என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
தமிழக அரசு டெங்குவை மூடி மறைக்கிறது- கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு
கோவில்பட்டி:
கோவில்பட்டியில் கனிமொழி எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக அரசு பொதுவாகவே எதையும் ஏற்றுக் கொள்ளாமல் எந்த பிரச்சினையும் இல்லை என்று மூடி மறைக்கும் பணியை செய்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு முறையும் நோய்கள் பரவும் போது இதுபோன்ற மன நிலையையும் செயல்பாட்டு வழிமுறைகளையும் முன் எடுப்பது மக்களிடையே விழிப்புணர்வு இல்லாத நிலையை உருவாக்குகிறது. மக்களுக்கு பிரச்சினை இருக்கிறது.
காய்ச்சல் வரக்கூடிய அபாயம் இருக்கிறது என்கிற உண்மை தெரியப்படுத்தப்பட்டால் தான் மக்களும் எச்சரிக்கையாக இருப்பார்கள். காய்ச்சல் பாதிப்பு ஏற்படும் போது பொதுமக்கள் உடனடியாக மருத்துவ சிகிச்சை பெற முடியும். பிரச்சினையை மூடி மறைப்பதின் மூலம் அது அதிகமாகுமே தவிர அதனை கட்டுப்படுத்த முடியாது.
தூத்துக்குடியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் குறித்து மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதி உள்ளேன். வரும் குளிர்கால கூட்டத்தொடரில் மத்திய அமைச்சரை நேரில் சந்தித்து இந்த திட்டம் குறித்து வலியுறுத்துவேன். அப்படி நடைபெறவில்லை என்றால் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் திட்டம் கண்டிப்பாக நிறைவேற்றப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்