search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரசு விழா"

    • புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்து, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கவுள்ளார்.
    • தமிழ்நாடு வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை, ஆவின் உள்ளிட்ட துறைகளின் சார்பில் புதிய வளர்ச்சித் திட்டப்பணிகளுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டவுள்ளார்.

    கோவை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (13-ந்தேதி) கோவை மாவட்டம் பொள்ளாச்சி வருகிறார். அங்கு நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்று 20 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். விழாவில் முடிவு பெற்ற திட்டங்களை தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும் உள்ளார்.

    இதுதொடர்பாக கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (13-ந் தேதி) பொள்ளாச்சி ஆச்சிப்பட்டியில் நடைபெறும் அரசு விழாவில் ஈரோடு, திருப்பூர், நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களுக்கான புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்து, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கவுள்ளார்.

    வனத்துறை, ஆனைமலை புலிகள் காப்பகம், பொதுப்பணித்துறை (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) கோட்டம், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, எரிசக்தி துறை, குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, காவல்துறை, தமிழ்நாடு வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை, ஆவின் உள்ளிட்ட துறைகளின் சார்பில் புதிய வளர்ச்சித் திட்டப்பணிகளுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டவுள்ளார்.

    பொதுப்பணித்துறை (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) கோட்டம், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, அயலக தமிழர் நலன் மற்றும் மறு வாழ்வு துறை, கூட்டுறவுத் துறை, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, காவல் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை உள்ளிட்ட துறைகளின் சார்பில் முடிவுற்ற வளர்ச்சித் திட்டப்பணிகளை முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்.

    மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, வேளாண்மை பொறியியல் துறை, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை, தோட்டக்கலைத் துறை, மாவட்ட தொழில் மையம், மகளிர் திட்டம், நகராட்சி நிர்வாகம், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்க உள்ளார்.

    இவ்விழாவில், அமைச்சர்கள், கலெக்டர்கள், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி), பொள்ளாச்சி சார் ஆட்சியர், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொள்கின்றனர். இவ்விழாவில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் மயிலாடுதுறைக்கு புறப்பட்டு சென்றார்.
    • அமைச்சர்கள், தி.மு.க. தொண்டர்கள் ஏராளமானோர் திரண்டு வழியனுப்பினர்.

    மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக புதிய கட்டிடம் மன்னம்பந்தல் ஊராட்சி மூங்கில்தோட்டம் பால்பண்ணை பகுதியில் ரூ.114 கோடியே 48 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ளது.

    இந்த அலுவலகத்தை நாளை (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

    இதில் கலந்துகொள்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை 4.15 மணியளவில் சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் மயிலாடுதுறைக்கு புறப்பட்டு சென்றார்.

    நாளை அங்கிருந்து கார் மூலமாக மயிலாடுதுறை சென்று கலெக்டர் அலுவலகத்தை காலை 10 மணிக்கு திறந்துவைக்கிறார். பிற்பகல் 1 மணிக்கு திருச்சி- சென்னை சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏறி, மாலை 6.15 மணிக்கு மீண்டும் சென்னை திரும்புகிறார்.

    ரெயில் நிலையத்தில் முதலமைச்சரை, அமைச்சர்கள், தி.மு.க. தொண்டர்கள் ஏராளமானோர் திரண்டு வழியனுப்பி வைத்தனர்.

    • மத்திய அரசின் பங்களிப்பால் கடல்வழி, நீர்வழி போக்குவரத்தில தலைசிறந்து விளங்குகிறோம்.
    • 3வது முறை மத்தியில் ஆளுகின்ற வாய்ப்பு கிடைக்கும்போது இந்த பணிகள் தொடரும்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் உரையாற்றிய பிரதமர் மோடி கூறியதாவது:

    * கடந்த 10 ஆண்டுகளில் தூத்துக்குடி துறைமுகத்தில கப்பல் போக்குவரத்து 35% அதிகரித்துள்ளது.

    * மத்திய அரசின் பங்களிப்பால் கடல்வழி, நீர்வழி போக்குவரத்தில தலைசிறந்து விளங்குகிறோம்.

    * உள்நாட்டு நீர்வழி போக்குவரத்தில் 8 சதவீதம் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்த பங்களிப்பால் கடலோர மாநிலங்களில் குறிப்பாக தமிழகத்தில் வளர்ச்சி அதிகரித்துள்ளது.

    * வரும் காலத்தில் தமிழ்நாடு மிக வேகமாக வளர்ச்சி அடையும் என்ற நம்பிக்கை உள்ளது.

    * 3வது முறை மத்தியில் ஆளுகின்ற வாய்ப்பு கிடைக்கும்போது இந்த பணிகள் தொடரும். தமிழ்நாட்டு மக்களுக்கு இது மோடியின் உத்தரவாதம்.

    * தமிழகத்தின் பல பகுதிகளுக்கு நான் சென்று வந்தேன். தமிழர்களின் அன்பை பார்த்தேன். இதை நான் வீணடிக்க மாட்டேன்.

    * தமிழகத்தின் வளர்ச்சிக்காக நிச்சயம் பாடுபடுவேன். இன்று இந்த நேரம் வளர்ச்சியின் நேரமாகும் என்று கூறினார்.

    • இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் கப்பல் காசியில் பயன்படுத்தப்பட இருக்கிறது.
    • 75 கலங்கரை விளக்கங்கள் சுற்றுலா தலமாகி உள்ளது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் ரூ.17,300 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்து பிரதமர் மோடி உரையாற்றினார். தமிழில் வணக்கம் என்று கூறி பிரதமர் மோடி உரையை தொடங்கினார். அப்போது அவர் கூறியதாவது:

    * இன்று தொடங்கப்பட்டுள்ள திட்டங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு மிக முக்கியமானது.

    * இந்த திட்டங்களால் தமிழகத்தில் லட்சக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

    * கடல் வாணிபத்திற்கு புத்துயிர் அளிக்கப்பட்டுள்ளது.

    * இன்று தமிழ் மக்களுக்கும், நாட்டு மக்களுக்கும் ஒரு உண்மையை சொல்ல விரும்புகிறேன். நான் நேரடியாக குற்றம்சாட்ட விரும்புகிறேன்.

    * இன்று தமிழகத்தில் ஆட்சியில் இருப்பவர்கள், டெல்லியில் ஆட்சியில் இருந்தார்கள்.

    * மத்தியில் ஆட்சியில் இருந்தபோது தமிழகத்தின் வளர்ச்சிக்காக திமுக எதையும் செய்யவில்லை.

    * இன்று இந்த வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்ற தமிழகத்திற்கு ஒரு சேவகனாக வந்துள்ளேன்.

    * இன்று இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் கப்பல் தன் பயணத்தை தொடங்கி இருக்கிறது.

    * இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் கப்பல் காசியில் பயன்படுத்தப்பட இருக்கிறது.

    * இந்த திட்டங்களால் தூத்துக்குடியும், தமிழகமும் பசுமை எரிசக்தியின் மையமாக மாறும்.

    * இன்று இங்கே சாலை, ரெயில் திட்டங்கள் சிலவும் தொடங்கப்பட்டு இருக்கின்றன.

    * தென் தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு புதிய ரெயில் தொடங்கப்பட இருக்கின்றன.

    * புதிய ரெயில்களால் பயண நேரம் குறையும், சுற்றுலா பயணிகள் அதிகரிப்பர்.

    * ரெயில்வே, சாலை, நீர்வழி போக்குவரத்து ஆகியவற்றின் நோக்கம் ஒன்றுதான். இந்த திட்டங்களால் தமிழகம் வளர்ச்சி அடையும், நாடு வளர்ச்சி அடையும் என்பதே நோக்கம்.

    * இந்த திட்டங்களுக்காக தமிழக மக்களுக்கு எனது பாராட்டு, வாழ்த்துகளை தெரிவிக்கிறேன்.

    * நாட்டின் முக்கியமாக கலங்கரை விளக்கங்களை சுற்றுலா தலமாக மாற்ற முடியும் என கூறியிருந்தேன்.

    * இன்று அந்த கனவு நனவாகி இருக்கிறது. 75 கலங்கரை விளக்கங்கள் சுற்றுலா தலமாகி உள்ளது.

    * மத்திய அரசின் திட்டங்களால் தமிழ்நாட்டில் நவீன போக்குவரத்து வசதி மேம்பட்டுள்ளது.

    * 200 கி.மீ. ரெயில் பாதைகள் மின் மயமாக்கப்பட்டுள்ளன.

    * ரெயில் நிலையங்கள் நவீன மயமாக்கப்பட்டு வருகின்றன.

    * தமிழ்நாட்டில் இரண்டரை லட்சம் கோடி ரூபாய் சாலை வசதிக்காக மத்திய அரசு முதலீடு செய்துள்ளது.

    * இது அரசியல் அல்ல, என்னுடைய அரசியல் அல்ல, நாட்டின் வளர்ச்சிக்கான திட்டங்கள்.

    * இன்று மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் கட்சி இவற்றை செய்ய விடாது. இருந்தபோதும் செய்துள்ளோம் என்று கூறினார்.

    • ரூ.124.32 கோடி மதிப்பில் 5 எம்.எல்.டி. கடல்நீரை குடிநீராக்கும் திட்டம், பசுமை ஹைட்ரஜன் எரிபொருள் நிரப்பும் மையம் உள்ளிட்டவற்றுக்கு அடிக்கல் நாட்டினார்.
    • நாடு முழுவதும் ரூ.4,586 கோடி செலவில் முடிக்கப்பட்டு உள்ள தேசிய நெடுஞ்சாலைகளை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

    தூத்துக்குடி:

    இந்திய பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். பல்லடம், மதுரை ஆகிய இடங்களில் நேற்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இரவில் அவர் மதுரையில் தங்கினார்.

    இன்று மதுரை விமான நிலையத்தில் இருந்து ராணுவ ஹெலிகாப்டரில் தூத்துக்குடிக்கு புறப்பட்ட பிரதமர் மோடி, வ.உ.சி. துறைமுக வளாகத்தில் அமைக்கப்பட்டு உள்ள ஹெலிபேடில் வந்து இறங்கினார். அங்கிருந்து காரில் புறப்பட்டு அரசு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.

    விழாவில், தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் ரூ.7 ஆயிரத்து 55 கோடியே 95 லட்சம் மதிப்பிலான வெளித்துறைமுகம், ரூ.265.15 கோடி மதிப்பில் வடக்கு சரக்கு தளம்-3 எந்திரமயமாக்கல், ரூ.124.32 கோடி மதிப்பில் 5 எம்.எல்.டி. கடல்நீரை குடிநீராக்கும் திட்டம், பசுமை ஹைட்ரஜன் எரிபொருள் நிரப்பும் மையம் உள்ளிட்டவற்றுக்கு அடிக்கல் நாட்டினார்.

    இதேபோல் குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்துக்கும் அடிக்கல் நாட்டினார். மேலும் 10 மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அமைக்கப்பட்டு உள்ள 75 கலங்கரை விளக்கம், ரூ.1,477 கோடி செலவில் முடிக்கப்பட்டு உள்ள வாஞ்சி மணியாச்சி-நாகர்கோவில் இரட்டை ரெயில் பாதை, நாடு முழுவதும் ரூ.4,586 கோடி செலவில் முடிக்கப்பட்டு உள்ள தேசிய நெடுஞ்சாலைகளை நாட்டுக்கு அர்ப்பணித்தார். ஒட்டுமொத்தமாக தூத்துக்குடியில் நடைபெறும் விழாவில் ரூ.17,300 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

    பிரதமர் வருகையையொட்டி தூத்துக்குடியில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

    • தூத்துக்குடிக்கு வந்த பிரதமர் மோடியை இஸ்ரோ தலைவர் சோம்நாத், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
    • அரசு நிகழ்ச்சியில் கவர்னர் ஆர்.என்.ரவி, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், கனிமொழி எம்.பி., தமிழக அமைச்சர் எ.வ.வேலு உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

    தூத்துக்குடி:

    தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படவுள்ள சுமார் 17,300 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான பல்வேறு உள் கட்டமைப்பு மற்றும் வளர்ச்சி திட்டங்களை பிரதமர் மோடி அடிக்கல் நாட்டியும், தொடங்கியும் வைக்கிறார்.

    இதற்காகர் பிரதமர் மோடி இன்று காலை மதுரையில் இருந்து தூத்துக்குடிக்கு ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு வந்தார். பிரதமர் மோடியை இஸ்ரோ தலைவர் சோம்நாத், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் வரவேற்றனர். அதன்பின் விழா நடைபெறும் இடத்திற்கு பிரதமர் மோடி வந்தடைந்தார்.


     அரசு நிகழ்ச்சியில் கவர்னர் ஆர்.என்.ரவி, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், கனிமொழி எம்.பி., தமிழக அமைச்சர் எ.வ.வேலு உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

    முதலில் பேசிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பிரதமர் தமிழகம் வரும் போதெல்லாம், தமிழகத்திற்கு பல்வேறு திட்டங்கள் வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் ரூ.11 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்கள் தமிழகத்திற்கு கிடைத்துள்ளது என்றார்.

    • கோவில் நிர்வா கம் சார்பில் மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன் வரவேற்றார்
    • கோவில் நிர்வாக அதிகாரி அருண கிரிநாதன் உடன் இருந்தனர்.

    புதுச்சேரி:

    காரைக்கால் மாவட் டத்தில், நேற்று மாலை நடைபெற்ற அரசு விழாக்க ளில் கலந்து கொண்ட மத்திய மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை மந்திரி பர்ஷோத்தம் ரூபலா காரைக்காலை அடுத்த திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் இன்று காலை குடும்பத்தோடு சாமி தரி சனம் செய்தார்.

    முன்னதாக மத்திய மந்திரிக்கு கோவில் நிர்வா கம் சார்பில் மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன் வரவேற்றார். தொடர்ந்து விநாயகர், முருகர் சண்டி கேஸ்வரர், உள்ளிட்ட சாமிகளை தரிசனம் செய்து விட்டு, சனீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் செய்து தரிசனம் செய்தார். இந்த நிகழ்வில் மத்திய இணை அமைச்சர் முருகன், புதுச்சேரி மாநில அமைச்சர் கள் லட்சுமி நாராயணன், சந்திர பிரியங்கா, கோவில் நிர்வாக அதிகாரி அருண கிரிநாதன் உடன் இருந்தனர்.

    • உலக சுற்றுச்சூழல் தின விழா நடந்து கொண்டிருந்த போது விழா மேடைக்கு கீழே நின்று தலைமை செயலாளர் மற்றும் அதிகாரிகளை பார்த்து நேரு எம்.எல்.ஏ. சரமாரியாக குற்றம்சாட்டி பேசினார்.
    • மேடையில் முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம், தலைமை செயலாளர் ராஜீவ் வர்மா ஆகியோரும் இருந்தனர்.

    புதுச்சேரி:

    புதுவையில் நடைபெற்று வரும் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளில் ஊழல், முறைகேடுகள் நடப்பதாக உருளையன்பேட்டை தொகுதி சுயேச்சை எம்.எல்.ஏ. நேரு குற்றம்சாட்டி வந்தார்.

    தனது தொகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெறும் அண்ணா திடல் மேம்பாட்டு பணி ஓராண்டுக்குள் முடித்திருக்க வேண்டும். 2½ ஆண்டாக பணிகள் முடிக்கப்படாமல் உள்ளது.

    அதோடு தரமில்லாமல் பணிகள் நடந்து வருகிறது. தொகுதிக்குட்பட்ட புதிய பஸ் நிலைய மேம்பாட்டு பணிகளை தொடங்கவில்லை என்றும் புகார் கூறியிருந்தார்.

    இதை கண்டித்தும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் சேர்மனான தலைமை செயலாளர் ராஜீவ் வர்மாவை கண்டித்தும் தலைமை செயலகத்தை நேற்று நேரு எம்.எல்.ஏ. தனது ஆதரவாளர்களுடன் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்.

    ஆனால் தலைமை செயலாளர் அரசு விழாவில் பங்கேற்றிருப்பதாக அவருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நேரு எம்.எல்.ஏ. தனது ஆதரவாளர்கள், சமூக நல அமைப்பினரோடு அரசு விழா நடந்த கம்பன் கலையரங்கிற்கு வந்தார்.

    நேரு எம்.எல்.ஏ. வரும் தகவல் கிடைத்ததை தொடர்ந்து கம்பன் கலையரங்கின் 2 நுழைவு வாயில்களையும் போலீசார் மூடினர். மேலும் அங்கு வந்த நேரு எம்.எல்.ஏ மற்றும் அவரது ஆதரவாளர்களை உள்ளே செல்ல அனுமதிக்க மறுத்தனர். இதனால் ஆத்திரமடைந்த நேரு எம்.எல்.ஏ கேட் மீது ஏறி குதித்து கம்பன் கலையரங்கில் உள்ளே சென்றார். அவருடன் அவரது ஆதரவாளர்களும் கேட் ஏறி குதித்து சென்றனர்.

    அங்கு உலக சுற்றுச்சூழல் தின விழா நடந்து கொண்டிருந்த போது விழா மேடைக்கு கீழே நின்று தலைமை செயலாளர் மற்றும் அதிகாரிகளை பார்த்து நேரு எம்.எல்.ஏ. சரமாரியாக குற்றம்சாட்டி பேசினார்.

    மேடையில் முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம், தலைமை செயலாளர் ராஜீவ் வர்மா ஆகியோரும் இருந்தனர்.

    இதனால் அரசு விழா சில நிமிடங்கள் தடைபட்டது. இதன்பின்னர் நேரு எம்.எல்.ஏ. விழாவில் முதலமைச்சர் பேச்சுக்கு இடையூறு செய்ய விரும்பவில்லை என கூறி வெளியேறினார்.

    இந்த நிலையில் கம்பன் கலையரங்கிற்கு நேரு எம்.எல்.ஏ. வரும் தகவல் கிடைத்தும், சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை காவல்துறை எடுக்கவில்லை என புகார் எழுந்தது.

    அதோடு அரசு விழாவுக்கு வந்த எம்.எல்.ஏ.வை தடுப்பதா? என்ற கேள்வியும் எழுந்தது. அவரை மட்டும் அனுமதித்து, ஆதரவாளர்களை தடுத்திருக்கலாம் என கருத்து தெரிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் கம்பன் கலையரங்கில் அரசு விழாவில் பாதுகாப்பு குறைபாடு புகாரை தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த ஓதியஞ்சாலை இன்ஸ்பெக்டர் கண்ணன் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார். சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால் அவர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

    உருளையன்பேட்டை இன்ஸ்பெக்டர் பாபுஜி, ஓதியஞ்சாலை போலீஸ் நிலைய பணிகளை கூடுதலாக கவனிப்பார் என காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.

    மேலும், அரசு விழாவில் கேட் ஏறி குதித்து உள்ளே சென்று வாக்குவாதம் செய்த சுயேட்சை எம்.எல்.ஏ நேரு மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    • பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாசம் என்பவர் சேரில் அமர்ந்தபடியே செல்போனை பார்த்துக் கொண்டிருந்தார்.
    • நாமக்கல் மாவட்ட ஆயுதப்படையில் தற்போது பணியாற்றி வந்த நிலையில் மீண்டும் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்.

    நாமக்கல்:

    நாமக்கல்லில் கடந்த 28-ந் தேதி மாவட்ட நிர்வாகம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா பொம்மை குட்டை மேட்டில் நடந்தது.

    அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கியதுடன் புதிய பணிகளுக்கும் அடிக்கல் நாட்டினார்.

    இந்த விழாவில் கலெக்டர் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

    விழா நிறைவு பெற்றதும் தேசிய கீதம் ஒலிக்கப்பட்டது. அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாசம் என்பவர் சேரில் அமர்ந்தபடியே செல்போனை பார்த்துக் கொண்டிருந்தார். இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

    இதனை பார்த்த சக போலீசார் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலை செல்வன் விசாரணை நடத்தி அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.

    மேலும் சிவப்பிரகாசத்தை நேரில் அழைத்து விசாரணை நடத்தினார். விசாரணைக்கு பின்னர் தேசிய கீதத்திற்கு அவமரியாதை செய்ததாக கூறி சிவப்பிரகாசத்தை சஸ்பெண்டு செய்து போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் உத்தரவிட்டார்.

    சஸ்பெண்டான சிவப்பிரகாசம் ஏற்கனவே வேலகவுண்டம்பட்டி போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றியபோது சஸ்பெண்டு செய்யப்பட்டார். இதையடுத்து அவர் நாமக்கல் மாவட்ட ஆயுதப்படையில் தற்போது பணியாற்றி வந்த நிலையில் மீண்டும் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×