search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "enforcement directorate raid"

    • தமிழகத்தில் 25க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளில் வசூலான பணத்தை செந்தில் பாலாஜியிடம் கொடுத்து வந்துள்ளார் என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.
    • செந்தில் பாலாஜிக்கு எதிரான ஆவணங்களை திரட்டும் முயற்சியில் அமலாக்கத்துறையினர் இன்று திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் உள்ள தி.மு.க. பிரமுகர் வீட்டில் திடீர் சோதனை நடத்தினர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளராக இருப்பவர் வீரா.சாமிநாதன். இவர் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு வலதுகரமாக செயல்பட்டு வந்தார் என புகார் எழுந்தது. மேலும் தமிழகத்தில் 25க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளில் வசூலான பணத்தை செந்தில் பாலாஜியிடம் கொடுத்து வந்துள்ளார் என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.

    தற்போது சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் செந்தில்பாலாஜி அடைக்கப்பட்டுள்ளார். அவரை விடுதலை செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. இந்நிலையில் செந்தில் பாலாஜிக்கு எதிரான ஆவணங்களை திரட்டும் முயற்சியில் அமலாக்கத்துறையினர் இன்று திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் உள்ள வீரா.சாமிநாதன் வீட்டில் திடீர் சோதனை நடத்தினர்.

    இந்த சோதனை திண்டுக்கல் மாவட்ட தி.மு.க.வினரிடையே மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா அலுவலகத்தில் அமலாக்க துறை அதிகாரிகள் இன்று திடீரென சோதனை நடத்தினர். #RobertVadra #EnforcementDirectorateRaid
    புதுடெல்லி:
     
    ராபர்ட் வதேரா ஸ்கை லைட் ஹாஸ்பிடாலிட்டி பிரைவேட் லிமிடெட் எனும் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

    ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த காங்கிரஸ் ஆட்சியின் போது ராபர்ட் வதேரா தனது அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி பிகனீர் பகுதியில் நிறைய அரசு நிலத்தை வாங்கினார். ஏழை கிராம மக்களின் மறுவாழ்வுக்காக உதவுவதாக கூறி அந்த நிலங்களை அவர் வாங்கி இருந்தார். ஆனால் பின்னர் அந்த அரசு நிலங்கள் கூடுதல் விலைக்கு விற்கப்பட்டன. இதில் சட்ட விரோத பணப்பரிமாற்றம் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    ராஜஸ்தான் போலீசார் இது தொடர்பாக வழக்குபதிவு செய்து விசாரித்தனர். குற்றப்பத்திரிகைகளும் தாக்கல் செய்யப்பட்டன. இதற்கிடையே கடந்த 2015-ம் ஆண்டு அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.

    இதுதொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி ராபர்ட் வதேராவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. ஆனாலும் அவர் ஆஜராகாவில்லை.



    இந்நிலையில், தலைநகர் டெல்லியில் உள்ள ராபர்ட் வதேராவின் அலுவலகம் மற்றும் பெங்களூரில் ராபர்ட் வதேராவுக்கு நெருக்கமானவர்களின் அலுவலகங்களுக்கும் சென்ற அமலாக்க துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர். 

    இந்த சோதனை தொடர்பாக எவ்வித முன் அறிவிப்பும் வழங்கவில்லை என வாத்ராவின் வக்கீல் குறைகூறியுள்ளார். 

    ஏற்கனவே, நேஷனல் ஹெரால்டு வழக்கில் வருமான வரி தொடர்பான வழக்கில் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரை மீண்டும் விசாரிக்கலாம் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ள நிலையில், வதேரா அலுவலகத்தில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. #RobertVadra #EnforcementDirectorateRaid
    ×