என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
அன்பழகன் உடல்நிலையை விசாரித்த ராமதாஸ்
சென்னை:
தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகனுக்கு கடந்த 24-ந்தேதி திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
இதையடுத்து சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கடந்த 8 நாட்களாக அன்பழகனுக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது. தீவிர சிகிச்சை பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தநிலையில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் நேற்று இரவு அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு சென்று அன்பழகனின் உடல் நிலை பற்றி டாக்டர்களிடம் கேட்டு அறிந்தார்.
பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே.மூர்த்தி ஆகியோரும் ராமதாசுடன் சென்று அன்பழகனின் உடல் நிலையை கேட்டறிந்தனர்.
ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “அன்பழகன் விரைவில் நலம் பெற வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
97 வயதாகும் அன்பழகன் கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலக்குறைவால் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.
வீட்டில் ஓய்வு எடுத்த நிலையில் கட்சி பணிகள் எதிலும் ஈடுபட முடியாமல் இருந்த நிலையில்தான் அன்பழகனின் உடல்நிலை கடந்த 24-ந் தேதி திடீரென மோசமானது. உடனடியாக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாகவே இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்