என் மலர்
தமிழ்நாடு செய்திகள்
- தி.மு.க. ஆட்சியில் தீண்டாமை தலைவிரித்தாடுவது இது முதல்முறையல்ல.
- நரிக்குறவ மக்களிடம் முதலமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும்.
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவுநாளையொட்டி திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் நேற்று நடைபெற்ற சமபந்தி விருந்தில் பங்கேற்க வந்த நரிக்குறவர் சமுதாயத்தைச் சேர்ந்த 5 சிறுவர்கள் அதிகாரிகளால் விரட்டியடிக்கப்பட்டதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. சமூகநீதி பேசும் தி.மு.க. அறிஞர் அண்ணா அவர்களின் பிறந்நநாள் விருந்தில் கூட தீண்டாமையை கடைபிடித்திருப்பது கண்டிக்கத்தக்கது.
நெல்லையப்பர் கோவிலில் நடந்த விருந்தில் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, நெல்லை மாநகர மேயர் இராமகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றிருந்த நிலையில், பசியுடன் அங்கு உணவருந்த வந்த சிறுவர்களை அதிகாரி ஒருவர் மிரட்டி, விரட்டியடிப்பதும், அதன்பின் அந்த சிறுவர்களை இன்னொருவர் அருகில் உள்ள உணவகத்துக்கு அழைத்துச் சென்று உணவு வாங்கித் தருவதும் சமூக வலைத்தளங்களில் காணொலியாக பரவி வருகின்றன.
சமூக ஏற்றத்தாழ்வுகளை களைந்து சமத்துவத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் முக்கிய நாள்களில் ஆலயங்களில் சமபந்தி விருந்துகள் நடத்தப்படுகின்றன. ஆனால், சமபந்தி விருந்துகளிலேயே சமத்துவம் மறுக்கப்பட்டு தீண்டாமை தலைவிரித்தாடுகிறது என்றால் தி.மு.க. ஆட்சியில் சமூகநீதி எந்த அளவுக்கு சீரழிக்கப்பட்டிருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடியும்.
தி.மு.க. ஆட்சியில் தீண்டாமை தலைவிரித்தாடுவது இது முதல்முறையல்ல. 2021-ஆம் ஆண்டு அக்டோபர் 24ஆம் தேதி மாமல்லபுரம் பூஞ்சேரியில் உள்ள ஸ்ரீதலசயன பெருமாள் கோவிலில் நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த அஸ்வினி என்ற பெண் உள்ளிட்டவர்கள் உணவு சாப்பிடச் சென்றபோது விரட்டியடிக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த அநீதிக்கு எதிராக அஸ்வினி வினா எழுப்பியது வைரலான நிலையில், இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு அந்த கோவிலுக்கு சென்று அஸ்வினியுடன் உணவருந்தினார்; பின்னர் அஸ்வினியின் வீட்டுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று மன்னிப்பு கேட்டு சமாளித்தார்.
ஆனால், அதன் பின் நான்கரை ஆண்டுகள் ஆகும் நிலையில் தி.மு.க. ஆட்சியில் நரிக்குறவ மக்களுக்கு இன்னும் சமூகநீதியும், சமத்துவமும் கிடைக்கவில்லை என்பதையே நெல்லையப்பர் கோவில் நிகழ்வு காட்டுகிறது. இதற்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், இதற்காக நரிக்குறவ மக்களிடம் முதலமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- முதலமைச்சரிடம் நான் நேரிலும், பல்லாயிரம் முறை அறிக்கை வாயிலாகவும் வலியுறுத்திய போதிலும் கஞ்சா கட்டுப்படுத்தப்படவே இல்லை.
- இப்படி ஒரு நிலையை ஏற்படுத்தியதற்காக ஆட்சியாளர்கள் வெட்கப்பட வேண்டும்.
சென்னை:
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஊட்டி மத்தியக் காவல்நிலையத்தில் காவலராக பணியாற்றி வரும் நசீர் அகமது என்பவர் கஞ்சா மொத்த வணிகம் செய்தததாக கைது செய்யப்பட்டிருப்பதும், அவரிடம் கஞ்சா வாங்கி பயன்படுத்தியதாக அதே ஊட்டியில் காவலர்களாக பணியாற்றி வரும் அபிசேகரன், மாயக்கண்ணன், சாந்தக்குமார் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருப்பதும் அதிர்ச்சியளிக்கிறது.
கஞ்சா வணிகத்தைக் கட்டுப்படுத்த வேண்டிய காவல்துறையினரே கஞ்சா விற்பனையாளர்களாகவும் நுகர்வோராகவும் மாறியிருப்பதிலிருந்தே தமிழ்நாட்டில் கஞ்சா வணிகம் எந்த அளவுக்கு முதன்மைத் தொழிலாக மாறியிருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடியும். வேலியே பயிரை மேய்வதைப் போல காவலர்களே கஞ்சா வணிகம் செய்தால் கஞ்சாவை எப்படி கட்டுப்படுத்த முடியும்? என்ற வினாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தான் விடையளிக்க வேண்டும்.
இன்னொருபுறம் சென்னை வியாசர்பாடி மகாகவி பாரதியார் நகரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 11-ஆம் வகுப்பு பயிலும் மாணவரின் புத்தகப் பையை ஆசிரியர்கள் சோதனையிட்ட போது அதில் கஞ்சா பொட்டலம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பள்ளியின் விளையாட்டுத் திடலில் கஞ்சா பொட்டலம் கிடந்ததாகவும், அதை எடுத்து பையில் வைத்திருந்ததாகவும் அந்த மாணவர் கூறியிருக்கிறார். மாணவர்களின் கைகளில் கிடைக்கும் அளவுக்கு கஞ்சா பொட்டலங்கள் மலிந்து கிடப்பது தான் திமுக ஆட்சியின் மகத்தான சாதனை ஆகும்.
திமுக ஆட்சிக்கு வந்த நாள் முதலாகவே கஞ்சா வணிகம் தமிழ்நாட்டில் கொடிகட்டி பறக்கிறது. முதலமைச்சரிடம் நான் நேரிலும், பல்லாயிரம் முறை அறிக்கை வாயிலாகவும் வலியுறுத்திய போதிலும் கஞ்சா கட்டுப்படுத்தப்படவே இல்லை. இப்படி ஒரு நிலையை ஏற்படுத்தியதற்காக ஆட்சியாளர்கள் வெட்கப்பட வேண்டும்.
தமிழ்நாட்டையும், தமிழ்நாட்டு இளைஞர்களையும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களிடமிருந்து பாதுகாக்க வேண்டும் என்றால், அதற்கான ஒரே வழி திமுக ஆட்சியை அகற்றுவது தான். மக்களைக் காப்பதற்காக அந்த மகத்தான பணியை தமிழ்நாட்டு மக்கள் வரும் தேர்தலில் செய்து முடிப்பார்கள் என்று கூறியுள்ளார்.
- கேள்விக்கு பதில் அளிக்கவும், தேசிய பாதுகாப்பு, பொருளாதார நலன்கள் குறித்து தெளிவுப்படுத்தவும் அரசு தயாராக இருக்க வேண்டும்.
- தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகளை பாராளுமன்றத்தில் பேசுவதற்கு எம்.பி.க்கள் அவையில் இருப்பது அவசியம்.
சீனா ஊடுருவல் பற்றி பேச அனுமதி மறுத்ததால் மக்களவையில் அத்துமீறியதாக தமிழக எம்.பி.க்கள் உள்பட 8 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டனர். அவர்கள் கூட்டத்தொடர் முழுவதும் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எழுப்பிய கேள்விகளுக்கு மத்திய பா.ஜ.க. அரசு அஞ்சுவது ஏன்?
கேள்விக்கு பதில் அளிக்கவும், தேசிய பாதுகாப்பு, பொருளாதார நலன்கள் குறித்து தெளிவுப்படுத்தவும் அரசு தயாராக இருக்க வேண்டும்.
கேள்வி எழுப்பிய எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறேன். தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகளை பாராளுமன்றத்தில் பேசுவதற்கு எம்.பி.க்கள் அவையில் இருப்பது அவசியம்.
எதிர்க்கட்சி எம்.பி.க்களின் ஜனநாயக உரிமையை மீட்டெடுக்க இடைநீக்க உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- இந்திய - அமெரிக்க ஒப்பந்தம் இறுதி கட்டத்தில் இருப்பதாகவே நேற்று அமைச்சர் பியூஷ் கோயல் கூறினார்.
- அமெரிக்க அரசின் செய்தித் தொடர்பாளர் ரஷ்ய எண்ணெயை வாங்குவதை நிறுத்த இந்தியா ஒப்புக்கொண்டது என்று தெரிவித்தார்.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், பிரதமர் மோடி இருவரும் நேற்று தொலைபேசியில் பேசியுள்ளனர்.
இதுகுறித்து டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில், " ரஷிய எண்ணெயை வாங்குவதை நிறுத்துவதற்கும், அமெரிக்கா மற்றும் சாத்தியமானால் வெனிசுலாவிடமிருந்து அதிக அளவில் வாங்குவதற்கும் பிரதமர் மோடி ஒப்புக்கொண்டார்.
உடனடியாக அமலுக்கு வரும் வகையில் அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையே ஒரு வர்த்தக ஒப்பந்தத்திற்கு நாங்கள் ஒப்புக்கொண்டோம். இதன்படி அமெரிக்கா விதிக்கும் பரஸ்பர வரி 25%-லிருந்து 18%-ஆகக் குறைக்கப்படும். அதேபோல், அமெரிக்காவிற்கு எதிரான இந்தியாவின் வரிகள் மற்றும் வரி அல்லாத தடைகளையும் அவர்கள் பூஜ்ஜியம் என்ற நிலைக்குக் குறைப்பார்கள்" என்று தெரிவித்தார்.
இதையடுத்து ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் கொள்முதலை நிறுத்துவதற்கான எந்த அறிக்கையையும் இந்தியாவிடம் இருந்து தற்போதுவரை பெறவில்லை என தலைமை செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்தார்.
இந்நிலையில், அமெரிக்க அரசின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் தனது எக்ஸ் பதிவில், "ரஷ்ய எண்ணெயை வாங்குவதை நிறுத்தவும், அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தத்தில் நுழையவும் இந்தியா ஒப்புக்கொண்டது" என்று தெரிவித்தார்.
இந்த பதிவை பகிர்ந்த மதுரை எம்.பி. சு.வெங்கடேசன், "பிரதமர் மோடி அமெரிக்காவிடம் சரணாகதி அடைந்தார் என்பதை உறுதி செய்கிறார் அமெரிக்க அரசின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர்.
இந்திய - அமெரிக்க ஒப்பந்தம் இறுதி கட்டத்தில் இருப்பதாகவே நேற்று அமைச்சர் பியூஷ் கோயல் கூறினார். ஆனால், அதற்கு மாறாக இந்தியா ஒப்புக்கொண்ட முடிவுகளைப் பட்டியலிடுகிறார் அமெரிக்க அதிகாரி.
இந்தியாவின் நிர்வாகத்தை அமெரிக்காவுக்கு உள் வாடகைக்கு விட்டதா பா.ஜ.க.?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
- வரும் ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை தொடர்ந்து உயரக்கூடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
- 2025 ஆம் ஆண்டில் புதிதாகப் பதிவு செய்யப்பட்ட நோயாளிகளில், பெண்கள் 53,542 பேரும், ஆண்கள் 46,555 பேரும் ஆவர்.
சென்னை:
தமிழ்நாட்டில் புதிதாக புற்றுநோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை ஒரே ஆண்டில் முதல் முறையாக ஒரு லட்சத்தை தாண்டியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் பாராளுமன்றத்தில் சமர்பித்த அறிக்கையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில், 2025ஆம் ஆண்டிற்கான சமீபத்திய புள்ளிவிவரங்களின் படி, மாநிலத்தில் புதிதாக புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,00,097ஆக உயர்ந்துள்ளது. இது நிகழ்வுகளில் கூர்மையான மற்றும் தொடர்ச்சியான அதிகரிப்பை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இது தடுப்பு, ஆரம்பகால கண்டறிதல் மற்றும் சிகிச்சை திறன் குறித்து சுகாதார அதிகாரிகளிடையே கவலைகளை எழுப்புகிறது. வலுவான பரிசோதனை திட்டங்கள் மற்றும் வாழ்க்கை முறையில் தலையீடுகள் இல்லாமல், வரும் ஆண்டுகளில் எண்ணிக்கை தொடர்ந்து உயரக்கூடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சீராக இருந்தது. 2020-ல் 68,750, 2021-ல் 76,968 ஆகவும்; 2022-ல் 89,265 ஆகவும்; 2023-ல் 92,816 ஆகவும்; 2024-ல் 96,486 ஆகவும் இருந்த நிலையில், 2025-ம் ஆண்டு ஒரு லட்சத்தை எட்டியுள்ளது.

இந்த தொடர்ச்சியான அதிகரிப்பு, அதிகரித்து வரும் நோய் சுமையையும், மாவட்டங்கள் முழுவதும் ஒருங்கிணைந்த பொது சுகாதார நடவடிக்கைகளுக்கான அவசரத் தேவையையும் எடுத்துக்காட்டுகிறது. 2025 ஆம் ஆண்டில் புதிதாகப் பதிவு செய்யப்பட்ட நோயாளிகளில், பெண்கள் 53,542 பேரும், ஆண்கள் 46,555 பேரும் ஆவர். தமிழ்நாட்டில் தற்போது புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,09,097-ஐ எட்டியுள்ளது.
அதன்படி, சென்னையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 8,505. காஞ்சிபுரத்தில் 7,295பேரும், வேலூரில் 6,525பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த தரவுகளின்படி, 2025ஆம் ஆண்டில் 10,821 இறப்புகள் கருப்பை, மார்பகம் மற்றும் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்களால் மட்டுமே ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.
- மாடுபிடி வீரர்கள் 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவாக களமிறக்கப்பட்டனர்.
- இந்த போட்டியில் ஏராளமான வீரர்கள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்து வந்த காளைகளை வீரத்துடன் அடக்கினர்.
தஞ்சாவூர்:
தஞ்சை அருகே மாதாக்கோட்டையில் லூர்து மாதா ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் ஆண்டுதோறும் ஜல்லிக் கட்டு போட்டி நடந்து வருகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை விறுவிறுப்பாக தொடங்கியது.
இந்த போட்டியை கோட்டாட்சியர் நித்யா, தாசில்தார் சிவக்குமார் ஆகியோர் உறுதிமொழி வாசித்து தொடங்கி வைத்தனர். இந்த உறுதிமொழியை மாடுபிடி வீரர்கள் வாசித்து ஏற்றுக் கொண்டனர்.
அதைத்தொடர்ந்து, வாடிவாசலில் இருந்து தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சி, மதுரை, அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட 700 காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன. இந்த காளைகளை பிடிக்க சுற்றுக்கு மொத்தம் 40 பேர் அனுமதிக்கப்பட்டனர். மாடுபிடி வீரர்கள் 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவாக களமிறக்கப்பட்டனர்.
அப்போது வாடிவாசலில் இருந்து அவிழ்க்கப்பட்டு சீறிப்பாய்ந்த காளைகளை அடக்கி இளம் காளையர்கள் பார்வையாளர்களிடம் பாராட்டுக்களை பெற்றனர்.
மாடுபிடி வீரர்கள் தடுமாறி கீழே விழுந்தால் காயம் ஏற்படாமல் இருக்கும் வகையில் வாடிவாசலில் இருந்து சுமார் 100 மீட்டர் தொலைவுக்கு தரையில் தேங்காய் நார் போடப்பட்டிருந்தது.
இந்த போட்டியில் ஏராளமான வீரர்கள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்து வந்த காளைகளை வீரத்துடன் அடக்கினர்.
அதேபோல் காளைகளும் சிறப்பாக களமாடி வீரர்களை பந்தாடின. இதில் சிறந்த மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளின் உரிமையாளர்களுக்கு சைக்கிள், டைனிங் டேபிள், சில்வர் அண்டா, பேன் போன்றவை பரிசுகளாக வழங்கப்பட்டன.
முன்னதாக, மாடுபிடி வீரர்களை சுகாதாரத்துறையை சேர்ந்த மருத்துவக் குழுவினர் உடல்பரி சோதனை செய்து தகுதியான வீரர்களை மட்டுமே களத்துக்குள் செல்ல அனுமதித்தனர்.
இதேபோல, காளைகளையும் கால்நடை பராமரிப்புத்துறையினர் பரிசோதனை செய்தனர்.
தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவின் பேரில் வல்லம் துணை போலீஸ் சூப்பிரண்டு காயத்ரி தலைமையில் 400-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெறும் முதல் ஜல்லிக்கட்டு போட்டி இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
- தமிழகம், கேரளம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் கண்காட்சியில் கலந்து கொண்டு பாராட்டு பரிசுகளை பெற்றுள்ளேன்.
- தெர்மாகோல் அட்டை, குடை கம்பி, ஐஸ் குச்சி, சிறிய மூங்கில் குச்சி, ட்ரான்ஸ்மீட்டர், ரிசீவர் கொண்டு தயாரித்துள்ளேன்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் ஆர்.எம்.காலனி பகுதியை சேர்ந்த நல்லையா நடராஜன் மகன் பழனிவேல் ராஜன் (வயது 17). தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். இவர் சிறிய ரக விதை நடும் விமானத்தை தயாரித்து, திண்டுக்கல்லில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் பறக்க விட்டார். இது அங்கு வந்து பார்வையிட்ட மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்களை அதிகம் கவர்ந்தது.
இதுகுறித்து மாணவர் பழனிவேல் ராஜன் கூறுகையில், சிறு வயதிலிருந்தே விமானம் மற்றும் அது பறப்பது பற்றி ஆர்வங்கள் எழுந்து வந்தது. 9ம் வகுப்பு படிக்கும் போது இதில் ஆர்வம் அதிகரித்தது. கொரோனா காலத்தில் செல்போன் மூலம் வீட்டில் இருந்தபடியே படிக்கும் நிலை உருவானது. இதனால் செல்போன் பயன்படுத்துவது அதிகமானது. அப்போது யூடியூப் மூலம் விமானம் குறித்த பல தகவல்களை அறிந்து சேகரித்தேன். அதை தொடர்ந்து விமானம் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டேன்.
இதுவரை 15 சிறியரக விமான மாதிரிகளை தயாரித்து பறக்க விட்டு உள்ளேன். தமிழகம், கேரளம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் கண்காட்சியில் கலந்து கொண்டு பாராட்டு பரிசுகளை பெற்றுள்ளேன்.
தற்போது திண்டுக்கல்லில் நடைபெற்று வரும் அறிவியல் கண்காட்சியில் விதை நடும் சிறிய ரக விமானம் தயாரித்து பறக்க விட்டேன். தெர்மாகோல் அட்டை, குடை கம்பி, ஐஸ் குச்சி, சிறிய மூங்கில் குச்சி, ட்ரான்ஸ்மீட்டர், ரிசீவர் கொண்டு தயாரித்துள்ளேன். இதில் டிரான்ஸ் மீட்டர், ரிசீவர் மட்டும் ஆன்லைன் மூலம் வாங்கி பயன்படுத்தியுள்ளேன். ரூ.12 ஆயிரம் செலவில் ரிமோட்டுடன், 1850 மில்லியன் ஆம்ஸ் திறன் கொண்ட பேட்டரி, 850 கிராம் எடையுடன் 25 நிமிடம் வானில் பறக்கும் வகையில் சிறிய ரக விமான மாதிரியை தயாரித்தேன்.
அழியும் காடுகளை மீட்டு எடுக்க, விதை பந்து வீசும் வகையில் இதனை வடிவமைத்துள்ளேன். ஏரோநாட்டிக்கல் துறையில் சாதிக்க வேண்டும் என்பது எனது குறிக்கோள். கணித கம்ப்யூட்டர் அறிவியல் பாட பிரிவு எடுத்து படித்து வருகிறேன். யாருடைய வழிகாட்டுதலும் இல்லாமல், யூடியூப் பார்த்து செய்து முடித்துள்ளேன் என்றார். அவருக்கு ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
- நேற்று தங்கம் விலை சவரனுக்கு 2,560 ரூபாய் உயர்ந்து தங்க நகைகள் வாங்குபவர்களை அதிர்ச்சியடைய செய்தது.
- தங்கம் விலை கிராமுக்கு ரூ.630 உயர்ந்து ரூ.14,900-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை:
தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்றமும், இறக்கமுமாக இருந்து வருகிறது. கடந்த 29-ந் தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.16,800 ஆக அதிகரித்திருந்தது. அதன்பின் விலை இறங்குவதும், ஏறுவதுமாக இருந்தது.
சென்னையில் நேற்று முன்தினம் ஒரு கிராம் தங்கம் ரூ.13 ஆயிரத்து 950-க்கு விற்றது. கடந்த ஓரிரு நாட்களாக விலை குறைந்திருந்த நிலையில், தங்கத்தின் விலை நேற்று 2 முறை உயர்ந்தது. காலை கிராமுக்கு 80 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,030-க்கும் சவரனுக்கு 640 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,12,240-க்கும் விற்பனையானது.
மாலையில் கிராமுக்கு 240 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.14.270-க்கும் சவரனுக்கு ரூ.1,920 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,14,160-க்கு விற்பனையானது. மொத்தத்தில் நேற்று தங்கம் விலை சவரனுக்கு 2,560 ரூபாய் உயர்ந்து தங்க நகைகள் வாங்குபவர்களை அதிர்ச்சியடைய செய்தது.
இந்நிலையில் தங்கம் விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.5,040 உயர்ந்து ரூ.1,19,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.630 உயர்ந்து ரூ.14,900-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தை தொடர்ந்து வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.320-க்கும் பார் வெள்ளி 3 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
03-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,14,160
02-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,11,600
01-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,19,200
31-01-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,19,200
30-01-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,26,800
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
03-02-2026- ஒரு கிராம் ரூ.300
02-02-2026- ஒரு கிராம் ரூ.300
01-02-2026- ஒரு கிராம் ரூ.320
31-01-2026- ஒரு கிராம் ரூ.320
30-01-2026- ஒரு கிராம் ரூ.405
- தமிழக அரசியல், பொது நிகழ்வுகள்...
- சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.
தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்...
- தூய்மைக் காவலர்கள் ஊராட்சியை தூய்மையாகவும் சுகாதாரமாகவும் பராமரித்தல் போன்ற முக்கியப் பணிகளை மேற்கொள்கின்றனர்.
- கிராம ஊராட்சிகளில் பணியாற்றும் தூய்மைக் காவலர்களின் மாதாந்திர மதிப்பூதியம் உயர்த்தப்பட வேண்டும் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.
சென்னை:
தமிழகத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் தூய்மையாக வைத்திருக்கும் வகையில், தூய்மைக் காவலர்கள் கிராம ஊராட்சிகளில் வீடு வீடாகச் சென்று குப்பைகளைச் சேகரித்து, மக்கும் மற்றும் மக்காத குப்பைகளாகத் தரம் பிரித்து, உரமாக்குதல், நெகிழிக் கழிவுகளை மறுசுழற்சிக்கு அனுப்புதல் மற்றும் ஊராட்சியை தூய்மையாகவும் சுகாதாரமாகவும் பராமரித்தல் போன்ற முக்கியப் பணிகளை மேற்கொள்கின்றனர். திடக்கழிவு மேலாண்மையில் இவர்களின் பங்கு மிக முக்கியமானது.
கிராம ஊராட்சிகளில் பணியாற்றும் தூய்மைக் காவலர்களின் மாதாந்திர மதிப்பூதியம் உயர்த்தப்பட வேண்டும் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் பணியாற்றும் தூய்மைக் காவலர்களுக்கான மதிப்பூதியம் ரூ.5,000-ல் இருந்து ரூ.6,000ஆக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதற்காக ரூ.417 கோடி கூடுதல் நிதியை ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது.
- விருந்தில் சிறுவர், சிறுமிகள் அமர்ந்து சாப்பிடுவதற்காக சென்றபோது அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக புகார் எழுந்தது.
- ஓட்டலுக்கு அழைத்துச்சென்று உணவு வாங்கி கொடுத்ததாகவும் சமூக வலைத்தளங்களில் வீடியோ காட்சிகள் பரவியது.
நெல்லை:
பேரறிஞர் அண்ணா நினைவு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி நெல்லையப்பர் கோவிலில் மதியம் சமபந்தி விருந்து நடைபெற்றது. இதில் முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.
இந்த விருந்தில் சிறுவர், சிறுமிகள் அமர்ந்து சாப்பிடுவதற்காக சென்றபோது அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக சிறுவர், சிறுமிகள் பேசும் வீடியோ காட்சிகளும், அவர்களை ஓட்டலுக்கு அழைத்துச்சென்று உணவு வாங்கி கொடுத்ததாகவும் சமூக வலைத்தளங்களில் வீடியோ காட்சிகள் பரவியது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக கோவில் நிர்வாகம் சார்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில் கூறியிருப்பதாவது:-
நெல்லையப்பர்- காந்திமதி அம்பாள் கோவிலில் அண்ணா நினைவு தினத்தன்று நடைபெற்ற சமபந்தியில் சபாநாயகர், மேயர், துணை மேயர், முன்னாள் அமைச்சர், மண்டலகுழுத் தலைவர், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், அறங்காவலர்குழுத் தலைவர், அறங்காவலர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வை ஒருவர் முகநூல் பக்கத்தில், கோவில் சமபந்தி விருந்தில் பேட்டையைச் சேர்ந்த சிறுவர், சிறுமிகள் புறக்கணிக்கப்பட்டனர் என்று தவறாக வதந்திகளை பரப்பி வருகிறார். சமபந்தி விருந்து என்பது பொதுவானது, இதில் யாரும் புறக்கணிக்கப்படவில்லை, வந்திருந்த 792 பயனாளிகள் உணவு சாப்பிட்டு விட்டு தான் சென்றனர். தனிநபர் பெயர் வாங்குவதற்காக கோவில் நிர்வாகம் தொடர்பாக தவறான செய்திகளை பதிவிட்டு வருகிறார். அவர் முகநூலில் பதிவிட்ட கருத்துகள் அனைத்தும் உண்மைக்கு புறம்பானவை என்று கோவில் நிர்வாகம் சார்பில் மறுக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- சீர்காழி மற்றும் தரங்கம்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2-ந்தேதி காலை அதிக சத்தம் உணரப்பட்டதாக பொதுமக்களால் தெரிவிக்கப்பட்டது.
- இந்த விவகாரம் குறித்து தமிழக அரசின் சமூக ஊடக கணக்கான தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது.
சீர்காழி மற்றும் தரங்கம்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2-ந்தேதி காலை அதிக சத்தம் உணரப்பட்டதாக பொதுமக்களால் தெரிவிக்கப்பட்டது.
இந்த விவகாரம் குறித்து தமிழக அரசின் சமூக ஊடக கணக்கான தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது.
வானத்திலிருந்து திடீர் சத்தம் கேட்டதால் மயிலாடுதுறை மக்கள் மீண்டும் அச்சத்தில் உள்ளனர் என்று குறிப்பிட்டு ஒரு தகவல் சமூக வலைத்தளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. இது பொதுமக்கள் இடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் குறித்து தமிழக அரசின் சமூக ஊடக கணக்கான தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்து வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டு உள்ளதாவது:-
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அளித்துள்ள விளக்கத்தில், "மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி மற்றும் தரங்கம்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2-ந்தேதி காலை 10.20 மணி முதல் 10.30 மணி வரை அதிக சத்தம் உணரப்பட்டதாக பொதுமக்களால் தெரிவிக்கப்பட்டது. மேற்கண்ட சத்தம் 'ஜெட்' பயிற்சி விமான சத்தம் என்பதையும், நில அதிர்வு அல்லது நிலநடுக்கம் எதுவும் மேற்கண்ட பகுதிகளில் ஏற்படவில்லை என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்'' என்று குறிப்பிட்டுள்ளார். தவறான தகவலைப் பரப்பாதீர்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






