என் மலர்
தலைப்புச்செய்திகள்
- தெலுங்கில் தேசிய விருது பெற்ற இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் புதிய படம் பெத்தி.
- படத்தின் முதல் பார்வை க்ளிம்ஸ் வீடியோ சில மாதங்களுக்கு முன் வெளியானது.
தெலுங்கில் தேசிய விருது பெற்ற இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் புதிய படம் பெத்தி.
ராம் சரணுடன் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், ஜான்வி கபூர் ஆகியோர் நடிக்கும் இந்தப் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.
கிரிக்கெட்டை மையமாக வைத்து அதிக பொருட்செலவில் இப்படம் உருவாகி வருகிறது. சுகுமார் ரைட்டிங்ஸ், வ்ரிதி சினிமாஸ், மைத்ரி மூவி மேக்கர்ஸ் ஆகியவை இப்படத்தை இணைந்து தயாரிக்கின்றன.
படத்தின் முதல் பார்வை க்ளிம்ஸ் வீடியோ சில மாதங்களுக்கு முன் வெளியானது. திரைப்படம் அடுத்தாண்டு மார்ச் 27 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
படத்தில் ராம் சரணின் அம்மா கதாப்பாத்திரத்திற்கு லப்பர் பந்து புகழ் ஸ்வாசிகாவை படக்குழு அணுகியுள்ளது. ஆனால் சுவாசிகா அந்த கதாப்பாத்திரத்தில் நடிக்க முடியாது என மறுத்துள்ளார். இது குறித்து அவர் பேசும் போது ராம் சரணின் தாய் கதாப்பாத்திரத்தில் அதற்குள் நடிக்க என்ன அவசரம். எனக்கு அந்த கதாப்பாத்திரத்தில் நடிக்க வேண்டும் என தோணவில்லை." என கூறியுள்ளார்.
- ராகுல் காந்தி ஒரு தொடர் பொய்யர் என நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன்.
- அவர் இடைவிடாமல் தொடர்ந்து பொய்யை பரப்பி வருகிறார்.
பாஜக-வுக்கு எதிராக வாக்கு திருட்டு குற்றச்சாட்டை தொடர்ந்து கூறிவரும் ராகுல் காந்தி, தொடர் பொய்யர் என மகாராஷ்டிரா மாநில முதல்வர் பட்நாவிஸ் தாக்கியுள்ளார்.
இது தொடர்பாக பட்நாவிஸ் கூறியதாவது:-
ராகுல் காந்தி ஒரு தொடர் பொய்யர் என நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். அவர் இடைவிடாமல் தொடர்ந்து பொய்யை பரப்பி வருகிறார். மகாராஷ்டிராவில் உள்ள தலைவர்கள், ராகுல் காந்தி உண்மையைத்தான் பேசிக்கொண்டிருக்கிறார் என திடீரென உணர்வதை பார்ப்பதற்கு வேதனையாக இருக்கிறது. பொய்களால் கட்டிய கோட்டை இடிந்து விழுகிறது.
மக்களின் வாக்குகளை பெற, மக்களிடம் சென்று அவர்களின் நம்பிக்கையைப் பெற வேண்டும் என்பதை அவர்கள் உணராவிட்டால், அவர்களின் பொய்கள் தங்களைத் தாங்களே சமாதானப்படுத்திக் கொள்வதற்காக மட்டுமே.
இவ்வாறு பட்நாவிஸ் தெரிவித்தார்.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்றைய தினம் 20 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
- செப்டம்பர் 8-ந்தேதி முதல் சென்னை, அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியில் பொது அடிப்படைப் பயிற்சி வழங்கப்பட உள்ளது.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (திங்கட்கிழமை) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் துணை ஆட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட தொகுதி 1-ல் அடங்கிய பல்வேறு பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 89 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்றதில் இருந்து. கடந்த 4 ஆண்டுகளாக தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம், சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் ஆசிரியர் தேர்வு வாரியம் உள்ளிட்ட தேர்வு முகமைகள் வாயிலாக 79,940 நபர்களுக்கும் பல்வேறு அரசுத் துறைகளில் நேரடி நியமனம், உள்ளாட்சி அமைப்புகள், அரசுத் துறை நிறுவனங்கள் என பல்வேறு அமைப்புகளின் வாயிலாக 38,110 நபர்களுக்கும், என மொத்தம் 1,18,050 நபர்களுக்குப் பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
அதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தொகுதி-1-க்கான முக்கிய பணியிடங்களுக்கான பணிகளில் 15 துணை ஆட்சியர்கள், 23 காவல் துணை கண்காணிப்பாளர்கள், 14 உதவி ஆணையர்கள் (வணிக வரி), 21 கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர்கள், 14 உதவி இயக்குநர்கள் (ஊரக வளர்ச்சி), ஒரு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் மற்றும் ஒரு மாவட்ட அலுவலர் (தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள்) என மொத்தம் 89 பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்றைய தினம் 20 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
பணிநியமன ஆணைகளை பெற்றுக் கொண்டவர்கள், முதலமைச்சருக்கு மு.க.ஸ்டாலினுக்கு நன்றியினைத் தெரிவித்துக் கொண்டனர்.
அகில இந்திய பணிகள் மற்றும் ஒன்றிய அரசு பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு நடத்தப்படும் அடிப்படை பயிற்சியை போன்றே தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தொகுதி-1-ல் அடங்கிய பல்வேறு பணி யிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் அலுவலர்க ளுக்கும் பயிற்சி வழங்கப்பட வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியதன் பேரில், கடந்த ஆண்டு முதல், தொகுதி-I அலுவலர்க ளுக்கு பொது அடிப்படை பயிற்சி ஆரம்பிக்கப்பட்டு, தற்போது பணி நியமனம் வழங்கப்பட்டுள்ள 89 தொகுதி-1 அலுவலர்க ளுக்கு வருகிற செப்டம்பர் 8-ந்தேதி முதல் சென்னை, அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியில் பொது அடிப்படைப் பயிற்சி வழங்கப்பட உள்ளது.
இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் கயல்விழி செல்வராஜ், தலைமைச் செயலாளர் முருகானந்தம் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- ஒப்போ F31 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் 80W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் பெரிய பேட்டரிகளைக் கொண்டிருக்கும்.
- ஒப்போ F31 ப்ரோ ஸ்மார்ட்போன் மீடியாடெக் டிமென்சிட்டி 7300 பிராசஸரை பெறலாம்.
மார்ச் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட ஒப்போ F29 சீரிசின் வரிசையில் ஒப்போ F31 சீரிஸ் தயாரிப்பில் இருப்பதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகின. இப்போது இந்த சீரிசில் உள்ள இரண்டு ஸ்மாரட்போன்கள்: ஒப்போ F31 மற்றும் ஒப்போ F31 ப்ரோ ஆகியவற்றின் வெளியீடு மற்றும் முக்கிய அம்சங்கள் வெளியாகி உள்ளது.
அதன்படி இவை இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களிலும் மீடியாடெக் டிமென்சிட்டி சிப்செட்களுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒப்போ F31 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் 80W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் பெரிய பேட்டரிகளைக் கொண்டிருக்கும்.
இந்திய சந்தையில் புதிய ஒப்போ F31 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் வருகிற செப்டம்பர் 12 முதல் 14-ம் தேதிகளுக்குள் அறிமுகம் செய்யப்படலாம். சூழலைப் பொறுத்தவரை, தற்போதைய ஒப்போ F29 சீரிஸ் மார்ச் 20-ம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. வரவிருக்கும் சீரிசில் ஒப்போ F31, ஒப்போ F31 ப்ரோ மற்றும் ஒப்போ F31 ப்ரோ பிளஸ் ஆகிய மூன்று மாடல்கள் இடம்பெற்றிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவற்றில் ஒப்போ F31 ஸ்மார்ட்போன் மீடியாடெக் டிமென்சிட்டி 6300 சிப்செட் மூலம் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒப்போ F31 ப்ரோ ஸ்மார்ட்போன் மீடியாடெக் டிமென்சிட்டி 7300 பிராசஸரை பெறலாம்.
இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் 7,000mAh பேட்டரிகள் பொருத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அவை 80W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும்.
- நடிகர் ரவி மோகன் தற்போது பராசக்தி மற்றும் கராத்தே பாபு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
- ரவி மோகன் ஸ்டூடியோஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்க இருக்கிறார்.
நடிகர் ரவி மோகன் தற்போது பராசக்தி மற்றும் கராத்தே பாபு திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் இவர் ரவி மோகன் ஸ்டூடியோஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்க இருக்கிறார். அதற்கான பணிகளில் தற்போது ஈடுப்பட்டு வருகிறார்.
மேலும் தற்போது ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள சொகுசு பன்க்களாவுக்கு கடந்த 10 மாதமாக EMI கட்டாமல் உள்ளார் என்ற செய்தி வந்தது. இந்நிலையில் ரவி மோகன் மற்றும் கெனிஷா அவர்கள் இருவரும் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வழிப்பட்டனட். இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
- கெரில்லா 450 பைக்கில் 43 மில்லிமீட்டர் டெலிஸ்கோபிக் முன்புற ஃபோர்க்குகள் உள்ளன.
- பாதுகாப்பை மேம்படுத்த, டூயல் சேனல் ABS வழங்கப்படுகிறது.
ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தனது கெரில்லா 450 பைக்கில் புதிய நிற ஆப்ஷனை சேர்த்துள்ளது. ஷேடோ ஆஷ் என அழைக்கப்படும் புதிய நிறத்துடன் இந்த மோட்டார்சைக்கிள் புனேவில் நடந்த தபஸ்வி ரேசிங்குடன் இணைந்து GRRR நைட்ஸ் X அண்டர்கிரவுண்ட் நிகழ்வில் வெளியிடப்பட்டது. இந்த டூயல்-டோன் நிற ஆப்ஷன் கொண்ட பைக்கின் விலை ரூ.2.49 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
புதிய நிறத்தில் ஆலிவ் கிரீன் நிற டேங்க் உள்ளது. இது கருப்பு நிற டீ-டெயிலிங்குடன் இணைகிறது. இதைத் தவிர, இந்த பைக் பிராவா புளூ, எல்லோ ரிப்பன், கோல்ட் டிப், பிளேயா பிளாக், பீக்ஸ் ப்ரான்ஸ் மற்றும் ஸ்மோக் சில்வர் போன்ற நிறங்களில் கிடைக்கிறது.

இந்த பைக் இன்னும் ரூ.2.39 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்குகிறது. இது அதே பவர்டிரெய்னையும் கொண்டுள்ளது. இது ஹிமாலயன் மாடலில் பயன்படுத்தப்படும் அதே லிக்விட்-கூல்டு 452 சிசி 'ஷெர்பா 450' எஞ்சினுடன் பொருத்தப்பட்டுள்ளது. கெரில்லா 450 மாடலில், இந்த யூனிட் 8,000 ஆர்பிஎம்மில் 40 ஹெச்பி பவர் மற்றும் 5,500 ஆர்பிஎம்மில் 40 நியூட்டன் மீட்டர் டார்க் உற்பத்தி செய்கிறது.
கெரில்லா 450 பைக்கில் 43 மில்லிமீட்டர் டெலிஸ்கோபிக் முன்புற ஃபோர்க்குகள் உள்ளன. பிரேக்கிங்கிற்காக, முன்புறத்தில் 310 மில்லிமீட்டர் வென்டிலேட்டெட் டிஸ்க் மற்றும் பின்புறத்தில் 270 மில்லிமீட்டர் ஒற்றை டிஸ்க் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. பாதுகாப்பை மேம்படுத்த, டூயல் சேனல் ABS வழங்கப்படுகிறது.
- லெபனான் ஐந்து மலைப் பகுதிகளை இஸ்ரேல் தன் கைவசம் வைத்துள்ளது.
- ஹிஸ்புல்லாவை ஆயுதமில்லாத நிராயுதபாணியாக்க லெபனான் அமைச்சரவை ஒப்புதல்.
காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதற்கு லெபனானில் உள்ள ஆயுதமேந்திய குழு இஸ்ரேலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தது. அத்துடன் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. இதனால் லெபனான் எல்லையில் இஸ்ரேல் ராணுவத்தை குவித்துள்ளது. ஹிஸ்புல்லாவை குறிவைத்து லெபனான் மீது இஸ்ரேல் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் லெபனானை சேர்ந்த பலன் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில்தான் இந்த மாதம் தொடக்கத்தில் ஹிஸ்புல்லாவை ஆயுதம் இல்லாத குழுவாக்க லெபனான் அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இந்த நடவடிக்கையை லெபனான் ராணுவம் மேற்கொள்ள வேண்டும் ஒப்புதல் வழங்கியுள்ளது.
ராணுவம் ஹிஸ்புல்லாவின் ஆயுதங்களை பறிமுதல் செய்து வருகிறது. இந்த நிலையில் லெபனான் அமைச்சரவை முடிவை இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு வரவேற்றுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில் ஹிஸ்புல்லா ஆயுதங்களை ஏந்தவில்லை என்றால், இஸ்ரேல் ராணுவம் லெபனானில் இருந்து வெளியேறும் எனத் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் லெபனானில் உள்ள ஐந்து மலைப் பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- 8 இன்ச் டச்-ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன் மற்றும் முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் வழங்கப்பட்டு இருக்கிறது.
- 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
ரெனால்ட் நிறுவனம் புதுப்பிக்கப்பட்ட கைகர் மாடல் காரை இந்திய சந்தையில் ரூ.6.29 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் அறிமுகம் செய்துள்ளது. இத்துடன் சற்றே சக்திவாய்ந்த டர்போ வேரியண்ட் ரூ.9.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டிரைபர் ஃபேஸ்லிஃப்ட் அறிமுகத்தைத் தொடர்ந்து எஸ்யூவியின் சமீபத்திய மாடல் வருகிறது.
இந்திய சந்தையில் மிகவும் மலிவு விலையில் கிடைக்கும் எஸ்யூவிகளில் ஒன்று கைகர். தோற்றத்தில் தொடங்கி, ரெனால்ட் கைகர் ஃபேஸ்லிஃப்ட் அதன் முந்தைய மாடலை விட சிறிதளவு மாற்றங்களுடன் வருகிறது. இது இப்போது மெலிதான கிரில்லைச் சுற்றி டி.ஆர்.எல்.களுக்கான நேர்த்தியான வடிவமைப்புடன் வித்தியாசமான கவர்ச்சியை வழங்குகிறது.
மையத்தில் நிறுவனத்தின் புதிய லோகோ இடம்பெற்றிருக்கிறது. மேலும், ஃபாக் லேம்ப்-களுடன் புதிதாக வடிவமைக்கப்பட்ட பம்பருடன், ஹெட்லேம்ப் ஹவுசிங்கின் வடிவமைப்பு மாற்றப்பட்டுள்ளது. இதற்கிடையில், 16 இன்ச் அலாய் வீல்களுக்கான புதிய வடிவமைப்புடன் வாகனத்தின் ஒட்டுமொத்த தோற்றம் அப்படியே உள்ளது. இவை அனைத்தும் ஒரு புதிய பச்சை நிற ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது.
உட்புறத்தில், புதுப்பிக்கப்பட்ட எஸ்யூவி கிட்டத்தட்ட அதே அமைப்பைப் பெறுகிறது. எனினும், டேஷ்போர்டில் பிளாக் மற்றும் கிரே நிறங்களைக் கொண்ட புதிய டூயல்-டோன் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. கவனத்தை ஈர்க்கும் மற்றொரு விஷயமாக, 8 இன்ச் டச்-ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன் மற்றும் முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்த எஸ்யூவி-க்கான அம்சங்களின் பட்டியலில் வென்டிலேட் செய்யப்பட்ட முன் இருக்கைகள், 360-டிகிரி கேமரா, ஆட்டோ விளக்குகள் மற்றும் வைப்பர்கள், வயர்லெஸ் சார்ஜர் மற்றும் பல உள்ளன. பயணிகளின் பாதுகாப்பிற்காக, இந்த எஸ்யூவி-இல் ஆறு ஏர்பேக்குகள் தரநிலையாக, ESP, டயர் பிரஷர் மானிட்டர், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் மற்றும் பல போன்ற அம்சங்களைப் பெறுகிறது.
புதிய ரெனால்ட் கைகர் ஃபேஸ்லிஃப்ட் இப்போது 72 ஹெச்பி பவர் வெளிப்படுத்தும் 1.0 லிட்டர் நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் எஞ்சின் மற்றும் 100 ஹெச்பி பவர் வெளிப்படுத்தும் 1.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷன்களை வழங்குகிறது. இவற்றுடன் 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் எஞ்சின் AMT உடன் கிடைக்கிறது, அதே நேரத்தில் டர்போ-பெட்ரோல் எஞ்சின் CVT ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷனுடன் வழங்கப்படுகிறது.
- பள்ளிகள் மூடப்பட்டதாக தகவல்கள் வருகிறதே தவிர புதிய மாணவர் சேர்க்கை குறித்த தகவல்கள் வரப்படவில்லை.
- ஒவ்வொரு மாவட்டங்களிலும் ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
பாளையங்கோட்டை நேருஜி கலையரங்கத்தில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நெல்லை மாவட்ட அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுடன் அடைவு தேர்வு தொடர்பாக நடத்திய ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.
முன்னதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களிடம் கூறியதாவது:-
பள்ளி கல்வித்துறை சார்ந்த ஆய்வு கூட்டம் 23-வது மாவட்டமாக இங்கு தலைமை ஆசிரியர்களை சந்தித்து நடத்தப்பட உள்ளது. மாணவர்களுக்கு என்னென்ன தேவை என்பது குறித்த ஆய்வுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ஒவ்வொரு மாவட்டங்களிலும் இந்த ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
தலைமை ஆசிரியர்கள் சிறப்பாக செயல்படும் இடங்களை கண்டறிந்து அவர்களிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டு மற்ற இடங்களில் செயல்படுத்துவது தொடர்பாக ஆய்வு கூட்டம் நடத்தப்படுகிறது. எந்த அரசாக இருந்தாலும் பள்ளிகளை மூடாது. மூடியதாக வரலாறும் கிடையாது.
கடந்த கல்வி ஆண்டில் இருந்து இந்த கல்வி ஆண்டு வரை உள்ள கணக்கீட்டில் புதியதாக 4 லட்சம் மாணவர்கள் அரசு பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். பள்ளிகள் மூடப்பட்டதாக தகவல்கள் வருகிறதே தவிர புதிய மாணவர் சேர்க்கை குறித்த தகவல்கள் வரப்படவில்லை.
மூடப்பட்ட 207 பள்ளிகளின் காரணங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 5 வயதிற்கு மேற்பட்ட மாணவர்கள் எங்கெல்லாம் இருக்கிறார்களோ அவர்களை ஆசிரியர்கள் கண்டறிந்து ஈ-ரெஜிஸ்டர் பதிவேட்டில் இணைக்கப்பட்டு பள்ளிகளில் சேர்த்து வருகிறோம்.
உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கைப்படி 2015-16-ல் இருந்து உலகம் முழுவதும் பிறப்பு விகிதம் குறைந்துள்ளது. கொரோனா காலத்தில் வாழ்வாதாரத்திற்காக இடம் விட்டு இடம்பெயர்ந்தவர்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் கணக்கி டப்பட்டுள்ளது.
மூடப்பட்ட பள்ளிகள் இருக்கும் ஒவ்வொரு கிராமத்திலும் பள்ளியில் படிக்கும் வயதில் உள்ள மாணவர்களை பள்ளியில் படிக்க சேர்ப்பதற்கான அனைத்து பணிகளையும் அதிகாரிகளும், ஆசிரியர்களும் மேற்கொண்டு வருகின்றனர்.
பி.எம்.ஸ்ரீ பள்ளிகளில் இருக்கும் மாணவர்களிடம் மத்திய அமைச்சர் அவரது நம்பிக்கை சார்ந்து பேசி உள்ளார். அவரது நம்பிக்கை சார்ந்து பேசியது அவரது இஷ்டம். அது குறித்து கருத்து சொல்ல முன்வரவில்லை.
அறிவியல் சார்ந்து முற்போக்கு சிந்தனையோடு தந்தை பெரியார் வழியில் பள்ளிக்கல்வித்துறை தமிழக முதலமைச்சர் வழி காட்டுதலோடு செயல்பட்டு வருகிறது. அறிவை சார்ந்து இருக்கும் பாதையில் நாங்கள் செல்லும்போது எங்களோடு சேர்ந்து பயணிக்க ஆசைப்படுபவர்கள் எங்களோடு வரலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அமெரிக்காவை தவிர மற்ற நாடுகளுக்கு பார்சல் சேவை நடந்தது.
- சனிக்கிழமை வரை பதிவு செய்த பார்சல்கள் 29-ந்தேதிக்கு முன்னதாக சென்று விடும்.
சென்னை:
அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற பிறகு இந்தியாவிற்கு பொருளாதார ரீதியாக பல்வேறு சிரமங்களை கொடுத்து வருகிறார். இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு செல்லும் பொருட்களுக்கு50 சதவீத வரி விதித்துள்ளார். இதனால் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யக்கூடிய இந்திய பொருட்கள் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் 100 அமெரிக்க டாலர்களுக்கு மேலான இந்திய பொருட்களுக்கு வருகிற 29-ந்தேதி முதல் அமெரிக்காவில் சுங்க வரி விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
அமெரிக்காவுக்கு அனுப்பப்படும் சுமார் ரூ.70 ஆயிரம் (800 டாலர்) வரையிலான பொருட்களுக்கு வழங்கப்பட்டு வந்த வரி விலக்கு ரத்து செய்யப்பட்டது. மேலும் 29-ந்தேதி முதல் அனைத்து தபால் பொருட்களுக்கும் அதன் மதிப்புக்கு ஏற்றவாறு கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் சுமார் 9 ஆயிரம் மதிப்புள்ள (100 டாலர்) பொருட்களுக்கு மட்டுமே வரி விலக்கு அளிக்கப்படும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. இந்த புதிய வரி விதிப்பால் இந்தியா அதிர்ச்சி அடைந்துள்ளது.
அமெரிக்க விமானங்களில் இந்திய பார்சல்களை அனுமதிக்க கூடாது என்று சுங்கத்துறை அறிவித்தது. அமெரிக்காவின் சுங்கத்துறையால் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் தெளிவான விவரங்கள் இல்லாததால் நாடு முழுவதும் இன்று முதல் பார்சல் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளது.
இந்திய தபால் துறை இந்த அறிவிப்பை நேற்று முன்தினம் வெளியிட்டது. இதைத் தொடர்ந்து நாடு முழுவதும் தபால் நிலையங்களில் அமெரிக்காவுக்கு பார்சல் புக்கிங் செய்வது நிறுத்தப்பட்டது.
இதனால் அமெரிக்காவில் வசிக்கும் இந்திய குடும்பங்களின் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். அமெரிக்காவை தவிர மற்ற நாடுகளுக்கு பார்சல் சேவை நடந்தது. ஆனால் அமெரிக்காவில் உள்ள எந்த நகரங்களுக்கும் தமிழகத்தில் பார்சல் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.
தமிழக முழுவதும் உள்ள 2000 தபால் அலுவலகங்களில் வெளிநாடுகளுக்கு பார்சல் பதிவு செய்வது வழக்கம். சென்னையில் அண்ணாசாலையில் உள்ள தலைமை தபால் அலுவலகம், கடற்கரை தபால் அலுவலகம் உள்ளிட்ட அனைத்து அலுவலங்களிலும் அமெரிக்காவுக்கு பார்சல் பதிவு செய்வது நிறுத்தப்பட்டது.
இது குறித்து சென்னை அண்ணாசாலையில் உள்ள தலைமை தபால் அதிகாரி கூறியதாவது:-
தமிழகத்தில் அஞ்சல் துறைக்கு சொந்தமான 200 தபால் அலுவலகங்கள் உள்ளன. அந்த அலுவலகங்களில் எல்லாம் இன்று முதல் அமெரிக்காவுக்கு மட்டும் பார்சல் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவிடம் இந்திய அரசு தெளிவான தகவல்களைப் பெற்று கூடுதலாக வரி விதிப்பு பற்றிய முழு விவரங்கள் குறித்து அறிவிப்பு வெளியிடுவார்கள். மத்திய அரசிடம் இருந்து இது பற்றிய தகவல் வந்த பிறகுதான் பார்சல் சேவை தொடங்கும். அதுவரையில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
மற்ற நாடுகளுக்கு பார்சல் சேவை வழக்கம் போல் நடைபெற்று வருகிறது. அமெரிக்காவுக்கு மட்டுமே சேவை நிறுத்தப்பட்டு இருப்பதால் சனிக்கிழமை வரை பதிவு செய்த பார்சல்கள் 29-ந்தேதிக்கு முன்னதாக சென்று விடும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பார்சல் சேவை அமெரிக்காவுக்கு நிறுத்தப்பட்டதால் அமெரிக்காவில் வசிக்கும் தமிழகத்தைச் சேர்ந்த குடும்பத்தினர் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். பொதுவாக தமிழகத்தில் இருந்து மளிகை பொருட்கள், துணிமணிகள், தின்பண்டங்களை உறவினர்கள் அனுப்புவது வழக்கம். அதிகபட்சமாக 20 கிலோ பார்சல் வரை அனுப்புவதற்கு அனுமதி உண்டு.
அமெரிக்காவிற்கு 20 கிலோ பார்சல் அனுப்புவதற்கு ரூ.17,440 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சாதாரண பார்சல் ஆகவும், ஸ்பீட் போஸ்ட் பார்சல் ஆகவும் ரெண்டு பிரிவாக பதிவு செய்யப்படுகிறது.
இந்திய தபால் துறையிடமிருந்து அடுத்த கட்ட தகவல் வரும் வரை இந்த நடவடிக்கை தொடரும். இதனால் சென்னை, கோவை, மதுரை, சேலம் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து அமெரிக்காவுக்கு பார்சல் அனுப்ப முடியாமல் உறவினர்கள் தவிப்புக்கு ஆளாகி இருக்கிறார்கள்.
- அரசியல் கட்சிகளின் கொடிக் கம்பங்களை அகற்ற வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
தமிழகம் முழுவதும் பொது இடங்கள், மாநில, தேசிய நெடுஞ்சாலைகள், உள்ளாட்சிக்கு சொந்தமான இடங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டு உள்ள அரசியல் கட்சிகள், சாதி, மத அமைப்புகள் மற்றும் சங்கங்களின் கொடிக் கம்பங்களை அகற்ற வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் கடந்த ஜனவரி மாதம் 27-ந்தேதி உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் சார்பில் தங்கள் கட்சி கொடியை அகற்றுவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று மேல்முறையீடு மனு தாக்கல் செய்து இருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், சவுந்தர், விஜயகுமார் ஆகியோர் அடங்கிய அமர்வு தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்து தீர்ப்பளித்தது.
இந்நிலையில், தமிழகத்தில் கொடிக் கம்பங்களை அகற்ற வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்த நிலையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், மேல்முறையீட்டு மனு தொடர்பாக பதில் அளிக்க தமிழ்நாடு அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
- நடிகர் ரவி மோகன் தற்போது பராசக்தி மற்றும் கராத்தே பாபு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
- ரவி மோகன் ஸ்டூடியோஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்க இருக்கிறார்.
நடிகர் ரவி மோகன் தற்போது பராசக்தி மற்றும் கராத்தே பாபு திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் இவர் ரவி மோகன் ஸ்டூடியோஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்க இருக்கிறார். அதற்கான பணிகளில் தற்போது ஈடுப்பட்டு வருகிறார்.
மேலும் தற்போது ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள சொகுசு பன்க்களாவுக்கு கடந்த 10 மாதமாக EMI கட்டாமல் உள்ளார் என்ற செய்தி வந்துள்ளது. ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியுடன் வாழ்ந்து வந்தது அந்த பங்களாவில் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
EMI கட்டாததால் பங்களாவை ஜப்தி செய்ய வங்கி நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் விடப்பட்டது. ஆனால் அதனை வாங்க ரவி மோகன் தரப்பு மறுத்ததாக கூறப்படுகிறது. மேலும் இவர் மீது படத்திற்கு ஒப்பந்தம் செய்து 6 கோடி ரூபாய் முன் பணம் வாங்கியும் படத்திற்கு நடிக்க வராமல் கால் ஷீட் கொடுக்காமல் இருக்கிறார் என அந்த தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.






