என் மலர்
நீங்கள் தேடியது "Tamilisai Soundararajan"
- திமுக வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இல்லை.
- தன்னம்பிக்கை கொண்ட பெண்களாக மாற்றியுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மத்திய அரசு தடுக்க முயற்சிப்பதாக கூறி, மகளிர் உரிமைத் தொகையை முன்கூட்டியே அறிவித்து இருப்பதற்கு தமிழ்நாடு பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்த X தளப் பதிவில் அவர், "மத்திய அரசு மகளிர் உரிமை மானியங்களை தடுக்க இருப்பதாக கூறி, முன்கூட்டியே அறிவித்துள்ளதாக தெரிவித்து இருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நான் கடும் கண்டனம் தெரிவிக்கிறேன். மத்திய அரசு அதை தடுக்க முயற்சிப்பதால் தான், தனது அனைத்து தோல்விகளுக்கும் மத்திய அரசை குறை கூறும் பழக்கம் அவருக்கு உள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலின் போது கூட அது தடுக்கப்படவில்லை என்பதை அவருக்கு நினைவூட்ட விரும்புகிறேன். மேலும் எந்தவொரு முடிவும் மத்திய அரசிடமிருந்து அல்ல, தேர்தல் ஆணையத்திடம் இருந்து வர வேண்டும். தேர்தல் பயம் மற்றும் காய்ச்சல் காரணமாக தமிழக முதல்வர் இதை அறிவிக்கிறார். தமிழகத்தில் நிலவும் அதிக எதிர்ப்பு காரணமாக திமுக வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இல்லை.
90 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் தங்கள் கணக்குகளில் ஒரே இரவில் அதைப் பெற்றதில் அவர்கள் மிகவும் பெருமைப்படுகிறார்கள். இதற்காக ஜன்தன் கணக்குகள் மற்றும் டிஜிட்டல் இந்தியாவை தொடங்கிய நமது மாண்புமிகு பிரதமருக்கு தமிழக முதல்வர் பாராட்ட வேண்டும், நன்றி சொல்ல வேண்டும்.
மாண்புமிகு நரேந்திர மோடியின் முத்ரா கடன்கள் தமிழ்நாட்டில் 1 கோடிக்கும் மேற்பட்ட பெண்களுக்கு பயனளித்துள்ளன, இது அவர்களை தொழில் முனைவோராகவும் தன்னம்பிக்கை கொண்ட பெண்களாகவும் மாற்றியுள்ளது.
பெண்களுக்கான ஊக்கத்தொகையை அறிவித்து டாஸ்மாக் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காதது மிகவும் கண்டிக்கத்தக்கது. ஏனெனில் ஒரு கணக்கெடுப்பு குடிகாரனைக் கொண்ட ஒரு குடும்பம் மாதத்திற்கு 6000 ரூபாய்க்கு மேல் மதுபானத்திற்காக செலவிடுவதாகக் கூறுகிறது.
தமிழ்நாடு அரசு கடன் ரூ. 4.5 லட்சம் கோடியில் இருந்து ரூ. 9.5 லட்சம் கோடியாக உயர்த்தியுள்ளது. அதாவது ஒரு தமிழரின் கடனை ரூ. 1.4 லட்சமாகவும், வட்டிக்கு 40,000 ஆகவும் உயர்த்தியுள்ளது.
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ரூ. 2000 அறிவித்துள்ளார், அதை தமிழக முதல்வர் இப்போது நகலெடுத்து வருகிறார். கடந்த ஆண்டு ஒரு பத்திரிகையாளர் திமுக அமைச்சரிடம் பொங்கல் ஊக்கத்தொகை ஏன் கொடுக்கவில்லை என்று கேட்டபோது, இந்த ஆண்டு கொடுத்தால் மக்கள் மறந்துவிடுவார்கள், அடுத்த ஆண்டு வழங்குவோம் என்று பதிலளித்தார், அவர்கள் அதைச் செய்தார்கள். இவை அனைத்தும் மு.க. ஸ்டாலின் தேர்தல் பயம் மற்றும் காய்ச்சல் காரணமாக அறிவிக்கிறார்," என்று குறிப்பிட்டுள்ளார்.
- தேர்வுகள் நடைபெற இருந்தது.
- முதன்மை தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
தமிழ் நாட்டில் சார்-பதிவாளர், துணை வணிகவரி அதிகாரி, தொழிலாளர் நல ஆய்வாளர் உள்ளிட்ட க்ரூப் 2 பணிகள், உதவியாளர் கணக்காளர், தொகுதி உதவியாளர் உள்ளிட்ட க்ரூப் 2 ஏ என காலியாக உள்ள 828 பணியிடகளுக்கு தகுதியானவர்களை தேர்ந்தெடுக்கக தமிழ்நாடு முழுவதும் இன்று (பிப். 8) காலையும், மாலையும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சா்பில் தேர்வுகள் நடைபெற இருந்தது.
எனினும், பல்வேறு நிர்வாகக் கோளாறு மற்றும் தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக இன்று நடத்தப்பட இருந்த முதன்மை தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. முன்னதாக
இன்றைய தேர்வு நடைபெற இருந்த நிலையில், தேர்வு மையம் முறையாக ஒதுக்கப்படவில்லை என கூறி தேர்வர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்வர்கள் எதிர்கொண்ட இன்னல் மற்றும் கடைசி நேர அலைகழிப்புகளுக்கு முன்னாள் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சுவுந்தரராஜன் தனது X தளப்பதிவில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த பதிவில், "திமுக மாடல் அரசாங்கம் முற்றிலும் நிர்வாக சீர்கேட்டினால் நிலை குலைந்து போயிருக்கிறது என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு உதாரணம்... 9000 டிஎன்பிஎஸ்சி தேர்வர்களின் கனவு இங்கே நசுக்கப்பட்டு கொண்டிருக்கிறது... இளைஞர்களின் வாழ்க்கை நசுக்கி விட்டு இளைஞர் அணி மாநாடு நடத்துவது தான் திமுகவின் அரசியல் நாடகம்.. பல இடங்களில் சென்டர் ஒதுக்கப்படாமல் போராடிக் கொண்டிருக்கின்ற நேரத்தில் சில இடங்களில் தேர்வு எழுத ஆரம்பித்து விட்டார்கள்.. இந்த குளறுபடி இந்த ஆட்சியின் குழப்பத்தின் உச்சக்கட்டம்.. வாழ்க்கைப் போராட்டமாக இருக்கும் இந்த இந்த இளைஞர்கள்.. விடிவு காலம் வேண்டும் என்று கடுமையாக தயாரித்து... தேர்வுக்கு வந்தால்.. தேர்வு எழுதுவதே போராட்டமாக வெடித்திருப்பது வேதனையிலும் வேதனை அரசு உடனே இதற்கு நடவடிக்கை தேவை... ஆயிரக்கணக்கானோர் தங்கள் நேரத்தையும் பொருளையும் செலவிட்டு.. ஆர்வமுடன் வந்தவர்கள் அலை கழிக்கப்பட்டிருக்கிறார்கள்... நியாயமாக சரியான திட்டமிடலுடன் தேர்வுகள் நடைபெற வேண்டும் என்பதில் அரசு கவனம் செலுத்த வேண்டும்.. மறுபடியும் தேர்வு அறிவிக்கப்படும் பொழுது எந்த குளறுபடியும் இல்லாமல் பார்த்துக் கொள்வது அரசாங்கத்தின் கடமை...," என குறிப்பிட்டுள்ளார்.
- பிரதமர் வந்தவுடனேயே நீங்கள் அடையும் பதற்றம் உங்களது டிவீட்டில் நன்றாகவே தெரிகிறது
- பாஜக -தே.ஜ.கூட்டணியின் டபுள் எஞ்ஜின் அரசு நிச்சயம் இங்கே ஆட்சிக்கு வரும்
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் இன்று நடைபெற்ற தே.ஜ.கூட்டணியின் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில், "பாஜக -தே.ஜ.கூட்டணியின் டபுள் எஞ்ஜின் அரசு நிச்சயம் இங்கே ஆட்சிக்கு வரும். தமிழ்நாட்டை வளர்ச்சியடைந்த, பாதுகாப்பான, ஊழலற்ற மாநிலமாக மாற்றுவோம்" என பிரதமர் மோடி பேசியிருந்தார்.
இதற்கு, பிரதமர் சொல்லும் "டபுள் எஞ்சின்" எனும் "டப்பா எஞ்சின்" தமிழ்நாட்டில் ஓடாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இந்நிலையில் முதலமைச்சரின் இந்த பதிவுக்கு பதிலளிக்கும் விதமாக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவிட்டிருந்தார். அதில்,
"தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களே நீங்கள் ஒரு ட்ரபிள் என்ஜின் (trouble engine) கவர்ன்மென்ட் வைத்துக்கொண்டு எல்லா மாநிலங்களிலும் வெற்றிகரமாக டபுள் இன்ஜின்(double engine) கவர்ன்மென்ட் நடத்திக் கொண்டிருக்கும் மோடி அவர்களை விமர்சிக்கிறீர்கள்.
குஜராத், மகாராஷ்டிரா, உத்தர் பிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்கள் மாநில அளவில் வெற்றியை தருவது மட்டுமல்லாமல் மாநகராட்சி அளவில் வெற்றியை தந்து அது ட்ரிபிள் இஞ்சின் trible என்ஜின் கவர்மெண்டாக போய்க்கொண்டிருக்கிறது. ஆனால் பஞ்சாயத்து தேர்தலை கூட நடத்த பயந்து தமிழ்நாட்டில் ட்ரபிள் இன்ஜின் (trouble engine) கவர்ன்மென்ட் ஆக போதை, கடன், பாதுகாப்பின்மை போன்றவற்றை ஏற்படுத்தி ஒட்டிக்கொண்டு இருக்கும் உங்கள் கவர்ன்மென்ட் போல் அல்லாமல் ..
தமிழ்நாட்டில் நல்ல டபுள் இன்ஜின் கவர்மெண்ட் கொண்டுவர வேண்டுமென்றால் அதை "டப்பா இஞ்சின்" என்று விமர்சிக்கிறீர்கள். நீங்கள் தான் "தப்பான இன்ஜினை" வைத்துக்கொண்டு ஓட்டிக் கொண்டிருக்கிறீர்கள் முதல்வர் அவர்களே...... தமிழ்நாட்டிற்கு பிரதமர் வந்தவுடனேயே நீங்கள் அடையும் பதற்றம் உங்களது டிவீட்டில் நன்றாகவே தெரிகிறது" எனக் குறிப்பிட்டுள்ளார்.
- திமுகவில் கனிமொழி தலைமையிலும், தவெகவில் கே.ஜி. அருண்ராஜ் தலைமையிலும் அமைக்கப்பட்டுள்ளது.
- இக்குழுவில் மாநிலத் துணைத்தலைவர் துரைசாமி உட்பட 12 பேர் இடம்பெற்றுள்ளனர்.
தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில் கூட்டணி பேச்சுவார்த்தை, தேர்தல் வியூகங்கள், தேர்தல் அறிக்கை பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. திமுகவில் கனிமொழி தலைமையிலும், தவெகவில் அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் கே.ஜி. அருண்ராஜ் தலைமையிலும் அறிக்கை தயாரிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அதிமுகவில் முதற்கட்ட தேர்தல் அறிக்கையே வெளியாகிவிட்டது.
இந்நிலையில் தமிழ்நாடு பாஜக அக்கட்சியின் மூத்த நிர்வாகி தமிழிசை சௌந்தரராஜன் தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவை நியமித்துள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு பாஜகவின் எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில்,
'தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பில், வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவானது, முன்னாள் மாநிலத் தலைவரும், தேசிய பொதுக்குழு உறுப்பினருமான தமிழிசை சௌந்தரராஜன் தலைமையில் அமைக்கப்படுகிறது.' எனக் குறிப்பிட்டுள்ளது. இக்குழுவில் மாநிலத் துணைத்தலைவர் துரைசாமி உட்பட 12 பேர் இடம்பெற்றுள்ளனர்.
- ஆட்சி நடத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் இணக்கமாக தான் செயல்பட வேண்டும்.
- அப்பட்டமான ஒரு பொய் நாடகம் தமிழக அரசால் நடந்து கொண்டிருக்கிறது.
திருச்சி:
திருச்சி விமான நிலையத்தில் முன்னாள் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அவர் அளித்த பதில்களும் விபரம் வருமாறு:-
கே: புதுக்கோட்டை விழா கோலமாக இருக்கிறது. அதுகுறித்து?
ப: ஜார்ஜ் கோட்டையை பிடிக்கப் போகிறோம், அதனால் புதுக்கோட்டை விழா கோலமாக இருக்கிறது. பல கோட்டைகளைப் பிடித்து சாதனை படைத்த அமித்ஷா இன்று வருகிறார். புதுக்கோட்டையில் ஜார்ஜ் கோட்டையை பிடிப்பதற்கான வியூகத்தை வகுக்க போகிறோம். நிச்சயமாக வெற்றி கிடைக்கும். தொடர்ந்து தமிழக அரசு மக்களை ஏமாற்றிக் கொண்டு வருகிறது.
தேர்தல் ஸ்டண்ட் என்பது நேற்று இவர்கள் அறிவித்திருக்கிற ஓய்வூதிய திட்டம். இது புதிய ஓய்வுதிய திட்டமா, பழைய ஓய்வூதிய திட்டமா, அல்லது பழைய, புதிய ஓய்வூதிய திட்டமா என்ற ஒரு குழப்பத்திலேயே அந்தத் திட்டம் இருக்கிறது. இப்படி ஒரு ஓய்வூதிய திட்டத்தை அறிவித்திருக்கிறார்கள். அவர்களை ஏமாற்றாமல் ஓய்வூதியத் திட்டம் வந்திருக்கிறதா என்பதில் மிகப்பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது.
மகாத்மா காந்தி பெயரை மாற்றி விட்டு பாரத பிரதமர் அதை விரிவுபடுத்தினார். இவர்கள் பெயரை மாற்றி அதை சுருக்கி விட்டு, ஏற்கனவே அவர்களிடமிருந்து பணத்தைப் பெற்று பின்னர் அவர்களுக்கே கொடுப்பது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி அதற்கு எல்லோரும் ஸ்வீட் கொடுக்கிற மாதிரி ஒரு தோற்றத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்களே தவிர புதிய ஓய்வூதிய திட்டத்தின் ஒரு மறு உருவு தானே தவிர, பழைய ஓய்வூதிய திட்டம் இல்லை.
கே: தமிழக அரசுக்கு மத்திய அரசிடமிருந்து நிதிகள் விடுவிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறதே?
ப: ப.சிதம்பரம் போன்றவர்கள் கடன் வாங்குவது பிரச்சனை இல்லை என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். தமிழக அரசை பொறுத்தவரை முதலமைச்சர் சொல்கிறார் போதையை கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் இணக்கமாக செயல்பட வேண்டும் என்று. ஆட்சி நடத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் இணக்கமாக தான் செயல்பட வேண்டும். இணக்கமில்லாமல் நீங்கள் இருந்து கொண்டிருப்பதால் தான் எல்லாம் நாங்கள் செய்தோம், நாங்கள் செய்கிறோம் என்று சொல்வது. துப்புரவு தொழிலாளர்கள் என்ன பாவம் செய்தார்கள்? அவர்களை அடி அடி என்று அடிக்கிறீர்கள்.
தேர்தல் சமயத்தில் இன்னும் பல அறிவிப்புகள் வரலாம். இந்த ஓய்வூதிய திட்டம் எப்போது முதல் அமல்படுத்தப்படும் என்று இந்த அரசாணையில் இல்லை. தி.மு.க.வுக்கு நாம் அடுத்து வருவோமா என்ற ஒரு சந்தேகம் இருக்கிறது. ஆனாலும் அறிவிப்பு விடுவோம் என்று தான் நடக்கிறது. இது போன்ற பல அறிவிப்புகளை நான் எதிர்பார்க்கிறேன்.
கே: தி.மு.க. கூட்டணி கட்சியினர் மது ஒழிப்பு போன்ற போராட்டங்களை நடத்துகின்றனர். ஆனால் கட்சியில் உள்ளவர்களே மது ஆலையை நடத்துகிறார்கள்.
ப: வைகோவிடம் நான் ஒரு கேள்வி கேட்கிறேன், நீங்கள் எதற்கு எதிராக நடைபயணம் செல்கிறீர்கள்? அறிவாலயத்திற்கு தான் நீங்கள் நடைபயணம் செல்ல வேண்டும். சாராய ஆலையை நோக்கி தான் நடைபயணம் செல்ல வேண்டும். ஆனால் சாராய ஆலையை நீங்கள் மூட மாட்டீர்கள், டாஸ்மாக்கை குறைக்க மாட்டீர்கள். அப்பட்டமான ஒரு பொய் நாடகம் தமிழக அரசால் நடந்து கொண்டிருக்கிறது.
அதேபோல் நாளை 10 லட்சம் லேப்டாப்புகளை முதலமைச்சர் மாணவர்களுக்கு வழங்குவதாக அறிவித்திருக்கிறார்கள். உலகத்தரம் வாய்ந்த நிறுவனங்களிடம் இருந்து வாங்கி இருக்கிறார்கள் என்று சொல்கிறார்கள். ஆனால் இவர்கள் ஏன் எச்.சி.எல். நிறுவனத்தில் வாங்கவில்லை. நமது தமிழரான சிவ நாடாரிடம் ஏன் வாங்கவில்லை?
கே: நீங்கள் கோவிலுக்கு செல்லும் பொழுது அறநிலையத்துறை அமைச்சருக்கும் உங்களுக்கு வாக்குவாதம் ஏற்பட்டது. அதே போல் இப்பொழுது கன்னியாகுமரியில் ஏற்பட்டுள்ளதே?
ப: நான் கவர்னராக இருக்கும்போது கூட அதைப்பற்றி சிந்தித்தது கிடையாது. நான் கூட்டத்தோடு தான் செல்வேன் என்று நான் கூறியபோது என்னுடன் வந்தவரை தடுத்து நீங்கள் மட்டும் செல்லுங்கள் என்று கூறுகிறார். இவர் தனியாகவா எல்லா இடங்களுக்கும் செல்கிறார்? கோவில் அவருடைய சொந்த சொத்தா, பொதுமக்களுடையது தான். இந்த தி.மு.க. கூட்டணி தான் மதசார்பற்ற கூட்டணி என்று பெயர் வைப்பதற்கு உங்களுக்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை என்று நான் சொல்கிறேன்.
கே: தி.மு.க. தேர்தல் அறிக்கை பற்றி டோல் பிரீ எண்ணை வழங்கி, மக்களுடைய தகவல்களை தெரிவிக்க சொல்லி இருக்கிறார்களே?
ப: ஏற்கனவே உள்ள தேர்தல் அறிக்கையை பார்க்க சொல்லுங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தேசிய பொதுச்செயலாளராக ஒருவர் தேர்வு செய்யப்படுவார்.
- ஆலோசனையின் போது தமிழகத்தை சேர்ந்த முக்கிய நிர்வாகிகளுக்கு உயர் பதவி வழங்குவது பற்றி ஆலோசித்ததாக தெரியவந்துள்ளது.
மத்தியில் அசுர பலத்துடன் தொடர்ந்து 3 முறை பா.ஜ.க. ஆட்சியை கைப்பற்றி இருக்கிறது. அடுத்து 2029 பாராளுமன்ற தேர்தலிலும் சாதிக்க வேண்டும் என்ற முனைப்புடன் நாட்டின் அனைத்து பகுதியிலும் கட்சியை பலப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறது.
வடகிழக்கு மாநிலத்தில் இருந்து நிதின்நபினை தேசிய செயல் தலைவராக தேர்வு செய்தது. இதேபோல் மற்ற பகுதிகளில் இருந்தும் தேசிய அளவிலான பதவிகளுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்வது தொடர்பாக டெல்லியில் ஆலோசனை நடந்தது.
அகில இந்திய அமைப்பு செயலாளர் பி.எல்.சந்தோசுடன் தமிழக அமைப்பு செயலாளர் கேசவ விநாயகன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின் போது தமிழகத்தை சேர்ந்த முக்கிய நிர்வாகிகளுக்கு உயர் பதவி வழங்குவது பற்றி ஆலோசித்ததாக தெரியவந்துள்ளது.
தேசிய பொதுச்செயலாளராக ஒருவர் தேர்வு செய்யப்படுவார். இதற்கு அண்ணாமலை, டாக்டர் தமிழிசை பெயர்களும், அதேபோல் தேசிய செயலாளர் பதவிக்கு குஷ்பு, சரத்குமார், வானதி ஆகியோர் பெயர்களும், தேசிய செயற்குழு உறுப்பினர் பதவிகளுக்கு பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, கே.பி.ராமலிங்கம் ஆகியோர் பெயர்களும் பரிசீலிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
- ஆழ்வார்களும் நாயன்மார்களும் வளர்த்தது தான் இந்த தமிழ்... அண்ணா வளர்த்தது தமிழ் அல்ல.
- உங்கள் முதலமைச்சர் எத்தனை முருகன் கோவில்களுக்கு சென்று இருக்கிறார் என்று சொல்ல முடியுமா?
சென்னை:
முன்னாள் கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள வலைத்தள பதிவில் கூறியிருப்பதாவது:-
தமிழக சட்ட அமைச்சர் ரகுபதியின் வார்த்தைகளை நான் வன்மையாக கண்டிக்கிறேன். தமிழ் வேறு இந்து மதம் வேறு.. தமிழர்கள் வேறு இந்துக்கள் வேறு என்ற பொருள்பட வேற்றுமையை விதைத்து கொண்டிருக்கிறார்.
ஆழ்வார்களும் நாயன்மார்களும் வளர்த்தது தான் இந்த தமிழ்... அண்ணா வளர்த்தது தமிழ் அல்ல. ஆண்டாள் வளர்த்தது தான் தமிழ்.. தமிழையும் இந்து மதத்தையும் ஆன்மீகத்தையும் பிரித்துப் பார்க்க முடியாது. இப்படி தொடர்ந்து பிரித்து ஆளும் கொள்கையை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
உங்கள் முதலமைச்சர் எத்தனை முருகன் கோவில்களுக்கு சென்று இருக்கிறார் என்று சொல்ல முடியுமா? ஏன் முருகன் திருவிழாக்களுக்கு கூட வாழ்த்து சொல்வதில்லை. அரசியல் லாபத்திற்காக முருகனையும் இந்து மதத்தையும் பிரிக்கும் இந்த சூழ்ச்சியை தமிழக மக்கள் ஒரு நாளும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
பா.ஜ.க. தமிழகத்தை இந்துத்துவ பரிசோதனை களமாக மாற்றுகிறது என்று ஒரு பொய்யான குற்றச்சாட்டை சொல்கிறார்! உண்மை என்ன என்றால் இந்துக்களுக்கு தமிழகத்தை ஒரு சோதனைக்களமாக வேதனைக்களமாக தி.மு.க. மாற்றிக் கொண்டிருக்கிறது. 2026-ல் தி.மு.க. பெறப்போகும் தோல்விக்கு பின்பு அவர்கள் சந்திக்கும் காலம் வேதனை காலமாக இருக்கும் என்பது உறுதி.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
- பீகார் மக்கள் பற்றி தி.மு.க.வினர் தரக்குறைவாக பேசியது சரித்திரத்தில் உள்ளது.
- தமிழர்கள் மீது பிரதமர் மரியாதை வைத்திருப்பதால்தான் செங்கோலை பாராளுமன்றத்தில் வைத்தார்.
தமிழகத்தில் தி.மு.க.வும், பிற மாநிலங்களில் இந்தியா கூட்டணியில் இருப்பவர்களும் பீகார் மக்களை துன்புறுத்துகிறார்கள் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:
* பீகார் மக்களை தி.மு.க.வினர் கீழ்த்தரமாக நடத்துவதாக பிரதமர் கூறியதில் என்ன தவறு இருக்கிறது?
* பீகார் மக்கள் பற்றி தி.மு.க.வினர் தரக்குறைவாக பேசியது சரித்திரத்தில் உள்ளது.
* பீகாரிகள் அறிவில்லாதவர்கள் என கே.என்.நேரு சொன்னார். டேபிள் துடைக்க, பாத்ரூம் கழுவத்தான் சரியானவர்கள் என தயாநிதி கூறினார்.
* தி.மு.க. மீது வைக்கப்படும் விமர்சனம் தி.மு.க. மீது மட்டும் தான், தமிழர்கள் மீது இல்லை என்பதை முதல்வருக்கு சொல்லிக்கொள்கிறேன்.
* தமிழர்கள் மீது பிரதமர் மரியாதை வைத்திருப்பதால்தான் செங்கோலை பாராளுமன்றத்தில் வைத்தார்.
* தமிழக முதல்வரின் வேற்றுமை அரசியல் எடுபடாது. வேற்றுமையில் ஒற்றுமை என்பது தான் பா.ஜ.க.வின் கொள்கை.
இவ்வாறு அவர் கூறினார்.
- சாலை சரி செய்யாமல் கட்டுப்பாட்டு அறையில் என்ன செய்கிறீர்கள் துணை முதலமைச்சர் அவர்களே.
- திண்டாடும் திராவிட மாடல் அரசு. வீட்டிற்கு அனுப்பப்பட வேண்டிய அரசு.
சென்னை:
பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சென்னையில் மிதமான மழைக்கே பல தெருக்களில் தண்ணீர் தேங்கி இருக்கிறது. அசாதாரண மழை என்றால் பரவாயில்லை. சாதாரண மழைக்கு சென்னை தாங்குவதாக தெரியவில்லை. இயற்கையான மழைக்கு கூட 24 மணி நேர கட்டுப்பாட்டு அறையை துணை முதலமைச்சர் கண்காணித்தார் என்று விளம்பர போட்டோக்கள் வருகின்றன.
சாலையை சரி செய்து விட்டு கட்டுப்பாட்டு அறையில் பார்த்தால் தான் நல்ல சாலை தெரியும். சாலை சரி செய்யாமல் கட்டுப்பாட்டு அறையில் என்ன செய்கிறீர்கள் துணை முதலமைச்சர் அவர்களே.
சென்னை மட்டுமல்ல டெல்டாவிலும் இதே கதை தான். ஒரே நாளில் 20 லட்சம் டன் நெற்பயிர்கள் வீணாகி இருக்கின்றன. எதற்கெடுத்தாலும் திராவிட மாடல் என்று சொல்லும் முதலமைச்சரே இந்தியாவிற்கே வழிகாட்டுகிறோம் என்று சொல்லிக்கொண்டு தமிழ் மக்களின் வலியைத் தான் கூட்டிக் கொண்டிருக்கிறீர்கள். திண்டாடும் திராவிட மாடல் அரசு. வீட்டிற்கு அனுப்பப்பட வேண்டிய அரசு.
இவ்வாறு அதில் கூறினார்.
- நீட்டை எதிர்த்து போராட வேண்டுமென்றால் நீங்கள் உச்ச நீதிமன்றத்தை எதிர்த்து தான் போராட வேண்டும்...
- இன்றும் ஆணவக் கொலைகளை தடுக்க முடியாத உங்கள் அரசை எதிர்த்துப் போராடுங்கள்...
சென்னை:
தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
முதலமைச்சர் அவர்களே இந்தியை ஏற்றுக் கொண்டால்தான் கல்வி நிதி என்று எக்காலத்திலும் மத்திய அரசு சொல்லவில்லை. புதிய கல்விக் கொள்கை என்பது தாய் மொழியை ஊக்குவிப்பது தானே தவிர இந்தி மொழியை ஊக்குவிப்பது அல்ல... நீங்கள் இந்தி மொழியை எதிர்த்து போராடுகிறேன் என்றால் இந்தி மொழியை தமிழகத்தில் திணித்த காங்கிரசோடு தான் நீங்கள் போராட வேண்டும்.
அரசு பள்ளி மாணவர்களுக்கு இரண்டு மொழி.. ஆனால் தனியார் பள்ளிக்கு மூன்று மொழி என்று உங்களது பாரபட்சமான கல்வித் திட்டத்திற்கு எதிராக போராடுங்கள்.
நீட்டை எதிர்த்து போராட வேண்டுமென்றால் நீங்கள் உச்ச நீதிமன்றத்தை எதிர்த்து தான் போராட வேண்டும்... நீட்டை எதிர்த்து போராடுவேன் கையெழுத்து போடுவேன் என்று பொய் சொன்னது யார் என்பது மக்களுக்கு நன்றாக தெரியும்.
இன்று இல்லாத ஒன்றை எதிர்த்து போராடுகிறேன் என்பது உங்களது திராவிட மாடல் என்கின்ற பொய் மாடல்.
உலகத்திற்கே பொதுவான வள்ளுவர் ஆரம்ப காலத்தில் காவி உடையில் தான் இருந்தார் இறைவணக்கத்தோடு இறை உணர்வோடு இருந்த வள்ளுவரை வெள்ளுடை உடுக்க வைத்த பாவம் செய்பவர்கள் நீங்கள்... ஆக உங்களையே எதிர்த்து போராடப் போகிறீர்களா..?..
மனித கழிவுகளை மனிதனே அள்ளும் அவலம் நாடு முழுவதும் மறைந்திருக்கின்ற நேரத்தில் உங்கள் சொந்த தொகுதியிலேயே துப்புரவு தொழிலாளர்கள் மரணித்திருக்கிறார்களே அதை எதிர்த்து போராடுங்கள்.
வேங்கை வயலில் நலமுடன் தண்ணீர் இல்லாமல் மலமுடன் தண்ணீர் குடித்த மக்களுக்கு இன்றும் நியாயம் கிடைக்காமல் இருப்பதற்கு எதிராக உங்களுக்கு எதிராக நீங்களே போராடுங்கள்.
கள்ளச்சாராயத்தினால் 67 உயிர்களை பலிவாங்கி.. அங்கு ஆறுதல் கூட செல்ல முடியாத உங்களது மனிதாபிமானமற்ற செயலை எதிர்த்து போராடுங்கள்.
இன்றும் ஆணவக் கொலைகளை தடுக்க முடியாத உங்கள் அரசை எதிர்த்துப் போராடுங்கள்...
பல்கலைக்கழகமாக இருக்கட்டும், காவலர்களிடம் இருந்து இருக்கட்டும்... பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்க முடியாத உங்கள் அவல நிலையை எதிர்த்து போராடுங்கள்.. திராவிட மாடல் ஆட்சியில் இன்று பள்ளி குழந்தைகளுக்கிடையே தலைவிரித்தாடும் சாதிய வேற்றுமையை எதிர்த்து போராடுங்கள்.
ஒரு விமான சாகசத்தில் கூட பாதுகாப்பு கொடுக்க முடியாமல் ஐந்து பேரின் உயிரை காவு வாங்கிய உங்களது காவல்துறைக்கு எதிராக போராடுங்கள். ஒரு அரசியல் கட்சிக்கு சரியான பாதுகாப்பு கொடுக்காமல் 41 உயிர் பலியாக காரணமாக இருந்த உங்களது பாதுகாப்பு நடவடிக்கைக்கு எதிராக போராடுங்கள். இன்று தமிழகத்தில் வாழ்க்கையே போராட்டமாக இருக்கும் பொழுது... அதை எதிர்த்து நீங்கள் போராடினால் தான் சரியாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- தி.மு.க எத்தனை கூட்டங்கள் போட்டாலும் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது.
- பா.ஜ.க அடக்குமுறை செய்கிறது என தேவையில்லாத குற்றச்சாட்டை சுமத்துகிறார்கள்.
கோவை:
முன்னாள் கவர்னரும், பா.ஜ.க முன்னாள் தலைவருமான தமிழிசை சவுந்தரராஜன், கோவை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நாட்டின் துணை ஜனாதிபதியாக, ஒரு தமிழர் தேர்ந்தெடுக்கப்பட்டு இருப்பது தமிழகத்திற்கும், தமிழர்களுக்கும் பெருமை.
தி.மு.க தமிழருக்கு எந்த ஒரு ஆதரவையும் கொடுக்காததை வரலாறு மன்னிக்காது. முப்பெரும் விழா நடத்தினாலும் நாப்பெரும் விழா நடத்தினாலும் இனிமேல் உங்களுக்கு வெளியேற்றம் தான்.
தி.மு.க எத்தனை கூட்டங்கள் போட்டாலும் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது. நோ ரீ என்ட்ரி தி.மு.க.

எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, அமித்ஷாவை சந்தித்தது தி.மு.க.வுக்கு பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது. அதனால் தான் தி.மு.க.வின் முப்பெரும் விழாவில் ஒரு பதற்றம் தெரிந்தது.
பா.ஜ.க அடக்குமுறை செய்கிறது என தேவையில்லாத குற்றச்சாட்டை சுமத்துகிறார்கள்.
உங்கள் அமைச்சரவையில் உள்ள ஊழலை முதலில் பாருங்கள். செந்தில்பாலாஜி எத்தனை நாள் வெளியே இருக்க போகிறார் என்று பார்ப்போம்.
2026 தேர்தலில் எங்கள் கூட்டணி வெற்றி பெற்று பலமாக ஆட்சி அமைப்போம். தி.மு.க.வின் முப்பெரும் விழாவில் ஏதாவது மக்கள் நலன் சார்ந்த விஷயங்களை பேசினார்களா. ஒன்றும் இல்லை.
இதுவரை தி.மு.க. குடும்பத்தில் உள்ளவர்களுக்கு பதவி கொடுத்து வந்தார்கள். இப்போது விருதையும் அவர்களே பெற்றுக் கொள்கிறார்கள். வாக்கு திருட்டு என காங்கிரஸ் கட்சி சொல்வதே ஒரு நகைச்சுவை தான்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பேட்டியின் போது, கோவை மாநகர் மாவட்ட பா.ஜ.க தலைவர் ரமேஷ்குமார் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
- 12-வது ஆண்டாக பிரதமர் மோடியின் பிறந்த நாளான இன்று காலை 6 மணி முதல் ஏழுமலை இலவசமாக டீ வழங்கி வருகிறார்.
- மாலை 6 மணி வரை வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக டீயை வழங்குகிறார்.
சென்னை:
பிரதமர் மோடியின் 75-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதை பா.ஜ.க.வினரும், அவரது தீவிர ஆதரவாளர்களும் வித்தியாசமான முறையில் கொண்டாடினார்கள்.
திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில் மெயின் ரோட்டில் டீ கடை நடத்தி வரும் ஏழுமலை என்பவர் பிரதமர் மோடியின் தீவிர ரசிகர் ஆவார். மோடி பிரதமரான 2-வது ஆண்டு முதல் அவரது பிறந்தநாள் அன்று ஏழுமலை தனது கடையில் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக டீ வழங்கி வருகிறார்.
12-வது ஆண்டாக பிரதமர் மோடியின் பிறந்த நாளான இன்று காலை 6 மணி முதல் ஏழுமலை இலவசமாக டீ வழங்கி வருகிறார். மாலை 6 மணி வரை அவர் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக டீயை வழங்குகிறார்.
இதற்கிடையே ஏழுமலையின் கடைக்கு இன்று காலை பா.ஜ.க. முன்னாள் தலைவரும், முன்னாள் கவர்னருமான தமிழிசை சவுந்தரராஜன், கராத்தே தியாகராஜன், ஏ.என்.எஸ். பிரசாத், மாவட்ட தலைவர் குமார் உள்ளிட்ட பா.ஜ.க.தா நிர்வாகிகள் சென்றனர். அவர்கள் ஏழுமலைக்கு பாராட்டு தெரிவித்து டீ குடித்தனர்.
மேலும் தமிழிசை சவுந்தரராஜன், டீ போட்டு கட்சி நிர்வாகிகளுக்கு வழங்கினார்.






