ஏப்ரல் மாதத்திற்குள் பொருநை அருங்காட்சியகப் பணிகள் முடியும்! - மு.க.ஸ்டாலின்

வரும் நவம்பருக்குள் நெல்லையப்பர் கோவிலில் வெள்ளி தேர் ஓடும். தமிழகத்தில் நடக்கும் தொல்லியல் ஆய்வுகள் திருப்புமுனைகளை ஏற்படுத்துகின்றன.
ஏப்ரல் மாதத்திற்குள் பொருநை அருங்காட்சியகப் பணிகள் முடியும்! - மு.க.ஸ்டாலின்
Published on

நெல்லை:

நெல்லை அரசு மருத்துக்கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வரும் விழாவில் ரூ.1,304.66 கோடி மதிப்பில் முடிவுற்ற 23 பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். மேலும் ரூ.309.05 கோடி மதிப்பீட்டில் 20 புதிய திட்டப்பணிகளை அடிக்கல் நாட்டி, நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

* தமிழகத்தின் வரலாற்று பெருமைக்கு நெல்லை மண் அடையாளம்.

* எந்த ஆட்சியாக இருந்தாலும் முக்கியமான நகரமாக இருந்த ஊர் நெல்லை.

* நெல்லையப்பர் கோவிலை புதுப்பித்து திருப்பணிகள் செய்தவர் கலைஞர். வரும் நவம்பருக்குள் நெல்லையப்பர் கோவிலில் வெள்ளி தேர் ஓடும்.

* சென்னை அண்ணா மேம்பாலம் போல் நெல்லையில் ஈரடுக்கு பாலம் அமைத்தவர் கலைஞர்.

* தமிழகத்தில் நடக்கும் தொல்லியல் ஆய்வுகள் திருப்புமுனைகளை ஏற்படுத்துகின்றன.

* பொருநை ஆற்றின் கரையில் 3200 ஆண்டுகளுக்கு முன்பே நெல் பயிரிடப்பட்டுள்ளதற்கான ஆதாரங்கள் அகழாய்வில் கிடைத்துள்ளன.

* ஏப்ரல் மாதத்திற்குள் பொருநை அருங்காட்சியகம் பணிகள் நிறைவடையும்.

* தாமிரபரணி உபரி நீர் இணைப்பு திட்டம் மிக முக்கியமான திட்டம்.

* உபரி நீரை சாத்தான்குளம், திசையன்விளைக்கு கால்வாய்கள் மூலம் கொண்டு செல்ல உள்ளோம்.

* நெல்லை மாநகராட்சியில் பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று வருகிறது.

* தாமிரபரணி-நம்பியாறு- கருமேனியாறு உபரி நீர் இணைப்பு திட்டம் மிக முக்கியமான திட்டம்.

* வள்ளியூரில் மாவட்ட தலைமை மருத்துவமனை கொண்டு வரப்பட்டுள்ளது.

* நெல்லை அரசு மருத்துவக்கல்லூரியில் உயர் சிறப்பு மருத்துப்பிரிவு கொண்டு வரப்பட்டுள்ளது என்றார்.

முன்னதாக, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும், முடிந்த திட்டப்பணிகளை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சிக்கு வருகை தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் உற்சாகமாக வரவேற்றனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com