என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    • தமிழ்நாடுதான் விஜய், விஜய்தான் தமிழ்நாடு!
    • தூயசக்தி தவெக-வுக்கும், தீய சக்தி திமுக-வுக்கும்தான் போர்!

    வேலூரில் நடைபெற்ற தவகெ கூட்டத்தில், திமுக-வையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையும் நேரடியாக தாக்கிப்பேசிய விஜய், உண்மையில் இந்த தேர்தல் எதுக்கான தேர்தல் என்று சொல்லட்டுமா..? எனக் கேள்வி எழுப்பி தொடர்ச்சியாக உரையாற்றினார்.

    இந்த தேர்தல் தமிழ்நாட்டு மக்களுக்கும் ஊழலுக்கும் நடக்கும் போர். தமிழ்நாட்டு மக்களுக்கும் லஞ்சத்துக்கும் நடக்கும் போர். தமிழ்நாட்டு மக்களுக்கும் சரியாக நிர்வாகம் செய்யத் தெரியாத திமுக-வுக்கும் நடக்கும் போர். அதாவது தமிழ்நாட்டு மக்களுக்கும் உங்க ஆட்சிக்கும் நடக்கும் போர். தமிழ்நாட்டு மக்களுக்கும் ஸ்டாலின் சாருக்கும் நடக்கும் போர். இன்னும் சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், விஜய்க்கும் ஸ்டாலின் சாருக்கும் நடக்கும் போர். இதற்கு நடுவில் டெல்லி, என்டிஏ.. போன்றவை என்ன லாஜிக் என்றே புரியவில்லை சார். தமிழ்நாடுதான் விஜய், விஜய்தான் தமிழ்நாடு. தூயசக்தி தவெக-வுக்கும், தீய சக்தி திமுக-வுக்கும் தான் இந்த போர் என்று தவெக தலைவர் விஜய் ஆக்ரோஷமாக பேசினார்.

    விஜய்யின் உரையை கேட்ட தவெக தொண்டர்கள், கைதட்டி ஆர்ப்பரித்தனர்.

    • தினமும் 3 ஆயிரத்து 588 பஸ்கள் 600-க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகிறது.
    • பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக தெற்கு ரெயில்வே பல்வேறு மாற்று ஏற்பாடுகளை செய்துள்ளது.

    சென்னை:

    சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் மறுசீரமைப்பு பணிகள் பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. தற்போது மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வந்த 10வது, 11வது நடைமேடையில் பணிகள் தொடங்கி இருப்பதால் கடந்த 20-ந்தேதியில் இருந்து 5 மற்றும் 6-வது நடைமேடையில் இருந்து மின்சார ரெயில்கள் இயக்கப்படுகிறது.

    இதன் காரணமாக சேவைகளும் கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக தெற்கு ரெயில்வே பல்வேறு மாற்று ஏற்பாடுகளை செய்துள்ளது.

    45 நாட்களுக்கு தற்காலிகமாக மின்சார ரெயில் சேவை மாற்றம் செய்யப்பட்டிருப்பதால் பொதுமக்கள் சிரமங்களுக்கு ஆளாகி உள்ளனர்.

    ஆனாலும் அதனை பொறுத்துக்கொள்ள வேண்டும் என்று ரெயில்வே துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. புறநகர் மின்சார ரெயில் பயணிகள் வசதிக்காக மாநகரப் போக்குவரத்து கழகம் கூடுதலாக பஸ் சேவை அளிக்கிறது. குறிப்பாக எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து முக்கிய பகுதிகளுக்கு கூடுதலாக பஸ்கள் இயக்கப்படுகிறது.

    தலைமைச் செயலகம் வழியாக 8 பஸ்கள், நுங்கம்பாக்கம் வழியாக 5 பஸ்கள், ராயபுரம் தற்காலிக பஸ் நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் வரை 27 பஸ்கள், பல்லாவரத்தில் இருந்து தாம்பரம் வழியாக செங்கல்பட்டு வரை 15 பஸ்கள் என மொத்தம் 60 பஸ்கள் கூடுதலாக இயக்கப்படுகிறது.

    இது தவிர எழும்பூர் நிலையம் வழியாக பஸ்கள் மாற்றிவிடப்பட்டுள்ளது. தீவுத்திடல், ராயபுரத்தில் இருந்து புறப்படக்கூடிய பஸ்கள் சென்ட்ரல், தலைமை செயலகம், சிந்தாதிரிப்பேட்டை வழியாக எழும்பூர் நிலையம் சென்று அங்கிருந்து அம்பத்தூர், ஆவடி, பூந்தமல்லி, திருநின்றவூர், திருமுல்லைவாயல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்கிறது.

    இதுகுறித்து மாநகர போக்குவரத்துக் கழக அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது,

    "தினமும் 3 ஆயிரத்து 588 பஸ்கள் 600-க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகிறது. எழும்பூரில் மின்சார ரெயில் சேவையில் மாற்றம் கொண்டு வரப்பட்டதன் அடிப்படையில் அங்கிருந்து முக்கிய பகுதிகளுக்கு மாநகர பஸ்கள் இயக்கப்படுகிறது. மேலும் கூடுதலாக எந்தெந்த பகுதிகளுக்கு சேவை தேவைப்படுகிறது என்பதை அறிந்து அதற்கேற்ப பஸ் வசதி அளிக்கப்படுகிறது. 101 வழித்தடத்தில் கூடுதலாக மின்சார பஸ்கள் இயக்கப்படுகிறது" என்றார்.

    • தமிழ்நாடு முழுவதும் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு ஒவ்வொரு தொகுதியிலும் எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றி உள்ளோம்.
    • இந்தியா முழுக்க பின்பற்றக்கூடிய மாடலாக நம்முடைய திராவிட மாடல் இருக்கிறது

    முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று கொளத்தூர் பூம்புகார் நகரில் இந்து சமய அறநிலையத்துறையின் கபாலீசுவரர் கலை அறிவியல் கல்லூரியை திறந்து வைத்து பேசியதாவது:-

    "இந்தியா முழுக்க பின்பற்றக்கூடிய மாடலாக நம்முடைய திராவிட மாடல் இருக்கிறது என்றால், அந்த திராவிட மாடல் அரசின் மாடல் தொகுதியாக இருப்பது கொளத்தூர் தொகுதி. எல்லா வகையிலும் தன்னிறைவு பெற்ற தொகுதியாக கொளத்தூரை வளர்த்து எடுத்துள்ளோம்.

    ஏதோ தேர்தல் வரும் போது மட்டும் ஒன்று, இரண்டு திட்டங்களை தொடங்கி வைக்கவில்லை. கடந்த 5 வருடமாக பார்க்கிறீர்கள். ஒவ்வொரு மாதமும் வந்து உங்களுக்கு தேவையான எல்லாவற்றையும் செய்து கொடுத்து கொண்டு வருகிறோம். இங்கு பல்கலைக்கழகம் போன்று கபாலீசுவரர் கல்லூரியை உருவாக்கி உள்ளார் அமைச்சர் பி.கே.சேகர்பாபு.

    கபாலீசுவரர் கலை அறிவியல் கல்லூரியை உலகத் தரத்தில் உருவாக்கி உள்ளோம். கல்வி எனும் கடவுள்தான் உங்களுக்கு அனைத்தையும் கொடுக்கும். பெரிய பெரிய திட்டப் பணிகளை தமிழ்நாடு முழுவதும் திறந்து வருகிறேன். தமிழ்நாடு முழுவதும் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு ஒவ்வொரு தொகுதியிலும் எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றி உள்ளோம். மக்களை மையப்படுத்தி மக்களை தேடி வந்து சேவைகளை வழங்குகிற மக்களாட்சியாக திராவிட மாடல் பெயர் எடுத்துள்ளது.

    இந்த நல்லாட்சி தொடர, நம்ம கொளத்தூர் மேலும், மேலும் உயர, உங்களுடைய ஆதரவு என்றும் எங்களுக்கு இருக்கும் என்ற நம்பிக்கையோடு விடைபெறுகிறேன்." இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, கோவி.செழியன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, முன்னாள் எம்.எல்.ஏ. ப.ரங்கநாதன், மேயர் ப்ரியா உள்பட பலர் கலந்துகொண்டனர். 

    • இந்த கொள்ளை அடிச்சு வெச்சுக்குற பணத்தை வைத்து மக்களை ஏமாற்றி ஜெயிக்க முடியாது.
    • இது மாபெரும் மக்கள் சக்தியான வித்தியாசமான விசில் புரட்சி எலெக்ஷன்.

    வேலூர்:

    தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய், நிர்வாகிகள் கூட்டத்தில் பேசியதாவது:-

    இப்போ நம்ம ஸ்டாலின் சார் அறிவாலயம் பக்கம் யார் நடந்து போனாலும், அறிவாலயம் பக்கத்தில் யார் நிழலுக்கு ஒதுங்குனாலும் கூட்டணியில் சேர்த்துக்கிறார். அந்த கொள்ளை அடிச்சி வெச்சியிருக்குற பணத்துல ஒரு பங்கு கொடுத்து அதற்கு பெயர் கல்லாப்பெட்டி கூட்டணியை கஷ்டப்பட்டு சேர்த்து இருக்கார்.

    ஆனா அவருக்கு நான் சொல்றேன். அருத பழைய கூட்டணி கணக்குகளோ, இந்த கொள்ளை அடிச்சு வெச்சுக்குற பணத்தை வைத்து மக்களை ஏமாற்றி ஜெயிக்க முடியாது. ஏன் என்றால் இது மாபெரும் மக்கள் சக்தியான வித்தியாசமான விசில் புரட்சி எலெக்ஷன். உங்களோடு நான் இருக்கிறேன். நம்மோடு நம்ம மக்கள் இருக்கிறார்கள். இதற்கு மேல் என்ன வேண்டும். Confident ஆ இருங்க நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம். மீண்டும் சந்திக்கும் வரை நன்றி வணக்கம் என்றார். 

    • போதைப்பொருட்கள் இல்லாத தமிழகம் உருவாக்கப்படும்.
    • தொழிற்சாலைகள் அமைக்கவும், தொழில் வளம் பெருக்கவும் தனி கவனம் செலுத்தப்படும்.

    த.வெ.க. நிர்வாகிகள் கூட்டத்தில் விஜய் பேசியதாவது:-

    * இப்பவும் சொல்றேன், உறுதியாக சொல்றேன், சாத்தியமா சொல்றேன், பெண்கள், பெண் குழந்தைகள் பாதுகாப்பு நம்முடைய ஆட்சியில் நம்பர் ஒன்னாக இருக்கும்.

    * சட்டம் ஒழுங்கு ரொம்ப ரொம்ப கண்டிப்பா இருக்கும்.

    * அரசு பள்ளிக்கூடங்கள், கல்லூரிகளும் முதல் தரமா இருக்கும்.

    * போட்டித்தேர்வுகளுக்குன்னு லட்சங்களை கொட்டி தனியா படிக்கணும்னு அவசியம் இருக்காது. ஏன்னா அரசு பள்ளி, கல்லூரி சிலபஸ்கள் போட்டித் தேர்வுகளை எளிமையா சந்திக்கிற மாதிரி மாற்றி அமைக்கப்படும்.

    * உயர்நிலை பாடத்திட்டங்களிலேயே அடிப்படை அரசியல், சாசன சட்டம் சேர்க்கப்படும். மாநில மற்றும் ஒன்றிய அரசு அலுவலகங்கள், வங்கிகளின் செயல்பாடுகள் மற்றும் அவற்றை அணுகும் முறை குறித்து மாணவர்களுக்கு செயல்முறை பாடமாக கற்பிக்கப்படும்.

    * அனைத்து அரசு பள்ளிகளிலும் பெண் குழந்தைகளுக்கு சுத்தமான சுகாதாரமான மற்றும் கதவுகள் பொருத்தப்பட்ட Rest Roomகள் அமைப்பது உறுதி செய்யப்படும்.

    * போதைப்பொருட்கள் இல்லாத தமிழகம் உருவாக்கப்படும்..

    * மாவட்ட கலெக்டர்கள், எஸ்பிக்களில் சரிபாதி பெண்களாக இருக்கும்படி செய்வோம்.

    * மலை கிராமங்களில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், பிரசவம் பார்க்கும் வசதியுடன அமைக்கப்படும்.

    * பஸ் போக்குவரத்து வசதி இல்லாத கிராமங்களே இல்லை என்ற நிலை உருவாக்கப்படும்.

    * ஏற்கனவே அமைப்பு சாரா தொழிலாளர்கள் அமைப்பு இருந்தாலும் ஆட்டோ, டாக்சி மற்றும் லாரி டிரைவர்களுக்கென அவர்களின் நலனுக்காகவும், குடும்ப நலனுக்காகவும் தனியாக நல வாரியம் அமைக்கப்படும்.

    *தென்தமிழகம் உட்பட தமிழகத்தின் தேவையான பகுதிகளில் தொழிற்சாலைகள் அமைக்கவும், தொழில் வளம் பெருக்கவும் தனி கவனம் செலுத்தப்படும்.

    * விவசாயிகள், மீனவர்கள் மற்றும் நெசவாளர்களின் கருத்துகளை அறிந்து அவர்களுக்கான திட்டங்கள் காலத்திற்கு ஏற்ப உருவாக்கப்படும். 

    • அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் மும்முரம் காட்டி வருகின்றன.
    • இரு கட்சிகளுக்கும் இடையே பெரிய பிளவை உருவாக்கியது.

    2026 சட்டமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சட்டமன்ற தேர்தலை ஒட்டி அரசியல் கட்சிகள் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு என தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. இந்த நிலையில், தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி பற்றிய கேள்விக்கு த.வெ.க. நிர்வாகி சி.டி.ஆர். நிர்மல் குமார் பதிலளித்துள்ளார்.

    இது குறித்து பேசிய அவர், "காங்கிரஸ் மற்றும் தி.மு.க. இடையே வலுவான கூட்டணி இருப்பதாக மு.க. ஸ்டாலின் கூறினார். கடந்த ஒரு மாதத்தில் நாம் காணக்கூடியது என்னவென்றால், தி.மு.க. அமைச்சர்களும், தி.மு.க. மாவட்டச் செயலாளர்களும் காங்கிரசை பற்றி தவறாக பேசுகிறார்கள். இது இரு கட்சிகளுக்கும் இடையே பெரிய பிளவை உருவாக்கியது.

    தி.மு.க.வின் வழிமுறை அவர்களின் கூட்டணி கட்சியை அச்சுறுத்துவதோடு அவர்கள் கட்டுப்பாட்டில் இருப்பதை உறுதி செய்கிறது. பெரும்பாலான காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் தலைவர்கள், கூட்டணியில் தொடர்ந்தாலும், தி.மு.க. தங்கள் கூட்டணியில் போட்டியிடும் அனைத்து காங்கிரஸ் வேட்பாளர்களும் தேர்தலில் தோல்வியடைவதை உறுதி செய்யும் என்று பேசுவதை என்னால் காண முடிந்தது," என்றார்.

    • முன்னதாக வரைவு வாக்களர் பட்டியல் டிச.19 அன்று வெளியிடப்பட்டது.
    • சென்னையில் அதிக வாக்காளர்கள் உள்ள தொகுதி பெரம்பூர் ஆகும்.

    தமிழ்நாட்டில் இன்னும் இரண்டு மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளநிலையில், மாநிலம் முழுவதும் வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டன. சிறப்பு தீவிரத் திருத்தத்தைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

    சென்னை வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் வெளியிட்டனர். முன்னதாக வரைவு வாக்களர் பட்டியல் டிச.19 அன்று வெளியிடப்பட்டது. சென்னையில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் சுமார் 14.25 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர். இதனைத்தொடர்ந்து விடுப்பட்டவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியானது.

    அதன்படி தற்போது சென்னையின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 28,30,936. இதில் ஆண்கள் 13,65,763, பெண்கள் 14,64,344 ஆகும். மூன்றாம் பாலினத்தவர் 829 பேர். சென்னையில் அதிக வாக்காளர்கள் உள்ள தொகுதி பெரம்பூர் ஆகும். பெரம்பூரில் 2,22,792 வாக்காளர்கள் உள்ளனர். துறைமுகத்தில் 1,16,896 வாக்களர் உள்ளனர். மாவட்டம் முழுவதும் மொத்தம் 4,079 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

    பொதுமக்கள் தங்கள் பெயர்களை வாக்காளர் சேவை இணையதளம் (voters.eci.gov.in) அல்லது தமிழக தேர்தல் ஆணைய இணையதளத்தில் (elections.tn.gov.in) சரிபார்த்துக் கொள்ளலாம். மேலும், சென்னை மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் மற்றும் அந்தந்த பகுதிகளில் உள்ள வாக்குச் சாவடிகளிலும் இந்தப் பட்டியலைப் பார்வையிடலாம் 

    • கார் டிரைவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்த மகளால் ஆத்திரம்!
    • கார் டிரைவரை கூலிப்படையை ஏவி கொலை செய்ததால் பழிக்கு பழி நடந்த கொலை?

    சூர்யா - ஜோதிகா நடித்த மாயாவி படத்தில் மாற்றுத்திறனாளி கதாபாத்திரத்தில் நடித்து "கடவுள் தந்த அழகிய வீடு" என்ற பாடல் மூலம் புகழ் பெற்றவர் நடிகை விஷ்ணு பிரியா. சென்னை திருவான்மியூரை சேர்ந்த சூர்ய நாராயணன் என்பவரின் மகளான நடிகை விஷ்ணு பிரியாவுக்கு ரமேஷ் கிருஷ்ணா என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

    இதனிடையே, கணவர் ரமேஷ் கிருஷ்ணாவுக்கு உடல்நலம் பாதித்ததையடுத்து, சிகிச்சைக்காக தந்தையுடன் கொடைக்கானல் சென்றார். கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவர் கோவில் பின்புறம் தந்தைக்கு சொந்தமான பங்களாவில் தங்கி 2018-ம் ஆண்டு சிகிச்சை மேற்கொண்டு வந்தனர். அப்போது கார் டிரைவர் பிரபாகரன் என்பவருடன் விஷ்ணு பிரியாவுக்கு திருமணத்தை மீறிய உறவு ஏற்பட்டுள்ளது. அந்த உறவில் இருந்து வெளிவற தந்தை சூர்ய நாராயணன் பலமுறை அறிவுறுத்தியும், டிரைவர் பிரபாகரனுடனான விஷ்ணு பிரியாவின் உறவு தொடர்ந்து நீடித்துள்ளது.

    இந்தநிலையில் டிரைவர் பிரபாகரன் படுகொலை செய்யப்படார். விஷ்ணு பிரியாவின் தந்தை சூர்ய நாராயணன்தான் கூலிப்படையை ஏவி பிரபாகரனை கொன்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட சூர்ய நாராயணன், ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.

    இந்த நிலையில்தான் சூர்ய நாராயணன் கொடைக்கானலில் உள்ள அவரது தங்கும் விடுதியுடன் கூடிய பங்களாவில் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். கடந்த சனிக்கிழமை நள்ளிரவு, சூர்ய நாராயணனின் பங்களாவில் வேலை பார்த்துவந்த ஆறுமுகம் என்பவர், காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என கூச்சலிட்டுள்ளார். இதையடுத்து, அருகிலிருந்த குடியிருப்புவாசிகள் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்துவந்த கொடைக்கானல் போலீசார், சூர்ய நாராயணனின் பங்களாவிற்குள் செல்ல முயன்றபோது வெளியே பூட்டு போடப்பட்டிருந்தது.

    பூட்டை உடைத்து போலீசார் உள்ளே சென்றபோது, பங்களாவில் வேலை பார்த்துவந்த ஆறுமுகம் மற்றும் முரளி ஒரு அறையில் இருந்துள்ளனர். மற்றொரு அறையில், நாற்காலியில் அமர்ந்தபடி உடல் முழுவதும் டேப் சுற்றப்பட்ட நிலையில் சூர்ய நாராயணன் சடலமாக கிடந்துள்ளார். சடலத்தை கைப்பற்றிய போலீசார், உடற்கூறாய்வுக்காக கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

    சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ஆறுமுகம் மற்றும் முரளியிடம் விசாரணையை தொடங்கினர். 2 நாட்களுக்கு முன்னர், கோயம்புத்தூரைச் சேர்ந்த 5 பேர் விடுதிக்கு தங்க வந்ததாக அவர்கள் கூறினர். மேலும், 5 பேரும் ஆவணங்கள் ஏதும் கொடுக்காமல் விடுதியில் தங்கியதும், விடுதியை விட்டு அவர்கள் 2 தினங்களாக வெளியில் எங்கும் செல்லாததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    கடந்த சனிக்கிழமை மாலை, ஆறுமுகம் மற்றும் முரளியை கை, கால்களை கட்டி ஒரு அறையில் அடைத்த அந்த கும்பல், மறு அறையில் சூர்ய நாராயணனை நாற்காலியில் அமரவைத்து, உடல் முழுவதும் டேப்பை இறுக்கமாக சுற்றியுள்ளனர். இதில் சூர்ய நாராயணன் மூச்சுத்திணறி உயிரிழந்த நிலையில், 5 பேர் கும்பல் அங்கிருந்து தப்பியுள்ளது. அப்போது விடுதியில் இருந்த சிசிடிவி கேமராவின் ஹார்ட் டிஸ்க்கை திருடி சென்றதோடு, சூர்ய நாராயணன், ஆறுமுகம், முரளி ஆகியோர் அணிந்திருந்த தங்க நகைகளையும் கொள்ளையடித்து சென்றதாக சொல்லப்படுகிறது.

    இதில் நெடுநேரம் போராடி, ஆறுமுகம் கயிற்றை சிறிது கழற்றி காப்பாற்றுமாறு கூச்சலிட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதனிடையே, டிரைவர் பிரபாகரன் கொலைக்கு பழிக்குப்பழி தீர்க்கவே சூர்ய நாராயணன் கொலை நடைபெற்றிருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ள நிலையில், இந்தக்கொலை பழிதீர்க்க நடத்தப்பட்டதா? இல்லை நகைக்காக நடத்தப்பட்டதா? என போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • தமிழ்நாட்டில் சட்டம்- ஒழுங்கு காணாமல் போய்விட்டது.
    • எங்களை யாரும் விலைக்கு வாங்க முடியாது.

    வேலூர் மாவட்டம் அகரம்சேரி தவெக நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியில் ஜல்லிக்கட்டு காளை குட்டிக்கதையுடன் தவெக தலைவர் விஜய் உரையாற்றினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    ஒவ்வொரு வீட்டில் உயிராய் உணர்வாய் இருக்கும் நான் எல்லாரையும் உங்கள் இடத்திற்கே வந்து சந்திக்க ஆசைப்படுகிறேன்

    தவெக ஆட்சி அமைந்ததும் ஒவ்வொரு கிராமத்திற்கும் நான் நேரடியாக வந்து உங்கள் எல்லாரையும் சந்திப்பேன்

    தங்களுக் பாதுகாப்பு இல்லை என பெண்களே கூறுகிறார்கள். தமிழ்நாட்டில் சட்டம்- ஒழுங்கு காணாமல் போய்விட்டது.

    சட்டம்-ஒழுங்கு குறித்து நான் பேசுவதால் முதல்வருக்கு சங்கடம். திமுகவை ஸ்விட்ச் ஆப் செய்ய வேண்டும்.

    எங்களை யாரும் விலைக்கு வாங்க முடியாது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

    • நிறைய மலை கிராமங்களில் பஸ் வசதி இல்லை.
    • இந்த இரண்டும் எவ்வளவு முக்கியமான விஷயங்கள்.

    வேலூர் மாவட்டம் அகரம்சேரியில் நடைபெற்ற த.வெ.க. நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய விஜய், இப்போ current-ல இருக்குற சில பிரச்சனைகளுக்கு வருவோம். இந்த கரெண்ட் பிரச்சனைக்கு வருவோம் என்று கூறினார். தொடர்ந்து அவர் பேசியதாவது:-

    மாதாமாதாம் கரண்ட் பில்லை கட்டுற மாதிரி மாத்துவோம் என்று சொன்னீர்களே, செய்தீர்களா? நிறைய வீடுகளில் 100 யூனிட் தான் ஒரு மாதத்திற்கு செலவாகிறது. மாதாமாதம் அந்த பில்லை கொடுத்தா அது அவங்களுக்கு ப்ரீயா ஆகிடும். ஆனா இரண்டு மாதத்திற்கு ஒரு பில்லு கொடுத்தா 200 யூனிட்டுக்கு மேல் போனால் அது அவங்களுக்கு அது சுமைதான். இதை எந்த கணக்கில் எடுத்துக்கொள்வது. இதை ஒரு மாடன் கராப்ஷன்னு எடுத்துக்கலாமா?

    அடுத்து பஸ் வசதி. நிறைய கிராமங்களில் பஸ் வசதி இல்லைன்னு சொன்னா... இந்த ஒட்டுமொத்த தி.மு.க. அரசும் கத்துக்கிட்டு வந்துருவாங்க. நாங்க பஸ் விடாத கிராமமே இல்லைன்னு சொல்லுவாங்க. அது உண்மை அப்படின்னா முதல்வர் அவர்கள் கிட்ட எங்க தங்கச்சி ஒருத்தங்க கேள்வி கேட்டாங்களே, எங்க ஊருக்கு ஒரு மினி பஸ்சாவது விடுங்க சார் என்று. அத எந்த கணக்கில் எடுத்துக்கொள்வது. நிறைய மலை கிராமங்களில் பஸ் வசதி இல்லை. நிறைய மலை கிராமங்களில் ஆஸ்பிட்டல் வசதி இல்லை. இந்த இரண்டும் எவ்வளவு முக்கியமான விஷயங்கள். பஸ் வசதியும், ஆஸ்பிட்டல் வசதியும் இல்லாததால் வீட்டிலேயே பிரசவ பார்க்குற ஆபத்து இருக்குதுன்னு எவ்வளவு நியூஸ் பார்க்குறோம். இதெல்லாம் எந்த கணக்கில் சேர்த்துக்கொள்வது.

    இதை எல்லா மீட்டிங்கில்லும் பேசுறது தான். பெண்களுக்கு பாதுகாப்பில் தமிழ்நாடு நம்பர் ஒன்னா இருக்குறது என்று சொல்றாங்க. அது என்ன We Safe மாடலா? பெண்கள் என்ன சொல்றாங்க தெரியுமா அது We Safe மாடல் இல்லை, We are not safe மாடல் என்று சொல்கிறாங்க. இப்படி இருக்கும் போது தமிழ்நாட்டில் எங்கே போனாலும் பெண்களுக்கு பாதுகாப்பு கொட்டிக்கிடக்குதாம். இப்படி சொன்னா எப்படி சார். கேக்குறவங்க எல்லாம் கேசரி சாப்பிடுறவங்கன்னு நினைச்சிங்களா.

    அடுத்து இந்த சட்டம் ஒழுங்கு. அது காணாமல் போய் ரொம்ப நாளாச்சு. இவன் வேற, இந்த விஜய் வேற எங்க போனாலும் இந்த மக்கள் கிட்ட சட்டம் ஒழுங்கு பற்றி பேசி ஞாபகம் படுத்திக்கிட்டு இருக்கான்னு முதல்வர் அவர்கள் கூட இருக்குறவங்க கிட்ட எல்லாம் சொல்லி சங்கடம் பட்டாராம். நாம என்ன பண்றது. நாம தான் தமிழ்நாட்டோட விசில் ப்ளோயர் ஆச்சே. நாம எப்படி சைலட்டா இருக்க முடியும். நாமளும் கேள்வியா கேட்குறோம். ஆனா பதில் தான் வந்த மாதிரியே தெரியல. இருந்தா தானே வரும். வச்சுக்கிட்டா வஞ்சனை பண்றாரு. 5 வருஷமா பதிலே சொல்லாமல் கடந்து வந்துட்டார். இனிமேல் அப்படி இருக்க முடியாது. பதில் சொல்லியே ஆகணும். மக்களே.. இந்த தீய சக்தியை... அட்ராசிட்டியே... ஒரு எண்ட்ரி கார்டு போடணும்னு அப்படி என்றால் அவங்களை Switchoff பண்றது தான் ஒரே solution. அதுக்கான ரிமோட் தான் வரப்போகுற எலெக்ஷன். அந்த ரிமோட்டுல நீங்க ஒரு அழுத்த வேண்டியது ஒரேயொரு ஆப்ஷன். அதுதான் நம்ம விசில் சின்னத்தோட பட்டன். இந்த நாலு விஷயத்தை நீங்க செய்தாலே போது. ஒவ்வொரு EV மெஷினிலும் விசில் சின்னத்திற்கு நேரா இருக்கக்கூடிய பட்டனை பசக், பசக், பசக்குன்னு ஒரு அழுத்து அழுத்துங்க. அவ்வளவுதான் என்றார்.

    • கரூர் விவகாரம் குறித்து முதல் முறையாக பொதுவெளியில் கருத்து தெரிவித்துள்ளார்.
    • தனிப்பட்ட முறையில் நீங்கள் எப்படி இருந்தாலும் எங்களுக்கு கவலை இல்லை.

    வேலூர் மாவட்டம் கொல்லமங்கலத்தில் த.வெ.க. நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் அக்கட்சி தலைவர் விஜய் பங்கேற்றார். அப்போது அவர், கரூர் விவகாரம் குறித்து முதல் முறையாக பொதுவெளியில் கருத்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து பேசிய விஜய், "எனக்கு ஒரு புதிய நண்பர் கிடைத்துள்ளார். அந்த நண்பர் முதல்வர் அவர்கள் தான். சமீபத்தில் நிருபர் கேட்ட கேள்விக்கு எனக்கு எதிரிகள் யாரும் கிடையாது, அவர்கள் அனைவரும் எனக்கு நண்பர்கள் தான் என்று முதல்வர் பதிலளித்தார். உண்மையில் நாங்கள் உங்களுக்கு நண்பர் எனில், ஏன் கரூர் விஷயத்தில் என் மீது பழி போட்டீர்கள்? உங்களுக்கு மனசாட்சி இருந்தால் அப்படி பேசி இருப்பீர்களா?

    நாங்கள் உங்களுக்கு நண்பர் எனில், நிகழ்வுகளுக்கு ஏன் அனுமதி கொடுக்க மறுக்கின்றீர்கள். எல்லாவற்றையும் நீங்களே செய்துவிட்டு, போகிற போக்கில் பொய்களை அடித்துவிடுகின்றீர்கள். உங்களது உண்மையான நண்பர்கள் யாரென்று சொல்லட்டுமா? லஞ்சம், ஊழல், அரசியல் ஆதாயம் - இதெல்லாம் தான் உங்களது உண்மையான நண்பர்கள்.

    தனிப்பட்ட முறையில் நீங்கள் எப்படி இருந்தாலும் எங்களுக்கு கவலை இல்லை. நமக்கு அது அவசியமும் இல்லை. ஆனால், உங்களது ஆட்சி தான் தப்பான ஆட்சி. தமிழ்நாட்டிற்கே தேவையில்லாத ஆட்சி," என்றார். 

    • இந்த தேர்தல் தூய சக்தியான தவெகவுக்கும், தீய சக்தியான தவெகவுக்குமான போர்.
    • இந்த தேர்தல் முடிந்ததும் ஒவ்வொரு கிராமங்களுக்கும் நேரில் வருவேன்.

    வேலூர் மாவட்டம் அகரம்சேரி தவெக நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியில் ஜல்லிக்கட்டு காளை குட்டிக்கதையுடன் தவெக தலைவர் விஜய் உரையாற்றினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    முதலமைச்சர் கொடுத்த பொய்யான வாக்குறுதிகளால் மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் மக்களை நேசிக்கும் ஒரு நல்ல தலைமை இல்லை.

    சட்டமன்ற தேர்தல் டெல்லிக்கும் தமிழ்நாட்டுக்குமான தேர்தல் அல்ல. விஜய்க்கும் ஸ்டாலின சாருக்குமான போர்.

    இந்த தேர்தல் தூய சக்தியான தவெகவுக்கும், தீய சக்தியான தவெகவுக்குமான போர்.

    வரும் தேர்தல் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் வழக்கமான தேர்தல் அல்ல. 50 ஆண்டுக்கு ஒருமுறை வருவது போன்ற தேர்தல்.

    தவெகவுக்கும் நமக்கும் எதிரான சூழ்ச்சிகள் உங்களுக்கு நன்றாக தெரியும்.

    இந்த தேர்தல் முடிந்ததும் ஒவ்வொரு கிராமங்களுக்கும் நேரில் வருவேன்.

    இந்த தேர்தல் வழக்கமான தேர்தல் கிடையாது அதிசய தேர்தல். ஒட்டுமொத்தமாக அனைவரும் சேர்ந்து நம்மை எதிர்க்கிறார்கள்.

    காமராஜர், அண்ணா, எம்ஜிஆ் இருந்தபோது நல்ல ஆட்சி. அவர்கள் ஆண்டபோது தான் தமிழ்நாடு சூப்பர் ஸ்டாராக இருந்தது.

    எனக்கு எதிரான செயல்கள் அனைத்தும் மக்களுக்கு எதிரானது. நானும் மக்களும் ரத்தமும் சதையும் போல்.

    இந்த தமிழ்நாடு விஜயை நம்புகிறார்களா? ஸ்டாலின் சாரை நம்புகிறார்களா? என நிரூபிக்கும் தேர்தல்.

    நாம் ஏதாவது பேசினால் களத்தில் இல்லாதவர்கள் wanted ஆக வண்டியில் ஏறுகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×