search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொது சிவில் சட்டம்"

    • ரெயில்வே துறைக்கு தனி நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும்.
    • குடியுரிமை திருத்த சட்டம் ரத்து செய்யப்படும்.

    ரெயில்வே துறைக்கு தனி நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும்.சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தி.மு.க. தேர்தல் அறிக்கையை மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். இதன்பின் பேசிய மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-

    * கனிமொழி தலைமையிலான குழு மாநிலம் முழுவதும் பல தரப்பினரை சந்தித்து அறிக்கை தயாரித்துள்ளனர்.

    * திமுக தேர்தல் அறிக்கை மட்டுமில்லை... தமிழக மக்களின் தேர்தலை அறிக்கை.

    * பத்து வருட பாஜக ஆட்சி இந்தியாவை பாழ்ப்படுத்தியுள்ளது.

    * கொடுத்த வாக்குறுதிகள் எதையும் பாஜக அரசு நிறைவேற்றவில்லை.

    * மத்தியில் அமைய போகும், ஆட்சி மாநிலங்களை அரவணைக்கும் ஆட்சியாக அமையவேண்டும் என்றார்.

    இதன்பின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்களை அறிவித்தார். அதன் விவரம் வருமாறு:-

    * ஆளுநருக்கு அதிக அதிகாரம் வழங்கும் 361 பிரிவு நீக்கப்படும்.

    * மாநிலங்கள் சுயாட்சி பெறும் வகையில் அரசியலமைப்பு சட்டம் திருத்தப்படும்.

    * நாடு முழுவதும் குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும்.

    * குடியுரிமை திருத்த சட்டம் ரத்து செய்யப்படும்.

    * காலை உணவு திட்டம் நாடு முழுவதும் அமல்படுத்தப்படும்

    * புதிய கல்வி கொள்கை ரத்து செய்யப்படும்.

    * திருக்குறள் தேசிய நூலாக அறிவிக்கப்படும்.

    * சிலிண்டர் விலை 500 ரூபாய், பெட்ரோல் விலை 75 ரூபாய், டீசல் விலை 65 ரூபாயா நிர்ணயிக்கப்படும்.

    * ரெயில்வே துறைக்கு தனி நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும்.

    * தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகள் முற்றிலுமாக அகற்றப்படும்.

    • உத்தரகாண்ட் மாநிலம் கடந்த மாதம் 7-ந்தேதி சட்ட மசோதாவை நிறைவேற்றியது.
    • ஆளுநர் பிப்ரவரி 29-ந்தேதி ஜனாதிபதி ஒப்புதலுக்காக அனுப்பி வைத்தார்.

    உத்தரகாண்ட் மாநில அரசு கடந்த பிப்ரவரி 7-ந்தேதி பொது சிவில் சட்ட மசோதாவை சட்டமன்றத்தில் தாக்கல் செய்து நிறைவேற்றியது. இதற்காக சிறப்பு சட்டமன்ற கூட்டம் கூட்டப்பட்டது.

    முதல்வர் புஷ்கர் சிங் தாமி அரசால் கொண்டு வரப்பட்ட இந்த மசோதாவிற்கு, போதுமான சட்டமன்ற உறுப்பினர்கள் சம்மதம் தெரிவித்ததால் மசோதா நிறைவேற்றப்பட்டது.

    நிறைவேற்றப்பட்ட மசோதா ஆளுநர் குர்மித் சிங் ஒப்புதலுக்கான அனுப்பி வைக்கப்பட்டது. ஆளுநர் ஒப்புதல் அளித்து ஜனாதிபதிக்கு கடந்த மாதம் 29-ந்தேதி அனுப்பி வைத்தார்.

    இந்த நிலையில் ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளார். இதன்மூலம் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தும் முதல் மாநிலமாகிறது உத்தரகாண்ட்.

    மசோதா நிறைவேறியதும் உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி "உத்தரகாண்ட் மாநில வரலாற்றில் இந்த நாள் வரலாற்று சிறப்புமிக்க நாள்" எனத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    பொது சிவில் சட்டத்தின்படி திருமணம், விவாகரத்து, பரம்பரை மற்றும் சொத்து உரிமை ஆகியவற்றில் அனைத்து பிரிவினருக்கும் ஒரே மாதிரயான சட்ட விதிகள் பின்பற்றப்படும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பொது சிவில் சட்டம் கொண்டு வந்ததற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
    • உத்தரகாண்ட் மாநிலத்தில் பொது சிவில் சட்டம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது.

    சென்னை:

    பொது சிவில் சட்டத்தை மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசு அனைத்து மாநிலங்களிலும் நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது.

    நாட்டிலேயே உத்தரகாண்ட் மாநிலத்தில் இந்த சட்டம் முதன்முதலாக கொண்டு வரப்பட்டுள்ளது. அம்மாநில சட்டசபையில் பொது சிவில் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டு உள்ளது.

    பொது சிவில் சட்டம் கொண்டு வந்ததற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

    இந்த நிலையில் கார்த்தி சிதம்பரம் எம்.பி. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவு வெளியிட்டு உள்ளார். அதில் கூறியிருப்ப தாவது:-

    உத்தரகாண்ட் மாநிலத்தில் பொது சிவில் சட்டம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. இதன்மூலம் 'இந்துத்துவா' பரிசோதனை கூடமாக உத்தரகாண்ட் உருவாக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

    • இந்தியாவில் முதன்முறையாக உத்தரகாண்ட் மாநில சட்டமன்றத்தில் நேற்று பொது சிவில் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
    • 37 உறவு முறைகளில் திருமணம் செய்து கொள்ள தடைவிதிக்கப்பட்டுள்ளது.

    இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் குற்றவியல் சட்டங்கள் மற்றும் தண்டனை சட்டங்கள் அனைத்து மதத்தினருக்கும் பொதுவாக உள்ளது. ஆனால், தனி நபர் சார்ந்த சிவில் சட்டங்கள் பல்வேறு மதத்தினருக்கும் தனித்தனியாக உள்ளது.

    அனைத்து மதத்தினருக்கும் பொதுவான ஒரு சிவில் சட்டத்தை கொண்டு வருவதாக பா.ஜ.க. பல வருடங்களாக கூறி வருகிறது. நாடு முழுவதும் பொது சிவில் சட்டம் (Uniform Civil Code) அமல்படுத்தும் முயற்சியில் ஆளும் பா.ஜ.க. கருத்து கேட்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

    இந்த நிலையில் இந்தியாவில் முதன்முறையாக உத்தரகாண்ட் மாநில சட்டமன்றத்தில் நேற்று பொது சிவில் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதில் அத்தை/மாமன் மகளை திருமணம் செய்து கொள்ள முடியாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், தடைவிதிக்கப்பட்ட உறவின்முறை வருமாறு:-

    1. தாய்

    2. வளர்ப்புத்தாய்

    3. தாயாரின் தாய்

    4. வளர்ப்பு பாட்டி

    5. பூட்டி

    6. வளர்ப்பு பாட்டியின் தாயார்

    7. அம்மாவுடைய அப்பாவின் தாயார்

    8. தந்தையின் தாயார்

    9. அப்பா, அம்மா வழி பாட்டி

    10. அப்பா, அப்பா வழி பாட்டி

    11. மகள்

    12. மகனின் விதவை மனைவி

    13. மகளின் மகள் (பேத்தி)

    14. மகளுடைய மகனின் விதவை மனைவி

    15. மகனின் மகள்

    16. மகனுடைய மகனின் விதவை மனைவி

    17. மகளுடைய மகளின் மகள்

    18. மகளுடைய மகளின் மகனுடைய விதவை மனைவி

    19. மகளுடைய மகனின் மகள்

    20. மகளுடைய மகனின் மகனுடைய விதவை மனைவி

    21. மகளுடைய மகளின் மகள்

    22. மகனுடைய மகளின் மகனுடைய விதவை மனைவி

    23. மகளுடைய மகனின் மகள்

    24. சகோதரி

    25. சகோதரியின் மகள்

    26. சசோதரனின் மகள்

    27. அம்மாவின் சகோதரி

    28. அப்பாவின் சகோதரி

    29. அப்பாவின் சகோதரர் மகள்

    30. தந்தையின் சகோதரியின் மகள்

    31. தாயாரின் சகோதரியின் மகள்

    32. தாயாரின் சகோதரியின் மகள்

    (Widow- விதவை, என்பது விவாகரத்து செய்யப்பட்ட மனைவியையும் உள்ளடக்கும்)

    • 2022 தேர்தலில் பொது சிவில் சட்டம் தொடர்பாக வாக்குறுதி அளித்தது பா.ஜ.க.
    • கவர்னரின் ஒப்புதல் கிடைத்ததும் இந்த மசோதா சட்டமாகி விடும்

    இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் குற்றவியல் சட்டங்கள் மற்றும் தண்டனை சட்டங்கள் அனைத்து மதத்தினருக்கும் பொதுவாக உள்ளது. ஆனால், தனி நபர் சார்ந்த சிவில் சட்டங்கள் பல்வேறு மதத்தினருக்கும் தனித்தனியாக உள்ளது.

    அனைத்து மதத்தினருக்கும் பொதுவான ஒரு சிவில் சட்டத்தை கொண்டு வருவதாக பா.ஜ.க. பல வருடங்களாக கூறி வருகிறது.

    நாடு முழுவதும் பொது சிவில் சட்டம் (Uniform Civil Code) அமல்படுத்தும் முயற்சியில் ஆளும் பா.ஜ.க. கருத்து கேட்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

    இப்பின்னணியில், 2022ல் உத்தரகாண்ட் சட்டசபை தேர்தலின் போது பா.ஜ.க., அதன் தேர்தல் அறிக்கையில் பொது சிவில் சட்டம் நிறைவேற்றப்படும் என வாக்குறுதி வழங்கியிருந்தது. அப்போதைய தேர்தலில் பா.ஜ.க. வென்றது.

    தொடர்ந்து, 2022ல் உத்தரகாண்ட் மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி, பொது சிவில் சட்ட முன்வடிவை உருவாக்க ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையில் 5 பேர் கொண்ட ஒரு குழுவை அமைத்தார்.

    இக்குழு நீண்ட ஆய்வுகளுக்கு பிறகு உருவாக்கிய ஒரு சட்ட வடிவை அரசிடம் வழங்கியது.

    இந்நிலையில், நேற்று கூட்டப்பட்ட 4-நாள் சிறப்பு கூட்டத்தொடரில், உத்தரகாண்ட் மாநில சட்டசபையில் பொது சிவில் சட்ட மசோதாவை முதல்வர் புஷ்கர் சிங் தாமி தாக்கல் செய்தார்.

    இன்று, இந்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

    இனி கவர்னரின் பார்வைக்கு அனுப்பப்பட்டு அவரது ஒப்புதல் கிடைத்ததும் சட்டமாகி விடும்.

    மசோதா வெற்றிகரமாக சட்டசபையில் நிறைவேறியதை பா.ஜ.க.வினர் சட்டசபைக்கு வெளியே கொண்டாடி வருகின்றனர்.

    சிவில் விஷயங்களில் மதங்களுக்கு ஏற்ப தனிச்சட்டங்கள் இல்லாமல், அனைத்து இந்தியர்களுக்கும் ஒரே மாதிரியான சிவில் சட்டத்தை கொண்டதுதான் பொது சிவில் சட்டம்.

    பொது சிவில் சட்டத்தை நிறைவேற்றிய முதல் மாநிலமாக உத்தரகாண்ட் மாநிலம் ஆனது.

    இதனால், வரும் ஏப்ரல்-மே மாதம் நடைபெறவுள்ள பாராளுமன்றத்திற்கான பொதுத் தேர்தலிலும் நாடு முழுவதும் பா.ஜ.க. அணியினருக்கும், காங்கிரஸை உள்ளடக்கிய எதிர் அணியினருக்கும், இரு அணிகளிலும் சேராத கட்சிகளுக்கும், பொது சிவில் சட்டம் ஒரு விவாத பொருளாக மாறப் போவது உறுதி என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

    • பொது சிவில் சட்டம் அமலாகும் என தேர்தல் அறிக்கையில் பா.ஜ.க. வாக்குறுதி அளித்தது
    • பொது சிவில் சட்டம் தொடர்பாக அரசு 5-பேர் கொண்ட குழுவை அமைத்தது

    இன்று உத்தரகாண்ட் மாநில சட்டசபையில் பொது சிவில் சட்ட (Uniform Civil Code) மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

    இது சட்டமாக மாறும் போது இந்தியாவிலேயே பொது சிவில் சட்டத்தை முதலில் அமல்படுத்திய மாநிலம் எனும் பெயர் உத்தரகாண்ட் மாநிலத்திற்கு கிடைக்கும்.

    சட்டசபை தேர்தலுக்கு முன் தனது தேர்தல் அறிக்கையில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததும் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    தொடர்ந்து ஆட்சிக்கு வந்ததும் இதன் சாத்தியக்கூறுகள் மற்றும் சாதக-பாதகங்கள் மற்றும் சட்ட நுணுக்கங்கள் குறித்து ஆராய 5 பேர் கொண்ட குழுவை பா.ஜ.க. அரசு அமைத்தது.

    இக்குழு அறித்த அறிக்கையின் பேரில் முதல்வர் புஷ்கர் சிங் தாமி அரசு நேற்று இதற்கு ஒப்புதல் வழங்கியது.

    இன்று இச்சட்ட மசோதாவை தாக்கல் செய்ய கூட்டப்பட்ட சிறப்பு கூட்டத்தொடரில் முதலமைச்சர் தாமி மசோதாவை தாக்கல் செய்தார். அப்போது ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்கள் "ஜெய் ஸ்ரீராம்" என உற்சாகமாக கோஷம் போட்டனர்.

    குடிமக்களுக்கான தனிநபர் சட்டம் மதம் மற்றும் பாலினம் கடந்து ஒரே தளத்தில் அமையும் வகையில் இருக்க அமைக்கப்பட்டுள்ள இந்த மசோதாவின்படி சொத்துக்களில் ஆண் மற்றும் பெண்ணுக்கு சம உரிமை, தத்து எடுக்கும் குழந்தைக்கும் சொத்துக்களில் சம உரிமை, பலதார திருமண தடை, குழந்தை திருமண தடை, ஒரே திருமண வயது உள்ளிட்ட பல முக்கிய அம்சங்கள் இடம் பெறுகின்றன.

    மசோதா தாக்கலான நிலையில் அவை நடவடிக்கைகள் பிற்பகல் 02:00 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.


    உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஏற்பாடு செய்திருந்த உத்தராயணி கவுதிக் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதில் ஏதேனும் ஒரு மாநிலம் முதலிடம் பெறப்போகிறது என்றால் அது உத்தரகாண்டாக தான் இருக்கும் என நான் நினைக்கிறேன் என்றார்.

    2022ம் ஆண்டு நடைபெற்ற மாநில சட்டமன்ற தேர்தலின்போது பாஜக அளித்த முக்கிய தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்று பொது சிவில் சட்டம். உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்த பிறகு, தனது தலைமையிலான முதல் அமைச்சரவை கூட்டத்திலேயே பொது சிவில் சட்டம் உருவாக்க ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ரஞ்சன பிரகாஷ் தேசாய் தலைமையிலான ஒரு குழுவை அமைத்து ஒப்புதல் அளித்தார்.

    கடந்த 5 ஆண்டுகளில் உத்தரகாண்ட் மாநிலம் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளது. உத்தர பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் இடையேயான உறவுகளைப் பற்றி குறிப்பிட்ட அவர், ஆந்திராவில் இருந்து தெலங்கானா பிரிக்கப்பட்ட பிறகு இரு மாநிலங்களுக்கும் இடையே தீர்க்கப்படாத பல பிரச்னைகள் இருந்து வருகிறது. ஆனால் உத்தரபிரதேசம் பிரிக்கப்பட்ட பிறகு, இதுபோன்ற பிரச்னைகள் நடக்கவில்லை என்றார்.

    உத்தரபிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் இடையேயான உறவு வலுவாக உள்ளதாக தெரிவித்த அமைச்சர் ராஜ்நாத் சிங், இரு மாநிலங்களிலும் வசிக்கும் மக்களுக்கு இடையில் எந்த கருத்து வேறுபாடும் இல்லாமல் உறவுகள் வலுபெற்று வருகிறது என்றார்.

    • பாலின சம உரிமை, பெண்களுக்கு சொத்தில் சம பங்கு ஆகியவை இதில் அடங்கும்
    • இருதார முறை தடை செய்யப்படும் என தெரிகிறது

    நவம்பர் 12, நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.

    உத்தரகாண்ட் மாநிலத்தில் தீபாவளி பண்டிகைக்கு பிறகு ஒரு வாரத்தில் சட்டசபையின் சிறப்பு தொடர் கூட்டப்பட உள்ளது.

    இந்த கூட்டத்தொடரிலேயே பொது சிவில் சட்டம் (Uniform Civil Code) அமல்படுத்தும் முயற்சி எடுக்கப்பட உள்ளதாகவும், அதற்கான மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இந்த மசோதாவிற்கான வரைவில் இடம்பெறும் பல அம்சங்கள் குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளன.

    அனைத்து மதங்களுக்கும் பொதுவான பாலின சம உரிமை, பூர்வீக சொத்தில் பெண்களுக்கு சம உரிமை உட்பட திருமணம், விவாகரத்து, பரம்பரை சொத்துரிமை, தத்து எடுத்தல் ஆகிய முக்கிய விஷயங்கள் இந்த சட்டத்தின் மைய பொருளாக இருப்பதாக தெரிகிறது.

    பெண்களுக்கான குறைந்தபட்ச திருமண வயது 18லிருந்து 21 என அதிகரிக்கப்படும் என முன்னர் தகவல்கள் வெளியாகி இருந்தன. ஆனால், திருமண வயது 18 என்பதில் இந்த சட்டத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என தற்போது தெரிகிறது.

    இருதார மற்றும் பலதார தடை, 'லிவ்-இன்' வாழ்கை முறையை கட்டாய பதிவு செய்தல் ஆகியவை இதில் அடங்கும் என்பதால் இந்த மசோதா சட்டமாவதற்கு முன் பல காரசார விவாதங்களுக்கு வழிவகுக்கும் என நம்பப்படுகிறது.

    • கேரள மாநில சட்டசபைக் கூட்டத் தொடர் கடந்த 7-ம் தேதி தொடங்கியது.
    • பொது சிவில் சட்டத்திற்கு எதிரான தீர்மானம் கேரள சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநில சட்டசபைக் கூட்டத்தொடர் கடந்த 7-ம் தேதி தொடங்கியது. தொடரின் முதல் நாளில் முன்னாள் முதல் மந்திரி உம்மன் சாண்டியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அவை ஒத்திவைக்கப்பட்டது.

    இந்நிலையில், நேற்றைய தினம் கேரள சட்டசபை கூடியது. அப்போது மத்திய அரசின் பொது சிவில் சட்டத்திற்கு எதிராக முதல் மந்திரி பினராயி விஜயன் தலைமையிலான கேரள அரசு தீர்மானம் கொண்டு வந்தது.

    இந்தத் தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது பேசிய பினராயி விஜயன், பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்பட்டால் இந்திய அரசியலமைப்பின் மதச்சார்பற்ற தன்மை வீழ்த்தப்படும். உண்மையான பிரச்சினைகளில் மக்களின் கவனத்தை பா.ஜ.க. திசை திருப்பி வருகிறது என குற்றம் சாட்டினார்.

    கேரள அரசு கொண்டு வந்த தீர்மானத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் வி.டி.சதீசன் ஆதரவு தெரிவித்தார். இதையடுத்து பொது சிவில் சட்டத்திற்கு எதிரான தீர்மானம் கேரள சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

    • பொது சிவில் சட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று ம.ம.க. கூறியது.
    • பொது சிவில் சட்டம் இந்தியாவிற்கு ஏற்றது இல்லை.

    மண்டபம்

    ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தில் மனிதநேய மக்கள் கட்சி மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. த.மு.மு.க. மாநில துணை பொது செயலாளர் சலிமுல்லாகான் தலைமை வகித்தார். ம.ம.க. மாநில தலைவர் ஜவாஹிருல்லா, செந்தில்வேல், வக்கீல் மதிவதனி ஆகியோர் பேசி னர்.

    பொதுகூட்டத்தில் தமிழக அரசு நிலத்தின் வழி காட்டி மதிப்பினை கடுமை யாக உயர்த்தி உள்ளது.அதை குறைக்க நடவடிக்கை வேண்டும்.நெடுந்தொலை வில் இருந்து வரும் கனரக வாகனங்கள் அதிகப்படி யான டோல் கட்டணம் செலுத்துவதால் வணிகர்கள் மிகவும் பாதிப்புக்கு உள்ளா கின்றனர். சுங்க கட்டணத்தை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சிறு குறு தொழில் நிறுவ னங்கள் மீது மறைமுகமாக மின்சார கட்டணச்சுமை ஏற்றப்பட்டுள்ளதால் நலி வடைந்த நிலையில் உள்ளது.மின்சார கட்டணங்களை ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும். பொது சிவில் சட்டம் இந்தியாவிற்கு ஏற்றது இல்லை. அந்த சட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    கூட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள் உட்பட ஏராளமானோர் மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

    • பெரும்பாலான எதிர்க்கட்சிகள் பொது சிவில் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
    • பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் இதுகுறித்து இன்னும் தனது நிலைப்பாட்டு தெரிவிக்கவில்லை.

    பிரதமர் நரேந்திர மோடி சென்ற மாதம் மத்திய பிரதேசத்தில் உரையாற்றும்போது, பொது சிவில் சட்டம் கொண்டு வர வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி பேசினார். அவரது கருத்துக்கு நாடெங்கிலும் எதிர்ப்பும் ஆதரவும் காணப்படுகிறது.

    நாடாளுமன்றத்திற்கான பொது தேர்தல் 2024-ல் வரவிருக்கும் நிலையில் பா.ஜ.க. இதனை தனது தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாக அறிவிக்கும் என அரசியல் விமர்சகர்களும், எதிர்க்கட்சியினரும் எதிர்பார்க்கின்றனர். இதனால் பா.ஜ.க.வை எதிர்க்கும் கட்சிகள் தங்கள் நிலைப்பாட்டை மக்களுக்கு விளக்க முயற்சிக்கின்றன.

    பொது சிவில் சட்டம் குறித்த அரசின் ஒரு வரைவு அறிக்கை (draft) வரும் வரையில், அது குறித்து காங்கிரஸ் கருத்து எதுவும் கூறப்போவதில்லை என தகவல்கள் வெளியாகின.

    இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் ஒரு உயர்மட்ட ஆலோசனையை இன்று நடத்துகின்றனர்.

    இதில் ப.சிதம்பரம், சல்மான் குர்ஷித், விவேக் தன்கா,மனிஷ் திவாரி, கே.டி.எஸ். துள்சி மற்றும் அபிஷேக் மனு சிங்க்வி உட்பட் மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.

    பொது சிவில் சட்டத்திற்கு முன்மொழிபவர்கள், நாடு முழுவதும் உள்ள அனைத்து மதத்தை சேர்ந்தவர்களுக்கும் திருமணம், பரம்பரை சொத்து, மற்றும் தத்தெடுத்தல் போன்ற சிவில் விஷயங்களில் ஒரே சட்டம் இருக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.

    நாட்டின் சட்ட மற்றும் நீதித்துறையின் 2016 ஜூன் 17 வெளியிட்ட அறிவுறுத்தலின்படி இந்திய சட்ட ஆணையம் இதனை ஆராய்ந்தது.

    பொது சிவில் சட்டம் குறித்து பொதுமக்கள், மத அமைப்புகள், அரசியல் கட்சிகள் கருத்து கூறலாம் என இந்திய சட்ட ஆணையம் கடந்த மாதம் 14-ம் தேதி பொது நோட்டீஸ் வெளியிட்டது. கருத்து தெரிவிக்க ஒரு மாதம் கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, மத்திய சட்ட ஆணையத்திற்கு இதுவரை 50 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கருத்து தெரிவித்துள்ளனர்.

    இது சம்பந்தமாக சட்ட கமிஷன் அரசுக்கு ஆலோசனைகளை கூறலாமே தவிர அரசாங்கத்தை கட்டாயப்படுத்தி இதனை அமல்படுத்த கூறமுடியாது. இச்சட்டம் கொண்டு வர நாட்டின் சூழ்நிலை சாதகமாக இருக்கிறது என அரசாங்கம் கருதினால், நாடாளுமன்ற ஒப்புதல் பெற்று இதனை கொண்டு வரலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

    பொது தேர்தல் நெருங்கும்போது, இது சம்பந்தமான விவாதங்கள் இன்னும் வலுப்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • பொது சிவில் சட்டத்தை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
    • இந்தியாவின் ஒற்றுமைக்கும், வளர்ச்சிக்கும் பெரும் தடையாக இருக்கும் என்பதால் பொது சிவில் சட்டத்திற்கான முயற்சியை சட்ட ஆணையம் கைவிட வேண்டும்.

    சென்னை:

    பொது சிவில் சட்டம் தொடர்பாக மத்திய சட்ட ஆணையத்திற்கு பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    இந்தியாவின் பெருமையே வேற்றுமையில் ஒற்றுமை காண்பதுதான் என்று கூறிவிட்டு, ஒற்றை இந்தியா, ஒற்றை மொழி, ஒற்றை சிவில் சட்டம் ஆகியவற்றைக் கொண்டு வருவது இந்தியாவின் அடையாளமான பன்மைத்தன்மையை சிதைத்துவிடும்! இதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. பொது சிவில் சட்டம் என்பது சிறுபான்மை சமுதாயத்தின் உரிமைகளை பறிப்பதுடன், இந்தியாவின் ஒற்றுமைக்கும், வளர்ச்சிக்கும் பெரும் தடையாக இருக்கும் என்பதால் அதற்கான முயற்சியை சட்ட ஆணையம் கைவிட வேண்டும்.

    இவ்வாறு அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

    ×