search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பொது சிவில் சட்டத்துக்கு பாமக எதிர்ப்பு
    X

    பொது சிவில் சட்டத்துக்கு பாமக எதிர்ப்பு

    • பொது சிவில் சட்டத்தை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
    • இந்தியாவின் ஒற்றுமைக்கும், வளர்ச்சிக்கும் பெரும் தடையாக இருக்கும் என்பதால் பொது சிவில் சட்டத்திற்கான முயற்சியை சட்ட ஆணையம் கைவிட வேண்டும்.

    சென்னை:

    பொது சிவில் சட்டம் தொடர்பாக மத்திய சட்ட ஆணையத்திற்கு பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    இந்தியாவின் பெருமையே வேற்றுமையில் ஒற்றுமை காண்பதுதான் என்று கூறிவிட்டு, ஒற்றை இந்தியா, ஒற்றை மொழி, ஒற்றை சிவில் சட்டம் ஆகியவற்றைக் கொண்டு வருவது இந்தியாவின் அடையாளமான பன்மைத்தன்மையை சிதைத்துவிடும்! இதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. பொது சிவில் சட்டம் என்பது சிறுபான்மை சமுதாயத்தின் உரிமைகளை பறிப்பதுடன், இந்தியாவின் ஒற்றுமைக்கும், வளர்ச்சிக்கும் பெரும் தடையாக இருக்கும் என்பதால் அதற்கான முயற்சியை சட்ட ஆணையம் கைவிட வேண்டும்.

    இவ்வாறு அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

    Next Story
    ×