search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்ற தமிழகத்திற்கு ஒரு சேவகனாக வந்துள்ளேன்: பிரதமர் மோடி
    X

    வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்ற தமிழகத்திற்கு ஒரு சேவகனாக வந்துள்ளேன்: பிரதமர் மோடி

    • இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் கப்பல் காசியில் பயன்படுத்தப்பட இருக்கிறது.
    • 75 கலங்கரை விளக்கங்கள் சுற்றுலா தலமாகி உள்ளது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் ரூ.17,300 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்து பிரதமர் மோடி உரையாற்றினார். தமிழில் வணக்கம் என்று கூறி பிரதமர் மோடி உரையை தொடங்கினார். அப்போது அவர் கூறியதாவது:

    * இன்று தொடங்கப்பட்டுள்ள திட்டங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு மிக முக்கியமானது.

    * இந்த திட்டங்களால் தமிழகத்தில் லட்சக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

    * கடல் வாணிபத்திற்கு புத்துயிர் அளிக்கப்பட்டுள்ளது.

    * இன்று தமிழ் மக்களுக்கும், நாட்டு மக்களுக்கும் ஒரு உண்மையை சொல்ல விரும்புகிறேன். நான் நேரடியாக குற்றம்சாட்ட விரும்புகிறேன்.

    * இன்று தமிழகத்தில் ஆட்சியில் இருப்பவர்கள், டெல்லியில் ஆட்சியில் இருந்தார்கள்.

    * மத்தியில் ஆட்சியில் இருந்தபோது தமிழகத்தின் வளர்ச்சிக்காக திமுக எதையும் செய்யவில்லை.

    * இன்று இந்த வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்ற தமிழகத்திற்கு ஒரு சேவகனாக வந்துள்ளேன்.

    * இன்று இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் கப்பல் தன் பயணத்தை தொடங்கி இருக்கிறது.

    * இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் கப்பல் காசியில் பயன்படுத்தப்பட இருக்கிறது.

    * இந்த திட்டங்களால் தூத்துக்குடியும், தமிழகமும் பசுமை எரிசக்தியின் மையமாக மாறும்.

    * இன்று இங்கே சாலை, ரெயில் திட்டங்கள் சிலவும் தொடங்கப்பட்டு இருக்கின்றன.

    * தென் தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு புதிய ரெயில் தொடங்கப்பட இருக்கின்றன.

    * புதிய ரெயில்களால் பயண நேரம் குறையும், சுற்றுலா பயணிகள் அதிகரிப்பர்.

    * ரெயில்வே, சாலை, நீர்வழி போக்குவரத்து ஆகியவற்றின் நோக்கம் ஒன்றுதான். இந்த திட்டங்களால் தமிழகம் வளர்ச்சி அடையும், நாடு வளர்ச்சி அடையும் என்பதே நோக்கம்.

    * இந்த திட்டங்களுக்காக தமிழக மக்களுக்கு எனது பாராட்டு, வாழ்த்துகளை தெரிவிக்கிறேன்.

    * நாட்டின் முக்கியமாக கலங்கரை விளக்கங்களை சுற்றுலா தலமாக மாற்ற முடியும் என கூறியிருந்தேன்.

    * இன்று அந்த கனவு நனவாகி இருக்கிறது. 75 கலங்கரை விளக்கங்கள் சுற்றுலா தலமாகி உள்ளது.

    * மத்திய அரசின் திட்டங்களால் தமிழ்நாட்டில் நவீன போக்குவரத்து வசதி மேம்பட்டுள்ளது.

    * 200 கி.மீ. ரெயில் பாதைகள் மின் மயமாக்கப்பட்டுள்ளன.

    * ரெயில் நிலையங்கள் நவீன மயமாக்கப்பட்டு வருகின்றன.

    * தமிழ்நாட்டில் இரண்டரை லட்சம் கோடி ரூபாய் சாலை வசதிக்காக மத்திய அரசு முதலீடு செய்துள்ளது.

    * இது அரசியல் அல்ல, என்னுடைய அரசியல் அல்ல, நாட்டின் வளர்ச்சிக்கான திட்டங்கள்.

    * இன்று மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் கட்சி இவற்றை செய்ய விடாது. இருந்தபோதும் செய்துள்ளோம் என்று கூறினார்.

    Next Story
    ×