என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • முதலமைச்சர் வருவது தொடர்பான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.
    • கூட்டத்திற்கு நீலகிரி தொகுதி எம்.பி. ஆ.ராசா தலைமை தாங்கினார்.

    ஊட்டி:

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் நேரிடையாக சென்று கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அப்போது அவர் மக்களை சந்தித்து, அவர்களின் குறைகளையும் கேட்டறிந்து வருகிறார்.

    அத்துடன் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி வருகிறார். மேலும் அந்தந்த மாவட்டங்களில் நிலவும் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.

    அந்த வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடுத்த மாதம் நீலகிரி மாவட்டத்தில் கள ஆய்வு மேற்கொள்ள உள்ளார். அடுத்த மாதம் முதல் வாரம் அல்லது இரண்டவாது வாரத்தில் அவர் நீலகிரிக்கு வருகிறார்.

    நீலகிரிக்கு வருகை தரும் அவர் அங்கு அரசு சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ள உள்ளார். அத்துடன் அரசு சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் மக்களுக்கு நேரிடையாக சென்றடைகிறாதா என்பதையும் கள ஆய்வு செய்கிறார். தொடர்ந்து நலத்திட்ட உதவிகள் விழாவில் பங்கேற்று மக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்க உள்ளார்.

    நீலகிரி மாவட்டத்தில் வீட்டுமனைப்பட்டா வழங்குவதற்கு தடை சட்டம் உள்ளதால், கடந்த பல ஆண்டுகளாக பட்டா வழங்கப்படாமல் உள்ளது. மேலும் கூடலூரில் செக்ஷன் 17 நிலப்பிரச்சினை உள்ளது.

    இதுதவிர மாஸ்டர் பிளான் சட்டம், கட்டிட அனுமதி கிடைப்பதில் தாமதம் உள்பட பல்வேறு பிரச்சனைகள் உள்ளது.

    ஊட்டிக்கு வருகை தரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் நடவடிக்கை மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில் முதலமைச்சர் நீலகிரி வருவது தொடர்பான ஆலோசனை கூட்டம் ஊட்டியில் உள்ள கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நீலகிரி தொகுதி எம்.பி. ஆ.ராசா தலைமை தாங்கினார்.

    கூட்டத்தில் கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா, கூடுதல் கலெக்டர் கவுசிக், அரசுத்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

    இந்த கூட்டத்தில் முதல்-அமைச்சர் வரும் போது மேற்கொள்ள வேண்டிய நலத்திட்ட பணிகள் குறித்தும், பொதுமக்களுக்கு வழங்க உள்ள நலத்திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

    மேலும் விழா நடத்த மேற்கொள்ள வேண்டிய ஆயத்த பணிகள் குறித்தும் அதிகாரிகளுடன் எம்.பி. ஆ.ராசா விவாதித்தார்.

    இதுகுறித்து ஆ.ராசா கூறுகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடுத்த மாதம் ஊட்டிக்கு வருகிறார். அப்போது பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட உள்ளது.

    இதுதொடர்பான ஆலோசனை கூட்டம் அரசு அதிகாரிகளுடன் நடத்தப்பட்டது என்றார். நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு அரசுத்துறை உயர் அதிகாரிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.

    • உலக அளவில் தமிழ் இசையை கொண்டு செல்வது ரொம்ப ரொம்ப சந்தோஷம்.
    • மியூசிக்கை பொறுத்தவரை எனக்கு தெரியும்... நீ சும்மா இரு... என்று சொல்லி விடுவாங்க.

    லண்டனில் வருகிற 8-ந்தேதி சிம்பொனி இசை நிகழ்ச்சியை இசைஞானி இளையராஜா நடத்த உள்ளார். இதற்காக இளையராஜாவை சந்தித்து அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

    இதனை தொடர்ந்து இசை நிகழ்ச்சிக்காக லண்டன் செல்வதற்கு சென்னை விமான நிலையத்திற்கு வந்த இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    ரொம்ப சந்தோஷமா இருக்கு. அப்பாவின் இசையில் தமிழக மக்கள் அவ்வளவு உருகி இருக்கிறார்கள்.

    நம்மை ஆண்ட ஆங்கிலேயர்களிடம், அவங்க ஊருக்கே போய் 'டேக்கா காண்பிப்பது' என்று சொல்வாங்கல... அதுபோல நான் செஞ்சு காமிக்கிறேன்டா என்று நம்ம ஊரு ஆளு போகும்போது எனக்கு ஒரு தமிழனாக double சந்தோஷம்.

    உலக அளவில் தமிழ் இசையை கொண்டு செல்வது ரொம்ப ரொம்ப சந்தோஷம்.

    நானும் ஒரு சராசரி ரசிகன் தான். என்னை வேறு மாதிரி பார்க்காதீங்க. என் அப்பாவும் அப்படி தான் டிரீட் பண்ணுவாங்க.

    மகன் என்ற அன்பு இருக்கும். மியூசிக்கை பொறுத்தவரை எனக்கு தெரியும்... நீ சும்மா இரு... என்று சொல்லி விடுவாங்க.

    சிம்பொனி ஆர்க்கெஸ்ட்ரா நிறைய பேர் இருப்பார்கள். அது அவர்களின் பாரம்பரிய இசை. அதில் நுணுக்கமாக செய்வது கடினம்.

    அப்பாவுக்கு முன்னாடி இருந்தே செய்யணும் ஆசை. அதை இப்போ சிறப்பா பண்ணிட்டாங்க.

    எனக்கு அந்த இசையை கேட்கணும் என்று ஆசை. அதை கேட்கும்போது தமிழ் மக்களும் கூட இருக்கணும் என்பது ஒரு ஆசை. may be இங்கேயும் வந்து அதை perform பண்ணுவாங்க என்று நினைக்கிறேன் என்று கூறினார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • தமிழ்நாட்டின் பிரதான அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன.
    • தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் கையெழுத்து இயக்கம் நடைபெற இருந்தது.

    தமிழ்நாட்டில் மும்மொழி கொள்கையை ஏற்றுக் கொண்டால் தான் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதி வழங்கப்படும் என்று மத்திய அமைச்சர் கூறிய கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், தமிழ்நாட்டில் மும்மொழி கொள்கை விவகாரத்தை மேலும் பூதாகாரமாக மாற்றியுள்ளது. மும்மொழி கொள்கை தமிழ்நாட்டின் பிரதான அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன.

    பா.ஜ.க. உள்பட சில கட்சிகள் மட்டுமே மும்மொழி கொள்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இந்த நிலையில், மும்மொழி கொள்கைக்கு ஆதரவு தெரிவித்து பா.ஜ.க. கட்சி சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்த கையெழுத்து இயக்கத்தை தமிழ்நாடு பா.ஜ.க. கட்சியின் முன்னாள் தலைவரும், தெலுங்கானா மாநில முன்னாள் ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் இன்று காலை எம்.ஜி.ஆர். நகரில் நடைபெற இருந்தது.

    இந்த நிலையில், தமிழ்நாட்டில் மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கைவெுத்து இயக்கம் நடத்த அனுமதி அளிக்க முடியாது என்று காவல் துறை சார்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் காவல் துறையினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அமைதியான முறையில் கையெழுத்து இயக்கம் நடத்துவேன் என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறி வந்தார்.

    எனினும், இதற்கு அனுமதி வழங்கப்படவில்லை என்று கூறிய காவல் துறையினர் கட்டாயம் கையெழுத்து இயக்கத்தை நடத்த முற்பட்டால் கைது செய்வோம் என்று கூறியுள்ளனர். எனினும், கையெழுத்து இயக்கம் நடத்த முயன்ற அவரை காவல் துறையினர் கைது செய்வதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

    ஆனால், கையெழுத்து இயக்கம் நிச்சயம் நடைபெறும் என்று கூறிய தமிழிசை சவுந்தரராஜன் காவல் துறை வாகனத்தில் ஏற மறுத்தார். இதையடுத்து, காவல் துறையினர் தமிழிசை சவுந்தரராஜனை சுற்றி நின்றுக் கொண்டு பேச்சுவார்த்தை நடத்தினர். நீண்ட நேரம் இருதரப்பும் ஆவேசமாக பேசிக் கொண்டதை அடுத்து, அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    இதனிடையே காவல் துறையினரை கண்டித்து பா.ஜ.க.வினர் முழக்கங்களை எழுப்பினர். தொடர்ந்து கையெழுத்து இயக்கத்தை நடத்துவேன் என்று கூறிய நிலையில், தமிழிசை சவுந்தரராஜனை காவல் துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.

    மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக சென்னையில் கையெழுத்து இயக்கம் நடத்த முயற்சி செய்தது மற்றும், இந்த விவகாரம் தொடர்பாக தமிழிசை சவுந்தரராஜன் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை.
    • துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப்படை வீரர்கள் பாதுகாப்பு

    கரூர்:

    அமைச்சர் செந்தில் பாலாஜி, அ.தி.மு.க. ஆட்சியின் போது கடந்த 2011-2015 காலகட்டத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது, வேலை வாங்கி தருவதாக பணம் வாங்கிக்கொண்டு மோசடி செய்ததாக பரப ரப்பு குற்றச்சாட்டு கூறப் பட்டது. இதுதொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இந்த வழக்கின் அடிப்படையில் சட்டவிரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத் துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

    அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

    இந்த வழக்கு விசாரணை தீவிரமடைந்ததை தொடர்ந்து கடந்த 2023-ம் ஆண்டு ஜூன் மாதம் 14-ந்தேதி அவர் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    ஒரு வருடத்துக்கும் மேலாக செந்தில் பாலாஜி விசாரணை கைதியாகவே சிறையில் இருந்தார். அவர் ஜாமீன் கோரி பலமுறை சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். ஆனால் தொடர்ந்து ஜாமீன் மறுக்கப்பட்டு வந்தது.

    471 நாட்கள் சிறையில் இருந்த செந்தில்பாலாஜிக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 26-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு ஜாமீன் வழங்கியது. அதன்பிறகு சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த அவர் தற்போது மீண்டும் அமைச்சராக பதவி வகித்து வருகிறார்.

    ஆனாலும் அவர் மீதான மோசடி வழக்கு விசாரணை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதி மன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    இந்த வழக்கில் தற்போது சாட்சிகளிடம் விசாரணை நடந்து வருகிறது. நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. மீண்டும் இந்த வழக்கு வருகிற 12-ந்தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

    சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கு தொடர்பாக அம லாக்கத்துறை அதிகாரிகள் ஏற்கனவே அமைச்சர் செந்தில் பாலாஜி வீடு மற்றும் அவரது உறவினர்கள் வீடு, ஆதரவாளர்கள் வீடு களில் பலமுறை சோதனை நடத்தியுள்ளனர்.

    இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவா ளர்கள் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று மீண்டும் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கரூர் மாவட்டத்தில் 3 இடங்களில் உள்ள ஆதரவாளர்களின் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலையில் இருந்தே சோதனை நடத்தி வருகிறார்கள்.

    கரூர் ராயனூரில் வசிக்கும் கொங்கு மெஸ் உரிமையாளர் மணி என்கிற சுப்பிரமணி என்பவரின் வீடு, கரூர் ஆத்தூர் பிரிவு அருகே கோதை நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் சக்தி மெஸ் உரிமையாளர் கார்த்திக் என்பவரின் வீடு, செந்தில் பாலாஜியின் ஆதரவாளரும் பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரருமான எம்.சி.எஸ்.சங்கரின் கரூர் பழனியப்பா நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஆகிய 3 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    5 கார்களில் வந்த சுமார் 20-க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் கேரளா மற்றும் தெலுங்கானா மாநிலங்களின் பதிவு எண்களை கொண்ட கார்களில் வந்துள்ளனர்.

    அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தும் இடங்களில் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப்படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். காலை 8 மணிக்கு இந்த சோதனை தொடங்கியது. தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது.

    கடந்த 2023-ம் ஆண்டு அமைச்சர் செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்ட போது அவரது சகோதரர் வீடு மற்றும் ஆதரவாளர்களான கரூர் கொங்கு மெஸ் மணி, அரசு ஒப்பந்ததாரர் எம்.சி.எஸ். சங்கர், சக்தி மெஸ் கார்த்திக் ஆகியோரது வீடுகள் மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    அப்போது 2-வது முறையாக நடத்தப்பட்ட சோதனை 8 நாட்கள் நீடித்தது. இதில் பல முக்கிய ஆவணங்கள் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியானது. மேலும் அப்போது அந்த வீடுகள் மற்றும் சில அலுவலகங்களுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

    அதன் தொடர்ச்சியாக மீண்டும் செந்தில் பாலாஜியின்ஆதரவாளர்கள் 3 பேரின் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி வருவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதேபோல் தமிழகம் முழுவதும் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

    • நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதியில் தென் ஆப்பிரிக்கா தோல்வியடைந்தது.
    • ஐசிசி ஒருநாள் தொடரில் இதுவரை தென் ஆப்ரிக்க அணி 11 முறை அரையிறுதியில் மோதி இருக்கிறது.

    சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டிகள் முடிவடைந்து விட்டது. முதல் அரையிறுதி ஆஸ்திரேலியா - இந்தியா மோதின. இதில் இந்தியா வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இதனையடுத்து 2-வது அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து- தென் ஆப்பிரிக்கா அணிகள் நேற்று மோதின. இந்த போட்டியில் 50 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி வருகிற 9-ந் தேதி நடைபெற உள்ளது.

    இந்நிலையில் அரையிறுதியில் தோல்வியடைந்ததன் மூலம் தென் ஆப்பிரிக்கா அணி மோசமான சாதனையை படைத்துள்ளது. அதன்படி ஐசிசி ஒருநாள் தொடரில் இதுவரை தென் ஆப்ரிக்க அணி 11 முறை அரையிறுதியில் மோதி இருக்கிறது. இதில் 1999-ம் ஆண்டு இலங்கைக்கு எதிரான போட்டியில் மட்டுமே தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றிருக்கிறது.

    மற்ற ஒன்பது அரை இறுதியில் தோல்வியும், ஒரு அரையிறுதியில் டிராவும் ஆகி இருக்கிறது. இதன் மூலம் ஐசிசி ஒருநாள் அரையிறுதி போட்டிகளில் அதிக முறை தோல்வியை தழுவிய அணி என்ற சோகமான சாதனையை தென் ஆப்பிரிக்க அணி படைத்துள்ளது.

    சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதியில் 2000, 2002, 2006, 2013, 2025 ஆகிய 4 ஆண்டுகளிலும் ஒருநாள் உலகக் கோப்பை தொடரின் அரையிறுதியில் 1992, 2007, 2015, 2023 ஆகிய ஆண்டுகளிலும் தோல்வியை தழுவியுள்ளது. 1999-ம் ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பையில் போட்டி டிரா ஆனது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மாவட்ட வாரியாக மக்கள் பிரச்சனைகளை கண்டறிந்து மாவட்ட செயலாளர்கள் தலைமையில் போராட்டங்களை நடத்த வேண்டும்.
    • உரிய அனுமதி பெற்று போராட்டம் நடத்த வேண்டும்.

    சென்னை:

    தமிழக வெற்றிக்கழகத்தை தொடங்கியதில் இருந்து மக்களை சந்திக்காமல் அறிக்கை மூலமாக விஜய் அரசியல் செய்து வருவதாக பலரும் குற்றம்சாட்டி வந்தனர்.

    இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மக்கள் பிரச்சனை தொடர்பான போராட்டங்களை முன்னெடுக்க தமிழக வெற்றிக்கழக மாவட்ட செயலாளர்களுக்கு அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவுறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    மேலும், ஆளுங்கட்சி உள்பட யார் தவறு செய்திருந்தாலும் தவறு எங்கே நடைபெறுகிறது என்பதை தெளிவாக தெரிந்து போராட வேண்டும். மாவட்ட வாரியாக மக்கள் பிரச்சனைகளை கண்டறிந்து மாவட்ட செயலாளர்கள் தலைமையில் போராட்டங்களை நடத்த வேண்டும். விருப்புவெறுப்பின்றி மக்கள் பிரச்சனையின் தீவிரம் உணர்ந்து மக்களுக்கு இடையூறின்றி உரிய அனுமதி பெற்று போராட்டம் நடத்த வேண்டும் என்று விஜய் அறிவுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

    தஞ்சாவூர், திருவாரூர், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் மக்கள் பிரச்சனைகளை மையப்படுத்தி தமிழக வெற்றிக்கழகத்தினர் போராட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

    • இந்திய அணி எங்களுக்கு எதிராக சிறந்த கிரிக்கெட்டை வெளிப்படுத்தியது.
    • எங்களை முற்றிலுமாக வெளியேற்றியது.

    துபாய்:

    சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இந்திய அணி பாதுகாப்பு காரணங்களுக்காக பாகிஸ்தான் சென்று விளையாட மறுத்து விட்டது. இதனால் இந்தியா மோதும் ஆட்டங்கள் மட்டும் ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாயில் நடத்தப்பட்டது.

    ஒரே மைதானத்தில் (துபாய்) விளையாடுவது இந்தியாவுக்கு சாதகமானது என்று கடுமையான விமர்சனம் எழுந்தது. இந்த விஷயத்தில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) இந்தியாவுக்கு சாதகமாக செயல்படுவதாக இங்கிலாந்து முன்னாள் கேப்டன்கள், மைக் ஆதர்டன், நாசர் உசேன் கூறி இருந்தனர். இதேபோல ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்சும் ஒரே மைதானத்தில் ஆடுவது இந்தியாவுக்கு உகந்தது என்று தெரிவித்து இருந்தார்.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரைஇறுதி போட்டி முடிவில் இந்த விமர்சனங்களுக்கு பயிற்சியாளர் காம்பீர் பதிலடி கொடுத்தார்.

    துபாய் பொதுவான மைதானம் என்றும், இந்திய மைதானம் இல்லை என்றும் தெரிவித்தார். அதே நேரத்தில் ஒரே மைதானத்தில் ஆடுவது உதவிகரமாக இருப்பதாக வேகப்பந்து வீரர் முகமது ஷமி தெரிவித்து இருந்தார்.

    இந்த நிலையில் ஒரே மைதானத்தில் விளையாடுவது இந்தியாவுக்கு சாதகம் இல்லை என்று ஒருநாள் போட்டியில் இருந்து நேற்று திடீரென ஓய்வை அறிவித்த ஸ்டீவ் சுமித் தெரிவித்து உள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    இந்திய அணி எங்களுக்கு எதிராக சிறந்த கிரிக்கெட்டை வெளிப்படுத்தியது. எங்களை முற்றிலுமாக வெளியேற்றியது. ஒரே நகரத்தில் (துபாய்) தங்கி இருப்பது இந்தியாவுக்கு சாதகமானது கிடையாது. அந்த அணி திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.

    இவ்வாறு ஸ்டீவ் சுமித் கூறியுள்ளார்.

    • பூஜையில் தயாரிப்பாளர்கள், இயக்குநர் சுந்தர்.சி., நடிகர்கள், நடிகைகள் என பலரும் கலந்து கொண்டனர்.
    • பூஜை விழா தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

    இயக்குநர் சுந்தர்.சி. தற்போது தயாரிக்க உள்ள படம் 'மூக்குத்தி அம்மன் 2'. இப்படத்தை வேல்ஸ் நிறுவனம், ரௌடி பிக்சர்ஸ், அவ்னி சினி மேக்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க உள்ளன. இப்படத்தில் நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். முதல் பாகம் போல் அல்லாமல் இரண்டாம் பாகத்தினை பிரமாண்டமாக தயாரிக்க தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டு உள்ளது.

    இதனை தொடர்ந்து படத்திற்கான பூஜை தொடங்குவதை முன்னிட்டு வேல்ஸ் நிறுவனர் ஐசரி கணேஷ், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

    இந்த நிலையில், 'மூக்குத்தி அம்மன்2' திரைப்படத்திற்கான பூஜை இன்று விமர்சையாக நடைபெற்றது. பூஜை விழாவிற்காக பிரம்மாண்டமான கோவில் போன்ற செட்டை அமைத்து யாகம் வளர்த்து பூஜை நடைபெற்றது. பூஜையில் தயாரிப்பாளர்கள், இயக்குநர் சுந்தர்.சி., நடிகர்கள், நடிகைகள் என பலரும் கலந்து கொண்டனர்.

    விழாவில் ஹிப்ஆப் தமிழா இசையில் ஃப்ர்ஸ்ட் லுக் வீடியோ வெளியானது. அதில் படத்தின் தலைப்பு மற்றும் படப்பிடிப்பு தொடங்கியது அறிவிக்கப்பட்டுள்ளது.

    பூஜை விழா தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.


    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நடிகை ரன்யா ராவ் ஐ.பி.எஸ். அதிகாரி ராமசந்திரா ராவ் என்பவரின் வளர்ப்பு மகள் ஆவார்.
    • என் கேரியரில் எந்த ஒரு கரும்புள்ளியும் கிடையாது.

    கர்நாடக மாநிலம் சிக்கமகளூருவை சேர்ந்தவர் நடிகை ரன்யா ராவ் (வயது 32). இவர் கன்னடத்தில் மானிக்யா, பட்டாக்கி ஆகிய 2 படங்களில் நடித்துள்ளார். இதேபோல நடிகர் விக்ரம் பிரபுவுடன் வாகா என்ற தமிழ் படத்தில் நடித்து இருக்கிறார்.

    இவர் ஐ.பி.எஸ். அதிகாரி ராமசந்திரா ராவ் என்பவரின் வளர்ப்பு மகள் ஆவார். ராமசந்திரா ராவ் கடந்த 2013-ம் ஆண்டு முதல் கர்நாடக போலீஸ் வீட்டுவசதித்துறை கூடுதல் டி.ஜி.பி.யாக பணியாற்றி வருகிறார். அவருடைய 2-வது மனைவியின், முதல் கணவரின் மகள் தான் நடிகை ரன்யா ராவ் ஆவார்.

    துபாயில் இருந்து பெங்களூரு வந்த விமானத்தில், 15 கிலோ தங்கத்தை நடிகை ரன்யா ராவ் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரை விமான நிலையத்தில் அதிகாரிகள் கைது செய்தனர்.

    இதற்கிடையில், ரன்யா ராவிடம் தங்கம் கடத்தல் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையின் போது கிடைத்த தகவல்களின் பேரில், லாவல்லி ரோட்டில் உள்ள, அவருக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீட்டிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினா்.

    சோதனையின்போது, 2 கிலோவுக்கும் மேல் விதவிதமான தங்க நகைகள் மற்றும் ரூ.2 கோடியே 67 லட்சம் ரொக்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை வருவாய் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    இதுதொடர்பாக அவரது தந்தை கூறுகையில்,

    இதுபோன்ற ஒரு சம்பவம் ஊடகங்கள் மூலம் எனது கவனத்திற்கு வந்தபோது மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன். இந்த விஷயங்கள் எதுவும் எனக்கு தெரியாது, மற்ற தந்தையை போலவே நானும் அதிர்ச்சியடைந்தேன். அவள் எங்களுடன் வாழவில்லை, அவள் கணவரிடம் இருந்து பிரிந்து வாழ்கிறாள். அவர்களுக்குள் ஏதாவது குடும்ப பிரச்சனை இருக்க வேண்டும்.

    ஆனால் சட்டம் தன் கடமையை செய்யும். என் கேரியரில் எந்த ஒரு கரும்புள்ளியும் கிடையாது. மேலும் எதுவும் கூற விரும்பவில்லை என்று அவர் கூறினார்.

    • அதிக மாத்திரை எடுத்துக் கொண்டதால் அம்மாவுக்கு மயக்கம் ஏற்பட்டது.
    • எல்.எல்.பி மற்றும் பி.எச்.டி ஆகியவற்றை ஒரே நேரத்தில் படித்து வருகிறார்.

    சென்னையை சேர்ந்த பிரபல பின்னணி பாடகி கல்பனா ஐதராபாத்தில் வசித்து வருகிறார். இவர் மயக்க நிலையில் மீட்கப்பட்டார். கல்பனா தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகக் கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவர் குணமடைந்து வருகிறார்.

    இதுகுறித்து அவரது மகள் தயா பிரசாத் பிரபாகர் கூறியதாவது:-

    "என் அம்மா ஒரு பாடகி, எல்.எல்.பி மற்றும் பி.எச்.டி ஆகியவற்றை ஒரே நேரத்தில் படித்து வருகிறார், இது தூக்கமின்மைக்கு வழிவகுத்தது. தூக்கமின்மையை குணப்படுத்த மருத்துவர்கள் அவருக்கு ஒரு மாத்திரையை பரிந்துரைத்தனர். தூக்கம் வராமல் அதிக மாத்திரை எடுத்துக் கொண்டதால் அம்மாவுக்கு மயக்கம் ஏற்பட்டது. இது தற்கொலை முயற்சி அல்ல.

    "என் அம்மாவும் அப்பாவும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். குடும்பத்தில் எல்லோரும் மிகவும் நலமாக இருக்கிறார்கள். தயவுசெய்து எங்கள் விஷயங்களை கையாள வேண்டாம்,"

    இவ்வாறு அவர் கூறினார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.440 அதிகரித்து ரூ.64 ஆயிரத்து 520-க்கு விற்பனையானது.
    • வெள்ளி விலை சற்று உயர்ந்துள்ளது.

    சென்னை:

    தங்கம் விலையில் தொடர்ந்து ஏற்றம் காணப்பட்டு வந்த நிலையில் கடந்த மாதம் 11-ந்தேதி வரலாறு காணாத வகையில் சவரன் ரூ.64 ஆயிரத்தை தாண்டியது.

    அதன்பின் 28-ந்தேதி சவரன் ரூ.64 ஆயிரத்துக்கு கீழ் வந்தது. இதற்கிடையே நேற்றுமுன்தினம் சவரன் மீண்டும் ரூ.64 ஆயிரத்தை தாண்டியது. சவரனுக்கு ரூ. 560 அதிகரித்து ரூ.64 ஆயிரத்து 80-க்கு விற்றது. இதனை தொடர்ந்து நேற்றும் தங்கம் விலை உயர்ந்தது. சவரனுக்கு ரூ.440 அதிகரித்து ரூ.64 ஆயிரத்து 520-க்கு விற்றது. கிராமுக்கு ரூ.55 உயர்ந்து ரூ. 8 ஆயிரத்து 65-ஆக இருந்தது. இரண்டு நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1000 அதிகரித்தது.

    இந்த நிலையில், தங்கம் விலை இன்று குறைந்துள்ளது. கிராமுக்கு 45 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.8,020-க்கும் சவரனுக்கு 360 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.64,160-க்கும் விற்பனையாகிறது.

    வெள்ளி விலை சற்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 108 ரூபாய்க்கும் கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து எட்டாயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    05-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,520

    04-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,080

    03-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 63,520

    02-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 63,520

    01-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 63,520

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    05-03-2025- ஒரு கிராம் ரூ.107

    04-03-2025- ஒரு கிராம் ரூ.107

    03-03-2025- ஒரு கிராம் ரூ.106

    02-03-2025- ஒரு கிராம் ரூ.105

    01-03-2025- ஒரு கிராம் ரூ.105

    • கடந்த 4 ஆண்டுகளில் தி.மு.க. அரசு ரூ.5 லட்சம் கோடி வரை கடன் வாங்கி உள்ளது.
    • 2026 தேர்தலில் மக்கள் தி.மு.க.வை வீட்டுக்கு அனுப்புவார்கள்.

    சிவகாசி:

    சிவகாசி அருகே உள்ள விஸ்வநத்தம் புதூர் கிராமத்தில் அ.தி.மு.க. பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு ஒன்றிய செயலாளர் ஆரோக்கியம் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    கட்டுமான பொருட்களின் விலை உயர்வால் தொழிலாளர்கள் வேலை இழந்து தவிக்கிறார்கள். தி.மு.க. ஆட்சியில் பட்டாசு, அச்சு, தீப்பெட்டி தொழில்கள் நலிவடைந்து வருகிறது. பட்டாசு ஆலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் கிடைக்க போராட வேண்டி இருக்கிறது. அதே நேரத்தில் கள்ளச்சாராயம் குடித்து இறந்தால் உடனே நிவாரண நிதி வீடு தேடி வருகிறது.

    கடந்த 4 ஆண்டுகளில் தி.மு.க. அரசு ரூ.5 லட்சம் கோடி வரை கடன் வாங்கி உள்ளது. இது தான் தி.மு.க. அரசின் சாதனை. சிவகாசியில் சுற்றுச்சாலை திட்டம் அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் எடப்பாடி பழனிசாமி அறிவித்து நிதி ஒதுக்கினார். ஆனால் அந்த திட்டம் 2 நாளைக்கு முன்னர் தான் பூமிபூஜை போடப்பட்டு தொடங்கப்படுகிறது.

    2026 தேர்தலில் மக்கள் தி.மு.க.வை வீட்டுக்கு அனுப்புவார்கள். எம்.பி. தேர்தலில் இந்த தொகுதியில் தே.மு.தி.க. வெற்றி பெற்று இருக்க வேண்டும். தில்லுமுல்லு செய்து அவர்கள் வெற்றி பெற்றனர். இந்த பகுதியில் உள்ள தொழிலுக்கும், தொழிலாளர்களுக்கும், தொழில் அதிபர்களுக்கும் 18-ம் படி கருப்பசாமியாக வழித்துணை வருவேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர் நடிகை விந்தியா, மாநில நிர்வாகி வேண்டுராயபுரம் சுப்பிரமணியம், மாவட்ட இலக்கிய அணி தலைவர் மரியதாஸ், மாவட்ட, ஒன்றிய, மாநகர நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    இதே பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு பொன்னாடை போர்த்த நிர்வாகிகள் முண்டியத்தனர். வரிசையில் வராமல் முண்டியடித்துக்கொண்டு வந்த நிர்வாகியை, ராஜேந்திர பாலாஜி கன்னத்தில் அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

    ×