என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரோலர் கோஸ்டர்"

    • பிரியங்காவின் வருங்கால கணவர் நிகில் அவருடன் இருந்தார்.
    • பிரியங்கா ஒரு தனியார் தொலைத்தொடர்பு நிறுவனத்தில் விற்பனை மேலாளராகப் பணிபுரிந்து வந்தார்.

    டெல்லியில் உள்ள பொழுதுபோக்கு பூங்காவில் ஏற்பட்ட ரோலர் கோஸ்டர் விபத்தில் ஒரு இளம் பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இறந்தவர் டெல்லியைச் சேர்ந்த 24 வயது பிரியங்கா. தென்கிழக்கு டெல்லியில் உள்ள ஃபன் அண்ட் ஃபுட் வாட்டர் பார்க் -க்கு சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. சம்பவம் நடந்த நேரத்தில் பிரியங்காவின் வருங்கால கணவர் நிகில் அவருடன் இருந்தார்.

    கடந்த வியாழக்கிழமை, பிரியங்காவும் நிகிலும் மதியம் 1 மணியளவில் கேளிக்கை பூங்காவிற்கு வந்தனர். மாலை ஆறு மணிக்கு இருவரும் ரோலர் கோஸ்டரில் ஏறினார்கள்.

    ஊஞ்சல் அதன் உச்சத்தை அடைந்தபோது, பிரியங்காவைத் தாங்கி நின்ற ஸ்டாண்ட் சரிந்து, அவர் தரையில் விழுந்தார். பிரியங்கா கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், ஆனால் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    பிரியங்காவுக்கும் நிகிலுக்கும் ஜனவரி 2023 இல் நிச்சயதார்த்தம் நடந்தது. திருமணம் பிப்ரவரி 2026 இல் திட்டமிடப்பட்டது. பிரியங்கா ஒரு தனியார் தொலைத்தொடர்பு நிறுவனத்தில் விற்பனை மேலாளராகப் பணிபுரிந்து வந்தார்.

    • விபத்தில் சிக்காமல் நூலிழைவில் தப்பியதாக தகவல்.
    • இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    ஹவாய் தீவில் உள்ள ஹோன்லுலுவில் இருந்து லிஹூவிற்கு சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் சென்று கொண்டிருந்தது. இந்த விமானம் மோசமான வானிலை காரணமாக அதிபயங்கர விபத்தில் சிக்காமல் நூலிழைவில் தப்பியதாக தகவல் வெளியாகி உள்ளது.

    கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற இந்த சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் 2786 விமானமான போயிங் 737 மேக்ஸ் 8 போதிய வெளிச்சமின்மை காரணமாக தரையிறங்குவதை தவிர்க்க உத்தரவிடப்பட்டது.

    இந்த உத்தரவு காரணமாக கடல் பகுதியின் மேல் நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானம் நொடிகளில் பலநூறு அடிகள் கீழே இறங்கியது. இதனால் விமானத்தில் பயணம் செய்த பயணிகள் அலறினர். எனினும், விமானிகள் துரிதமாக செயல்பட்டு விமானத்தை கட்டுப்படுத்தி அதனை சட்டென மேலே உயர்த்தினர்.

    இதன் காரணமாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக ஃபெடரல் ஏவியேஷன் நிர்வாகம் சார்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

    • வெடிகுண்டு வைத்து கிங்டா கா உல்லாச சவாரி எந்திரம் தகர்க்கப்பட்டது.
    • 2 கோடிக்கும் அதிகமானோர் சவாரி மேற்கொண்டதாக பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் தனியார் கேளிக்கை பூங்கா ஒன்று செயல்படுகிறது. அங்கு சுமார் 450 அடி உயரமுள்ள கிங்டா கா என்ற ரோலர் கோஸ்டர் இருந்தது.

    உலகின் மிக உயரமான உல்லாச சவாரி எந்திர இருந்த கிங்டா கா அந்த பகுதியின் மிகப்பெரும் அடையாளமாக இருந்தது. ஆனால் தற்போது அதன் ஆயுட்காலம் முடிவுக்கு வந்தது. எனவே அதனை அகற்றி விட்டு புதிய உல்லாச சவாரி எந்திரத்தை அமைக்க பூங்கா நிர்வாகம் முடிவு செய்தது.

    இதனால் வெடிகுண்டு வைத்து கிங்டா கா உல்லாச சவாரி எந்திரம் தகர்க்கப்பட்டது. கடந்த 20 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த இதில் 2 கோடிக்கும் அதிகமானோர் சவாரி மேற்கொண்டதாக பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    ×