என் மலர்
தமிழ்நாடு செய்திகள்
- 3 மணி நேரத்தில் புயல் வலுவிழக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
- மழை குறைந்த பிறகு வெள்ள பாதிப்புகள் குறித்து கணக்கெடுப்பு தொடங்கும்.
டிட்வா புயல் குறித்து அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
3 மணி நேரத்தில் புயல் வலுவிழக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
மழை குறைந்த பிறகு வெள்ள பாதிப்புகள் குறித்து கணக்கெடுப்பு தொடங்கும்.
டிட்வா புயல் பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தன்னிடம் கேட்டறிந்தார்.
தமிழகத்தில் மதியம் 12 மணிக்கு பிறகு பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்யவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- திண்டுக்கல் சென்ற பேருந்தும் காரைக்குடி நோக்கி சென்ற பேருந்தும் மோதி விபத்துக்குள்ளானது.
- காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 9 பெண்கள் உள்பட 11 பேர் உயிரிழந்துள்ளனர். காரைக்குடியில் இருந்து திண்டுக்கல், திருப்பூரிலிருந்து காரைக்குடி நோக்கி சென்ற அரசு பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளானது.
பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்த 40-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், விபத்தில் சிக்கி காயமடைந்தவர்கள் 3 அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளனர்.
மேலும் அவர்," 19 ஆம்புலன்ஸ்களில் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்தில் காயமடைந்தவர்கள் காரைக்குடி, திருப்பத்தூர், சிவகங்கை மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. பலத்த காயமடைந்தவர்கள் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.
சிவகங்கை அரசு மருத்துவமனைகளுக்கு கூடுதல் மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்" என்றார்.
- திண்டுக்கல் சென்ற பேருந்தும் காரைக்குடி நோக்கி சென்ற பேருந்தும் மோதி விபத்துக்குள்ளானது.
- காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.
திண்டுக்கல் சென்ற பேருந்தும் காரைக்குடி நோக்கி சென்ற பேருந்தும் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் சிக்கி இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 40 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. பலர் மோசமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால், பலி எண்ணிக்கை உயரும் அச்சம் ஏற்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களில் ௯ பேர் பெண்கள் என தெரியவந்துள்ளது.
விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு குழு, காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்காக 8 ஆம்புலன்ஸ்கள் வரழைக்கப்பட்டு மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
- டிட்வா புயல் 7 கி.மீ வேகத்தில் நகர்ந்து வந்த நிலையில் தற்போது மணிக்கு 5 கி.மீ வேகத்தில் நகர்கிறது.
- டாப்ளர் வானிலை ரேடர்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு- புதுச்சேரி கடற்கரைகளுக்கு இணையாக கிட்டத்தட்ட வடக்கு நோக்கி நகரும் டிட்வா புயல், அடுத்த மூன்று மணி நேரத்தில் ஆழந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் நிலவும் டிட்வா புயல் 7 கி.மீ வேகத்தில் நகர்ந்து வந்த நிலையில் தற்போது மணிக்கு 5 கி.மீ வேகத்தில் நகர்கிறது.
சென்னையில் இருந்து 150 கி.மீ தொலைவில் டிட்வா புயல் மையம் கொண்டுள்ளது. வேதாரண்யத்தில் இருந்து 170 கி.மீ தொலைவிலும், கடலூருக்கு 90, காரைக்காலுக்கு 120, புதுவைக்கு 90 கி.மீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.
மேலும்,டிட்வா புயலின் நகர்வை காரைக்கால் மற்றும் சென்னையில் உள்ள டாப்ளர் வானிலை ரேடர்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
- இந்தியாவில் வாக்காளர்களை பாதுகாக்க பணியாற்றும் ஒரே சட்சி திமுக தான்.
- எந்த ஒரு விஷயத்தையும் தேர்தல் ஆணையம் வெளிப்படையாக தெரிவிப்பதில்லை.
எஸ்ஐஆர் படிவங்களுக்கான காலக்கெடு நீட்டிப்பு திமுகவிற்கு கிடைத்த வெற்றி என திமுக எம்.பி. என்.ஆர்.இளங்கோ தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது:-
எஸ்ஐஆர் பணிகள் இன்னும் சிக்கல்கள் நிறைந்ததாகவே இருக்கிறது, அவை தீர்க்கப்படவில்லை.
இந்தியாவில் வாக்காளர்களை பாதுகாக்க பணியாற்றும் ஒரே சட்சி திமுக தான்.
எந்த ஒரு விஷயத்தையும் தேர்தல் ஆணையம் வெளிப்படையாக தெரிவிப்பதில்லை.
எஸ்ஐஆர் விவகாரத்தில் அரசியல் காரணங்களுக்காக திமுக மீது அதிமுக குற்றம்சாட்டுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஆளுநர்கள் மாநாட்டில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று மத்திய அரசு ஒப்புதல்.
- சிந்தனையிலும் செயலிலும் மாற்றம் இல்லையெனில், இதுவும் தேவையற்றதே!
மாநிலங்களில் உள்ள ராஜ் பவன்கள் இனி லோக் பவன் என்று அழைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
கடந்த 2024 ஆளுநர்கள் மாநாட்டில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று இந்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-
பெயர் மாற்றத்தைவிடச் சிந்தனை மாற்றமே தேவை!
சட்டமன்றம் = மக்கள் மன்றம்! சட்டமன்றத்தை மதிக்காதவர்கள், "மக்கள் மாளிகை" எனப் பெயர் மாற்றுவது கண் துடைப்பா? மக்களாட்சித் தத்துவத்தின் கண்களில் மண்ணைத் தூவுவதற்கா?
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளையும், மக்களின் விருப்பத்தை நிறைவேற்ற இறையாண்மையுள்ள சட்டமன்றத்தையும் மதிப்பதுதான் இப்போதைய தேவை!
சிந்தனையிலும் செயலிலும் மாற்றம் இல்லையெனில், இதுவும் தேவையற்றதே!
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- புதுவை கடற்கரை பகுதியில் வடக்கு நோக்கி நகர வாய்ப்பு.
- வேதாரண்யத்தில் இருந்து 150 கி.மீ தொலைவில் மையம்.
வங்கக்கடலில் நிலவும் டிட்வா புயல் 12 கி.மீ வேகத்தில் நகர்ந்து வந்த நிலையில் தற்போது 7 கி.மீ வேகத்தில நகர்ந்து வருகிறது. வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள டிட்வா புயலின் வேகம் 6 மணிநேரத்தில் 7 கி.மீ ஆக குறைந்து நகர்ந்து வருகிறது.
டிட்வா புயல் 24 மணிநேரத்தில் வடதமிழ்நாடு, புதுவை கடற்கரை பகுதியில் வடக்கு நோக்கி நகர வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புயல் வடக்கு நோக்கி நகரும்போது தமிழ்நாடு- புதுவை கடற்கரையில் குறைந்தது 30 கி.மீ தூரத்தில் மையம் கொண்டிருக்கும். தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் டிட்வா புயல் சென்னையில் இருந்து 170 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது.
வேதாரண்யத்தில் இருந்து 150 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடலூருக்கு 100, காரைக்காலுக்கு 110, புதுவைக்கு 100, புதுவைக்கு 100 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது.
- திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
- சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் டிட்வா புயல் மீண்டும் வேகமெடுக்கத் தொடங்கியது. மணிக்கு 7 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வந்த புயல் தற்போது 12 கி.மீ. வேகத்தில் நகர்கிறது. சென்னையின் தெற்கு-தென்கிழக்கு பகுதியில் 180 கி.மீ. தூரத்தில் டிட்வா புயல் உள்ளது.
தமிழ்நாட்டில் திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழ்நாட்டில் திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
டிட்வா புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை ஆகிய 7 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதியில் தரைக்காற்று 60 - 70 கி.மீ. வேகத்திலும் அதிகபட்சமாக 80 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- டிட்வா புயல் காரணமாக நமது அண்டை நாடான இலங்கை பேரழிவைச் சந்தித்துள்ளது.
- ஒன்றிய அரசுடன் இணைந்து செயல்பட அதிகாரிகள் குழுவை அமைத்திடத் தலைமைச் செயலாளருக்கு அறிவுறுத்தியுள்ளேன்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
டிட்வா புயல் காரணமாக நமது அண்டை நாடான இலங்கை பேரழிவைச் சந்தித்துள்ளது. நூற்றுக்கும் மேற்பட்டோர் இறந்தும் பல இடங்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியும் இலங்கை மக்கள் அவதியுறுகின்றனர். இந்த இயற்கைச் சீற்றத்தில் இறந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, இலங்கை மக்களின் இப்பெருந்துயரில் தமிழ்நாடும் தமிழ்நாட்டு மக்களும் பங்கெடுக்கிறோம்.
இலங்கையில் சிக்கித் தவிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பயணிகளை மீட்க அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை சார்பில் நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு, இன்று காலை 11:05 மணியளவில் முதற்கட்டமாக 177 பேர் (ஆண்கள் 113, பெண்கள் 60, குழந்தைகள் 4) தமிழ்நாட்டிற்குத் திரும்ப அழைத்து வரப்பட்டுள்ளனர்.
டிட்வா புயல் காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு ஒன்றிய அரசின் மூலம் உணவுப் பொருட்கள் மருந்துப் பொருட்கள் உள்ளிட்டவற்றைத் தந்து, அவர்கள் மீண்டெழுந்திட உதவிக்கரம் நீட்டிடத் தமிழ்நாடு அரசு தயாராக இருக்கிறது.
இதற்காக ஒன்றிய அரசுடன் இணைந்து செயல்பட அதிகாரிகள் குழுவை அமைத்திடத் தலைமைச் செயலாளருக்கு அறிவுறுத்தியுள்ளேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- வடிகால்கள் தூர்வாரப்பட்டு, மழைநீர் எளிதாக வடிவதற்குத் தற்காலிக கால்வாய்கள் வெட்டப்பட்டு உள்ளன.
- சென்னை சென்ட்ரலில் தானே இயங்கும் விபத்து நிவாரண ரெயில் தயார் நிலையில் உள்ளன.
சென்னை:
'டிட்வா' புயலைக் கருத்தில் கொண்டு, பயணி கள் மற்றும் ரெயில்வே கட்டமைப்பின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகத் தெற்கு ரெயில்வேயின் சென்னை கோட்டம் விரிவான முன் எச்சரிக்கை நட வடிக்கைகளைத் தொடங்கி உள்ளது. இதற்காகக் கோட்ட அவசரகாலக் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.
சென்னை சென்ட்ரல், எழும்பூர், கடற்கரை, பெரம்பூர், ஆவடி, தாம்பரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை மற்றும் சூலூர்பேட்டை உள்ளிட்ட முக்கிய ரெயில் நிலையங்கள், பாலங்கள், மதகுகள் மற்றும் தண்ணீர் தேங்கக்கூடிய தாழ்வான பகுதிகளை உயர் அதிகாரிகள் ஆய்வு செய்து உள்ளனர்.
வடிகால்கள் தூர்வாரப்பட்டு, மழைநீர் எளிதாக வடிவதற்குத் தற்காலிக கால்வாய்கள் வெட்டப்பட்டு உள்ளன.
அனைத்து அதிகாரிகளும் தங்களது தலைமையகத்தில் இருக்கவும், குறுகிய அறிவிப்பில் பணிக்குச் செல்லவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
எந்தவொரு அவசர நிலையையும் சமாளிக்க, சென்னை சென்ட்ரல், செங்கல்பட்டு மற்றும் ஜோலார்பேட்டையில் விபத்து நிவாரண ரெயில்கள் மற்றும் சென்னை சென்ட்ரலில் தானே இயங்கும் விபத்து நிவாரண ரெயில் ஆகியவை தயார் நிலையில் உள்ளன.
மின் இணைப்புகளைச் சரிசெய்யப் பணியாளர்களுடன் கூடிய 'டவர் வேகன்கள்' மற்றும் அவசரத் தேவைக்காக டீசல் என்ஜின்கள் முக்கிய இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. குறைந்தது 72 மணி நேரத்திற்குத் தேவையான டீசல் இருப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
உயிர் சேதத்தைத் தடுப்பதே எங்களின் முதல் முன்னுரிமை என்று, சென்னை கோட்ட ரெயில்வே மேலாளர் சைலேந்திர சிங் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு கருதி தேவைப்பட்டால் சில பகுதிகளில் ரெயில் சேவைகள் நிறுத்தப்படலாம் என்றும் அவர் கூறினார்.
மேற்கண்ட தகவலை தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
- இருளர் குடும்பத்தினர் கோவளம் சாலையில் உள்ள மண்டபத்தில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
- மாமல்லபுரம் வந்த சுற்றுலா பயணிகள் ஓட்டல், ரிசார்ட், விடுதிகள் முடங்கினர்.
மாமல்லபுரம்:
வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள "டிட்வா" புயலின் தாக்கத்தால் நேற்று மாலை மாமல்லபுரத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்ய தொடங்கியது. தொடர்ந்து இரவு முழுவதும் காற்றுடன் மழை பெய்தது. இன்றும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மீனவர்கள் தங்களது படகுகள், மிஷின், வலைகளை பாதுகாப்பான இடங்களில் வைத்துள்ளனர்.
கடலின் சீற்றம் அதிகமாக காணப்படுவதால் மாமல்லபுரம் கடற்கரைக் கோவில் தென்பகுதி, பட்டிப்புலம் பகுதிகளில் கடற்கரை கரையோரம் குடில் அமைத்து தங்கியிருந்த இருளர் 120 குடும்பங்கள் பாதுகாப்பு இன்றி இருப்பதாக தகவலறிந்த, மாவட்ட கலெக்டர் சினேகா அவர்களை பாதுகாக்க உத்தரவிட்டார்.
சப்-கலெக்டர் மாலதி ஹலென் தலைமையில் திருப்போரூர் தாசில்தார் சரவணன், திருக்கழுக்குன்றம் தாசில்தார் வாசுதேவன் உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் அவர்களை அங்கிருந்து, அப்புறப்படுத்தி கோவளம் சாலையில் உள்ள முத்தமிழ் மண்டபத்தில் பாதுகாப்பாக தங்க வைத்துள்ளனர். அவர்களுக்கு மாமல்லபுரம் நகராட்சி ஆணையர், தலைவர் வளர்மதி எஸ்வந்தராவ், துணைத்தலைவர் ராகவன் உள்ளிட்டோர் உணவுகள் வழங்கினர்.
மாமல்லபுரத்தில் ஞாயிறு, விடுமுறை நாட்களில் கூட்டம் அதிகளவில் காணப்படும். டிட்வா புயல் காரணமாக தொடர் மழை பெய்து வருவதால் மாமல்லபுரம் புராதன சின்னங்கள் பகுதிகளான கடற்கரை கோவில், அர்ச்சுனன் தபசு, ஐந்துரதம் பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டது.
மாமல்லபுரம் வந்த சுற்றுலா பயணிகள் ஓட்டல், ரிசார்ட், விடுதிகள் முடங்கினர். கடற்கரை சாலையோர கடைகள் மற்றும் அரசு கைவினை பொருட்கள் கடை இருக்கும் ஐந்துரதம் வளாகங்களில் உள்ள கடைகளும் வெறிச்சோடி காணப்பட்டது.
- உழவர்களுக்கு இழப்பீடு வழங்கும் விஷயத்தில் திமுக அரசு அடுத்தடுத்து செய்து வரும் துரோகங்கள் கண்டிக்கத்தக்கவை.
- காவிரி பாசன மாவட்டங்களின் உழவர்கள் பெரும் கடன் சுமைக்கு ஆளாகியுள்ளனர்.
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
டிட்வா புயல் காரணமாக காவிரி பாசன மாவட்டங்களில் கடந்த சில நாள்களாக கொட்டித் தீர்த்து வரும் மழையால் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. நன்றாக வளர்ந்து கதிர் வைக்கும் நிலையில் இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்திருப்பதால் உழவர்கள் கவலையும், வேதனையும் அடைந்துள்ளனர்.
பருவமழையில் பயிர்கள் சேதமடைவதால் பாதிக்கப்படும் உழவர்களுக்கு இழப்பீடு வழங்கும் விஷயத்தில் திமுக அரசு அடுத்தடுத்து செய்து வரும் துரோகங்கள் கண்டிக்கத்தக்கவை. திமுக ஆட்சிக்கு வந்து கடந்த நான்கரை ஆண்டுகளில் பல முறை பருவமழையால் உழவர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஒருமுறை கூட அவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படவில்லை; பல முறை அவர்களுக்கு இழப்பீடே வழங்கப்படவில்லை. ஏனோ அந்த அளவுக்கு உழவர்களை திமுக அரசு பழிவாங்கி வருகிறது.
கடந்த மாதம் வடகிழக்கு பருவமழையின் தொடக்கத்தில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரி பாசன மாவட்டங்களில் 2 லட்சம் ஏக்கருக்கும் கூடுதலான பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதமடைந்த நிலையில், அப்பயிர்களுக்கு இன்று வரை இழப்பீடு அறிவிக்கப்படவில்லை.
நடப்பாண்டின் நிலை இதுவென்றால், கடந்த ஆண்டின் நிலைமை இன்னும் மோசமாகும். காவிரி பாசன மாவட்டங்களில் ஒன்றான மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மற்றும் நடப்பாண்டு ஜனவரி மாதத்தில் பெய்த கனமழையில் ஒன்றரை லட்சம் ஏக்கருக்கும் கூடுதலான நெற்பயிர்கள் சேதமடைந்தன. மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை ஆய்வு செய்த அதிகாரிகள் மொத்தம் 1.05 லட்சம் ஏக்கர் பரப்பளவில் பயிர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அவற்றுக்கு ரூ.71.79 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அரசுக்கு பரிந்துரைத்த பிறகும் கூட பாதிக்கப்பட்ட உழவர்களுக்கு இன்னும் இழப்பீடு வழங்கப்படவில்லை.
கடந்த ஆண்டுகளில் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.39, ரூ.52, ரூ.90 என நிவாரணம் மற்றும் காப்பீட்டுத் தொகையை வாரி வழங்கிய பெருமை திமுக ஆட்சியாளர்களுக்கு உண்டு. தமிழ்நாடு கடுமையான வறட்சியைச் சந்தித்த காலத்தில் உழவர்களுக்கு ஏற்பட்ட இழப்புகளை விட இந்த திமுக ஆட்சியில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. அதனால் காவிரி பாசன மாவட்டங்களின் உழவர்கள் பெரும் கடன் சுமைக்கு ஆளாகியுள்ளனர். ஆனால், அதைப் பற்றி திமுக அரசு கொஞ்சமும் கவலைப்படவில்லை.
கடந்த ஆண்டுகளிலும், நடப்பு வடகிழக்கு பருவமழையின் தொடக்கத்திலும் நெற்பயிர்களுக்கு ஏற்பட்ட இழப்பை ஈடு செய்யாமல் உழவர்களை ஏமாற்றிய திமுக அரசு மீண்டும் ஒருமுறை துரோகம் செய்யக்கூடாது. டிட்வா புயல் - மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உடனடியாக இழப்பீடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






