search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அடுத்த மாதம் நடைபெறும் விடுதலை சிறுத்தைகள் மாநாட்டில் முதலமைச்சர் பங்கேற்கிறார்- திருமாவளவன்
    X

    அடுத்த மாதம் நடைபெறும் விடுதலை சிறுத்தைகள் மாநாட்டில் முதலமைச்சர் பங்கேற்கிறார்- திருமாவளவன்

    • தென் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பின் காரணமாக மாநாடு தள்ளி வைக்கப்பட்டது.
    • மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனின் பேச்சு தி.மு.க மீதான காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடாகும்.

    சென்னை:

    சென்னை தலைமை செயலகத்தில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சந்தித்து பேசினார்.

    பின்னர் திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது:

    விடுதலை சிறுத்தைகள் சார்பில் டிசம்பர் 29-ந்தேதி வெல்லும் ஜனநாயகம் மாநாடு நடத்த திட்டமிடப்பட்டது. தென் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பின் காரணமாக மாநாடு தள்ளி வைக்கப்பட்டது.

    அதன்படி திருச்சியில் ஜனவரி 26-ந்தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.மாநாட்டுக்கு முதல்- அமைச்சரிடம் தேதியை முடிவு செய்வதற்காக இன்று அவரை சந்தித்தேன். அவரும் வருவதற்கு ஒப்புக்கொண்டுள்ளார்.

    மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனின் பேச்சு தி.மு.க மீதான காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடாகும்.

    தமிழ்நாட்டு மக்களின் துயரத்தை விட தமிழ்நாட்டில் தி.மு.க.வை விமர்சிக்க வேண்டும் என்பதில் தான் அவர் குறியாக இருக்கிறார்.

    இதனால் தொடர்ந்து இப்படி கருத்துக்களை முன் வைத்து வருகிறார். அவர் மட்டுமல்ல பா.ஜ.க.வை சேர்ந்த அனைவருமே இந்த அடிப்படையில் தான் செயல்படுகிறார்கள். குறிப்பாக அ.தி.மு.க தமிழ்நாட்டின் எதிர்க்கட்சி அல்ல. பா.ஜ.க தான் எதிர்சட்சி என்பதை என்பதை காட்டிக்கொள்ளும் முனைப்பும், முயற்சியும் தான் அவர்களின் நடவடிக்கை மேலோங்கி இருக்கிறது.

    மாநில அரசு கோரிய 21 ஆயிரம் கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகிற 29-ந்தேதி மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×