர். இதனால் பணம் மோசடி செய்யப்பட்டதை அறிந்த ஜிப்மர் ஊழியர்கள் இதுபற்றி கோரிமேடு போலீசில் புகார் தெரிவித்தனர். போலீசார் விசாரணை நடத்தி ஐ.ஆர்.பி.என். போலீசார் சணில்குமார் மற்றும் அவரது சகோதரர் சுகேஷ் ஆகிய இருவர் மீதும் மோசடி வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    Next Story
    ×