என் மலர்
நீங்கள் தேடியது "3 language policy"
- கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை இந்தி தெரியாது என்கிறார்.
- வட இந்தியாவில் 2-வது மொழியை முழுமையாக கற்று கொண்டிருந்தால் 3-வது மொழி தேவைப்பட்டிருக்காது.
மதுரையில் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* தமிழ்நாட்டின் கல்வித் தரத்தை குறைக்க மும்மொழிக் கொள்கை கொண்டு வரப்படுகிறது.
* மத்திய பா.ஜ.க. அரசின் மும்மொழிக் கொள்கையை அறிவுள்ள யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
* பாராளுமன்றத்தில் சட்டம் இயற்றாமல் குறுக்கு வழியில் மும்மொழிக் கொள்கையை திணிக்க மத்திய பா.ஜ.க. அரசு முயற்சி செய்கிறது.
* 1968-ம் ஆண்டு தேசிய கல்வி கொள்கையில் மும்மொழி கொள்கை என சட்டம் இயற்றப்பட்டது.
* 1968-ல் இருந்து மும்மொழி கொள்கை பேசப்பட்டு வந்தாலும் இதுவரை எங்கேயும் அமல்படுத்த முடியவில்லை.
* கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை இந்தி தெரியாது என்கிறார். அதனால் அவருக்கு ஏதாவது பாதிப்பு வந்ததா?
* வெற்றிகரமான ஒரு கல்வி முறையை நீக்கிவிட்டு தோல்வி அடைந்த கல்வி முறையை அறிவுள்ளவர்கள் ஏற்பார்களா?
* தமிழ்நாடு பின்பற்றிய இருமொழி கொள்கையால் சிறப்பான விளைவுகளை பெற்றுள்ளோம்.
* கல்வியில் தேசிய சராசரியை விட தமிழகத்தில் சராசரி அதிக அளவில் உள்ளது.
* வட மாநிலங்களில் இருமொழி கொள்கையை அமல்படுத்தியிருந்தால் 3-வது மொழி தேவைப்படாது.
* வட இந்தியாவில் 2-வது மொழியை முழுமையாக கற்று கொண்டிருந்தால் 3-வது மொழி தேவைப்பட்டிருக்காது.
* இருமொழி கொள்கையை கூட அமல்படுத்த முடியாதவர்கள் நம்மை 3-வது மொழி கற்க சொல்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தமிழ்நாட்டின் பிரதான அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன.
- தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் கையெழுத்து இயக்கம் நடைபெற இருந்தது.
தமிழ்நாட்டில் மும்மொழி கொள்கையை ஏற்றுக் கொண்டால் தான் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதி வழங்கப்படும் என்று மத்திய அமைச்சர் கூறிய கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், தமிழ்நாட்டில் மும்மொழி கொள்கை விவகாரத்தை மேலும் பூதாகாரமாக மாற்றியுள்ளது. மும்மொழி கொள்கை தமிழ்நாட்டின் பிரதான அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன.
பா.ஜ.க. உள்பட சில கட்சிகள் மட்டுமே மும்மொழி கொள்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இந்த நிலையில், மும்மொழி கொள்கைக்கு ஆதரவு தெரிவித்து பா.ஜ.க. கட்சி சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்த கையெழுத்து இயக்கத்தை தமிழ்நாடு பா.ஜ.க. கட்சியின் முன்னாள் தலைவரும், தெலுங்கானா மாநில முன்னாள் ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் இன்று காலை எம்.ஜி.ஆர். நகரில் நடைபெற இருந்தது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கைவெுத்து இயக்கம் நடத்த அனுமதி அளிக்க முடியாது என்று காவல் துறை சார்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் காவல் துறையினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அமைதியான முறையில் கையெழுத்து இயக்கம் நடத்துவேன் என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறி வந்தார்.
எனினும், இதற்கு அனுமதி வழங்கப்படவில்லை என்று கூறிய காவல் துறையினர் கட்டாயம் கையெழுத்து இயக்கத்தை நடத்த முற்பட்டால் கைது செய்வோம் என்று கூறியுள்ளனர். எனினும், கையெழுத்து இயக்கம் நடத்த முயன்ற அவரை காவல் துறையினர் கைது செய்வதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.
ஆனால், கையெழுத்து இயக்கம் நிச்சயம் நடைபெறும் என்று கூறிய தமிழிசை சவுந்தரராஜன் காவல் துறை வாகனத்தில் ஏற மறுத்தார். இதையடுத்து, காவல் துறையினர் தமிழிசை சவுந்தரராஜனை சுற்றி நின்றுக் கொண்டு பேச்சுவார்த்தை நடத்தினர். நீண்ட நேரம் இருதரப்பும் ஆவேசமாக பேசிக் கொண்டதை அடுத்து, அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனிடையே காவல் துறையினரை கண்டித்து பா.ஜ.க.வினர் முழக்கங்களை எழுப்பினர். தொடர்ந்து கையெழுத்து இயக்கத்தை நடத்துவேன் என்று கூறிய நிலையில், தமிழிசை சவுந்தரராஜனை காவல் துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.
மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக சென்னையில் கையெழுத்து இயக்கம் நடத்த முயற்சி செய்தது மற்றும், இந்த விவகாரம் தொடர்பாக தமிழிசை சவுந்தரராஜன் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- பா.ஜ.க. மும்மொழி கொள்கையில் உறுதியாக உள்ளது.
- பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலமாக தமிழகம் திகழ்கிறது.
கோவை:
மத்திய இணை மந்திரி எல்.முருகன் இன்று கோவை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் இன்று மெட்ரிகுலேஷன் சி.பி.எஸ்.சி பள்ளிக்கூடங்களில் படிப்பவர்கள் 3 மொழி படிக்கிறார்கள். ஆனால் அரசு பள்ளியில் படிக்கக்கூடிய மாணவர்களுக்கு இந்த உரிமை மறுக்கப்படுவது ஏன்?.
பணம் இருப்பவர்கள் எந்த மொழி வேண்டுமானாலும் கற்றுக்கொள்ள வாய்ப்புகள் இருக்கிறது. ஆனால் பணம் இல்லாத ஏழை, எளிய மக்கள் அரசு பள்ளிகளில் தான் படிக்கிறார்கள். அந்த மாணவர்களுக்கான மொழியை கற்கக்கூடிய வாய்ப்பை ஏன் இவர்கள் மறுக்கிறார்கள். 3 மொழி வேண்டும் என்பது பெற்றோர் மற்றும் மாணவர்களின் கோரிக்கையாக உள்ளது. அனைவரும் மும்மொழி கொள்கையை வரவேற்கின்றனர்.
பா.ஜ.க. மும்மொழி கொள்கையில் உறுதியாக உள்ளது. ஒவ்வொரு கட்சிகளுக்கும் ஒவ்வொரு கொள்கைகள் உள்ளது. கூட்டணியில் இருப்பதால் இதை மட்டுமே கூற வேண்டும் என்பதெல்லாம் இல்லை. கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில் இணைந்து செயல்படுவதற்காக மட்டுமே.
கடந்த 10 ஆண்டுகளில் மகளிர் மேம்பாட்டுக்காக, பிரதமர் நரேந்திர மோடி மிகக் கடுமையான பணிகளை செய்து கொண்டு இருக்கிறார். வரலாற்று சிறப்புமிக்க 33 சதவீத இட ஒதுக்கீட்டை சட்டமன்றத்திலும் பாராளுமன்றத்திலும் கொண்டு வந்திருப்பது நரேந்திர மோடி தான்.
நரேந்திர மோடி எடுத்திருக்கும் திட்டங்களால் பெண்களின் வளர்ச்சி ஒருபடி மேலே தான் சென்று இருக்கிறது. குறிப்பாக பாதுகாப்பு துறையில் பெண்களுக்கு இடம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதெல்லாம் மகளிருக்கு மரியாதை கொடுக்கும் விதமாகவும், முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காகவும், நரேந்திர மோடி செய்து கொண்டு இருக்கிறார்.
ஆனால தமிழ்நாட்டில் தாய்மார்கள் சாலையில் நடந்து கூட செல்ல முடிவதில்லை, பாதுகாப்பற்ற சூழல்தான் இங்கு இருக்கிறது. ரெயிலில் கூட பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை தான் உள்ளது. பாலியல் வன்கொடுமைகள் தமிழகம் எங்கும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலமாக தமிழகம் திகழ்கிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.






