என் மலர்
தலைப்புச்செய்திகள்
- தொழில்முறை மன அழுத்தம் காரணமாக தூங்க முடியாமல் தவித்த நான் அதற்கு சிகிச்சை பெற்று வருகிறேன்.
- என் கணவரின் ஆதரவுடன் இதையெல்லாம் என்னால் செய்ய முடிகிறது.
சென்னையை சேர்ந்த பிரபல சினிமா பாடகி கல்பனா. ஐதராபாத்தில் வசித்து வருகிறார். இவர் மயக்க நிலையில் மீட்கப்பட்டார். கல்பனா தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகக் கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தற்போது அவர் குணமடைந்து வருகிறார். அவர் ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில் அவர் கூறியதாவது:-
எங்கள் குடும்பத்தை பற்றி ஊடகங்களில் தவறான பிரசாரம் பரப்பப்படுகிறது. நான் அதை அனைவருக்கும் விளக்க விரும்புகிறேன். நானும் என் கணவரும் மகளும் மகிழ்ச்சியாக வாழ்கிறோம். எனக்கு 45 வயது. நான் முனைவர் பட்டமும், எல்.எல்.பி பட்டமும் படித்து வருகிறேன்.
என் கணவரின் ஆதரவுடன் இதையெல்லாம் என்னால் செய்ய முடிகிறது. எனக்கு அவர் மேல் எந்த கோபமும் இல்லை எங்கள் குடும்பம் மிகவும் நெருக்கமானது. தொழில்முறை மன அழுத்தம் காரணமாக தூங்க முடியாமல் தவித்த நான் அதற்கு சிகிச்சை பெற்று வருகிறேன். மருத்துவர்கள் பரிந்துரைத்தபடி தான் அதிக அளவு மாத்திரைகளை எடுத்து கொண்டேன். அதனால் தான் நான் மயங்கி விழுந்தேன்.
என் கணவர் சரியான நேரத்தில் எடுத்த நடவடிக்கை, காலனி வாசிகள் மற்றும் காவல்துறையினரின் உதவி காரணமாக நான் இங்கே உங்கள் முன் இருக்கிறேன். விரைவில் மீண்டும் எனது பாடல்களால் உங்களை மகிழ்விப்பேன். அவருடைய ஆதரவினால் தான் நான் தேர்ந்தெடுத்த துறைகளில் சிறந்து விளங்குகிறேன். என் வாழ்க்கையின் சிறந்த பரிசு என் கணவர் எனது உடல்நலம் குறித்து அக்கறை கொண்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றி என்று அவர் வீடியோவில் கூறினார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- வெள்ளி விலையில் மாற்றமில்லை.
- பார் வெள்ளி ஒரு லட்சத்து எட்டாயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை:
தங்கம் விலை கடந்த மாதம் (பிப்ரவரி) முதல் ஏற்ற, இறக்கத்துடன் இருக்கிறது. கடந்த 4-ந்தேதியில் இருந்து விலை அதிகரித்து காணப்பட்டது. நேற்று முன்தினமும் அதேபோல் விலை உயர்ந்து, ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 65-க்கும், ஒரு சவரன் ரூ.64 ஆயிரத்து 520-க்கும் விற்பனை ஆனது. நேற்று காலை 9.30 மணி நிலவரப்படி, கிராமுக்கு ரூ.45-ம், சவரனுக்கு ரூ.360-ம் குறைந்து இருந்த நிலையில், நேற்று பிற்பகல் 12.30 மணிக்கு தங்கம் விலையில் மீண்டும் மாற்றம் ஏற்பட்டு, கிராமுக்கு ரூ.40-ம், சவரனுக்கு ரூ.320-ம் உயர்ந்து இருந்தது.
அதன்படி, நேற்று ஒரே நாளில் தங்கம் விலை குறைந்து, மீண்டும் ஏறி ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 60-க்கும், ஒரு சவரன் ரூ.64 ஆயிரத்து 480-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், தங்கம் விலை இன்று குறைந்துள்ளது. கிராமுக்கு 30 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.8,030-க்கும் சவரனுக்கு 240 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.64,240-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 108 ரூபாய்க்கும் பார் வெள்ளி ஒரு லட்சத்து எட்டாயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
06-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,480
05-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,520
04-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,080
03-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 63,520
02-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 63,520
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
06-03-2025- ஒரு கிராம் ரூ.108
05-03-2025- ஒரு கிராம் ரூ.107
04-03-2025- ஒரு கிராம் ரூ.107
03-03-2025- ஒரு கிராம் ரூ.106
02-03-2025- ஒரு கிராம் ரூ.105
- அதிகார வரம்பை அமெரிக்க நீதிமன்றங்கள் இழக்க நேரிடலாம்.
- டார்ச்சர் செய்யப்படும் அபாயம் உள்ளது.
26/11 மும்பை பயங்கரவாத தாக்குதல் குற்றவாளியான தஹவூர் ராணா, இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவதற்கு தடை விதிக்கக் கோரி அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து இருந்தார். இந்த மனுவை விசாரித்த அமெரிக்க உச்சநீதிமன்றம் ராணாவின் கோரிக்கையை நிராகரித்துள்ளது.
முன்னதாக நாடு கடத்தப்பட்டால், இந்தியாவில் விசாரணையை எதிர்கொள்ளும் அளவுக்கு நீண்ட நாட்கள் உயிர்வாழ முடியாது என்று ராணா தனது மனுவில் குறிப்பிட்டு இருந்தார். மேலும், இந்தியாவில் டார்ச்சர் செய்யப்படும் அபாயம் உள்ளதாகவும் அவர் கூறியிருந்தார். நாடு கடத்துவதற்கு தடை விதிக்காத பட்சத்தில் தனது வழக்கு மீதான அதிகார வரம்பை அமெரிக்க நீதிமன்றங்கள் இழக்க நேரிடலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
பாகிஸ்தானை சேர்ந்த அமெரிக்க பயங்கரவாதி டேவிட் கோல்மேன் ஹெட்லியின் நெருங்கிய கூட்டாளியாக அறியப்படும் தஹவூர் ராணா கடந்த 2008-ம் ஆண்டு மும்பை பயங்கரவாத தாக்குதலை திட்டமிட்டவர்களில் முக்கிய புள்ளியாக அறியப்படுகிறார்.
தான் பாகிஸ்தான் பூர்விகம் கொண்டவன் என்றும், முஸ்லீம் என்பதாலும் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டால் சித்திரவதைக்கு ஆளாக நேரிடும் என்றும் ராணா தனது மனுவில் குறிப்பிட்டு இருந்தார். இதுதவிர தனக்கு வயிற்றுப் பகுதியில் கோளாறு, பார்க்கின்சன் நோய் மற்றும் சிறுநீர்ப்பை புற்றுநோய் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தனது மனுவில் தெரிவித்துள்ளார்.
- கையெழுத்து இயக்கம் என்பது இல்லங்கள் தோறும் சென்று வாங்குவோம் என்று சொல்கிறார்கள்.
- தென்சென்னை பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.வால் காலி செய்யப்பட்டவர் எங்களை பார்த்து காலாவதி என்கிறார்.
மும்மொழிக்கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கத்தை தமிழக பா.ஜ.க. முன்னெடுத்துள்ளது. இதனையடுத்து சென்னை கே.கே.நகர் எம்.ஜி.ஆர் நகர் மார்க்கெட் பகுதியில், தெலுங்கானா மாநில முன்னாள் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் பா.ஜ.க.வினர் கையெழுத்து இயக்கம் நடத்த நேற்று திட்டமிட்டனர். இதற்கிடையே அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
அங்கு தமிழிசை சவுந்தரராஜன் வந்து மக்களிடம் கையெழுத்து பெறும் பணியில் ஈடுபட முயன்றார். உடனே போலீசார், அவரை தடுத்து நிறுத்தி அனுமதி மறுத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுதொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறுகையில்,
தமிழிசையின் கையெழுத்து இயக்கத்தை பற்றி சொல்வது என்றால், நேற்று அவர் நடந்துகொண்ட நடவடிக்கையை நிச்சயம் அவர் தந்தை குமரி அனந்தன் பார்த்திருந்தால் மிகுந்த வருத்தப்பட்டு இருப்பார். துயரம் அடைந்து இருப்பார்.
இவருக்கா போய் நாம் தமிழிசை என்று பெயர் வைத்தோம் என்று மிக மிக வருத்தத்தோடு இருந்து இருப்பார்.
கையெழுத்து இயக்கம் என்பது இல்லங்கள் தோறும் சென்று வாங்குவோம் என்று சொல்கிறார்கள். அவர்கள் எந்த இல்லத்திற்கு சென்று வாங்கினார்கள். அவர்களை சுற்றி பா.ஜ.க.வை சார்ந்த 10 பேரை நிற்க வைத்துக்கொண்டு, ஊடகங்களில் அவர் வெளிச்சத்திற்கு வரவேண்டும் என்பதற்காக, ஏற்கனவே அவர் எண்ணி இருந்த பதவிகள் எதுவும் கிடைக்காததால், அந்த கையெழுத்து இயக்கத்தை அவர்களுடைய இயக்கத்தை சார்ந்த தோழர்களை வைத்து நடத்திக்கொண்டார்.
அதோடு அவர் காலாவதி என்ற சொற்றொடரை பயன்படுத்தி இருக்கிறார்.
காலாவதி ஆனவர் யார்? புதுச்சேரியில் காலாவதி ஆனவர், தென்சென்னை பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.வால் காலி செய்யப்பட்டவர் எங்களை பார்த்து காலாவதி என்கிறார்.
அவரை காலாவதி ஆக்குவதற்கும், அவர் சார்ந்த இயக்கத்தை காலாவதி ஆக்குவதற்கும் தமிழக மக்கள் 2026 சட்டசபை தேர்தலில் தயாராக இருக்கிறார்கள் என்பதை அக்கா தமிழிசைக்கு தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறி உள்ளார்.
- மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக 36 மணிநேரத்திற்குள் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கையெழுத்திட்டுள்ளனர்.
- பா.ஜ.க. கையெழுத்து இயக்கம் வெற்றி பெற்றதை கண்டு முதலமைச்சர் அதிர்ச்சியடைந்தது வெளிப்படையாகவே தெரிகிறது.
சென்னை:
இந்தி திணிப்பு என்ற மாயைக்கு எதிராக அட்டைக்கத்தியை வீசாதீர்கள் என்று முதலமைச்சர் டேக் செய்து பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் அண்ணாமலை கூறியிருப்பதாவது:-
மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக 36 மணிநேரத்திற்குள் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கையெழுத்திட்டுள்ளனர். மத்திய அரசின் மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக பா.ஜ.க. சார்பில் நடைபெறும் கையெழுத்து இயக்கத்திற்கு வரவேற்பு பெற்று வருகிறது. கையெழுத்து இயக்கத்திற்கு எதிரான உங்கள் கூச்சல்கள் எங்களுக்கு எந்த பாதிப்பையும் அளிக்காது.
பா.ஜ.க. கையெழுத்து இயக்கம் வெற்றி பெற்றதை கண்டு முதலமைச்சர் அதிர்ச்சியடைந்தது வெளிப்படையாகவே தெரிகிறது.
ஆட்சியில் இருந்தபோதும் நீட் தேர்வுக்கு எதிராக ஒரு கையெழுத்து இயக்கத்தை கூட தி.மு.க.வால் நடத்த முடியவில்லை.
இந்தி திணிப்பு என்ற மாயைக்கு எதிராக அட்டைக்கத்தியை வீசாதீர்கள். தி.மு.க.வின் போலி இந்தி திணிப்பு நாடகம் ஏற்கனவே அம்பலமாகிவிட்டது. நீங்கள் அதணை உணராதது துரதிர்ஷ்டவசமானது என்று கூறியுள்ளார்.
- இன்றைய முக்கியச் செய்திகள்.
- இன்றைய அரசியல், சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.
தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்..
- தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் நடத்தப்பட்ட அனைத்துக்கட்சி கூட்டம் நாடகமாகவே தோன்றுகிறது என்று ஜெயக்குமார் கூறினார்.
- 4 மணி நேரம் நடந்த கூட்டத்தில் நன்றாக சிரித்துவிட்டு, நாடகமாடினார் என்று கூறுகிறார்.
காஞ்சிரபுரத்தில் நடந்த விழாவில் தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியதாவது,
தொகுதி மறுசீரமைப்பு விவாதம் தொடர்பான அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்ற அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் நடத்தப்பட்ட அனைத்துக்கட்சி கூட்டம் நாடகமாகவே தோன்றுகிறது" என்று கூறினார்.
4 மணி நேரம் நடந்த கூட்டத்தில் நன்றாக சிரித்துவிட்டு, நாடகமாடினார் என்று கூறுகிறார்.
அவருக்கு கேட்கிறேன் நாங்கள் ஆடியது நாடகம் என்று சொன்னால், நாடகத்தில் நீங்கள் வில்லன் வேடமா...? காமெடி வேடமா...? என்று மக்களுக்கு சொல்ல வேண்டும் அல்லவா?
4 மணி நேர நாடகத்தில் நீங்களும் உட்கார்ந்துவிட்டு, நடித்தது வில்லன் வேடமா? காமெடியன் வேடமா? ஆக கூட்டத்தை அவர்களால் எந்த குறையும் சொல்ல முடியவில்லை என்று அவர் கூறினார்.
- குடிசைப்பகுதியில் உள்ள தோல் தொழில்கூடங்கள், கடைகளை ராகுல் காந்தி பார்வையிட்டார்.
- பொதுமக்களிடம் சில நிமிடங்கள் உரையாடிய ராகுல் காந்தி அங்கு இருந்து புறப்பட்டு சென்றார்.
ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதியான தாராவியை அதானி நிறுவனம், மகாராஷ்டிரா அரசுடன் இணைந்து மேம்படுத்த உள்ளது. இதற்கான கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது.
தாராவியில் சிறு, குறு தொழில் கூடங்கள் அதிகளவில் செயல்பட்டு வருகின்றன. இந்த தொழில்கூடங்களுக்கு தாராவியிலேயே இடம் ஒதுக்கப்படுமா அல்லது வெளிப்பகுதிக்கு மாற்றப்படுமா? என்ற சந்தேகம் நிலவி வருகிறது.
இந்தநிலையில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி நேற்று மும்பை வந்தார். பின்னர் அவர் பகல் 1.30 மணியளவில் திடீரென தாராவி குடிசைப்பகுதிக்கு வருகை தந்தார். தாராவி காலாகில்லா, சந்த் ரோகிதாஸ் மார்க் பகுதியில் குடிசைப்பகுதியில் உள்ள தோல் தொழில்கூடங்கள், கடைகளை ராகுல் காந்தி பார்வையிட்டார். அங்கு அவர் தோல் தொழில்கூட தொழிலாளர்கள், கடைக்காரர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர் தோல் தொழில் குறித்தும், தாராவி மேம்பாட்டு திட்டத்தால் ஏற்படும் பாதிப்பு, பிரச்சனைகள் குறித்தும் அவர்களிடம் கேட்டறிந்தார். சுமார் 2 மணிநேரம் அவர் தோல் தொழிலாளர்கள், கடைக்காரர்களிடம் உரையாடினார்.

தோல் தொழிலாளர்கள், கடைக்காரர்களை சந்தித்து பேசிய பிறகு, அந்தப்பகுதியில் திரண்டு இருந்த பொதுமக்களிடம் சில நிமிடங்கள் உரையாடிய ராகுல் காந்தி அங்கு இருந்து புறப்பட்டு சென்றார். ராகுல் காந்தி வருகையையொட்டி நேற்று தாராவி டி-ஜங்ஷன் முதல் காலாகில்லா பகுதி வரை பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
ராகுல் காந்தி சட்டசபை தேர்தலுக்கு முன் மும்பை வந்து இருந்தார். இந்தநிலையில் அவர் நேற்று மீண்டும் மும்பைக்கு வருகை தந்துள்ளார். மும்பையில் விரைவில் மாநகராட்சி தேர்தல் அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில் ராகுல் காந்தியின் மும்பை வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
- வரி விதிப்பதை ஒத்திவைப்பதாக டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
- கனடா நாட்டின் நிதித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பல்வேறு பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதிக்கும் நடைமுறையை அதிபர் டொனால்டு டிரம்ப் ஒரு மாதத்திற்கு ஒத்திவைத்துள்ளார். வர்த்தக போர் ஏற்படும் அபாயம் இருப்பதை தொடர்ந்து கனடா மற்றும் மெக்சிகோவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிக வரி விதிப்பதை ஒத்திவைப்பதாக டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவை தொடர்ந்து கனடாவும் அமெரிக்க பொருட்களுக்கு வரி விதிக்கும் நடைமுறையை ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளது. அதன்படி ஏப்ரல் 2-ம் தேதி வரை அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பல்வேறு பொருட்களுக்கு அதிக வரி விதிக்கப்படாது என கனடா நாட்டின் நிதித்துறை அமைச்சர் டொமினிக் லி பிளாங்க் தெரிவித்துள்ளார்.
2020 அமெரிக்கா - மெக்சிகோ - கனடா ஒப்பந்தத்தை ஏற்று கனடாவில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்படாது. எனினும், இது ஒருமாத காலத்திற்கு மட்டும் தான் அமலில் இருக்கும்.
முன்னதாக ஆட்டோமொபைல் துறையில் முன்னணி நிறுவனங்களான ஃபோர்டு, ஜெனரல் மோட்டார்ஸ் மற்றும் நிறுவனங்களின் மூத்த தலைவர்களை சந்தித்த அதிபர் டிரம்ப் தற்போது வரி விதிப்பை ஒத்திவைக்கும் முடிவை எடுத்துள்ளார்.
- இலங்கைக்கு இந்தியா ஏராளமான உதவிகளை செய்து வருவதை நாங்கள் அறிவோம்.
- வட இலங்கை மக்கள் மீன் பிடித்தலையே ஒரே வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர்.
கொழும்பு:
தமிழகத்தில் இருந்து மீன்பிடிக்கச்செல்லும் மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படும் பிரச்சனை நீண்ட காலமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் தமிழக மீனவர்கள் எல்லை தாண்டக்கூடாது எனவும், அவர்கள் தங்கள் எல்லைக்குள் நுழையாமல் மத்திய அரசு தடுக்க வேண்டும் என்றும் இலங்கை வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பாக இலங்கை துறைமுகம், போக்குவரத்துத்துறை மந்திரி பிமல் ரத்னநாயகா செய்தியாளர்களிடம் கூறுகையில், 'இலங்கைக்கு இந்தியா ஏராளமான உதவிகளை செய்து வருவதை நாங்கள் அறிவோம். ஆனால் இந்திய மீனவர்கள் எல்லை தாண்டாமல் இந்தியா தடுத்தால் அது யாழ்ப்பாண மக்களுக்கு செய்யும் மிகப்பெரும் உதவியாக இருக்கும்.
வட இலங்கை மக்கள் மீன் பிடித்தலையே ஒரே வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர். மன்னார், தலைமன்னாரில் வேறு எந்த தொழிற்சாலையும் இல்லை. மீனவர்கள் எல்லை தாண்டாமல் தடுத்தால் அதற்காக இந்தியாவுக்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருப்போம்' என தெரிவித்தார்.
- எழும்பூர் வரும் வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் (12636) தாம்பரம்-எழும்பூர் இடையே பகுதிநேரமாக ரத்து செய்யப்படுகிறது.
- எழும்பூரில் இருந்து மண்டபம் செல்லும் ரெயில் (22661) எழும்பூரில் இருந்து 30 நிமிடம் தாமதமாக மாலை 6.15 மணிக்கு புறப்படும்.
சென்னை:
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பராமரிப்பு பணி காரணமாக சில எக்ஸ்பிரஸ் ரெயில்கள் பகுதிநேரமாக ரத்து செய்யப்படுகிறது.
அதன்படி, திருச்செந்தூரில் இருந்து நாளை (சனிக்கிழமை) இரவு 8.35 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-20606) தாம்பரம்-எழும்பூர் இடையே பகுதிநேரமாக ரத்து செய்யப்படுகிறது. அதேபோல, திருவண்ணாமலையில் இருந்து 9-ந்தேதி அதிகாலை 4.30 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் வரும் பயணிகள் ரெயில் சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே பகுதிநேரமாக ரத்து செய்யப்படுகிறது.
அதே தேதியில், நெல்லையில் இருந்து எழும்பூர் வரும் வந்தே பாரத் ரெயில் (20666) மாம்பலம்-எழும்பூர் இடையே பகுதிநேரமாக ரத்து செய்யப்படுகிறது. மதுரையில் இருந்து 9-ந்தேதி காலை 6.45 மணிக்கு புறப்பட்டு எழும்பூர் வரும் வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் (12636) தாம்பரம்-எழும்பூர் இடையே பகுதிநேரமாக ரத்து செய்யப்படுகிறது.
எழும்பூரில் இருந்து வருகிற 9-ந்தேதி குருவாயூர் செல்லும் ரெயில் (16127) எழும்பூருக்கு பதில் தாம்பரத்தில் இருந்து காலை 10.50 மணிக்கு புறப்படும். அதே தேதியில், எழும்பூரில் இருந்து காரைக்குடி செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (12605) எழும்பூருக்கு பதிலாக தாம்பரத்தில் இருந்து மாலை 4.10 மணிக்கு புறப்படும். எழும்பூரில் இருந்து 9-ந்தேதி திருச்செந்தூர் செல்லும் ரெயில் (20605) எழும்பூருக்கு பதிலாக தாம்பரத்தில் இருந்து மாலை 4.27 மணிக்கு புறப்படும்.
எழும்பூரில் இருந்து மதுரைக்கு செல்லும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் (22671) 9-ந்தேதி 30 நிமிடம் தாமதமாக எழும்பூரில் இருந்து காலை 6.30 மணிக்கு புறப்படும். அதே தேதியில், எழும்பூரில் இருந்து மண்டபம் செல்லும் ரெயில் (22661) எழும்பூரில் இருந்து 30 நிமிடம் தாமதமாக மாலை 6.15 மணிக்கு புறப்படும்.
இதேபோல, ஏற்கனவே பகுதிநேரமாக ரத்து செய்யப்பட்ட வந்தே பாரத் (20665), சார்மினார் (12759) பல்லவன், வைகை எக்ஸ்பிரஸ் ரெயில்கள் வருகிற 9-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பகல் நேரங்களில் வெளியில் தலைகாட்ட முடியாத அளவுக்கு சூரியன் சுட்டெரித்தது.
- 7 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி சதம் அடித்துள்ளது.
சென்னை :
தமிழ்நாட்டில் இந்த ஆண்டு கோடை வெப்பம் முன் கூட்டியே பதிவாகத் தொடங்கிவிட்டது. பல இடங்களில் வெயில் சுட்டெரித்து வருகிறது. நேற்று முன்தினம் 4 இடங்களில் 100 டிகிரியை தாண்டி வெப்பம் பதிவானது. இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரித்து காணப்படுகிறது.
அதன் தொடர்ச்சியாக நேற்றும் தமிழகத்தில் வெயிலின் தாக்கம் சற்று அதிகமாகவே இருந்தது. பகல் நேரங்களில் வெளியில் தலைகாட்ட முடியாத அளவுக்கு சூரியன் சுட்டெரித்தது. அந்தவகையில் ஈரோட்டில் 102.56 டிகிரி (39.2 செல்சியஸ்), கரூர் 102.2 டிகிரி (39 செல்சியஸ்), மதுரை 101.48 டிகிரி (38.6 செல்சியஸ்), சேலம் 100.04 டிகிரி (37.8 செல்சியஸ்), திருப்பத்தூர் 100.58 டிகிரி (38.1 செல்சியஸ்), திருச்சி 100.04 டிகிரி (37.8 செல்சியஸ்), வேலூர் 100.58 டிகிரி (38.1 செல்சியஸ்) என மொத்தம் 7 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி சதம் அடித்துள்ளது.
இதன் தொடர்ச்சியாக வரக்கூடிய நாட்களில் வெப்பத்தின் தாக்கம் கடுமையாக இருக்கும் என்றும், அடுத்த மாதம் (ஏப்ரல்) 15-ந்தேதி வரை இதே நிலைதான் நீடிக்கும் என்றும் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.






